புதன், 28 ஜனவரி, 2015

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - கும்பம்



சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   

ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே ( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 

கும்ப லக்கினம் :
கும்ப லக்கினத்தை  சார்ந்த அன்பர்களுக்கு 10ல் அமர்ந்த சனி  அமர்ந்த சனி பகவான் ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து மேன்மையும், எதிர்பாராத தொழில் முன்னேற்றத்தையும், அபரிவிதமான மக்கள் செல்வாக்கினையும், சமுதாயத்தில் கௌரவம் அந்தஸ்த்து மற்றும் சிறப்பு  மிக்க அதிகார பதவி மற்றும் பொறுப்புகளை அலங்கரிக்கும்  யோகத்தை தருகிறார்,  ஜாதகரின் திடீர் முன்னேற்றம் என்பது தவிர்க்க இயலாத வண்ணமே  அமையும் என்பது குறிப்பிட தக்கது, ஜாதகர் தனது வாழ்கை துணை வழியில் இருந்து 100% விகித யோகத்தை பெரும் நல்ல நேரமாக இதை கருதலாம், மேலும் செய்யும் தொழில் அமைப்புகளில் இருந்து புதையலுக்கு ஈடான சொத்து வரவுகளை பெரும் யோக காலமாக இனிவரும் 5வருடங்கள் அமையும்  என்பதை கருத்தில் கொண்டு  ஜாதகர் தனது உழைப்பை தொழில் துறையில் பயன்படுத்தினால், தனது வாழ்நாள் முழுவதிற்கும் உண்டான பொருளாதார தன்னிறைவை ஜாதகர் பெற இயலும் என்பது சனிபகவான் கும்ப லக்கினத்தாருக்கு தரும் ஒரு சிறந்த வாய்ப்பாக கருதலாம் அன்பர்களே !
6ம் பார்வையாக 3ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவானால் கும்பலக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சிறந்த வெற்றிகள் உண்டாகும், தான் எடுக்கும் எந்த ஒரு காரியங்களும் வெற்றி மேல் வெற்றி தரும் போட்டி பந்தையங்களில் சிறந்த வெற்றிகள், அரசியலில் வெற்றி, தேர்வில் வெற்றி, தேர்தலில் வெற்றி என ஜாதகரின் வாழ்க்கை வெற்றி  படிகட்டுகளில் ஏறுவதற்கு உண்டான யோக காலமாக இதை கருதலாம், தன்னம்பிக்கை அதிகரிக்கும் , உலக பிரபல்யம் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து குவியும், ஜாதகரின் தனி  திறமையான செயல்பாடுகள் யாவரும் பாராட்டும் வண்ணம் அமையும், ஜாதகர் விளையாட்டு மற்றும் காவல் துறை, பாதுகாப்பு துறையில் இருப்பின் சம்பந்தபட்ட துறைகளில் திடீரென உயர்பதவி அல்லது அதற்க்கு நிகரான முன்னேற்றத்தை வாரி வழங்கும், ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத குறுகியகால வளர்ச்சியை வாரி வழங்கும், இரும்பு மற்றும் கட்டுமான துறையில்  ஏஜென்சி அமைப்பில் செயல்படும் தொழில்கள் அபரிவிதமான வளர்ச்சியை பெரும், எதிர்பாராத  முன்னேற்றம் சம்பந்தபட்ட தொழில்  துறையில் உள்ளவர்களுக்கு ஏற்ப்படும், குறிப்பாக ஏஜென்சி மற்றும் கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு அபரிவிதமான வெற்றிகளை வாரி வழங்கும் யோக காலமாக இது அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

7ம் பார்வையாக 4ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவான் கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு சொத்து சுகம், வண்டி வாகனம், வீடு நிலம் சார்ந்த அமைப்புகளில் இருந்து 100% விகித யோக வாழ்க்கையை வாரி வழங்குகிறார், இதுவரை சொந்தமாக வீடு,வண்டி,வாகனம்,நிலம் இல்லாத அன்பர்களுக்கு ஸ்திரமான சொத்துகள் அமையும், வண்டி வாகன யோகம் உண்டாகும், புதிய  வீடு  வாங்கும் யோகம்  அல்லது புதிதாய் கட்டி குடிபோகும் யோகத்தை தரும், குடும்ப வாழ்க்கையில் செல்வசெழிப்பு உண்டாகும், எதிர்பாராத வருமானம் கும்ப லக்கினத்தாருக்கு  வந்து சேரும், முற்ப்போக்கு சிந்தனை உடன் வாழ்க்கையில் சகல பொருளாதார வெற்றிகளையும்  இனிவரும் காலங்களில் பெறுவார்கள், தாய் வழியில் இருந்து அல்லது குடும்ப அமைப்பில் இருந்து தங்களுக்கு  வரவேண்டிய சொத்து பணம் அல்லது நகை  அனைத்தும் வந்து சேரும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் யாரும் எதிர்பாராத  வண்ணம் வருமான  வாய்ப்புகள் தங்களை தேடிவரும், பேச்சை தொழிலாக கொண்டு செயல்படும் அன்பர்களுக்கு அபரிவிதமான வளர்ச்சி மற்றும் வருமானம் கிடைக்க பெறுவார்கள்.

10ம் பார்வையாக 7ம் பாவகத்தை வசீகரிக்கும் சனிபகவான் கும்பலக்கின அன்பர்களுக்கு, இதுவரை  திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கையை அமைத்து தருவார், திருமண வாழ்க்கையில் பிரிவை நோக்கி சென்று கொண்டு இருந்த அன்பர்களுக்கு திடீர் திருப்பு முனையாக சேர்ந்து வாழும் யோகத்தை தருவார், திருமண  வாழ்க்கையில் அதிக சிரமங்களை எதிர்கொண்டு இருந்த அன்பர்களுக்கு இனிவரும் காலங்கள்  வசந்த காலமாக மாறி மன மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும்,   தம்பதியரின் ஒற்றுமை மேலோங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்ப்பு கிடைக்கும், பொதுமக்கள் ஆதரவு மூலம் குடும்ப வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கும், வேற்று மதத்தினர், வேற்று இனத்தினர் மூலம் நல்ல முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும், இதுவரை திருமணம் ஆகாத கும்ப லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு திடீரென திருமண வாழ்க்கை சீரும் சிறப்புமாக நடைபெறும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் உறவுகளின் ஆதரவின் மூலம் பல நன்மைகளும், தொழில் அபிவிருத்தியும் உண்டாகும்,  கூட்டு தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் காலங்கள் அபரிவிதமான லாபங்கள் 100% விகிதம் வந்து சேரும்  என்பது கவனிக்க தக்கது.

கும்ப இலக்கின அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும், திசை மற்றும் புத்தி மேற்கண்ட 
10,3,4,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, மேற்கண்ட சனிபகவானின் கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும் ஒருவேளை நடைபெறும் திசை 10,3,4,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் . 


வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக