செவ்வாய், 6 ஜனவரி, 2015

ராகு கேது வலிமை அற்ற ஜாதக நிலை ( உதாரண ஜாதகம் )




சாய கிரகமான ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற நிலையில் அமரும் பொழுது ஜாதகர் எவ்வித அவயோக பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தருகிறார் என்பதை இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


 இந்த கன்னி இலக்கின ஜாதகருக்கு மேலோட்டமாக ஜாதகத்தை பார்வை செய்யும் ஜோதிடர்கள் அனைவரும் ஜாதகருக்கு லக்கினத்தில் கேது, 7ம் வீட்டில் ராகு என்று கணித்துவிடுவார்கள், இந்த ஜாதகத்தை பார்க்கும் அனைவரும், லக்கினத்தில் கேது 7ல் ராகு என்றும், இது சர்ப்ப தோஷ ஜாதகம் என்று உடனடியாக சொல்வது இயற்கையே, ஜாதகத்தை துல்லியமாக ஆய்வு செய்யும் சிறந்த கணித ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரியும், ராகு கேது முறையே 7,1ல் இல்லை என்று, ஏனெனில் ஜாதகரின் லக்கினம் ஆரம்பிக்கும் பாகை என்பது கன்னி ராசியில் 173.12.16 பாகையில், களத்திர பாவகம் ஆரம்பிப்பது மீனத்தில் 353.12.16 பாகையில் ஆதாவது லக்கினம் கன்னி ராசியில் 23.12.16 பாகையிலும், களத்திர பாவகம் 23.12.16 பாகையிலும் ஆரம்பிக்கிறது ராகு இருப்பது மீனத்தில் 338.20.05 ( 08.20.05) பாகையிலும், கேது கன்னியில் 158.20.05 ( 08.20.05) பாகையிலும் இருப்பதால் ஜாதகருக்கு கன்னி ராசியில் உள்ள 12ம் பாவகத்திலும் ( கேது ) , மீனத்தில் உள்ள 6ம் பாவகத்திலும் ( ராகு ) ராகு கேது அமர்ந்திருப்பது புலனாகும்.

எனவே இவரது ஜாதகத்தில் முதலில் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திர  ஸ்தானத்தில் இல்லை என்பது உறுதியானது, இனி தாங்கள் அமர்ந்த இடத்திற்கு சாய கிரகமான ராகு கேது எவ்வித பலன்களை வழங்குகின்றனர் என்பதை கருத்தில் கொள்வோம் அன்பர்களே!

6ல் அமர்ந்த ராகு ஜாதகனுக்கு மனோரீதியான போராட்டங்களையும், தனக்கு எதிரான மனநிலையை கொண்டுள்ளவராகவும், தேவையில்ல விஷயங்களில் தானே போய் சிக்கிக்கொள்ளும் தன்மையை தருகிறார், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகப்பெரிய சிக்கல்களை வரவைத்துகொண்டு, துன்பப்படும் அமைப்பை தருகிறார், நல்ல நிறைவான நிம்மதியான தூக்கம் இன்றி உடல் நல சீர்கேட்டை பெரும் அமைப்பை தருகிறது, ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் முன்னுக்கு புறம்பான தன்மையில் இருக்கும் என்பதும், எதிர்பாராத தோல்விகளையும், கடன் சுமைகளையும் தானே தனது தலையில் ஏற்றி வைத்துகொள்வார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

12ல் அமர்ந்த கேது ஜாதகனுக்கு பூலோக வாழ்க்கையில் ஒரு மனிதன் அடையும் துன்பத்தின் அனைத்து அத்தியாயத்தையும் பக்கம் பக்கமாக காட்டும் என்பது உறுதி, புலன் அடக்கம் இல்லாத தன்மையினால், ஜாதகர் நெருப்பில் இட்ட புழு போல தவிக்கும் தன்மையை தரும், தீய பழக்கவழக்கத்திற்கு ஜாதகர் அடிமையாகும் பட்சத்தில், ஜாதகரால் நிச்சயம் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது என்பது இயலாத காரியம், மேலும் ஜாதகருக்கு வயிறு சார்ந்த இன்னல்கள் அதிக தொந்தரவை தரும், மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள் அனைத்தும் வீண் விரையத்தை தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக இன்னல்களையும், மீள கடன் சுமையையும் தரும், ஜாதகர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம்.

மேற்கண்ட பலன்கள் யாவும் ஜாதகருக்கு சுய ஜாதக ரீதியாக நடைபெறும் பலன்கள் என்பது உண்மை என்ற போதிலும், இந்த பலாபலன்கள் ஜாதகருக்கு எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்று கணிதம் செய்வதே ஜோதிடரின் தனி திறமை, மேற்கண்ட 6,12ம் பாவகங்களின் பலன்கள் எப்பொழுது நடைபெறும், எந்த திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் நடைமுறைக்கு வரும்? அல்லது  6,12ம் பாவகங்களின் பலன்கள்நடைபெறும் திசை ,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமத்தில் நடைமுறைக்கு வாராமலே போய்விடுமா ? என்ற விஷயங்களை தெளிவாக ஜாதகனுக்கு எடுத்து கூறி, அதற்க்கு உண்டான தீர்வுகளை பரிந்துரை செய்வது சிறந்த ஜோதிடனின் கணித திறமை என்றால் அது மிகையில்லை.
  வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக