திங்கள், 27 ஆகஸ்ட், 2018

சுய ஜாதக ஆலோசணை மூலம் வாழ்க்கையில் நலம் பெறுவது எப்படி ? சுக்கிரன் திசை சுபயோக வாழ்க்கையை தருமா ?


ஒவ்வொருவரும் சுய ஜாதக ஆலோசணை மூலம்  வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது, நமது பிறப்பின் ரகசியம்  அறியவும், படைப்பின் சாராம்சம் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளவும் நமது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமை பற்றியும், நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தும் பாவக தொடர்பு பற்றியும் துல்லியமாக அறிந்துகொண்டு, அதன் வழியில் சரியான திட்டமிடுதல்களை மேற்கொண்டு வெற்றி பெறுவது மிக மிக அவசியமாகிறது, கீழ்கண்ட ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் சுய ஜாதக ரீதியாக பெற்றுள்ள வலிமை பற்றியும், நடைபெறும் திசா புத்திகள் தரும் யோக அவயோக பலாபலன்கள் பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,3,5,7,11,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகருக்கு 1ம் பாவக வழியில் இருந்து சிறப்பான வளரும் சூழ்நிலை, நிறைவான கல்வி, அதீத லாபங்கள் மற்றும் அதிர்ஷ்டம், செல்வச்செழிப்பு, அனைவர் வழியில் இருந்து வரும் உதவிகள், நோய் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடும் தன்மை, வருமுன் காக்கும் வல்லமை, நினைத்த எண்ணங்கள் யாவும் பலிதம் பெறுதல், திருமண வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் அதிர்ஷ்டம், அதிக குழந்தைகள் அவர்கள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, தன்னம்பிக்கை மிக்க மனநிலை, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் போராடும் வலிமை, புதிய சிந்தனை, முற்போக்கு சிந்தனை மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் தன்மை, நீடித்த அதிர்ஷ்டம் மற்றும் நீண்ட ஆயுள் உண்டாகும்.

3ம் பாவக வழியில் இருந்து எண்ணத்தின் வலிமை அதிகரிக்கும், நல்ல வியாபர முன்னேற்றம், மிகத்தைரியமான மனநிலை, எதையும் சாதிக்கும் வல்லமை, எடுக்கும் முயற்சிகளில் இருந்து வரும் வெற்றிகள், அதிக வாகன வசதி சொகுசு வாகன யோகம், விவசாய வழியில் இருந்து வரும் முன்னேற்றம், நிறைய சொத்து சுக சேர்க்கை, தர்மத்தை மதித்து நடத்தல், சாஸ்திர அறிவு, அதன் வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கை, கணிதத்தில் தேர்ச்சி, விளையாட்டில் ஆர்வம், திருமணத்திற்கு பிறகான  அதிர்ஷ்ட வாழ்க்கை, வீரியமிக்க செயல்திறன், எதையும் வெற்றிகொள்ளும் மனப்பான்மை, துல்லியமான கணிப்பு திறன் என்ற வகையில் சுபயோகங்களை தருவதுடன், தகவல் தொழில் நுட்ப அறிவையும் அதிகரிக்கும், நிறைவான நல்லறிவு ஜாதகருக்கு சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் லாட்டரி யோகம், தனது புத்திசாலித்தனத்தால் ஆதாயம், குலதெய்வ அனுக்கிரகம் மூலம் வாழ்க்கையில்  சுபகாரியங்களை சிறப்பாக செய்யும் தன்மை, கற்ற கல்வி வழியில் இருந்து வரும் யோகம், தெளிவான சிந்தனை, சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு கொண்டு வாழ்க்கையில் அனைத்தையும் வெற்றிகொள்ளும் தன்மை, தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், எதிர்பார்த்த நன்மைகள் நடைமுறைக்கு வரும் தன்மை, பெற்ற குழந்தைகள் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, நல்ல  ஆண்வாரிசு, பூர்வீகத்தில் இருந்து அபரிவித முன்னேற்றங்களை சுவீகரிக்கும் யோகம் என மிகுந்த நன்மைகளை தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல யோகமிக்க வாழ்க்கை துணை அமையும், சிறந்த நண்பர்கள் வழியில் ஆதரவும், உதவி செய்யும் நல்ல கூட்டாளிகளும் ஜாதகருக்கு அமைவார்கள், வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து சிறப்பான வருமான வாய்ப்புகள் உண்டாகும், வியாபாரம் ஜாதகருக்கு மிகச்சிறப்பாக அமையும், தம்பதிய வாழ்க்கையில் வெற்றியும், பொதுமக்கள் வழியில் இருந்துவரும் ஆதரவும் ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமானதாக அமையும், வெளியூர் வெளிநாடு பயணங்கள் மூலம் ஜாதகர் தன்னிறைவான முன்னேற்றங்களை பெறுவார், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் கைகொடுக்கும், ஏஜென்சி தரகு தொழில் ஜாதகருக்கு அபரிவித வளர்ச்சியினை வாரி வழங்கும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி , ஜாதகர் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்களிலும் வெற்றியும், லாபமும் உண்டாகும், ஜாதகரின் முற்போக்கு சிந்தனை எதிர்பாராத வெற்றிகளுடன் கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும், நேர்மறை எண்ணங்களால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த சுவாரஷ்யம் மிக்கதாக அமைந்திருக்கும், மற்றவர்களையும் தன்னையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கும் வலிமை உண்டாகும், ஜாதகரின் நேர்மையான குணம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைவான லாபங்கள் உண்டாகும், வியாபாரத்தில் அபரிவித வளர்ச்சி உண்டு, சுபவிரையங்கள் அதிகரிக்கும், ஆன்மீகத்தில் நல்ல நாட்டமும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்றுவரும் யோகமும் உண்டாகும், நல்ல ஆன்மீக குருவின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும், தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியும், மனநிறைவான யோக வாழ்க்கை அமையும், முதலீடுகள் வழியில் பெருத்த லாபங்கள் உண்டாகும், தெய்வீக குணம் அதிகரிக்கும், மனதில் உள்ள லட்சியங்கள் யாவும் நிறைவேறும்.

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு, 2ம் பாவக வழியில் இருந்து தந்தையின் ஆசியின் மூலம் வருமான அதிகரிக்கும் என்ற போதிலும் நிதி மேலாண்மை சார்ந்த விஷயங்களில் ஓர் நேர்த்தி இருக்காது, இன்சூரன்ஸ், உயில், போனஸ், கிராஜுவிட்டி போன்றவற்றின் மூலம் லாபம் கிட்டும், திருமணம் தாமதமாக வாய்ப்பு உள்ளது, ஆயுள் பாவக தொடர்பை பெரும் 2ம் வீடு ஜாதகருக்கு நிதானமான நிதி மேலாண்மை திறன் இல்லை எனில் வெகு வேகமாக தனம் கரையும் என்பதை கருத்தில் கொள்க.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு என்ற போதிலும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, குறிப்பாக மருத்துவ செலவுகள், வீண் விரையம், தொழில் வழியிலான பாதிப்புகள், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வீண் செலவினங்கள், வாகனம் சார்ந்த விரைய செலவுகள் போன்றவை கடுமையான பாதிப்பை தரும் என்பதால் ஆயுள் காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்து வரும் பாதிப்பில் இருந்து விடுபடலாம், குறிப்பாக அனைத்து பொருட்கள் இடம், வேண்டி வாகனம் போன்றவற்றை காப்பீடு செய்துகொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும்.

4,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல ஞானத்தையும், சிறந்த நற்குணத்தையும் தரும், உயர்கல்வி ஆய்வு கல்வியில் தேர்ச்சியை தரும், வருமுன் உணரும் தன்மையையும், இரசாயனம், கனிம பொருட்கள் சுரங்க பொருட்கள் வழியில் அபரிவித லாபத்தையும் வாரி வழங்கும், பல  அறிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டு, தர்மத்தையும் சத்தியத்தையும் மதித்து போற்றும் குணத்தை தரும், மதம் சார்ந்த நன்மைகள் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் சிறந்து விளங்கும் தன்மையை தரும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த விஷயங்களில் அபரிவித யோகம் உண்டு, வண்டி வாகன தொழில் வழியில் லாபம் உண்டு, சுய   உழைப்பின் மூலம் வெற்றி பெற்ற மனிதராக திகழ்வார் என்பது கவனிக்கத்தக்கது.

6ம்  பாவக வழியில் இருந்து பயணம் மூலம் லாபம் உண்டாகும், சமாதான  முறையால் சகல சௌபாக்கியங்களையும் பெறுவார், மதம் சார்ந்த விஷயங்களில் நன்மைகளும் ஆதரவும் தேடி வரும், உடல் நல பாதிப்பில் இருந்து விரைவாக குணம் பெரும் தன்மையை தரும், கடன் சார்ந்த தொல்லைகள் ஜாதகரின் நடவடிக்கைகள் மூலம் நிறைவடையும், நீண்ட நாள் ஆசை லட்சியம் யாவும் நிறைவேறும், அதீத எதிர்ப்புகள் உண்டான போதிலும் இறுதியில் வெற்றியே ஜாதகர் பெறுவார், பொறுமையை கடைபிடிப்பது ஜாதகருக்கான வெற்றிகளை அதிகரிக்கும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வரும் துன்பங்களை ஜாதகரே தனது அறிவுத்திறன் கொண்டு வெற்றி பெறுவார், ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியத்தின் பலாபலன்களை முழுவதும் சுவீகரிக்கும் வல்லமை உண்டாகும், தெளிந்த நல்லறிவு, அதீத செயல்திறனும் ஜாதகருக்கு உலக புகழை பெற்று தரும், அனைவரிடமும் நற்ப்பெயரை பெறுவதற்கான சந்தர்ப்பம் உண்டாகும், தனது நிறுவனத்தின் பெயரை மக்கள் மத்தியில் பிரபல்யம் அடையச்செய்யும் யோகம் பெற்றவர் என்பதுடன், தொழில் வழியில் அழியா புகழை பெறுவார், இடமாற்றம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் அதீத ஆர்வம் உண்டாகும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு , உத்தியோகம் வியாபாரம் மற்றும் சுய தொழில் வழியிலான தன்னிறைவான வெற்றிகளை வாரி வழங்கும், கம்பீரமான நிர்வாக திறனை தரும், தீர்க்கமான வாத திறமையையும், விரைவான செயல்பாடுகளையும் தரும், பொது வாழ்க்கையில் வெற்றி உண்டாகும், தான் செய்யும் தொழில் வழியில் இருந்து 100% விகித வெற்றிகளையும் லாபங்களை பெறுவதுடன், கவுரவம் அந்தஸ்து குறையாத யோக வாழ்க்கையை தரும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால் எதிர்கால வாழ்க்கை பரிபூர்ண வெற்றிகள் நிறைந்ததாக விளங்கும்.

நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்கள் :

சுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் ( 20/03/2009 முதல் 20/03/2029 வரை )

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, மேற்கண்ட பாவக வழியில் இருந்து சற்று இன்னல்களை தரக்கூடும், வருமானம், இழப்பு என்ற  வகையில் இன்னல்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதால் ஜாதகரின் நிதி சார்ந்த மேலாண்மை மிகவும் சிறப்பாக அமைவது அவசியமாகிறது, முடிந்த அளவு கடன் சார்ந்த இன்னல்களில் இருந்து விடுபட முயற்சிப்பது அவசியமாகிறது, அதீத தன்னம்பிக்கை ஜாதகருக்கான பொருளாதார முன்னேற்றங்களை அபரிவிதமானதாக மாற்றி அமைக்கும், தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசையில் ராகு புத்தி 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்கது, தன்னிறைவான பொருளாதர முன்னேற்றங்களையும், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் நல்கும், குலதெய்வத்தின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும்.
எதிர்வரும் குரு புத்தியும் தங்களுக்கு 1,3,7,12ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை  ஏற்று  நடத்துவது தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் இருந்து விடுதலையும், பொருளாதார மேன்மையையும் வாரி வழங்கும், புதிய சிந்தனை புதிய செயல்பாடுகள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்குவதுடன் இல்லற வாழ்க்கையில் சந்தோசம், குழந்தை பாக்கியத்தை தடையின்றி வழங்கும், சுக்கிரன் திசை 2,8ம் பாவக வழியில்  இருந்து இன்னல்களை தந்த போதிலும், நடைபெறும், எதிர்வரும் புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை தருவது வரவேற்க்கத்தக்கது " வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் 
 ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக