திங்கள், 20 ஆகஸ்ட், 2018

அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை அள்ளித்தரும் சுய ஜாதக பாவக வலிமை!



பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிய குறிப்புகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும் நமது சுய ஜாதகம் வலிமை பெற்று அமைவது நமது வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளையும், தன்னிறைவான பொருளாதார வசதியுடன் கூடிய முன்னேற்றங்களை தங்குதடையின்றி வாரி வழங்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, சுய ஜாதக வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கையை சுவீகரிக்க அடிப்படையில் நமது ஜாதகத்தில் லக்கினம் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும்  நமது ஜாதகத்தில் சுபயோகங்களை எந்த எந்த பாவக வழியில் இருந்து சுவீகரிக்க இயலும் என்பதில் தெளிவு பெற்று இருப்பது மிக மிக அவசியமாகும், இதை ஓர்  உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : சிம்மம்
 நட்ஷத்திரம் : பூரம் 2ம் பாதம்

மேற்கண்ட விருச்சிக லக்கின ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் நல்ல வலிமையுடனே காணப்படுகிறது, பனிரெண்டு வீடுகளும் தாம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளையே தரும் அமைப்பில் இருப்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் பாவக தொடர்புகள் வழியில் இருந்து ஜாதகர் பெரும் நன்மைகளை பாவக  வலிமையின் அடிப்படையில் ஆய்வு செய்வோம் அன்பர்களே !

1,4,7,9ம் வீடுகள் லாப  ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு உயிர் உடலாகிய லக்கின பாவக வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டம் நிறைந்தவர் என்பதை உறுதி செய்கிறது மேலும் ஜாதகர் முற்போக்கு சிந்தனையுடன் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் யோகம் பெற்றவர் என்பதையும் தெளிவாக்குகிறது, தான் வளரும் சூழ்நிலையில் நல்ல ஆரோக்கியம், சிறந்த மனவலிமை கொண்டுள்ளவராகவும், திறன்மிக்க செயல்களை சிறப்பாக  செய்யும் ஆற்றல் பெற்றவராகவும் திகழ்வார், தெளிவான சிந்தனை, தெய்வீக அனுக்கிரகம் போன்றவற்றின் மூலம் வாழ்க்கையில் வியக்கத்தக்க நன்மைகளை அனுபவிக்கும் தன்மை பெற்றவர், நோய் எதிர்ப்புத்திறனுடன் வலிமை மிக்க உடல் அமைப்பை பெற்றவர் என்பதை உறுதி செய்வதுடன், ஜாதகருக்கு அறிவார்ந்த முயற்சிகள் வழியில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்  என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகரின் லக்கினம் லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கான அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கும் என்பதுடன் நீடித்த அதிர்ஷ்டம் பெற்றவர் என்பது உறுதியாகிறது.

4ம் பாவக வழியில்  இருந்து ஜாதகருக்கு நிறைவான மனம், நல்ல குணம், நண்பர்கள் ஆதரவில் சுகபோக யோக வாழ்க்கையை சுவீகரிக்கும் தன்மையை தரும், ஜாதகரின் தாய் வழியில் இருந்து வரும் சுபயோகங்களை பரிபூர்ணமாக பெரும் தன்மையை தரும், தாய் வழி சொத்துக்கள் கிடைக்கும், அனைத்திலும் வெற்றியை தரும், மண் மனை வண்டி வாகன யோகம் உண்டாகும், தனது சுய உழைப்பில் மேற்கண்டவற்றை சுவீகரிக்கும் யோகத்தை தரும், அரசியல் அல்லது  அரசு சார்ந்த உதவிகள் உண்டு, பெரியமனிதர்களின் ஆதரவின் வழியில் குறுகியகால வெற்றிகளை பெறுவார், அந்நியர், வேற்று மதத்தினர் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை ஜாதகருக்கு தன்னிறைவான பொருளாதர முன்னேற்றத்தை வாரி வழங்கும், எளிதான வெற்றிகள், உடல்நலம் சார்ந்த இன்னல்களில் இருந்து விரைவில் குணம் பெரும் தன்மையை தரும், பொருத்தன்மையான நடவடிக்கை ஜாதகருக்கு மிகப்பெரிய  அந்தஸ்த்தை வாரி வழங்கும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு, யோகம் மற்றும்  அதிர்ஷ்டமிக்க வாழ்க்கை துணையை பெறுவார் என்பதுடன், திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி ஜாதகருக்கு மிகவும் அபரிவிதமானதாக அமையும், ஜாதகரின் லாப ஸ்தானம் பெரும் பகுதி கால புருஷ தத்துவ  அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் ராசியில் 21 பாகைகளை கொண்டு இருப்பது ஜாதகருக்கான வாழ்க்கை துணை வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து வருவார் என்பதை குறிப்பதுடன் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை  வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து தனது சுய அறிவு திறன் கொண்டு சுவீகரிக்கும் வல்லமையை  தரும் என்பதை ஜாதகர் தனது கருத்தில் நிறுத்துவது அவசியமாகிறது, மேலும் ஜாதகர் திருமணம் செய்வதை தாமதம் செய்வது ஜாதகருக்கான வெற்றி வாய்ப்புகளை வெகுவாக குறைக்கும், சுய ஜாதகத்தில்  களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கான யோக வாழ்க்கையை  தனது  வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள், கூட்டு தொழில் மற்றும் வெளியூர் வெளிநாடுகளில் இருந்து வாரி வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தெய்வீக அனுக்கிரகமும், ஆன்மீக பெரியோர்களின் சந்திப்பின் வழியில் இருந்து யோக  வாழ்க்கையையும் பெறுவார், பல அறிய  புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகத்தை தரும், எதிர்பாராத ஆன்மீக பெரியோர்களின் தரிசனம் ஜாதகரின் வாழ்க்கையில் சிற்பபு மிக்க வெற்றிகளை வாரி வழங்கும், தனது அறிவு திறன் மூலம் சகல இன்னல்களில் இருந்தும் மீண்டு வரும் யோகத்தை தரும், பயணங்களில் வெற்றியும், வெளிநாட்டில் கல்வி அதன் வழியில் இருந்து வரும் ராஜயோக வாழ்க்கை  என்ற விதத்தில் சுபயோகங்களை வாரி வழங்கும், ஜாதகரின் ஆன்ம பலமும், தெய்வீக  தன்மையும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், எளிதில் அனைத்தையும் பெரும் தன்மை உண்டு.

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து அளவற்ற செல்வசேர்க்கை, இனிமையான  பேச்சு திறன், வாக்கு வன்மை, இனிமையான இல்லற வாழ்க்கை, சிறந்த உணவு மற்றும் விருந்து அனுபவிக்கும் யோகம், சேமிப்பு திறன், செல்லும் இடங்களில் இருந்துவரும் சிறப்பான வரவேற்பு, குடும்பத்தில் ஒற்றுமை , அனைவரையும் அனுசரித்து செல்லும் வல்லமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும்.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் காரியங்களில் வெற்றி, லட்சியம் நிறைவேறும் தன்மை, செல்வசெழிப்பு, எதிரிகள் எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் தன்மை,  நல்ல மனநிலை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை, உண்மை பேசுதல், சத்தியத்தை மதித்தல்,  சாகச ஆர்வம், அதீத பயனவிருப்பம், கல்வியில் ஆர்வம், விளையாட்டில் ஆர்வம் கலைத்துறையில் வெற்றி, ஆய்வு  செய்வதில் வெற்றி, தன்னம்பிக்கை மனோதிடம்,  புதிய சூழ்நிலைகளில் விருப்பம், எஜென்சி துறையில் அபரிவித வளர்ச்சி மற்றும் தன சேர்க்கை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு  கலைகளில் தேர்ச்சியை தரும், தெய்வீக அனுகிரகமும் உண்டாகும், மிகசிறந்த புத்திசாலித்தனமும், சமயோசித அறிவுத்திறனையும் தரும் , குல தெய்வ ஆசியின் மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழும் யோகத்தை தரும், சிறந்த  தீர்வுகளை காணும் அறிவு திறனும், சரியான வழியை பரிந்துரைக்கும் வல்லமையை தரும், கல்வியில் ஆராய்ச்சியில் வெற்றியை தரும், அனைவராலும் நன்மைகளை பெறுவதுடன் நற்ப்பெயரும் உண்டாகும், தெளிவான சிந்தனை, சான்றோர் ஆதரவு ஜாதகரின் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்கும், சிறந்த வாதத்திறமை உண்டாகும், குழந்தைகளுடன் இணக்கம், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களை பெரும் அமைப்பை தரும்.

8,11ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 8ம் பாவக வழியில் இருந்து திடீர் விபத்து, பொருள் இழப்பு, உடல் நல பாதிப்பு, மருத்துவ செலவினங்கள், எதிர்பாராத முன்னேற்ற தடைகள், காதல் தோல்வி, எதிர்பாலின அமைப்பினரால் வரும் பாதிப்பு என்ற வகையில்  இன்னல்களை தரும், மனம் ஒருநிலை படுவது ஜாதகரின் வாழ்க்கையில் சகல நன்மைகளுக்கும் நல்ல ஆரம்பத்தை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகத்துடன் நவீன கருவிகளை பயன்படுத்தும் யோகம், அதீத வசதி வாய்ப்புகளை அனுபவிக்கும் தன்மை, புதிய வண்டி வாகனங்கள், அதிநவீன வசதி வாய்ப்புகள், சொகுசு வாழ்க்கை என்ற வகையில் சுபயோகங்களை வாரி வழங்கும், ஜாதகரின் நல்ல குணம் அனைவராலும் பாராட்டப்படும்.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது உத்யோகம், வியாபாரம் தொழில் முதலியவற்றில் அபரிவித வளர்ச்சியை வாரி  வழங்கும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கையை தரும், கம்பீரமான தொழில் வாய்ப்புகள், தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் தைரியம், சிறந்த நிர்வாக வல்லமை, திட்டமிட்டு செயலாற்றி வெற்றிபெறும் யோகம், குறுகிய காலத்தில் அபரிவித வளர்ச்சி என்ற வகையில் சிறப்புக்களை வாரி வழங்கும், கூட்டு தொழில் வழியிலான நன்மைகளை ஜாதகர் பரிபூர்ணமாக பெறுவதுடன், எதிர்பாராத நன்மைகளையும் பெறுவார்.

6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து கடன் சார்ந்த இன்னல்கள் வெகுவான பாதிப்புகளை வாரி வழங்கும், கடன் மற்றும் வேலை ஆட்கள் மூலம் அதீத தொல்லைகளை  வாரி வழங்கும், உடல் நலம் கடுமையாக பாதிக்க கூடும், எதிரி தொல்லை ஜாதகருக்கு சற்று அதிக அளவிலேயே இருக்கும், உடல் நலம் மனநலம் சார்ந்த பாதிப்புகளை ஜாதகர் அனுபவிக்கும் தன்மையை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு நிறைய செலவினங்களை தரும், பங்கு சந்தை லாட்டரியில் நஷ்டத்தை தரும், அதிக அளவிலான முதலீடுகள் ஜாதகரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை தந்து தொழில் முடக்கத்தை வழங்க கூடும், உறவுகள் வழியில் இருந்து ஜாதகர் சில நேரங்களில் அதீத மனஉளைசலுக்கும், போராட்டத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும்.

நடைபெறும் செவ்வாய் திசை தரும் பலன்கள் : ( 28/04/2016 முதல் 29/04/2023 வரை )

 நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு 8,11ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன்  சம்பந்தம் பெற்று யோக பலன்களை தருவது, ஜாதகருக்கு ஆயுள் ஸ்தான வழியில் இருந்து திடீர் இழப்பு, மருத்துவ செலவினங்கள், பொருளாதார  தடைகள், எடுக்கும் காரியங்கள் பின்னடைவை சந்தித்தல் எதிலும் திருப்தி இன்மை என்ற வகையில் இன்னல்களை தந்த போதிலும், லாப ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகருக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும், தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கான சரியான முடிவுகளை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், புதிய சிந்தனை, புதிய யுக்திகளை கையாண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டு, வெளியூர் வெளிநாடுகளை சார்ந்த அன்பர்களின் ஆதரவில் சுகபோக யோக வாழ்க்கையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் தேடி வரும், எதிர்வரும் சனி புத்தி ஜாதகருக்கு எடுக்கும் காரியங்களில் நல்லதொரு வெற்றிகளை வாரி வழங்கும், திருமண முயற்சி, வேலைவாய்ப்பிற்க்கான முயற்சி, தொழில் வழியிலான செயல்பாடுகளில் பரிபூர்ண நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்பது ஜாதகருக்கான சிறப்பு நினைவூட்டல் ஆகும்.

எதிர்வரும் ராகு திசை தரும் பலன்கள் ( 29/04/2023 முதல் 29/04/2041 வரை )

எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு 1,7,9ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக தொடர்பை பெற்றும், 11ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் வாரி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது, இருப்பின் இதே ராகு திசையில் ஜாதகருக்கு 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெற்று அவயோக பலனையும், 8ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவக தொடர்பை பெற்று அவயோக பலனையும் தருவது 6,8,12ம் பாவக வழியிலான இன்னல்களை தவிர்க்க இயலாத சூழ்நிலையை தரும், ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஜீவனம் மேற்கொள்வது  மேற்கண்ட பாதிப்பில் இருந்து விடுபட நல்லதோர் வாய்ப்பை நல்கும் என்பது கவனிக்கத்தக்கது, ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளையும், வலிமை அற்ற பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்கவும் தயார் நிலையில் இருப்பது நல்லது, ராகு திசை ஜாதகருக்கு பெரிய அளவிலான நன்மைகளையே தரும் என்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

பரிகாரம் :

1) ஜாதகர் திருவக்கரை சென்று முறையாக குரு பகவானுக்கு வக்கிரக நிவர்த்தி செய்து நலம் பெறுவது அவசியமாகிறது, வக்கிரக நிவர்த்தி செய்வதன் மூலம் ஜாதகர் சுய ஜாதகத்தில் உள்ள யோகங்களை சுவீகரிக்கும் வல்லமையை பரிபூர்ணமாக தரும்.

2) தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பு மிக்க முன்னேற்றங்களை வாரி வழங்கும், தொழில் வழியிலான நன்மைகள் அதிகரிக்கும்.

3) திருவெண்காடு சென்று முக்குணநீராடி  சகல சௌபாக்கியங்களையும் பெறுக , சிவபெருமான் தரிசனம் சகல யோகங்களையும் சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

4) 48 நாட்கள் ஜாதகர் வீட்டில் விளக்கேற்றுவது சகல நன்மைகளையும் தரும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக