செவ்வாய், 23 அக்டோபர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - மகரம் )



சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : மகரம் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியாகவும், சர மண் தத்துவ தன்மையை பெற்றதுமான மகர ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சுய வர்க்க கிரகத்தின் வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் மகர லக்கினத்திற்க்கு வீரியம் மற்றும் விரைய ஸ்தானத்திற்க்கு அதிபதி என்ற நிலையை பெறுகின்றார், மேலும் தற்போழுது லாப ஸ்தானமான 11ம் பாவகத்திற்க்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான் தனது சுப திருஷ்ட்டி என்ற நிலையில் 3,5,7ம் பாவகங்களை வசீகரம் செய்கிறார், இதன் மூலம் மகர இலக்கின அன்பர்கள் 90% சதவித ராஜ யோக பலாபலன்களை அனுபவிக்கும் வல்லமை பெற்றவர்கள் ஆகிறார்கள், 11ல் அமர்ந்த குரு பகவான் சம வீடு என்ற நிலையில் மகர இலக்கின அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது வரவேற்க தக்கது, தனது வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிர்ஷ்டங்களை பரிபூரணமாக  சுவீகரிக்கும் வல்லமையை தருகின்றார், எதிர்பாலினம், வெளிநாடுகளில் இருந்து வரும் திடீர் தனவரவு, வியாபர வழியில் இருந்து வரும் அதிக பொருள் சேர்க்கை, தன்னம்பிக்கை, சுய மரியாதை வாழ்க்கை, தெய்வீக அனுகிரகம், எதிர்பாராத அதிர்ஷ்டம் என்றவகையிலும், புதிய முயற்சிகள், புதிய சந்தர்ப்பங்கள், புதிய வாய்ப்புகள் என அனைத்திலும் புதுமையான வெற்றிகளை குவிக்கும் நேரமிது, லாப ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் மகர லக்கின அன்பர்களுக்கு எதிர்பாராத யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதுமட்டும் உறுதி வாழ்த்துக்கள்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையால் மகர லக்கின அன்பர்களுக்கு வீரிய ஸ்தானம் எனும் மூன்றாம் பாவகத்தை வசீகரிப்பது, வரவேற்கத்தக்கது நவ கிரகங்கள் யாவும் சம வீடுகளான 3,11ம் பாவகங்களை வசீகரிப்பதும், சஞ்சாரம் செய்வதும் 100% விகித நன்மைகளை மட்டுமே வாரி வழங்கும் இது பொது விதி, அதன் படி மகர லக்கின அன்பர்களுக்கு குரு பகவானின் லாப ஸ்தான சஞ்சாரமும், வீரிய ஸ்தான வசீகரமும் சிறப்பான யோக வாழ்க்கையை மட்டுமே தருவது கவனிக்கத்தக்கது, எடுக்கும்  காரியங்கள் யாவிலும் வெற்றியை தரும் யோகமான நேரமிது, அதிர்ஷ்ட லட்சுமியின் அருள் பார்வை  மகர லக்கின அன்பர்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும், செய்த முதலீடுகள் வழியில் இருந்து அதீத லாபமும் பொருளாதார முன்னேற்றத்தையும் பெறுவார்கள், நல்ல உறக்கமும், நிம்மதியான வாழ்க்கையும் ஜாதகரின் வாழ்க்கையில் புதுவித உத்வேகத்தை வாரி வழங்கும், மனம் அமைதியும் சாந்தமும் பெரும், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், வியாபாரிகளுக்கு அபரிவிதமான யோக வாழ்க்கையை வாரி வழங்கும் நேரமிது, தெய்வீக அனுக்கிரகம் மூலம் புதிய தொழில்  முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிபெறுவார், தகவல் தொழில் நுட்பம் சாந்த துறையில் வெற்றி உண்டாகும், எழுத்து பத்திரிக்கை, ஊடக தொழில் துறையில் உள்ளவர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், நல்ல விஷயங்களும், சரியான அணுகுமுறையும் வாழ்க்கையில் சுபயோகங்களை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை மகர லக்கின அன்பர்களே, அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையில் பல படிகள் முன்னேறி சென்று வெற்றிவாகை சூடும் நேரமிது " வாழ்த்துக்கள் "  

 குரு பகவான் தனது 7ம் பார்வையால் மகர லக்கின அன்பர்களுக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவகத்தை வசீகரிப்பது வரவேற்கத்தக்கது, ரிஷபம் ( சுக்கிரன் ) எதிர்வர்க்க கிரகம் என்ற போதிலும், கோண வீடாக அமைவது மிகுந்த சிறப்புகளை தரும், தான் கற்ற கல்வி, தனது சமயோசித அறிவு திறன், குலதெய்வ ஆசி, இறை அருளின் கருணை, இணையற்ற பேச்சு திறன் யாவும் மகர லக்கின அன்பர்களுக்கு இந்த ஒருவருட காலத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை வாரி வழங்கும், புதிய சகாப்தத்தை வெற்றிகரமாக துவங்கும் வாய்ப்பைத் தரும், எந்த ஓர் நல்ல  காரியமும் துவங்கிய வேகத்தில் வெற்றியை தரும், எதிர்ப்புகள் யாவும் விலகும், நல்லோர் அறிமுகமும்,  பெரிய மனிதர்களால் ஆதாயம், அரசியல் செல்வாக்கு, கலைத்துறை சார்ந்த முன்னேற்றம்,கலைகளில் தேர்ச்சி, கல்வியில் வெற்றி, ஆரோக்கியம் உடல் நலனில் ஆர்வம், அளவில்லா வருமானம், அபூர்வ அதிசய நிகழ்வுகள் மூலம் வாழ்க்கையில் பிரகாசிக்கும் தன்மை என்ற விதத்தில் சுபயோகங்களை வாரி வழங்கும், தொண்மையான புனிதம் மிக்க புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்றுவரும் யோகம் உண்டு, இதுவரை புத்திர பாக்கியம் இன்றி தவித்த அன்பர்களுக்கு நல்லதோர் யோகம் மிக்க ஆண் வாரிசு அமையும், வாழ்க்கை இனிமை மிக்கதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை " வாழ்த்துக்கள் "

குரு பகவான் தனது 9ம் பார்வையால் மகர லக்கின அன்பர்களுக்கு களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ஒரு வகையில் நன்மையை தரும் என்ற போதிலும், மகர லக்கினத்திற்கு களத்திர ஸ்தானம் மற்றும் கேந்திர பாவகமாக அமைவது குரு பார்வையின் மூலம் இன்னல்களை தரும் என்பதை  தவிர்க்க இயலாது, தனது வாழ்க்கை துணை வழியில் வரும் தொல்லைகள் சற்று அதிகமாகவே இருக்கும், வண்டி வாகனம், வீடு நிலம் இடம் சார்ந்த தொந்தரவுகள் சற்று கடுமையான பாதிப்பையும், இழப்பையும் தரக்கூடும், ஆடம்பர செலவுகள் பெருத்த ஏமாற்றங்களை தரக்கூடும், சுக போக வாழ்க்கை சற்று பாதிக்க வாய்ப்பு உண்டு, கூட்டு முயற்சிகள் அதீத தடை தாமதங்களை சந்திக்கும், வெளியூர் வெளிநாடு வாழ்க்கை பெரிய பின்னடைவை தரும் ஏமாற்றங்களும், இழப்புகளும் மகர லக்கின அன்பர்களை வெகுவாக பாதிக்கும், சில இழப்புகள் வாழ்க்கையை வேறு பாதையை நோக்கி இழுத்து செல்லக்கூடும், எதிர்பாலின அமைப்பினரிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதும், தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்வது சற்று கடுமையான இன்னல்களை தரும், புதிய கூட்டு முயற்சிகளை தவிர்ப்பது ஜாதகரின் வாழ்க்கையில் நிம்மதியை தரும்.

குறிப்பு :

மகர லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 11,3,5,7ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 11,3,5,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து:

  1. மகரலக்னம் தனுசுராசி ராகுமாகாதிசையில் கேதுபுத்தி ராகு 8ல் உள்ளார்,பலன் இருக்எகும்ப்ப.டி

    பதிலளிநீக்கு