வெள்ளி, 5 அக்டோபர், 2018

ரஜ்ஜு பொருத்தம் மற்றும் திசா சந்திப்பும் - திருமண பொருத்தம் காண்பதில் பாவக வலிமை அடிப்படையிலான அணுகுமுறை !



  இன்றைய தலைமுறையினர் திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிவுக்கு வருவதற்கும், இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி நிற்பதற்கும், கணவன் மனைவி ஒற்றுமை இன்மைக்கும், கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்து நிற்பதற்கும் அடிப்படை காரணம் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் பாவகங்களின் வலிமை அற்ற தன்மையே காரணமாக அமைகின்றது, திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது சுய ஜாதக வலிமைக்கு முக்கியத்துவம் தாராமல், நட்ச்சத்திர பொருத்தம் மற்றும் தோஷ நிர்ணயம் எனும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதும், அதன் அடிப்படையில் திருமண பந்தத்தில் இணைவதே மேற்கண்ட இன்னல்களுக்கு அதி முக்கிய காரணமாக அமைகிறது, திருமண பொருத்தம் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் எப்படி பார்ப்பது, இதனால் வரன் வது இருவருக்கும் கிடைக்கும் நன்மைகள் என்ன ? என்பதை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

வரன் ஜாதகம் :


வது ஜாதகம் :



இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில்  முக்கிய பங்கு வகிப்பது  சுய ஜாதகத்தில் 2,5,7,812ம் வீடுகள் என்றால் அது மிகையில்லை, குறிப்பாக வது, வரன் ஜாதகத்தில் 2,5,7ம் வீடுகள் வலிமை பெறுவது திருமண வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வழங்கும், தம்பதியரின் வாழ்க்கையில் சுபயோகங்களையும், மனக்கசப்பற்ற தாம்பத்யத்தையும் தரும், மேற்கண்ட வரன், வது ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமையை பற்றியும், அவை பெரும் தொடர்புகள் பற்றியும் இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்டு இவர்கள் இல்லற வாழ்க்கையில் இணைந்தால் ஏற்படும் நன்மை தீமை யோக அவயோக நிகழ்வுகள் பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே !

வரனின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமை நிலை :

ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது வரவேற்கத்தக்கது, இது ஜாதகருக்கு அளவற்ற செல்வ வளம், இனிமையான வாக்கு வன்மை, யோகம் மிக்க குடும்ப வாழ்க்கை, குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்லும் தன்மை, ஒற்றுமையுடன் சேர்ந்து வாழும் தன்மை, நிறைவான வருமான வாய்ப்புகள், நல்ல உணவு, பேச்சு திறன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், குழந்தைகளுடன் அன்பு பாசம், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற வகையில் சிறப்பான நன்மைகளை தரும்.

5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நிறைவான கல்வி அறிவு, கலைகளில் தேர்ச்சி, சமயோசித அறிவு திறன், எதையும் எதிர்கொள்ளும் துணிவு, வாத திறமை, புத்திசாலித்தனம் மூலம் இன்னல்களை வெற்றிகொள்ளும் தன்மை, தன்னிறைவான செல்வ வளம், நல்ல குழந்தைகள், குடும்பத்தில் மகிழ்ச்சி, விளையாட்டில் ஆர்வம், காதலில் வெற்றி, காதல் திருமணம் மூலம் யோக வாழ்க்கை, தர்ம சிந்தனை, கற்ற கல்வி வழியில் இருந்து வரும் தனசேர்க்கை, குல தெய்வ ஆசிர்வாதம், மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும் தன்மை, குழந்தைகள் மூலம் யோகம், நல்ல ஆண் வாரிசு என்ற வகையில் சிறப்புகளை தரும்.

7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையை பெற்று தரும், சக்தி வாய்ந்த கூட்டாளி, நல்ல நண்பர்கள், வெளிநாடு யோகம், கூட்டு முயற்சி மூலம் வாழ்க்கையில் நலம் பெரும் தன்மை, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி, திருமணதிற்கு பிறகான யோக வாழ்க்கை, தன்னிறைவான பொருளாதர முன்னேற்றம், வியாபர துறையில் மிக பெரிய முன்னேற்றம் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும், இல்லற வாழ்க்கை இனிதே அமையும், தெய்வீக அனுகிரகம் மூலம் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

8,12ம் வீடுகள் உயிர் உடலாகிய லக்கின பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஆயுள் பாவக வழியில் இருந்து தீர்க்காயுள், தொல்லையில்லா யோக வாழ்க்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் அன்பு மற்றும் ஆதரவு, குறிக்கோள்கள் மிக எளிதாக நிறைவேறும் தன்மை, மருத்துவ உபகரணம் அல்லது ஆயுள் காப்பீடு போனஸ் இன்சூரன்ஸ் மூலம் மிகுந்த லாபத்தை தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு ஏற்படும் நஷ்டமே மிகுந்த லாபத்தை தரும், மற்றவர்களின் பணம் தன்னிடம் கையிருப்பாக இருக்கும், சிக்கனநடவடிக்கை மூலம் செல்வசேர்க்கை உண்டாகும், சிறு முதலீடுகள் கூட மிகுந்த லாபத்தை தரும், விரோதிகள் மறைவர், நல்ல சொத்து சுக சேர்க்கை உண்டு என்பதுடன், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

ஜாதகருக்கு நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 21/06/2018 முதல் 21/06/2038 வரை )

நடைபெறும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவக தொடர்பை பெற்று தனது திசையில் யோகமிக்க குடும்ப வாழ்க்கையை வழங்குவது வரவேற்கத்தக்கது, இதனால் ஜாதகர் நல்ல இல்லறவாழ்கை, மகிழ்ச்சியான குடும்பம், தன்னிறைவான வருமானம், செல்வச்செழிப்பு, பொருளாதார முன்னேற்றம், எதிர்ப்புகளை வெற்றிகொண்டு யோக வாழ்கையை பெரும் தன்மை, நம்பிக்கை மிக்க எதிர்காலம் என்ற வகையில் ஜாதகருக்கு சுக்கிரன் திசை அளவற்ற செல்வத்துடன் சுகபோக யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை வாழ்த்துகள்.

வதுவின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகளின் வலிமை நிலை :

2,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக தொடர்பை பெறுவது ஜாதகிக்கு வருமானம் சார்ந்த இன்னல்களை தரக்கூடும், இருப்பினும் இல்லற  வாழ்க்கையை சிறப்பாக அமையும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், வாக்கு சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் ஜாதகிக்கு தேவை, 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகி எடுக்கும் முடிவுகளை மிகவும் ஆழ்ந்து யோசித்து எடுப்பது வீண் பண விரயத்தை தவிர்க்க உதவும், மேலும் பொறுமை காப்பதும், பெரியோர் ஆலோசனையை பெறுவதும் ஜாதகிக்கு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், குறிப்பாக பணத்தை முதலீடு செய்யுமுன் ஆழ்ந்து யோசித்து செய்வதே சகல நன்மைகளையும் தரும்.

5,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு அதிர்ஷ்ட லட்சுமியின் அருள் பார்வை எப்பொழுதும் பரிபூர்ணமாக அமைந்து இருக்கும், குறிப்பாக ஜாதகிக்கு பிறக்கும் குழந்தைகள் வழியில் இருந்து பரிபூர்ண அதிர்ஷ்டம் உண்டாகும், நிறைந்த நல்லறிவும், சமயோசித புத்திசாலித்தனமும் ஜாதகியின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், எதிர்ப்புகளை தனது அறிவு திறன் கொண்டு வெல்லும் வல்லமையை தரும், குல தெய்வத்தின் ஆசியின் மூலம் ஜாதகிக்கு சகல நன்மைகளும் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கணவர் வழியில் இருந்தும், நண்பர்கள், கூட்டாளிகள், வெளியூர் அல்லது வெளிநாடுகள் வழியில் இருந்து சகல யோகமும் உண்டாகும் நன்மைகள் மேலோங்கும், கூட்டு முயற்சி பலிதம் பெரும் வாழ்க்கை துணை வழியிலான நன்மைகளை ஜாதகியும், ஜாதகியால் வழக்கை துணையும் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும், இல்லற வாழ்க்கை ஜாதகிக்கு விரும்பியது போல் அமையும் என்பது கவனிக்கத்தக்கது.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு நீண்ட ஆயுளை தரும், இருப்பினும் சிறு சிறு மருத்துவ செலவினங்களை தரக்கூடும், உடல் நலனில் அதீத அக்கறை கொள்வது ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை தரும், முதலீடுகளில் அதீத கவனமும் தேவை, மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது வெகுவான இன்னல்களை தரக்கூடும்.

ஜாதகிக்கு நடைபெறும் சுக்கிரன் திசை தரும் பலன்கள் : ( 01/07/2014 முதல் 01/07/2034 வரை )

ஜாதகிக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 3,7ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 3,7ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவது வரவேற்கத்தக்கது, சுக்கிரன் திசையில் ஜாதகி எடுக்கும் காரியங்கள் யாவும் வெற்றி பெரும், நினைக்கும் எண்ணங்கள் யாவும் நிறைவேறும், விளையாட்டில் ஆர்வம் பரிசுகள், தெய்வீக அனுபவம், கமிஷன் வியாபாரம், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் வெற்றி என்ற வகையில் சிறப்பான யோக வாழ்க்கையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல  யோகமிக்க வாழ்க்கை துணை, வெளிநாடுகளில் யோக வாழ்க்கை, கூட்டு முயற்சியில் வெற்றி, அரசு கவுரவம், வாழ்க்கை துணைக்கு அதிர்ஷ்டம், பிரபல யோகம், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி, வியாபர விருத்தி மற்றும் அதன் வழியிலான யோக வாழ்க்கை என்ற அமைப்பில் சுபயோகங்களை  வாரி வழங்கும்.

திசா சந்திப்பு :

வரனுக்கும் வதுவுக்கும் ஏக காலத்தில் சுக்கிரன் திசை நடைமுறையில் இருப்பதால் திசா சந்திப்பு அல்லது ஏக திசை நடப்பு தோஷம் என்று கூறக்கூடும், வரன் வது இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை 2ம் பாவக வழியில் இருந்தும் 3,7ம் பாவக வழியில் இருந்தும் சுபயோகங்களை வாரி வழங்குவதால் இல்லற வாழ்க்கை மிகவும் யோகமிக்கதாகவே அமையும் என்பதை உறுதியாக கூறலாம், மேலும் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று அறிவுறுத்த கூடும், வரன் வது ஜாதகத்தில் பாவக வலிமை மிதமிஞ்சி நிற்பதால் ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்பதால் யாதொரு இன்னல்களும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொண்டு திருமணம் சிறப்பாக செய்யலாம் என்பது " ஜோதிடதீபம் " வழங்கும் அறிவுரை, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக