செவ்வாய், 12 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : மகர லக்கினம் ( 2019-2020 )




 மகர லக்கின அன்பர்களுக்கு சத்ரு மற்றும் அயன சயன பாவக வழியில் இருந்து யோக அவயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : மகரம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாகவும், சர மண் தத்துவ ராசியாகவும் விளங்கும் மகர ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்திலும், விரைய ஸ்தானமான  12ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் சத்ரு ஸ்தானத்தில் அமைவது மகர லக்கின அன்பர்களுக்கு தேர்வு, போட்டி பந்தயம், வழக்குகளில் வெற்றியை தரும், உடல் நலனில் நல்ல ஆரோக்கியத்தையும், ஜாதகர் மேற்கொள்ளும் சுய முயற்சியில் வெற்றியையும் தரும், இது புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் மகர லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், குறிப்பாக ஜாதகரின் அறிவு திறன் மேலோங்கும், சத்ரு வழியில் இருந்து நன்மை உண்டாகும், கடன் பெறுவதால் முன்னேற்றம் ஏற்படும், கேட்ட இடத்தில் இருந்து தன உதவிகள் கிடைக்க பெறுவீர்கள், சரியான  தகவல் தங்களுக்கு  கிடைக்க பெற்று ஆதாயம் அதிக அளவில் கிடைக்கும், வியாபர துறையில் உள்ள அன்பர்களுக்கும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும், திடீர் வருமானம் குறுகிய காலங்களில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் உள்ளோருக்கு இனிவரும் காலம் நல்ல எதிர்காலத்தை தரும் என்பதுடன் பதவி உயர்வு நல்ல வெற்றி வாய்ப்புகள் உண்டாகும், துணிந்து செய்யும் காரியங்களில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும், மருத்துவம் சார்ந்த தொழில் வழியில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் காலம் நல்ல மாற்றங்களை வாரி வழங்குவதுடன் கைநிறைவான வருமானமும் சிறப்பாக கிடைக்க பெறுவீர்கள், சத்ரு ஸ்தான வழியில் எதிர்ப்புகளை வென்று நலம் பெரும் நேரமிது.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் மகர லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், எதிர் பாரத செலவுகள், வீண் விரையம், பொருளாதார சிக்கல்கள், எதிரிகள் தொந்தரவு, கடன் தொந்தரவு, மறைமுக எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இன்னல்கள், நோய் பாதிப்பு, திடீர் மருத்துவ செலவினம், தாங்க இயலாத உடல் தொந்தரவுகள், வயிறு சார்ந்த இன்னல்கள், நரம்பு பாதிப்பு, தவறான புரிதல்கள் மூலம் வாழ்க்கையில் அடையும் நஷ்டங்கள், முன்னேற்ற தடை, தெளிவில்லாத நடவடிக்கைகள், சிந்தனை திறன் பாதிப்பு, உறவுகள் வழியில் இணக்கமற்ற சூழ்நிலை, அதீத உடல் பாதிப்பு, அறுவை சிகிக்சை, போராட்ட வாழ்க்கை முறை, எதிர்பாராத பொருள்இழப்பு , ஜாமீன் தருவதால் வரும் பாதிப்பு என சற்று சிரமங்களை அதிக அளவிலேயே தரக்கூடும்.

விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் மகர லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் அதீத மனப்போராட்டத்தையும், மனஅழுத்தத்தையும் வாரி வழங்கும், பெரியவர்கள், ஆன்மீக பெரியோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து சரியான விஷ்யங்களை மட்டுமே கிரகித்து நலம் பெற வேண்டிய நேரமிது, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு வீண் அவப்பெயர் உருவாக அதிக வாய்ப்பு உண்டு என்பதால் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது நலம் தரும், தெய்வீகத்தில் அதிக ஈடுபாடு மற்றும் பித்ரு வழிபாடு இரண்டும் தங்களுக்கான இன்னல்களை வெகுவாக குறைக்கும், மனதில் ஏற்படும் வீண் கற்பனைகளும், பயமும் தங்களின் வாழ்க்கையில் கடுமையான நெருக்கடிகளை தரும், போதிய தெளிவில்லாமல் தாங்களே பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும், மனதில் உள்ள ஆசைகள் யாவும் நிறைவேறாமல் வெறும் கற்பனையாகவே மாறிவிட அதிக வாய்ப்பு உண்டு, எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து வீண் அவமானங்களும் துன்பங்களும் உருவாக வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு நலம் பெறுங்கள்.

வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காண முயற்சி செய்வது அவசியமானதாக  படுகிறது, சரியான புரிதலுடன் மனம்விட்டு பேசுவதே தங்களுக்கு நல்லது, நேர்மையில் சிறந்து விளங்கும் மகர லக்கின அன்பர்களுக்கு இனிவரும் காலம் நேர்மைக்கு பல சவால்களை தரும் என்ற போதும், ஸ்திரமாக நின்று வெற்றி பெறுங்கள், வீட்டில் உள்ள பெரியோர்களை மதித்து நடந்து, அவர்கள் ஆசியுடன் வரும் இன்னல்களில் இருந்து விடுபடுங்கள் அன்பர்களே, மிகுந்த பொறுப்புடன் செயல்பட்டு கடமையில் இருந்து தவறாமல் கவுரவத்தை காப்பாற்ற வேண்டிய நேரமிது, கல்வித்துறையில் உள்ள அன்பர்களுக்கு சற்று சோதனைகளை அதிக அளவிலேயே தரக்கூடும், வீண் அவப்பெயரை தவிர்க்க கூட்டாளிகள் நண்பர்கள் போன்றோரை சரியாக தேர்வு செய்யவும், மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பதே தங்களுக்கான கவுரவத்தை காப்பாற்றும் அன்பர்களே.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக