திங்கள், 4 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : விருச்சிக லக்கினம் ( 2019-2020 )




 விருச்சிக லக்கின அன்பர்கள் பொருளாதார திட்டமிடுதல்கள் மற்றும் சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

 லக்கினம் : விருச்சிகம் 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் ஸ்தானமாகவும், ஸ்திர நீர் ராசியாகவும் விளங்கும் விருச்சிக ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்திலும், குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் ஆயுள் ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், இது ஜாதகருக்கான திடீர் அதிர்ஷ்டத்தை வழங்குவதுடன், முயற்சிக்கும் காரியங்களில் எதிர்பாராத லாபங்களை வாரி வழங்கும், முன்னேற்றம் என்பது திடீரென அமையும், வாழ்க்கை துணை வழியிலான ஆதரவு, நண்பர்கள் உதவி, கூட்டாளிகளின் ஒத்துழைப்பு ஆகியவை விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அதீத அளவில் நன்மைகளை வாரி வழங்கும், இதுவரை இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்பு வெகு விரைவாக தீரும், மனதளவில் இருந்து வந்த போராட்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பொங்கும், உறவுகள் வழியிலான உதவிகள் தேடிவரும், சிகிச்சை மூலம் உடல் நலம் பெறுவதற்கான வாய்ப்பை வாரி வழங்கும், அந்நியர் ஆதரவு அல்லது வெளிநாட்டினர் மூலம் ஆதாயம் என்ற வகையில் சிறப்புக்களை தரும், வியாபார ரீதியாக நல்லதொரு வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டாகும், தெளிவான சிந்தனை சரியான முடிவு மற்றும் தீர்க்கமான வாதம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் ஆயுள் ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாது, தன்னம்பிக்கை குறையும், திட்டமிட்ட செயல்கள் யாவும் நடைமுறைக்கு வாராது, செயல்பாடுகளில் மந்தம் ஏற்படும், விழிப்புணர்வு இன்றி செய்யும் காரியங்களில் மிகப்பெரிய தோல்விகளை சந்திக்கும் நிலையை தரும், உறவுகளின் ஆதரவு இன்றி தனித்து நிற்கும் சூழ்நிலை உருவாகும், வாழ்க்கை துணை வழியிலான இழப்புகள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உண்டு தெய்வ நம்பிக்கை குறையும், விபத்து மற்றும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க இயலாது, செய்து வந்த தொழில்களில் நஷ்டம் மற்றும் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு, சகோதர வழி இன்னல்கள் தங்களின் நிம்மதியை குறைக்கும், தைரியம் வெகுவாக குறையும், சரியான நிகழ்வுகள் உணராமல் வதந்திகளை நம்பி செய்யும் அனைத்தும் தங்களுக்கு பேரிழப்புகளை வாரி வழங்கும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து 200% சதவிகித  இன்னல்களையே தரும் என்பதை கவனத்தில் கொண்டு நலம் பெறுங்கள்.

குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் தங்களின் வாழ்க்கையில் அதீத பண நெருக்கடிகளை தர கூடும், நாவடக்கம் தேவை என்பதை உணர வேண்டிய நேரமிது, குறிப்பாக வயதில் பெரியவர்கள், ஆன்மீக பெரியோர்களிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை, வீட்டில் உள்ள பெரியோர்களின் வார்த்தைகளை மதித்து நடப்பது தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வருமானம் சார்ந்த விஷயங்களில் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவது அவசியமாகிறது, சேமிப்பு என்பது தங்களுக்கு அனைத்து வித தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள், குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை நாடுவதும் குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுவதும் தங்களுக்கான நெருக்கடிகளை குறைக்க உதவும், கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி நிவர்திகளை மேற்கொண்டு விடுபடுவது அவசியமாகிறது.

 கற்ற கல்வி தங்களுக்கு சரியான ஜீவன மேன்மையை வழங்கும் என்பது கவனிக்க தக்கது, திருமண தடைகள் நீங்கும், நல்லதொரு வாழ்க்கை துணையை தேர்வு செய்து நலம் பெறுங்கள், அவசர கதியில் செய்யும் செயல்கள் யாவும் தங்களுக்கு நீண்ட நாள் நீங்காத இன்னல்களை தந்து விடும், திருமண முயற்சிகள் கூடி வரும் என்ற போதிலும் சரியான வாழ்க்கை துணையை தேர்வு செய்வது தங்களின் கடமை என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள், மற்றவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படும் தன்மையை தவிர்ப்பது தங்களுக்கு சகல நன்மைகளையும் தரும், எதிர்பாராத நிகழ்வுகள் மூலம் அதீத பொருள் இழப்புகளை தாங்கள் சந்திக்க வேண்டி வரும் என்பதை கவனத்தில் கொண்டு மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது, நிதி சார்ந்த மேலாண்மை இனிவரும் 18 மாதங்களுக்கும் தங்களுக்கான நெருக்கடிகளை குறைத்து நலவாழ்க்கையை தரும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,2ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 8,2ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து விருச்சிக லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக