வெள்ளி, 8 மார்ச், 2019

ராகு கேது பெயர்ச்சி தரும் யோக வாழ்க்கை : தனுசு லக்கினம் ( 2019-2020 )




தனுசு லக்கின அன்பர்களுக்கு இனிமை மிக்க யோக வாழ்க்கையை சுவீகரிக்கும் நேரமிது, நவகிரகங்களில் மிகவும் வலிமை பெற்றதும், சாயாகிரகங்கள் என்று போற்றப்படுவதுமான ராகு கேது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமான மிதுன ராசியிலும், பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியிலும் இனி வரும் 18 மாதங்களில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு தனது சஞ்சார நிலையில்  இருந்து வழங்கும் யோக அவயோக பலாபலன்கள் பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

லக்கினம் : தனுசு 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாகவும், உபய நெருப்பு தத்துவ ராசியாகவும் விளங்கும் தனுசு ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்திலும், லக்கினமான  1ம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்யும் சாயா கிரகங்கள் இனிவரும் 18 மாதங்கள் வழங்கும் பலாபலன்கள் பற்றி இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் அமைவது மிகசிறந்த யோக பலன்களை தரும் என்ற போதிலும், புதன் கேந்திராபதியாக சூரியனுடன் 14 பாகைக்குள் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் நிலையில் மட்டுமே சுபயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்து வாழ்க்கை துணையின் முழு ஆதரவு, நண்பர்கள் சேர்க்கை மூலம் கிடைக்கும் நல்ல வாய்ப்புகள், கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் திடீர் அதிர்ஷ்டம் என வெகு சிறப்பான நன்மைகளை தரும் என்பது கவனிக்க தக்கது, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், வெளியூர் அல்லது  வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும், எதிர்பாலின சேர்க்கை வழியில் இருந்து மிக பெரிய நன்மைகள் நடைமுறைக்கு வரும், வியாபார விருத்தி அளவில்லா லாபங்களை வாரி வழங்கும் பொதுமக்கள் ஆதரவு, விளம்பரம் மூலம் சிறப்பான நன்மைகளை பெரும் நேரமிது, இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் விலகி சுபயோக வாழ்க்கையை பரிபூர்ணமாக சுவீகரிக்கும் வாய்ப்பு உருவாகும்.

அதே சமயம் ராகுவின் சஞ்சாரம் களத்திர ஸ்தானத்தில் புதன் கோணாதிபதியாக சூரியனுடன் 14 பாகைக்கு மேல் சேராமல் சஞ்சாரம் செய்யும் நிலையில் அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், வாழ்க்கை துணையுடன் இணக்கமற்ற சூழ்நிலை, கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் தொல்லைகள், திருப்தி இல்லாத மனநிலை, சரியான தகவல்களை பெற இயலாமல் முரண் பட்ட கருத்துக்களால் தடுமாறும் தன்மை, எதிர்ப்புகள் மூலம் ஏற்படும் நஷ்டங்கள், தெளிவில்லாத முடிவுகள், சிந்தனை திறனில் குறைபாடு, முன்னேற்றமின்மை, பதற்றம், செயல்திறன் பாதிக்கும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் தோல்வியை தரும், உறவுகள் வழியில் இருந்து வரும் அதீத தொல்லைகள், பொருள் இழப்பு, மதிப்பு மரியாதை குறைவு, தொழில் முறை கூட்டாளிகளுடன் முரண்பட்ட கருத்து வேறுபாடு, வரும் இன்னல்களை சமாளிக்க இயலாமல் கடுமையாக பாதிக்கும் நிலை என வெகுவான துன்பங்களை தரக்கூடும்.

உயிர் உடலாகிய ஜென்ம லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் தனுசு லக்கின அன்பர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்குவார் என்பது கவனிக்க  தக்கது, சுய கட்டுப்பாடு அதிகரிக்கும், உடல் நலம்  மேலோங்கும், எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி கிட்டும், மனஉறுதி மூலம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கூடி வரும், சுய முன்னேற்றத்தில் அதீத ஆர்வமும், செயல்பாடுகளில் வீரியமும் அதிகரிக்கும், தெளிவான நடவடிக்கைகள் மூலம் சரியான முடிவுகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள், தங்களின் அறிவு வெகு பிரகாசமாக நன்மைகளை வாரி வழங்கும், புகழ் வெற்றி சமூக அந்தஸ்த்து தேடி வரும், தங்களின் அறிவு திறனை கண்டு அனைவரும் வியந்து நிற்பார்கள், கேதுவின் ஜென்ம லக்கின சஞ்சாரம் தங்களுக்கு அதீத ஞானத்தையும், தெளிவான சிந்தனையையும் வாரி வழங்கும், முழு அளவில் கேதுவின் ஆதிக்கத்தில் தங்களின் உடல்,மனம் கட்டுக்குள் அடங்கி சுபயோக வாழ்க்கையை சுவீகரிக்கும், எந்த ஓர் சூழ்நிலையையும் சிறப்பாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள், தொழில் வழியிலான திட்டமிடுதல்கள் தங்களுக்கான நெடுநாள் வளர்ச்சியை உறுதி செய்யும், நல்ல ஞானம் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை நல்கும்.

ஆன்மீக பெரியோர்கள் சந்திப்பு, ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு தங்களுக்கு பரிபூர்ணமாக கிட்டும், இது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை வாரி வழங்கும், கல்வியில் தேர்ச்சி, குறிப்பாக ஆராய்ச்சி கல்வியில் வெற்றி, வெளியூர் சென்று படிக்கும் யோகம், கற்ற கல்வி வழியிலான முன்னேற்றம், விழிப்புணர்வுடன் செயல்பட்டு சகல நன்மைகளையும் பெரும் தன்மை, எதிர்பாராத அதிர்ஷ்டங்களை சுவீகரிக்கும் யோகம், தனது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் வழியில் இருந்து  வரும் யோக வாழ்க்கை என சிறப்பு மிக்க நன்மைகள் நடைமுறைக்கு வரும், சுய ஞானம், நல்லறிவு, தெளிவான சிந்தனை போன்றவை தங்களின் வாழ்க்கையில் புதுவித உத்வேகத்தை தருவதுடன், நிலையான முன்னேற்றத்தை வாரி வழங்கும், தங்களின் நம்பிக்கை பரிபூர்ண வெற்றியை தரும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும், லட்சியம் வெற்றி பெரும், தங்களின் செயல்பாடுகளில் வேகமும் விவேகமும் கலந்து நின்று வெற்றியை உறுதி செய்யும், சமூகத்தில் அனைவரிடமும் நற்பெயர் உண்டாகும் என்பதுடன், அரசியல் அல்லது நிர்வாகத்தில் தலைமை பொறுப்பேற்கும் வாய்ப்பு உண்டாகும், செல்லும் இடங்களிலெல்லாம் சிறப்பை சேர்த்து, கவுரவம் அந்தஸ்த்துடன் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெரும் நேரமிது.

குறிப்பு :

 சுய ஜாதகத்தில் தற்போழுது நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக, அவயோக பலாபலன்கள் தனுசு லக்கின அன்பர்களுக்கு நடைமுறைக்கு வரும், நடைபெறும் திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 7,1ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் மேற்கண்ட சாயா கிரகங்களின் சஞ்சார நிலையின் வழியில் இருந்து தனுசு லக்கின அன்பர்களுக்கு யாதொரு நன்மை தீமையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்க...

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக