சனி, 17 டிசம்பர், 2011

கிரகங்கள் வக்கர நிலை ஜாதகருக்கு என்ன செய்யும் ?

கிரகங்கள் வக்கர நிலை ஜாதகருக்கு என்ன செய்யும் ?





ஜாதகரை நிச்சயம் பாதிக்கும். தாம் அமர்ந்த இல்லத்தை பொறுத்து இன்று ஜாதக ஆலோசனை பெற வந்த ஒருவருக்கு ஜனன ஜாதகத்தில் லக்கினம் , இரண்டாம் வீடுகள் முறையே சனி ,குரு, செவ்வாய் , புதன் ஆகிய கிரகங்கள்  வக்ரக நிலையில் இருந்தது.

அவருக்கு வயது 32 , இதுவரை அவர் அனுபவித்து வந்த பலன் என்னவென்று பார்த்த பொழுது, இரண்டில் உள்ள வக்ரக சனிபகவன் சம்பாதிக்கும் அறிவை கொடுத்து நல்ல வேலையாட்களை கொடுக்கவில்லை,  இதனால் அவரது தொழில் பல இன்னல்களை சந்தித்து இதுவரை போராடிக்கொண்டு இருக்கிறார்.

லக்கினத்தில் அமர்ந்த வக்ரக குரு, அளவிட முடியாத புத்திசாலிதனத்தை தந்து , அதனை பயன்  படுத்த முடியாத அளவிற்கு தடைகளை ஜாதகரே உருவாக்கி கொண்டிருக்கிறார், இவரது ஆலோசனையை கேட்பவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார், இவருக்கு பலன் தருவதில்லை.

வக்கிரக செவ்வாயோ இரண்டில் அமர்ந்து வருமானத்தை வெட்டி செலவு செய்ய வழி வகுத்துவிட்டார், லக்கினத்தில் அமர்ந்த வக்கிரக புத பகவான் மட்டும், பெரிய மனிதர்கள் தொடர்பு பெற வைத்து, தொழில் எப்படியாவது நடைபெற அருள் புரிந்து உள்ளார்.

இது அவரது சுயஜதகத்தின் அமைப்புப்படி. 

இது அனைவருக்கும் நடை பெற வாய்ப்பு இல்லை என்றாலும், வக்ரகம் பெற்ற சனி பகவான் தொழில் முறை பாதிப்பையும்,  வக்ரகம் பெற்ற குரு பகவான் செல்வநிலை காரிய தடைகளையும், வக்ரகம் பெற்ற செவ்வாய் பகவான் தேவையற்ற, கெட்ட நண்பர்கள் சகவாசமும், சில தவறான பழக்க வழக்கங்களையும், பெண்கள் சகவாசத்தையும் கொடுத்துள்ளார்.

புத பகவான் மட்டும் பெரிய மனிதர்கள் ஆதரவை பெறவைத்து, அதை முழுமையாக பயன் படுத்த முடியாத நிலையை உருவாக்கிவிட்டார்.


இந்நிலை மாற ஜாதகருக்கு நாங்கள் கொடுத்த ஆலோசனை என்ன நாளைய பதிவில் காண்போம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக