செவ்வாய், 11 டிசம்பர், 2012

காலதாமத திருமணம் ஜாதகத்தில் உள்ள சர்ப்ப தோஷம்,மற்றும் செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் ஆகுமா ?



அய்யா வணக்கம் 

எனது ஜாதகத்தை பார்க்கும் ஜோதிடர்கள் அனைவரும் தங்களது ஜாதகத்தில் நாக தோஷம் , சர்ப்ப தோஷம் , ராகு கேது தோஷமும்,  ( லக்கினம் மற்றும் களத்திரம் ஸ்தானங்களில் ) , செவ்வாய் தோஷமும் ( 8 ல் செவ்வாய் அமர்வு ) இருப்பதால் தங்களுக்கு திருமணம் 32 வயதுக்கு பிறகு தான் நடக்கும் , எனவே இப்பொழுது திருமணத்தை பற்றி நினைத்து கூட பார்க்க வேண்டாம் என்று சொல்கின்றனர், இது வரை வந்த நல்ல வரன்களை  எல்லாம் ( இரு வீட்டாருக்கும் பிடித்திருந்தும் கூட ) ஜோதிடர்கள் சொன்ன காரணத்திற்க்காக தட்டி கழித்து கொண்டு இருக்கின்றனர் எனது பெற்றோர்கள் , எனக்கும் வயது 24 ஆகி விட்டது ,உண்மையில் எனக்கு இளம் வயதில் திருமணம் ஆகாத ? எனது ஜாதக நிலையில் தாமத திருமணம் தான் நடக்குமா ? தயவு செய்து சரியான வழிகாட்டுங்கள் , வேலை பார்க்கும் இடத்தில் தனியாக இருக்க மிகவும் சிரமமாக இருக்கிறது குறிப்பாக வீட்டு சாப்பாடு சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது , நீங்கள் சொல்லும் பதிலில்தான் எனது திருமண வாழ்க்கை அமைவதாக இருக்கிறது .


அன்பு நண்பருக்கு !

வணக்கம் , தங்களின் ஜாதக அமைப்பில் லக்கினம் கடகமாகவும் , கடகத்தில் அமர்ந்த கேது, மகரத்தில் அமர்ந்த ராகு என தான் அமர்ந்த பாவக முறையே லக்கினம் மற்றும் களத்திர பாவகங்களை 100 சதவிகிதம் நன்மையான பலன்களை தரும் அமைப்பில் சிறப்பாக அமர்ந்து இருக்கின்றனர் , மேலும் கும்பத்தில் ( 7ம் பாவகத்தில் ) அமர்ந்த செவ்வாய் லக்கினம் மற்றும் ஐந்தாம் பாவகம், ஜீவன ஸ்தானம் என்ற அமைப்பிலும் நல்ல பலன்களையே தந்துகொண்டு இருக்கின்றார் . 

எனவே தாங்கள் இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதில் எவ்வித தடையும் இல்லை , அப்படி இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதால் தங்களுக்கு  எவ்வித துன்பமும் வர வாய்ப்பு சிறிதும் இல்லை என்பதே உண்மை , எனவே உடனடியாக தங்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உண்டான வேலைகளை கவனியுங்கள்  , பெண்  ஜாதக ரீதியாக ஏதாவது சந்தேகம் மற்றும் குழப்பம் இருந்தால் மட்டுமே எம்மை தொடர்பு கொள்ளுங்கள் , சரியான ஜோதிட விளக்கங்களை நாங்கள் தருகிறோம் . 

மேலும் நாக தோஷம் , சர்ப்ப தோஷம் , செவ்வாய் தோஷம் என்பது எல்லாம் ஒரு மாய தோற்றம் , ஜோதிடத்தை பற்றிய  போதிய அறிவு அற்றவர்களும் , அரை குறை ஜோதிடர்களும் பரிகாரம் என்ற பெயரில் பொருள் ஈட்ட  சொல்லும் ஒரு வார்த்தையே அன்றி உண்மை இல்லை என்பதை  தங்களுக்கு உணர்த்த நான் கடமை பட்டுள்ளேன் .

பொதுவாக பல போலி ஜோதிடர்கள் நவ கிரக தத்துவங்களை பற்றிய போதிய அறிவு இல்லாத  காரணத்தாலும் , வாய் வலி செய்திகளாலும் , தனது கற்பனையில்  உதிக்கும் எண்ணங்களையும் ஜோதிடம் பார்க்க வரும் அன்பர்கள் மீது  திணிப்பது கலி காலத்தின் கொடுமையே , இதனால் சரியான வயதில்  திருமணம் மற்றும் சுப காரியங்கள் நடை பெறாமல் , இளம் பெண்களும், ஆண்களும் பலவாறு சிரம படுவதை பார்த்தவன் என்ற முறையில்  சொல்கிறேன் .

திருமணம் என்பது என்ன ? என்பதை பற்றிய புரிதல் மக்களுக்கு இந்த இடத்தில்  அதிகம் தேவை படுகிறது , சரியான வயதில் திருமணம் செய்யும் பொழுது  ( பருவத்தே பயிர் செய்தால் எப்படி பயிர் செழித்து வளர்கிறதோ அதுபோல் ) தம்பதியின் ஒற்றுமை சிறப்பாக விளங்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்  தன்மையை கொடுக்கும் , குறிப்பாக நல்ல சந்ததிகள் அமையும் , அவர்களை சிறப்பாக வளர்க்கும் ஆற்றலும் , வயதும் நம்மிடம் இருக்கும் , அவர்களை நமது கட்டுப்பாட்டில் சிறப்பாக வளர்க்க முடியும் , நமது சொல்லிற்கு கட்டுப்பட்டு நடக்கும் மன நிலை அவர்களுக்கு இருக்கும் . 

மேலும் நமது உடல் மனம் இரண்டும் சிறப்பாக செயல் புரியும் இது இயற்க்கை நமக்கு கொடுத்த வரம் , இங்கே இது முரண் படும் பொழுது தான் வாழ்க்கையில்  அதிக சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும் , காலம் கடந்து திருமணம்  செய்யும் பொழுது வாழ்க்கையில் வழி தவறி செல்ல நிறைய சந்தர்ப்பங்களை நவ கிரகங்கள் தர வாய்ப்பு உண்டு , இதனால் அதிக இன்னல்களை சந்திப்பது,  திருமணம் ஆகாமல் தவிக்கும் ஆண்களும் பெண்களுமே , மேலும் தாமத திருமணத்தால் குழந்தை பிறப்பு முதல் அனைத்தும்  தாமத பட வாய்ப்பு உண்டு , அதிகம் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறப்பு ஏற்ப்படுவதற்க்கு இதுவும் ஒரு காரணம் .

மேலும் இயற்க்கைக்கு மாறாக அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளின் நடவடிக்கை மற்றும் செயல்பாடுகள் , அறிவாற்றல் ஆகியவை கடுமையாக பாதிக்க படுகிறது என்பது ஆராய்ச்சி முடிவு , நம்மால் ஒரு சிறந்த  சந்ததியை தர முடியவில்லை எனில் இந்த வாழ்க்கை வாழ்ந்து என  பயன் , இதற்க்கு எல்லாம் அடிப்படை  காரணம் என்ன ? சரியான வயதில் திருமணம் ஆகததே காரணம் .

பொதுவாக 100 ஜாதகம் வரும் பொழுது அதில் 8 ஜாதகம் மட்டுமே திருமண தாமதத்தை  தரும் அமைப்பில் இருக்கும் , மேலும் இரண்டு ஜாதக அமைப்பிற்கு திருமணத்திற்கு உண்டான வாய்ப்பே இல்லாமல் இருக்கும் , ஆனால்  தற்பொழுது நடப்பது என்ன ? ஜோதிடர்கள் பலர் வரும் ஜாதகம் அனைத்திலும் ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லி ( சனி ஏழில் , ராகு கேது தோஷம் , செவ்வாய் தோஷம் ) இயற்கையாக அமையவிருக்கும் திருமணத்தையும் தடுத்து விடுகின்றனர் , இதையே வேதவாக்காக எடுத்து கொண்டு பலர் தமக்கு சிறப்பாக அமைய இருக்கும் நல்ல வாழ்க்கையை கெடுத்து கொள்கின்றனர் .

ஒருவருக்கு களத்திர பாவகம் மற்றும் குடும்ப பாவக அமைப்பில் இருந்து இன்னல்களை அனுபவிக்க வேண்டும் என்று விதி இருந்தால் , அவர் எவ்வளவு காலம்  கடந்து திருமணம் செய்தாலும் அதை அனுபவித்தே தீர வேண்டும்  இதை தடுக்க எந்த ஜோதிடனாலும் முடியாது , ஏன் கடவுளாலும் முடியாது , அப்படி நடக்கும் தீமையான பலன்கள் இளம் வயதில் நடந்தால் ஜாதகர் அதை சமாளிக்கும் ஆற்றலாவது அதிகம் இருக்கும் , அல்லது ஏற்றுக்கொண்டு  வாழும் திறனாவது இருக்கும் நல்ல அனுபவம் கிடைக்கும் , காலம் கடந்து திருமணம் செய்து இந்த நிலை ஏற்ப்பட்டால் வயதும் அதை ஏற்று கொல்லாகொள்ளது மனதும் அதை ஏற்று கொள்ளது எனும் பொழுது அங்கு பிரிவே பிரதானமாக இருக்கும் , குழந்தைகள் இருந்தாலும் அதை பற்றிய கவலை இருக்காது தனது சுதந்திரம் மற்றும் பெரிதாக நினைக்க துண்டும்  .

32 வயது எனும் பொழுது வாழ்க்கையில் பாதி நாள் சென்றுவிடும் இதன் பிறகு திருமணம் செய்து வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்து கொள்வது என்பது  மிக கடினம் , எனவே தங்களது வாழ்க்கையை சரியான வயதில் தாங்களே தேர்ந்தெடுங்கள் .

பொதுவாக ஆண்களுக்கு 24 முதல் 27 வயதிற்கு உட்ப்பட்ட காலகட்டத்தில் திருமணம் செய்வது சிறப்பு , இதற்க்கு மேல் சென்றால் திருமண வாழ்க்கை அமைய அதிக சிக்கலை தரும் .

பெண்களுக்கு 21 வயது முதல் 24 வயதிற்குள் திருமணம் செய்வது சிறப்பு , இதற்க்கு மேல் சென்றால் திருமண வாழ்க்கை அமைய அதிக சிக்கலை தரும் .

ஆணுக்கு 29 வயதிற்கு மேலும் , பெண்ணிற்கு 27 வயதிற்கு மேலும் திருமணம் நடக்க வில்லை எனில் , சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் அல்லது களத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கும் , 

ஆணுக்கு 35 வயதிற்கு மேலும் , பெண்ணிற்கு 33 வயதிற்கு மேலும் திருமணம் நடக்க வில்லை எனில் , அவர்களது சுய ஜாதகத்தில் குடும்பம் , மற்றும் களத்திரம் எனும் இரண்டு பாவகங்களும் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கும் .

 ஜோதிடம் தங்களுடைய வாழ்க்கையில் வரும் இன்னல்களை தீர்பதற்கு வழிகாட்ட வேண்டுமே  அன்றி , இன்னல்களை தருவதாக இருக்க கூடாது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969


5 கருத்துகள்:

  1. sir,
    my life experience.my d.o.b:28.04.1974.sunday 9.15p.m. in my rasi chakram. ragu is in lagnam(vrichika lagnam)and ketu is 7th house.viyalan,sukiran in 4th,suriyan,puthan in 6th,sevvai,sani in 8th,moon in 9th house.2,3,5,10,11,12 houses are empty.star:poosam.kataka rasi.

    my wife: d.o.b:06.06.1979. 10.30 p.m.
    star:chittirai.lagnam:maharam. rasi:thulam.
    2.ketu,4.sevvai,5.sukiran,suriyan.6.puthan,7.viyalan,8.sani,ragu,10.chandiran. 3,9,11,12 are empty.
    my marriage date:22.05.2005. as per numerology 22 is not good. so i married my wife again before sami photo on a good day. lot of pooja, parikaram for nakathosam done.but my wife not live with me. she cheated me about 6 lacks. their family destroy my life. her drunken brother gave lot of trouble to me,to my parents, to my sister. for the last 8 years she lived with me for 3 years only, even this 3 years i beg with my parents,relative to live with me,because i love family,i love her,and my daughter.now my marriage life is broken. she don't live with me for the past 16 months. she agreed to give divorce.i am not sure to get divorce.i try to convince her with psychiatric,psychologist,msw government counsellors for family problem,they advice to my wife to live together, but she refused.my parents,brtoher,brother's wife,sister,relatives adviced her,beg her to live together,please consider children's future. she don't agree.she gave me 2 times vasiya marunthu to gave her 35 lacks.her brother scolded me what you did for my sister till date.is there any property or jewels in my sister.
    now i consult himalayan astrologer lived in utharakasi.native kumbakonam. he analyse and said it is not suitable horoscope match. whatever you try to live together,your wife give you problem. the only way is divorce.do some pariharam for proper divorce.
    what you think about it.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. தங்களுக்கு தனிபட்ட முறையில் ஜோதிட ஆலோசனை தேவை எனில் , எங்களது மின்அஞ்சல் அல்லது அலைபேசிக்கு தொடர்பு கொண்டு , ஜோதிட ஆலோசனை கட்டண விபரங்களை தெரிந்து கொண்டு , முறையாக ஜோதிட ஆலோசனை பெற்று கொள்ளுங்கள் அன்பரே .

      email : jothidadeepam@gmail.com
      mobile : 9443355696

      நீக்கு
  3. thats ok. but i want to share real experience of arranged marriage,3 times astrologer consulted,done by a brahmin iyer who is a rtd government teacher marriage. even though both of the family consult astrologer,spent time,money that kind of marriage leads to this kind of life.so that i write here.

    பதிலளிநீக்கு
  4. Hi sir I regularly seeing ur post. U r doing a great and good job. Sir please give suggestion for me. My raasi-mithunam, natchathiram-mirugaseeridam, lagnam-kanni,paadham-3,dob-12-1-1987, time-11:30 pm. Oru jodhidar sonnaru enakku raghu kethu dosam iruku thirunaageswaram poi dhosam kalicha sari aayidum nu. Naanga poi dhosam kalichitu vandhittom. Adhuku appram oru jodhidar kitta ponom avaru enakku sevaai dhosam irukku adhanala sevaai dhosam ulla ponnu dhan kattanum. Ayya please give me a clear suggestion. Can i get marry a non sevaai ponnu. If i marry then any problem will come in futre. Sir i am eagerly waiting for ir response. Thank u sir.

    பதிலளிநீக்கு