செவ்வாய், 15 ஏப்ரல், 2014

காலசர்ப்ப தோஷமா? காலசர்ப்ப யோகமா? ராகு கேது ஜாதகத்தில் தரும் பலன்கள் என்ன ?




 பொதுவாக சுய ஜாதகத்தில் ராகு கேதுவின் பிடியில் ( அதாவது ராகு கேது கிரகங்களுக்கு இடையில் அனைத்து கிரகங்களும் அடைபடுவது காலசர்ப்ப தோஷமாக பாரம்பரிய ஜோதிடத்தில் குறிப்பிட படுகிறது, மேற்கண்ட அமைப்பை பெற்ற ஜாதகத்தை சார்ந்த நபர்களின் வாழ்க்கை குறிப்பிட்ட வயது வரை ( 32  வயது ) பல இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆர்ப்பட்டு பிறகு வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெரும் யோக நிலையை தரும் என்று செல்வதும் உண்டு.

 மேலும் சர்ப்ப தோஷ அமைப்பை பெற்ற ஜாதகருக்கு, இதை போன்றே சர்ப்ப தோஷ அமைப்பை பெற்ற ஜாதகத்தை வாழ்க்கை துணையாக அமைக்க வேண்டும் என்ற கருத்தும் பாரம்பரிய ஜோதிடத்தில் உண்டு. 
( அது எப்படி தோஷமுள்ள இரு ஜாதகத்தை இணைக்கும் பொழுது வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று தெரியவில்லை? ) 

 நமது ஜோதிட முறையில் ராகு கேது என்ற இரு கிரகங்களுக்கும் தனிப்பட்ட வலிமை உண்டு என்பதை கடந்த பதிவில் பதிவு செய்து இருக்கிறோம், குறிப்பாக ராகு கேது எந்த பாவகத்தில் அமருகின்றதோ அந்த பாவகத்தின் பலனை 100 சதவிகிதம் தானே ஏற்று நடத்தும், குறிப்பிட்ட பாவகத்தில் ராகு கேதுவுடன் சேரும் எந்த கிரகமானாலும் அவற்றின் பலனையும் தானே ஏற்று நடத்தும் என்பதே அது.

 மேலும் ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாவகத்தில் அமரும் ராகு அல்லது கேது லக்கினத்தை 100 சதவிகிதம் வலிமை பெற செய்து, ஜாதகருக்கு இலக்கின வழியில் இருந்து கிடைக்க வேண்டிய நன்மைகளை 100 சதவிகிதம் பெற செய்யும், மேலும் ராகு கேது தோஷம் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் கணிப்பு செய்த பல ஜாதகங்களில் ராகு கேது இரண்டு கிரகங்களும் ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்கி கொண்டு இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்.

உதாரணமாக:



 மேற்கண்ட ஜாதகத்தில் 5ல் கேதுவும், 11ல் ராகுவும் அமர்ந்து ஜாதக ரீதியாக மிகப்பெரிய யோக பலன்களை வாரி வழங்கி கொண்டு இருப்பது கவனிக்கத்தக்க விஷயம், கேது 5ம் பாவக வழியில் இருந்தும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியில் அமர்ந்து ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையையும், சிறந்த புத்திர சந்தான அமைப்பையும் பெற்று தந்திருப்பது குறிப்பிட தக்கது, மேலும் துலாம் ராசி ஜாதகருக்கு சர காற்று தத்துவ ராசியாக இருப்பதால் ஜாதகரின் அறிவாற்றல் மிகவும் சிறப்பாக  விளங்குவது புலனாகிறது.

 மேலும் தான் காற்ற கல்வியையை கொண்டும் அறிவாற்றலை கொண்டும் ஜாதகர் மிகப்பெரிய வெற்றியை குறுகிய காலத்தில் பெரும் யோகத்தை தரும் என்பது முக்கியமான விஷயம், இங்கே அமர்ந்திருக்கும் கேது பகவான் ஜாதகருக்கு குல தெய்வ நல்லாசியையும், இறை நிலையின் அருள் ஆற்றலையும் மிக எளிதாக பெற்று தரும் என்பது உறுதி, மேலும் ஜாதகருக்கு உதவி செய்ய பலர் காத்திருப்பார்கள் என்பதும், நல்ல நண்பர்கள் அமைந்து அவர்களின் மூலம் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்வார் என்பதும் உறுதியாகிறது.

 11ல் அமர்ந்திருக்கும் ராகு பகவான் ஜாதகருக்கு லாப ஸ்தான வழியில் இருந்தும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசி அமைப்பில் இருந்து மிகுந்த லாபத்தை வாரி வழங்குவார், குறிப்பாக எடுக்கும் காரியங்கள் யாவிலும் வெற்றி, முற்போக்கு சிந்தனை, சிறந்த செயல் திறன், எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெரும் யோக அமைப்பு, உடல் மனம் என்ற அமைப்பில் இருந்து ஜாதகர் 100 சதவிகித நன்மையை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் எண்ணம் யாவும் நிறைவேறும் சக்தியை தரும், குறிப்பாக தான் எடுத்துக்கொண்ட காரியங்களில் உறுதியாக நின்று வாழ்க்கையில் வெற்றி பெரும் யோக அமைப்பை ஜாதகர் பெறுவார்.

 மேலும் ஜாதகர் துவங்கும் தொழில்கள் யாவும் குறுகிய காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும், குறைவான முதலீட்டில் மிகப்பெரிய தொழில் விருத்தியை தரும், ஜாதகருடன் கூட்டு சேர்ந்து செய்யும் நபர்கள் யாவரும் மிகுந்த லாபத்தை பெறுவார்கள், பல தொழில் செய்யும் யோகத்தையும், லாட்டரி மற்றும் புதையல் போன்ற விஷயங்களில் ஜாதகருக்கு 100 சதவிகித வெற்றியை தரும், லட்சிய நோக்கில் செயல்படும் காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும்.

ராகு கேது மேற்கண்ட ஜாதக அமைப்பில் ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து 100 சதவிகித யோக வாழ்க்கையை தந்துகொண்டு இருப்பது ஒரு சிறப்பான விஷயமாக கருதலாம், மேலும் மேற்க்கண்ட ஜாதகத்தில் பாரம்பரிய ஜோதிட வழியில் சொல்வதென்றால் சம்பந்தபட்ட ஜாதகருக்கு, காலசர்ப்ப யோகத்தை பிறவி முதற்கொண்டு வாழ்நாள் முழுவதும் தந்துகொண்டு இருக்கிறது என்பதே முற்றிலும் உண்மை.

மேலும் சர்ப்ப யோகம், தோஷம் இரண்டையும் நாம் ராகு கேது எவ்வித நிலையில் சுய ஜாதகத்தில் அமர்ந்திருக்கிறது என்ற அமைப்பை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும், ராகு கேது என்றவுடன் அவை தீமையான பலனையே தரும் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான விஷயம் இலக்கின அமைப்பில் ராகு கேது அமர்ந்திருக்கும் பாவகத்தின் வலிமை உணர்ந்து பலன் நிர்ணயம் செய்வதே சால சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

2 கருத்துகள்:

  1. Dear Varshan,

    Question 1: Viruchiga lagnam, 6il kethu, 7il guru, 8il Moon, 9il Saturn, 10il Suriyan,Budhan, Sukkiran, 111il Sevvai with Mandhi and 12 il Rahu. Idhu Kala sarpa Yogama or Doshama?

    Question 2: 9il Saturn (sani) - poosham 3il (natchathra kal)). Sani dasai Eppadi Irukkum?

    Please reply varshan.

    Thanks
    Arul

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது ஜாதக ரீதியான கேள்விகளுக்கு முறையான ஜோதிட ஆலோசனை, மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பெறுங்கள் அன்பரே !

      நீக்கு