செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

மாமனாருக்கு ஆகாத மூல நட்சத்திரமும், சுய ஜாதக பாவக வலிமையையும் !


 திருமண பொருத்தம் காண்பதில் மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்பது ஜோதிட ரீதியாக உள்ள கருத்து, எனவே மூல நட்சத்திரம் கொண்ட பெண்களை, திருமணம் செய்துகொள்ள தகப்பனார் உள்ள வரன்கள் வெகுவாக தயங்குகின்றனர், மூல நடசத்திரம் கொண்ட வதுவை திருமணம் செய்து கொள்ளும் வரனுக்கு தகப்பனார் இல்லாமல் இருப்பது அதி முக்கியமாக கருதபடுகிறது, இதன் உண்மை நிலையை பற்றி கிழ்கண்ட பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, மூல நட்சத்திரம் கொண்ட ஒரு பெண்ணின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொண்டு தெளிவு பெறுவோம், திருமண வாழ்க்கையினை நிர்ணயம் செய்வது தசவித பொருத்தமான நட்ச்சத்திர பொருத்தம் மட்டும் அல்ல என்பதை கருத்தில் கொள்வது அவசியமாகிறது, சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையே தம்பதியரின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு காரணமாக அமைகிறது, நட்ஷத்திரம் என்ற ஒரு விஷயத்தை மட்டும் கருத்தில் கொண்டு பொருத்தம் காண்பது, சிறப்பான யோகம் உள்ள நல்ல ஜாதகங்களை நாமே தவிர்க்கிறோம் என்பதே உண்மை நிலை.


லக்கினம் : கும்பம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம் 4ம் பாதம்

மேற்கண்ட ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

சுய ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :

1,2,8,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3,9ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்பு :

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.

ஜாதகிக்கு பெரும்பாலான பாவக தொடர்புகள் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகியின் யோக நிலையை தெளிவுபடுத்துகிறது, மேலும் தற்போழுது நடைபெறும் திசையான சூரியன் மட்டும் சற்று சிரமங்களை தந்துகொண்டு இருப்பதால் ( 3,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று சூரியன் திசை விரைய பாவக பலனை வழங்கிக்கொண்டு இருக்கின்றது) , திருமண வாழ்க்கை தள்ளி போகின்றது, நினைத்த காரியங்கள் கைகூடி வாராமல் தாமதம் ஏற்படுகிறது, ஆனால் அடுத்து வரும் சந்திரன் திசை ஜாதகிக்கு 4,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவது வரவேற்கத்தக்கது, சந்திரன் திசை ஆரம்பத்தில் இருந்து ஜாதகிக்கு நல்ல யோகங்கள் ஏற்படும், நினைத்த காரியங்கள் கைகூடி வரும், மேலும் சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை குறிக்கும் 2,7ம் வீடுகள் ஜாதகிக்கு மிகவும் வலிமையுடன் இருப்பது, ஜாதகியை திருமணம் செய்துகொள்ளும் அன்பருக்கு மிகுந்த நன்மையையும் யோகத்தையும் வாரி வழங்கும், நல்ல புத்திர பாக்கியம் உண்டாகும், இல்லறவாழ்க்கையில் மகிழ்ச்சியும் யோகமும் உண்டாகும்.

இந்த ஜாதகியை மூல நட்ஷத்திரம் என்ற ஒரே காரணத்துக்காக தவிர்ப்பது முற்றிலும் தவறானதாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, ஒருவரின் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது அவரின் சுய ஜாதக பாவக வலிமையே அன்றி, நட்ஷத்திரமும் ராசியும் அல்ல என்பதனை கருத்தில் கொள்வது நல்லது, மேலும் மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதக வலிமை என்பது மிக சிறப்பாக அமைந்திருப்பது, ஜாதகி மிகுந்த யோகதாரி என்பதை தெளிவு படுத்துகிறது, அடிப்படையில் சுய ஜாதகம் வலிமை பெரும் பொழுது, நட்ச்சத்திர பொருத்தத்திற்கு முக்கிய துவம் தர தேவையில்லை என்பதே உண்மை நிலை, மேலும் நட்ச்சத்திர பொருத்தங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை அற்று இருப்பின் தம்பதியரின் வாழ்க்கை மிக சிறப்பாக அமைவதில்லை, அதே சமயம் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருந்து, நட்ச்சத்திர பொருத்தம் இல்லை என்றாலும் தாம்பத்திய வாழ்க்கையில் யாதொரு இன்னல்களும் வர வாய்ப்பில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

மேற்கண்ட ஜாதகிக்கு திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை சிறப்ப அமையும் என்பதனை எதிர்வரும் திசை மற்றும் புத்திகள் ஏற்று நடத்தும் பாவக பலன்களில் இருந்து நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள இயலும், உதாரணமாக ஜாதகிக்கு தற்போழுது நடைபெறும் சூரியன் திசைக்கு அடுத்து வரும் சந்திரன் திசை வலிமை பெற்ற 4,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், சந்திரனுக்கு அடுத்து வரும் திசையான செவ்வாய் வலிமை பெற்ற 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், செவ்வாய் திசைக்கு அடுத்து வரும் ராகு திசையும் வலிமை பெற்ற 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை தருவதும், தொடர்ந்து நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் அமைப்பாகும், மேலும் ஜாதகிக்கு 2,7ம் வீடுகள் வலிமை பெறுவது இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சகல யோகங்களையும் ஜாதகியும் பெறுவார், ஜாதகியால் அவரது வாழ்க்கை துணையும் பெறுவார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இந்த ஜாதகிக்கு மூல நட்ஷத்திரம் என்ற போதிலும் சுய ஜாதகம் வலிமை பெறுவது தன்னிறைவான யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

எனவே திருமண பொருத்தம் காண்பதில் நட்ச்சத்திர பொருத்தத்தை மட்டும் கருத்தில் கொண்டு முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை என்பதை "ஜோதிடதீபம்" பதிவு செய்ய விரும்புகிறது, மேலும் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையை கருத்தில் கொண்டு திருமண பொருத்தம் காண்பதே தம்பதியரின் யோக வாழ்க்கையை 100% விகிதம் உறுதிப்படுத்தும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து:

  1. குரு பெயர்ச்சி பலன்களை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு