வியாழன், 11 ஆகஸ்ட், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - கன்னி லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "கன்னி" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

கன்னி லக்கினம் 

கன்னி லக்கின அன்பர்களுக்கு லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான், நல்ல தீர்க்கமான அறிவு திறனை வாரி வழங்குவார், உடல் நலம் மற்றும் மன நலம் சிறந்து விளங்கும், ஆரோக்கிய குறைகள் இருப்பின் பூரண குண நலம் பெரும் யோகம் உண்டாகும், நல்ல தன சேர்க்கை உண்டாகும், கடன் பெறுவது கொடுப்பதால் நல்ல லாபம் மற்றும் முன்னேற்றம் உண்டாகும், எதிர்ப்புகள் அகலும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பு மரியாதை உண்டாகும், குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சி உண்டாகும், வியாபாரம் மற்றும் சிறு தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் 1 வருடம் நல்ல வருமான வாய்ப்பை வாரி வழங்கும், போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும், லாட்டரி யோகம் உண்டாகும், எதிரிகளும் நண்பர்கள் ஆகும் யோகம் உண்டு, இருப்பினும் ஜாதகர் தனது சுய முன்னேற்றத்தில் அதிக அக்கறையுடன் செயல்படுவது நல்லது, ஜாதகருக்கே தெரியாமல், மற்றவர்களால் இன்னல்கள் ஏற்பட்ட அதிக வாய்ப்புண்டு, மருத்துவ சிகிச்சை தேவை எனில் உடனடி கவனம் செலுத்தி, குண நலம் பெறுவது அவசியமாகிறது, லக்கின வழியில் இருந்து ஜாதகர் மிகுந்த நன்மைகள் பெறுவது இந்த குரு பெயர்ச்சி "கன்னி" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் சிறப்பு அம்சமாகும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க செய்யும், பூர்வீகத்தில் ஜீவனம் செய்யும் அன்பர்களுக்கு தொழில் முன்னேற்றத்தை வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வாரி வழங்கும், தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று பெயரும் புகழும் சம்பாதிக்கும் யோகத்தை வாரி வழங்கும், இதுவரை தொழில் அமையாத கன்னி லக்கின அன்பர்களுக்கு திடீரென தொழில் வாய்ப்புகள் அமையும், புதிய தொழில் துவங்கும் யோகம் உண்டாகும், இருப்பினும் ஜாதகரின் அறிவு திறனை முழு வீச்சில் செயல்படுத்த இயலாத சூழ்நிலையை தரும், புத்திர பாக்கியம் மருத்துவ சிகிச்சையின் பெயரில் கிடைக்க பெறுவார்கள், தொழில் ஞானம் ஜாதகருக்கு இருந்த போதிலும் பொறுமையை கடைபிடிக்கும் நேரம் இது என்பதால் மேல் அதிகாரிகளிடம் சுமூகப்போக்கை கடைபிடிப்பது "கன்னி" லக்கின அன்பர்களுக்கு நன்மைகளை தரும், மேலும் தனது குழந்தைகளின் மீது அதிக அக்கறை கொள்வதும், அவர்களின் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதும் தங்களுக்கும் தங்களது வாரிசுகளுக்கும் நன்மை பயக்கும், குல தேவதை வழிபாடும், புண்ணிய சேத்திர வழிபாடும் தங்களுக்கு சகல வழிகளில் இருந்தும் யோகத்தை வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது, கன்னி லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிக அளவில் மன உளைச்சலை வாரி வழங்கும், பொது காரியங்களில் ஈடுபடுவது தங்களுக்கு கவுரவ குறைகளை தரக்கூடும், தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் ஈடுபடுவது தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய இடர்பாடுகளை வாரி வழங்க வாய்ப்புண்டு, மன நிம்மதி வெகுவாக குறையும், புதிய கூட்டு முயற்ச்சி தங்களுக்கு நன்மைகளை வழங்க வாய்ப்பில்லை என்பதால், அவற்றை தவிர்ப்பது நலம் தரும், வெளியூர் வெளிநாடுகள் செல்லும் பொழுது அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு பயணம் மேற்கொள்வது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும், மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி நிற்பதே தங்களுக்கு சகல நன்மையையும் தரும், குறிப்பாக எதிர்பால் அமைப்பினரிடம் அதிக எச்சரிக்கையாக பழகுவது நலம் தரும், இல்லையெனில் அவர்களால் அதிக துன்பத்திற்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், கன்னி லக்கின அன்பர்களுக்கு குரு பகவானின் 7ம் பார்வை களத்திர பாவகத்திற்கு அதிக நெருக்கடிகளை தருகிறது என்பதால், வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் அதிக கவனமுடன் நடந்துகொள்வது சகல நன்மைகளையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தை வசீகரிப்பது, கன்னி லக்கின அன்பர்களுக்கு பெரிய மனிதர்கள் ஆதரவும், சமூகத்தில் அந்தஸ்தும் உண்டாகும், பல திருத்தலங்களுக்கு புண்ணிய யாத்திரை சென்றுவரும் யோகம் உண்டாகும், நல்ல குரு அமைவார், அதன் வழியில் இருந்து ஜாதகர் சகல நன்மைகளையும் பெரும் யோகம் உண்டாகும், ஆராய்ச்சி மற்றும் பட்டய கல்வியில் தேர்ச்சி உண்டாகும், குடும்ப வாழ்க்கையிலும், வருமான ரீதியாகவும் தங்களுக்கு மிகுந்த முன்னேற்றம் உண்டாகும், இதுவரை பிரிந்து இருந்த தம்பதியர்கள் பெரிய மனிதர்களின் உதவி மூலம் இல்லற வாழ்க்கையில் ஒன்று இணையும் யோகம் உண்டாகும், ஜாதகரின் வார்த்தைகளுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல  வரவேற்பும் ராஜ மரியாதையும் கிடைக்கப்பெறுவீர்கள், மனதில் உள்ள பயம் அகலும், கலையை தொழிலாக செய்யும் அன்பர்களுக்கு யோகங்கள் வந்து சேரும், அரசு மரியாதை மற்றும் கவுரவம் கிடைக்க பெறுவீர்கள், கன்னி இலக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒரு வருட காலம் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஸ்திரமான நன்மைகளும் யோகங்களும் உண்டாகும், மேலும் புதிய கண்டு பிடிப்புகள், புதிய சிந்தனைகள் ஜாதகரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நீண்ட கால யோகங்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

கன்னி லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 1,5,7,9ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக