வெள்ளி, 4 நவம்பர், 2016

செவ்வாய் மற்றும் ராகுகேது தோஷம் திருமண தடைகளை தருமா? திருமணம் தாமதம் ஆக காரணம் என்ன ?


கேள்வி :

எனது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மற்றும் ராகு கேது தோஷம் உள்ளதால் திருமணம் தாமதம் ஆகின்றது என்கின்றனர், இது உண்மையா? எனக்கு வரும் வாழ்க்கை துணை பற்றி விளக்கம் தருக.


பதில் :

தங்களது சுய ஜாதக அமைப்பின் படி பெரும்பாலான பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது வரவேற்க தக்க அமைப்பாகும், தங்களது சுய ஜாதகத்தில் ராகு கேது முறையே ஆயுள் பாவகமான 8ம் பாவகத்திலும், குடும்ப ஸ்தானமான 2 ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பது உறுதியாகிறது, ஆனால் செவ்வாய் தங்களுக்கு மிதுன ராசியில் அமர்ந்து இருந்த போதிலும் நான்காம் பாவகத்தில் அமரவில்லை, மிதுன ராசியில் மூன்றாம் பாவகத்திற்கு உற்ப்பட்ட பாகையில் அமர்ந்து இருக்கின்றார் ( தங்களுக்கு மூன்றாம் பாவகம் ரிஷப ராசியில் 41:48:06 பாகையில் ஆரம்பித்து மிதுனம்  ராசியில் 68:13:04 பாகையில் முடிவடைகிறது, மேலும் செவ்வாய் மூன்றாம் பாவகத்திற்கு உற்ப்பட்ட 60:57:24 பாகையில் அமர்ந்து இருக்கின்றார் ) எனவே  அடிப்படையில் தங்களது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை  என்பதே உண்மை நிலை ( செவ்வாய் தோஷம் என்பது ஆய்வுக்கு உரிய விஷயம் ) தங்களது ஜாதகத்தில் ராகுகேது மட்டும் முறையே 8,2ம் பாவகங்களில் அமர்ந்து இருக்கின்றனர், செவ்வாய் 3ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றார்.

தங்களது கேள்விக்கு வருவோம் திருமண தாமதத்திற்கு காரணமாக தங்களது ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை இழப்பதும், தங்களின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக அமைவதையும் காரணமாக எடுத்துக்கொள்ளலாம், ஆனால் இதற்க்கு காரணமாக சர்ப்ப கிரகங்கள் மீது குற்றம் சாற்ற இயலாது ஏனெனில் 2,8ம் வீடுகளுக்கு அதிபதி புதன், 2ம் பாவகத்தில் அமர்ந்த கேது தனது நிலையில் இருந்து  குடும்ப ஸ்தானத்திற்கு வலிமையை தருகிறார், 8ம் பாவகத்தில் அமர்ந்த ராகு மட்டும் தனது நிலையில் இருந்து ஆயுள் ஸ்தானத்திற்கு முழுவீச்சில் இன்னல்களை தருகிறார், செவ்வாய் அமர்ந்த 3ம் பாவகம் தங்களது ஜாதகத்தில் மிகுந்த வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்கது, எனவே செவ்வாய் பகவானால் தங்களுக்கு திருமணம் தடைபெற வாய்ப்பு இல்லை என்பது தெளிவான உண்மை, தங்களின் கேள்வியில் உள்ளது போல் ராகுகேது, செவ்வாய் தங்களது திருமண வாழ்க்கையில் யாதொரு தடைகளையும் தரவில்லை.

திருமணம் தாமதம் ஆக  காரணம் என்ன ?

தங்களுக்கு கடந்த சந்திரன் திசையே திருமண வாழ்க்கையை அமைத்து தரவில்லை  எனலாம், திருமணம் செய்ய வேண்டிய பருவ வயதில் நடைபெற்ற சந்திரன்  திசை ( 01/02.2006 முதல் 01/02/2016 வரை ) 10 வருடங்களும் தங்களுக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை இழந்த ஆயுள் ஸ்தான பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது, சந்திரன் திசை ஏற்று நடத்திய ஆயுள் பாவகம்  கால புருஷ தத்துவத்திற்கு களத்திர ஸ்தானமாக அமைந்ததால், கடந்த சந்திரன் திசை காலத்தில் தாங்கள் திருமணத்திற்க்காக எடுத்த முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது, நல்ல நண்பர்கள் சேர்க்கையை தரவில்லை, நல்ல வேலை மற்றும் ஊதியம் அமையவில்லை, வரும் வருமானம் அனைத்தும் வீண் விறையத்தை தந்தது, மேலும் எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து வரும் இன்னல்கள் மூலம் எதிர்பாராத இழப்புகளை தந்தது, மேலும் சிந்திக்கும் திறனை குறைத்து, மன நிம்மதியிழப்பையும், மன போராட்டத்தையும் அதிகரித்தது, இதனால் தங்களின்  வாழ்க்கை சந்திரன் திசை காலத்தில் ( 10 வருடங்களும் ) அதிக துன்பங்களும், காரிய தடைகளையும், ஜீவனம் முன்னேற்றம் அற்ற நிலையையும் வழங்கியது, தங்களின் திருமண வாழ்க்கை தடைபட இதுவே காரணமாக அமைந்து விட்டது, எனவே தங்களின் திருமணம் தடைபெற ராகுகேது  மற்றும் செவ்வாய் தோஷம் காரணம் அல்ல என்பதில் தெளிவு பெறுங்கள்.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் திசை ( 01/02/2016 முதல் 01/02/2023 வரை ) தங்களுக்கு 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை இழந்த ஆயுள் ஸ்தான பலனை ஏற்று நடத்துவது மேற்கண்ட பாவக வழியில் இன்னல்களை தந்த போதிலும், 1,3,7,12ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெற்ற வீரிய ஸ்தான பலனையும் ஏற்று நடத்துவது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை தரும் எனவே செவ்வாய் திசையில் 7ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், தங்களின் திருமண முயற்ச்சிகள் உடனடி  வெற்றியை தரும், சிறப்பான வாழ்க்கை துணை நிச்சயம் அமையும், மேலும் தங்களின் வாழ்க்கை துணை வடகிழக்கு திசையில் வெகு தொலைவிற்கு அப்பால்  இருந்து வரும் வாய்ப்பு உண்டாகும், வரும் வாழ்க்கை துணை சிறந்த நிர்வாக திறனும், ஆளுமையும் கொண்டு இருப்பர், இருப்பினும் பேச்சு அதிகமிருக்கும், வரும் வார்த்தைகள் தங்களை சிறிது  பாதிக்கும், செவ்வாய் திசையில் தற்போழுது நடைபெறும் ராகு புத்தியில் நிச்சயம் தங்களுக்கு திருமணம் சிறப்பாக நடைபெறும். ( எந்த ஒரு ஜாதகருக்கும் திருமணம் தாமதம் ஆனால் அதற்க்கு காரணமாக நிச்சயம் சுய ஜாதகத்தில் 2,7,12ம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் அல்லது நடைபெறும் திசை பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், எனவே அதன் நிலை அறிந்து அதற்கான பரிகாரங்களை நாடினால் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நன்மை உண்டாகும், சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும் ) 

குறிப்பு :

அடுத்து வரும் ராகு திசையும், குரு திசையும் தங்களுக்கு அபரிவிதமான ராஜயோக பலன்களை தர காத்துகொண்டு இருக்கின்றது என்பது, தங்களின் வாழ்க்கையில் வரும் பின் யோகத்திற்கு எடுத்துக்காட்டு, தங்களின் வாழ்க்கையில் தற்போழுது நடைபெறும் செவ்வாய், அடுத்தது வரும் ராகு, அதற்க்கு  அடுத்து வரும் குரு திசை வலிமைபெற்ற சில பாவகங்களின் பலனை மட்டும் ஏற்று நடத்துவது, தங்களின் வாழ்க்கையில் மறக்க இயலாதாக முன்னேற்றத்தையும், ராஜ யோக பலன்களையும் வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்க அமசமாகும், இதன் பலாபலன்களை தெளிவாக உணர்ந்து சகல நலன்களும் பெற்று வாழ்க, வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக