செவ்வாய், 8 நவம்பர், 2016

ராகு திசை வழங்கும் கலைத்துறை வாழ்வு, திரைபட துறையில் ஜாதகரின் வெற்றிகள் !

 
 
இறை அருளின் கருணையினால், கலை துறையில் பல சாதனைகளையும், வெற்றிகளையும் குவித்த பல அன்பர்கள் இருப்பினும், திரையுலக மார்க்கண்டேயர் என்று அழைக்கப்படும் அன்பரின் புதல்வர்களில் முன்னவரின் ஜாதகம் இது, பொதுவாக திரைபட துறையில் பிரபல்யம் பெறுவது என்பது எளிதான ஒன்று அல்ல என்றே சொல்லலாம், கலை துறையில் திரைபட துறை மட்டுமல்ல ஆய கலைகள் 64 ற்கும் இது பொருந்தும், கலைத்துறையில் பிரகாசிக்க இறை அருளின் பரிபூர்ண கருணை நிச்சயம் தேவை, மேலும் சுய ஜாதகம் வலிமை பெறுவது மிக மிக முக்கியம் என்பதில் மாற்று கருத்து இல்லை, இந்த பதிவில் திரையுலக மார்க்கண்டேயரின் புதல்வர்களில் முன்னவரின் ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மகரம் 
நட்ஷத்திரம் : உத்ராடம் 2ம் பாதம் 

ஜாதகருக்கு ரிஷப லக்கினம், சுய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானம் என்று அழைக்கப்படும் 8ம் பாவாகத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அமைப்பாகும்,பொதுவாக சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எனும் 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு இருக்கும் கலை ஆர்வத்தை தெளிவு படுத்தும், மேலும் ஜாதகர் கலைத்துறையில் பெரும் வெற்றிகளை குறிக்கும், மேற்கண்ட ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது ஜாதகர் கலைத்துறையில் அதிர்ஷ்டவாழ்க்கையை பெறுபவர் என்பதை உறுதி படுத்துகிறது, 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரை கலைத்துறையில் ஆர்வத்தையும், கடின உழைப்பின் மூலம் வெற்றிகளை பெரும் யோகத்தை தந்தது, மேலும் சுய அறிவு திறன், சமயோசித புத்திசாலித்தனம், தனது செயல்களில் விவேகம் மற்றும் விழிப்புணர்வுடன் செயல்படும் தன்மை, எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்தும் வல்லமை, சுய அறிவு கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம், கற்ற கல்வியை தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சிறப்பாக பயன்படுத்தும் நுண்ணறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், நல்ல குணங்கள், குல தேவதை மற்றும் கலைமகளின் பரிபூர்ண நல்லாசிகளை பெரும் யோகம் என்ற வகையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும், சிறப்பான நினைவு திறனும், அறிவார்ந்த செயல்களும் ஜாதகரின் வாழ்க்கையில் அளவில்லா யோகங்களை வாரி வழங்கும்.

கலைத்துறையில் மக்கள் செல்வாக்கையும், பிரபல தன்மையை பெறுவதற்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது, ஜாதகருக்கு 1,2,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று வலிமை பெறுவது ஜாதகர் லக்கின வழியில் இருந்து மக்கள் செல்வாக்கையும், பொதுமக்களுடனான தொடர்பையும் சிறப்பாக வழங்குகிறது, 2ம் பாவக வழியில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரம் மூலம் வருமான வாய்ப்பை பெரும் யோகத்தை வழங்குகிறது, ஜாதகரின் பேச்சு மற்றும் இயக்கம் மூலம் வருமான வாய்ப்பை பெரும் யோகத்தை தருகிறது, 7ம் பாவக வழியில் இருந்து மக்கள் தொடர்பு, மக்கள் ஆதரவு, வெகுஜன வசீகரம், பொதுமக்களிடம் பிரபல்யம் அடைதல், வியாபர விருத்தி, வாழ்க்கை துணை ஆதரவு, கூட்டு முயற்ச்சி வெற்றி பெறுதல், கலைத்துறை பிரபல்ய யோகம், எதிர்பாராத வெற்றிகள், தன்னம்பிக்கை மிக்க செயல்பாடுகள், அனைவராலும் விரும்பப்படும் தன்மை, பொறுப்பு மிக்க செயல்கள், நல்ல மனம், சமூக அந்தஸ்து, சமூக நலனில் அக்கறை, சுய முன்னேற்றம், தடைகளை தகர்த்து வாழ்க்கையில் வெற்றி பெரும் யோகம், வெளிநாடுகளில் பிரபல்யம் மற்றும் வியாபர விருத்தி, மக்கள் தொடர்புள்ள பணிகளில் வெற்றிமேல் வெற்றி என்றவகையில் யோகங்களை வாரி வழங்கும், கலைத்துறையில் ஜாதகரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணிகள் 1,2,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது என்றால் அது மிகையில்லை.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் கொண்ட லட்ச்சியங்களில் வெற்றிபெறும் தன்மையை குறிக்கும், ஜாதகருக்கு  வீரிய ஸ்தானம் வலிமை பெறுவது மிகசிறந்த வியாபர நுணுக்கம் பெற்றவர் என்பதும், " காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்ளும் " வல்லமை பெற்றவர் என்பதையும் உறுதிப்படுத்துகிறது, மேலும் ஜாதகர் செய்யும் விஷயங்கள் யாவிலும் வெற்றியை வாரி வழங்கும், ஜாதகரின் முயற்சிகள் எந்த காரணத்தைக்கொண்டும் தோல்வியை தர வாய்ப்பில்லை என்பதால், ஜாதகர் தொடர் வெற்றிகளை பெறுவதற்கு அருகதை பெற்றவர் ஆகிறார், மேலும் கணிதம்,ஜோதிடம்,கலை,இசை போன்றவற்றில் ஈடுபாட்டையும் தேர்ச்சியையும் தரும், தன்னம்பிக்கை மிதமிஞ்சிய அளவில் காணப்படும், ஜாதகர் பெரும் வெற்றிகளுக்கு வீரியஸ்தான ( கால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியாக வருவதும், சர நீர் தத்துவ ராசியாக அமைவதும் கலை துறை வெற்றிகளை வழங்குகிறது ) வலிமையையும் மிக முக்கிய காரணியாக அமையும், மேலும் ஜாதகருக்கு 6,9,12ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, சத்ரு ஸ்தான வழியில் இருந்து எதிர்ப்புகளை வெற்றிகொள்ளும் யோகத்தையும், குறுகிய கால லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை பெரும் நிலையை தருகிறது, பாக்கிய ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு நற்பெயரும், பெருந்தன்மையான செயல்பாடுகளையும் தருகிறது, அனைவரிடமும் இணக்கமான செயல்பாட்டினையும், அறிவுபூர்வமான செயல்திறனையும் வாரி வழங்கும், பெரியோர் ஆதரவும், நல்ல மனிதர்களின் சேர்க்கையும் ஜாதகரின் வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும், அயனசயன ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு நல்ல நிம்மதியான வாழ்க்கையும், முதலீடுகளில் வரும் திடீர் லாபத்தையும் தரும், போதும் என்ற மனமும், நிம்மதி மிக்க யோக வாழ்க்கையையும் தரும், நிம்மதியான உறக்கம் கிட்டும், யோக கலையில் தேர்ச்சியை தரும், மனதில் நினைத்த எண்ணங்கள் மற்றும் லட்ச்சியங்கள் யாவும் நிறைவேறும்.

தொழில் வெற்றிகளை பெறுவதற்கு சுய  ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது அவசியமாகிறது, இவரது ஜாதகத்தில் 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் ஜீவன வெற்றிகளை உறுதி செய்கிறது, மேலும் ஜாதகர் தனது பெற்றோர்கள் வழியில் இருந்து பெரும் யோகத்தையும் சிறப்பாக நிர்ணயம் செய்கிறது, தன்னிகரில்லா ஜீவன முன்னேற்றத்தை ஜீவன ஸ்தான வலிமையே ஜாதகருக்கு வாரி வழங்குகிறது, 4ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் சுயமாக சொத்து சுக சேர்க்கையை பெரும் வல்லமையை பெறுகிறார், மேலும் ஜாதகருக்கு  சுக ஸ்தானமும், ஜீவன ஸ்தானமும் வலிமை பெற்று ஸ்திர ராசியில் அமைவது நிலையான ஜீவனத்தை வழங்கும் அமைப்பை தருகிறது,மேலும் ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கையில் தனித்திறமையுடன் செயல்படும் வல்லமையும், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்பினை பெரும் யோகத்தையும் தருகிறது.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு நீண்ட ஆயுளை தந்த போதிலும், வாழ்க்கை துணை வழியில் இருந்து  சிறு சிறு இழப்புகளை தரும், விபத்துகள் மற்றும் மருத்துவ செலவுகளை தரும் என்பது மட்டும் மேற்கண்ட ஜாதகத்தில் உள்ள ஒரே ஒரு குறை எனலாம், ஆனால் இதனால் பெரிய பாதிப்புகள் ஜாதகருக்கு இல்லை.

மேற்கண்ட ஜாதகத்தில் பெரும்பாலும் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்று இருப்பது சிறப்பான யோகம் என்ற போதிலும், ஜாதகர் கலை துறையில் வாழ்க்கையை துவங்கியதில் இருந்து இன்று வரை தொடர் முன்னேற்றத்தை வழங்கி கொண்டு இருப்பதற்கு காரணம், 19/02/1996 முதல் 19/02/2014 வரை நடைபெற்ற ராகு திசை 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 3,11ம் பாவக பலனை ஏற்று நடத்தியதே காரணமாக அமைந்தது, ஜாதகர் கலைத்துறையில் கால் பதித்த நாள் முதல் ராகு திசை முடியும் வரை 3,11ம் பாவக வழியில் இருந்து முழு அளவில் யோக பலன்களை வாரி வழங்கியது ஜாதகரின் கலைத்துறை வெற்றிகளை 100% விகிதம்  உறுதிப்படுத்தியது, மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 6,9,12ம் வீடுகள் வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 5,11ம் வீடுகள் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் 3,11ம் பாவக பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது, ஜாதகர் கலைத்துறையில் குருதிசை முழுவதும் தொடர் வெற்றிகளை எதிர்காலத்திலும் வழங்கும் என்பது ஜாதகருக்கு இறைஅருள் கொடுத்த வரமே, மேலும் இனிவரும் எதிர்காலம் ஜாதகரை தனது துறையில் பன்முகம் கொண்ட திறமைசாலியாக மாற்றி அமைக்கும் என்பது மட்டும் உறுதி, மேலும் ஜாதகருக்கு பாவக அதிபதிகள் என்ற முறையில் செவ்வாய்,குரு,புதன் மற்றும் சுக்கிரன் வலிமை பெற்று யோக பலன்களை வழங்குவது வரவேற்க தக்க அம்சமே, மேலும் குரு திசைக்கு அடுத்து வரும் சனி திசை மட்டுமே ஜாதகருக்கு இன்னல்களை தரக்கூடும்.


குறிப்பு :

கலைத்துறையில் சிறப்பான வெற்றிகளை பெறுவதற்கு சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் சுய ஜாதகம் வலிமை பெறுவது ஜாதகரை கலைத்துறையில் புகழ் மிக்க கலைஞனாக நிலை நிறுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக