வியாழன், 11 டிசம்பர், 2014

ஜீவன ஸ்தான வலிமையையும், தகப்பனார் வழியில் இருந்து ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையும் !




"தாயின் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை "

மேற்கண்ட முதுமொழிக்கு ஏற்ப ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 4ம் பாவகம் தாயாரையும், 10ம் பாவகம் தகப்பனாரையும் குறிக்கும், சுய ஜாதகத்தில் 4,10ம் பாவகங்கள் நல்ல வலிமையுடன் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் 4ம் பாவக அமைப்பில் இருந்து நல்ல சுகபோக வாழ்க்கையையும், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த ஜீவன ( தொழில் ) வாழ்க்கையையும் வாரி வழங்கும், பொதுவாக சுய ஜாதக ரீதியாக ஆண்களின் ஜாதகத்தில் ஜீவனம் எனும் 10ம் பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது ஏனெனில் உத்தியோகம் "புருஷ லட்சனம் " என்று பழமொழிக்கு ஏற்ப ஆண்கள் ஏதாவது ஒரு வகையில் ஜீவனத்தை தேடி குடும்பத்தை காப்பாற்றும் கடமை ஆண்களுக்கே அதிகம் உண்டு, தற்காலத்தில் "உத்தியோகம் பெண் ஆட்சி லட்சனம் " ஆகிவிட்டது வேறு கதையாக இருந்தாலும், உத்தியோகம் அல்லது வேலை இல்லாத ஆண் மகனை சமுதாயமும், அவரது உறவுகளும் மிக ஏளனமாகவே பார்க்கின்றனர், வேலை இல்ல இளைஞனை பார்த்து, அதிக அளவு கவலை படுபவர்கள் அவர்களது பெற்றோர்களே, குறிப்பாக ஜாதகரின் தந்தையே இதை பற்றி அதிக அளவில் கவலை கொள்பவராக காணப்படுகின்றார்கள்.

ஒரு ஆண்மகனுக்கு சரியான வயதில் நல்ல ஜீவனம் அமைவது அவரது சுய ஜாதகத்தில் உள்ள ஜீவன ஸ்தானமான 10ம் பாவக வலிமையை பொறுத்தே, ஜீவன ஸ்தானம் ஒருவரது சுய ஜாதகத்தில் மறைவு ஸ்தானமான 6,8,12ம் பாவகத்துடனும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது ஜாதகருக்கு சிறந்த ஜீவன அமைப்பை தொழில் அல்லது வேலைவாய்ப்பில் சரியான வயதில் வழங்கிவிடுகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து ஜாதகர் ஏதாவது ஒரு தொழில் வாய்ப்பையோ, வேலை வாய்ப்பையோ பெரும் யோகத்தை தங்குதடையின்றி கொடுத்து  விடுகிறது, ஜாதகர் குறிப்பிட்ட பாவக அமைப்பில் இருந்து கௌரவம் அந்தஸ்து மற்றும் வருமான வாய்ப்பை பெறுவதில் தடையேதும் இருப்பதில்லை. மேலும் நடைபெறும் திசை மற்றும் புத்திகள் சாதகமாக இருப்பின் ஜாதகரின் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் ஜாதகரை தேடிவருவதும், ஜாதகர் ஜீவன வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுவதும் இயற்கையாக நடந்துவிடுகிறது.

இதற்க்கு மாறாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுதே ஜாதகர் ஜீவனம் சார்ந்த இன்னல்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் அமைப்பை தருகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் கௌரவம் மற்றும் அந்தஸ்தை குறிப்பதால், ஜாதகர்  ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களையும் வேலை வாய்ப்பின்மையும் ஜாதகரை கடுமையாக பாதிக்கிறது, சுய கௌரவமும் அந்தஸ்தும் இழந்து மற்றவரை எதிர்பார்த்து வாழ்க்கையை நகர்த்தும் சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளபடுகிறார், பொதுவாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது  ஜாதகர் அதிக அளவில்  தனது தகப்பனாருடன் கருத்து வேறுபாடு வருவது எதார்த்தமான விஷயம், ஏனெனில் ஜீவன ஸ்தானம்  ஒரு வகையில்  தனது  தகப்பனாரையும் குறிப்பதால் ஜாதகர் அவரது வழியில் இருந்து ஆதரவினமையும், கருத்துவேறுபாடு காரணமாக வீண் சச்சரவையும் தருகிறது, இதன் விளைவாக பல இளைஞர்களின் முதல் எதிரியாக தனது தகப்பனாரை நினைப்பது உண்டு, மேலும் அவர் சொல்லும் விஷயங்களை ஏற்றுகொள்ளாமல் அவருக்கு எதிராக முரண்பட்ட காரியங்களை செய்வது சம்பந்தபட்ட ஜாதகருக்கு மேலும் ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை எதிர்கொள்ளும் தன்மையையே தருகிறது.

பொதுவாக ஜீவன ஸ்தானம் பாதிக்க பட்ட ஜாதக அமைப்பை சார்ந்த அன்பர்கள் ! தனது  தகப்பனார்  வழியில் இருந்து வரும் துன்பங்களை அல்லது சிரமங்களை ஏற்றுகொள்ளும் பொழுது அந்த ஜாதகருக்கு  ஜீவன வழியில் இருந்து வரும் இன்னல்கள் நீங்கி தொழில் ரீதியாகவும் வேலை அமைப்பிலும் மிகப்பெரிய சாதனையை செய்கின்றார்கள் என்பது கவனிக்க தக்கது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் பாதிக்கபட்ட அன்பர்கள் எந்த காரணத்தை கொண்டும் தனது தகப்பனாரை எதிர்த்து செயல்படாமல் இருப்பது நல்லது, மேலும் அவரது வார்த்தைகளை மதித்து  அவர் சொல்லும் வழியில் நடப்பது ஜாதகருக்கு சில காலங்கள் சிரமம் தந்த போதிலும், அதன் பிறகு வரும் காலங்கள் ஜீவன  வழியில் இருந்து 100% விகித யோகத்தை வாரி வழங்கும், ஜாதகர் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளை வேலை மற்றும் தொழில் அமைப்பின் மூலம் அபரிவிதமாக பெரும் யோகத்தை தரும் என்பதை மறுக்க இயலாது, தான் செய்யும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பின் மூலம் ஜாதகர் அபரிவிதமான வருமான வாய்ப்பை பெரும்  தன்மையை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நெருப்பு தத்துவ ராசியில் அமைந்து பாதிக்க பட்டு இருப்பின் ஜாதகர் தனது  செய்கையின் மூலம் தகப்பனாருக்கு பிடித்த அமைப்பில் நடந்துகொள்வதும், எந்த ஒரு காரியத்திலும் அவசர கதியில் செய்யாமல் பொறுமையை கடைபிடிப்பது சிறந்தது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நில தத்துவ அமைப்பில் இருப்பின், ஜாதகர் தனது தகப்பனாரின் சொத்துக்களை அல்லது செல்வத்தை பயன்படுத்தாமல் இருப்பது நலம் தரும், ஜாதகர் தனது தகப்பனாரின் உடல் நிலையை அதிக  அக்கறை எடுத்துகொள்வது சிறந்தது, அவரது பணத்தை செல்வத்தை விரையம் செய்யாமல் இருப்பது ஜாதகருக்கு உடனடி ஜீவன மேன்மையை தரும், ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் காற்று தத்துவ அமைப்பில் இருப்பின் அவரது அறிவுரையை ஏற்று நடப்பதும், சுயமாக தனது சிந்தனை மூலம் ஜீவன வாழ்க்கையை மேற்கொள்வது சிறந்தது தகப்பனாருக்காக அனைத்தையும் ஏற்றுகொள்ளும் மனபக்குவத்தை வளர்த்துகொள்வது நல்லது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் நீர் தத்துவ அமைப்பில் இருப்பின்  ஜாதகர் தனது தகப்பனார் மனம் நோகாமல் நடந்துகொள்வது சிறந்தது, மனதளவில் அவருக்கு சிறு துன்பமும் தராமல் இருப்பதே ஜாதகருக்கு அபரிவிதமான ஜீவன வாழ்க்கையை வாரி வழங்கிவிடும், அதே போல் ஜாதகர் தனது மனதளவில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பது சகல நிலைகளில்  இருந்து வெற்றியை வாரி வழங்கும்.

பொதுவாக ஜீவன ஸ்தானம் பாதிக்கப்படும் ஜாதக அமைப்பை பெற்ற அன்பர்கள் அனைவரும் தனது தகப்பனாருக்கு  சிறிதேனும் துன்பம் தராமல் நடந்துகொல்வதே, ஜாதகரின் ஜீவன வாழ்க்கையை மேம்படுத்தும் மேலும் ஜாதகர் பார்ர்க்கும் பணியில் அல்லது செய்யும் தொழிலில் அபரிவிதமான முன்னேற்றங்களை  வாரி வழங்கும் என்பது மட்டும் 100% விகிதம் உறுதி.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக