செவ்வாய், 9 டிசம்பர், 2014

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - துலாம்


சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.


அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது .


துலாம் லக்கினம் 

2ல் அமர்ந்த சனிபகவான் துலாம் லக்கினத்தி சார்ந்தவர்களுக்கு பேச்சு மற்றும் குடும்பம் போன்ற அமைப்புகளில் சிறு சிறு இன்னல்களை தந்தபோதிலும், திடீர் வருமான வாய்ப்புகளை ஏற்ப்படுத்தி கொடுக்கிறார், இனிவரும் இரண்டரை வருடமும் துலாம் இலக்கின அன்பர்களுக்கு நல்ல வருமானம் தொய்வின்றி கிடைக்கும், எதிர்பார்த்த பணவரவுகள் நிச்சயம் கிடைக்கும், ஜாதகரின் மன நிலையில் மட்டும் சிறிது பாதிப்புகள் வந்துபோக வாய்ப்பு உண்டு , தனக்கு வரும் மன கவலைகளை ஜாதகர் அனைவரிடமும் பகிர்ந்து ஆறுதல் தேடிக்கொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும்.

 மேலும் ஜாதகர் பௌர்ணமி அல்லது அமாவசை தினங்களில் கோவில் வழிபாடு மேற்கொள்வது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறந்த நன்மைகளை வாரி வழங்கும், தனது கையில் உள்ள நிதியை மற்றவர்களை  நம்பிக்கையின் பேரில் கொடுப்பது நிச்சயம் பல இன்னல்களை தரும், ஜாதகருக்கு இதனால் குடும்பத்திலும் உறவுகள் சார்ந்த அமைப்பில் இருந்தும் அதிக மனகசப்பை தருவதற்கு வாய்ப்பு உண்டாகும், எனவே பணம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பது நலம் தரும், இதனால் வரும் பிரச்சனைகளை வெகுவாக தவிர்க்கலாம், வெளிநாடுகள் இருக்கும் அன்பர்கள் மிகுந்த கவனமுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை இனிவரும் காலங்களில் தங்களுக்கு ஏற்ப்படாலம்.

6ம் பார்வையாக துலாம் லக்கினத்திற்கு 7ம் பாவகத்தை பார்க்கும் சனிபகவான், இதுவரை திருமணம் ஆகாமல் தாமாத நிலையில் இருந்த அன்பர்களுக்கு திருமணம் சார்ந்த விஷயங்களில் எடுக்கும் முயற்ச்சிகள் உடனடி வெற்றியை தரும், வெளிநாடு வேலை வாய்ப்பை எதிர்பாத்து காத்துகொண்டு இருந்த அன்பர்களுக்கு எதிர்பாராத வகையில் திடீர் வேலைவாய்ப்பை பெரும் யோகம் உண்டாகும், பொதுமக்கள் மற்றும் நண்பர்களின் உதவி கேட்டவுடன் கிடைக்கும், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும், அரசு துறையில் பணியாற்றி கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் காலங்கள் மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், குறிப்பாக காவல் துறை, நிர்வாக துறை, பொதுபணி துறை சார்ந்த அன்பர்களுக்கு மிகுந்த யோக காலம் என்றே சொல்லலாம், எதிர்பாராத பதவி உயர்வு, அதிக வருமான வாய்ப்பு என்ற வகையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், உடல் நிலை மிகவும் சிறப்பாக விளங்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், தங்களின் எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும் யோக காலமாக இந்த சனிபெயர்ச்சியை தாங்கள் கருதலாம்.

7ம் பார்வையாக துலாம் லக்கினத்திற்கு 8ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபவான், ஜாதகருக்கு கை நிறைவான வருமான வாய்ப்புகளை வாரி வழங்குகிறார், தனது சுய உழைப்பின் மூலம் சொத்து சுகம், வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை வாரி வழங்குகிறார், தன்னிறைவான பேச்சு திறனால் ஜாதகர்  தனது வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை பெரும் யோக காலமாக இதை கருதலாம், ஜாதகர் குடும்பம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த சொத்துகளை திடீரென பெரும் யோகத்தை தரும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரவேண்டிய அதிர்ஷ்டங்களையும் வருமானம் மற்றும் சொத்துகள் போன்ற விஷயங்களை ஜாதகர் அபரிவிதமான பெரும் யோகத்தை தரும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்பாராத அதிர்ஷ்ட வருமான வாய்ப்புகள் ஜாதகருக்கு இனிவரும் காலங்களில் தொடர்ந்து வந்தவண்ணமே இருக்கும் என்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயம்.

10ம் பார்வையாக துலாம் லக்கினத்திற்கு 11ம் பாவகத்தை பார்வை செய்யும் சனிபகவான், துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு நீடித்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறார், ஜாதகருக்கு வழங்கும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் என்பது ஸ்திர தன்மையுடன் நீண்டகால அமைப்புடன் தொடர்ந்து நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும் என்பதை மறுக்க இயலாது , ஜாதகருக்கு தனது குல தெய்வத்தின் அருளாசி பரிபூர்ணமாக பலன்தரும், இறை அருளின் கருணையினால் ஜாதகரின் முயற்சிகள் யாவும் வெற்றி பெரும், தனது சுய சிந்தனையும் அறிவாற்றலும் நீடித்த நன்மைகளை வாரி வழங்கும் விதமாக அமையும், ஜாதகரின் அறிவு திறன் பிரகாசிக்கும் யோக காலமாக இதை கருதலாம், ஜாதகருக்கு தற்பொழுது கல்வி சார்ந்த விஷயங்களில் நல்ல ஈடுபாடும், கல்வியில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும், தங்கு தடையின்றி எடுக்கும் நல்ல காரியங்கள் யாவும் வெற்றி பெரும், மருத்துவ துறையில் இருக்கும் அன்பர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் யோக காலமாக இதை கருதலாம், மருத்துவம்,விவசாயம்,நிலம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு, இது ஒரு ஏற்றமிகு அதிர்ஷ்ட காலமாக கருதலாம், அதிர்ஷ்டத்தின் முழு பயனையும் துலாம் லக்கினத்தை சார்ந்த அன்பர்கள் அனுபவிக்கும் தன்மையை இனிவரும் காலங்களில் நிச்சயம் உணர்வார்கள் வாழ்த்துகள்.

துலா இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட2,7,8,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட  சனிபகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை 2,7,8,11ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க, வாழ்த்துகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக