வியாழன், 26 பிப்ரவரி, 2015

யோக காலமும் நல்ல நேரமும் வரும் சமயம் எப்பொழுது ? சுய ஜாதக ரீதியாக தெரிந்துகொள்வது எப்படி ?




சுய ஜாதக ரீதியாக ஒருவருக்கு நல்ல யோக காலம் வரும் தருணம் எப்பொழுது? என்பதை தெளிவாக தெரிந்துகொள்வது அவசியமானதாகவும், அவயோக காலம் வரும் தருணம் எப்பொழுது ? என்பதை தெளிவாக தெரிந்து கொள்வது மிக மிக அவசியமானதாகவும்  ஜோதிடதீபம்  கருதுகிறது, ஒருவருக்கு யோக காலம் எப்படி மிகசிறந்த நன்மைகளை குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து தருகிறதோ ?  அதை போன்றே அவயோக காலமும் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து கெடு பலன்களை தர தவறுவதில்லை, பொதுவாக பாரம்பரிய ஜோதிட முறையில் பலன்கானும் பொழுது ஒருவரது சுய ஜாதக பலன்களை கணிதம் செய்வதில் பல முரண்பாடுகளும், தவறுகளும் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் உண்டு, நமது ஜோதிட முறையில் இந்த தவறுகள் நடை பெற வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பது ஒரு சந்தோஷமான விஷயமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது.

பாரம்பரிய முறையில் பலன் காணும் பொழுது பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் முதற்கொண்டு 12 வீடுகளில் கிரகங்கள் அமர்ந்த நிலையை வைத்தும், தற்பொழுது நடைபெறும் திசை சுபர அசுபர என்ற நிலையை வைத்தும், தற்காலத்தில் உள்ள கோட்சார கிரகங்களின் இயக்க நிலையை சந்திரனை அடிப்படையாக கொண்ட ராசியை வைத்தும் பலன் காணுவது இயற்கையாக நிகழ்வது, இருப்பினும் ஒருவருக்கு சுய ஜாதகத்தில் சுப கிரகங்கள் என்று அழைக்கப்படும் குரு,சுக்கிரன்,வளர் பிறை சந்திரன்,புதன் ஆகிய கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் ஒருவருக்கு யோக பலன்களை வாரி வழங்கி விடுவதுமில்லை, அசுப கிரகங்கள் என்று அழைக்கப்படும் சூரியன்,தேய்பிறை சந்திரன், செவ்வாய்,சனி,ராகுகேது ஆகிய கிரகங்கள் அவயோக பலன்களையும் வாரி வழங்கி விடுவதுமில்லை, மேலும் கோட்சார கிரகங்களின் பலன்கள் ஜாதகரை வெகுவாக பாதிக்க படுவதுமில்லை, ஏனெனில் தற்பொழுது நடை பெரும் திசை மற்றும் புத்திகள்  ஏற்று நடத்தும் பாவகங்களின் தொடர்பை கோட்சார கிரகங்கள் தொடர்பு பெற்றால் மட்டுமே நன்மை தீமை பலன்களை வழங்குகிறது, சந்திரனை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவது பொது பலனே அன்றி, சுய ஜாதகத்திற்கு எவ்விதத்திலும் அது பொருந்துவதில்லை என்ற உண்மையை இந்த இடத்தில் அனைவரும் உணர்வது அவசியமாக ஜோதிடதீபம் கருதுகிறது அன்பர்களே !

ஒரு உதாரண ஜாதகம் கொண்டு பலன் காண்போம் :


ஜாதகர் லக்கினம் : கன்னி 
ராசி :  மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம் 

ஒருவரின் ஜாதக பலன் காணும் முன்பு அவரது ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை என்ன ? என்பதை தெளிவாக உணர்ந்தால்  மட்டுமே குறிப்பிட்ட ஜாதகருக்கு சரியான ஜாதக பலனை ஜோதிடர்களால் சொல்ல இயலும், மாறாக கிரகங்கள்  வலிமை வைத்து பலன் சொல்வது நிச்சயம் சரியான பலன் காண வாய்ப்பை தாராது ஏனெனில், பாவகம் ஒன்று மட்டுமே வினாடிக்கு வினாடி மாற்றம் பெற்றுகொண்டு இருக்கும், இதன் மூலமே ஜாதகரின் பாவக வலிமையை  நிர்ணயம் செய்ய இயலும், ஒரே நேரத்தில் பிறந்த குழந்தைகளின் சுய ஜாதகத்தில் பாவக வலிமை வித்தியாசம் பெறுவது இதன் அடிப்படையிலேயே, ஆக ஒருவரின் சுய ஜாதகத்தில் சரியான பலன் காண அடிப்படையில் கணிதம்  செய்து காண வேண்டிய விஷயங்கள் பின்வருமாறு:

1) ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை என்ன ?
2) 12 பாவகங்களும் தொடர்பு படுத்தும் வீடுகள் என்ன ?
3) தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 12 பாவகங்களில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது.
4) தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்கள் நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம தொடர்பு படுத்தும் பாவகங்களுக்கு எவ்வித பலன்களை தருகிறது என்பதை தெளிவாக தெரிந்தால் மட்டுமே, ஒரு ஜாதகருக்கு சரியான ஜாதக பலன்களை நாம் சொல்ல இயலும்.

மேற்கண்ட ஜாதகத்தில் நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 12 பாவகங்களுடன் எவ்வித தொடர்பை பெறுகிறது என்பதை வரிசைகிரமமாக பார்ப்போம் அன்பர்களே !

ஜாதகருக்கு ஜெனன நிலையில் நின்ற திசை சந்திரன்:

சந்திரன் திசை ஜாதகருக்கு 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும், 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று அவயோக பலன்களையும் தந்தது, இதில் ஜாதகர் 1,3,4,7,9ம் பாவக வழிகளில் இருந்து நன்மையான பலன்களையும், 8,12ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும் சந்திரன் திசையில் அனுபவித்தார்.

2வதாக வந்த திசை செவ்வாய் :

 செவ்வாய் திசை ஜாதகருக்கு 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களை மட்டும் செய்ததால் ஜாதகர் செவ்வாய் திசையில் 1,3,4,7,9ம் பாவக வழிகளில் இருந்து நன்மையான பலன்களை மட்டும் அனுபவித்தார்,

3வதாக வந்த திசை ராகு :

 ராகு திசை ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோக பலனையே வழங்கியதால், ஜாதகருக்கு ராகு திசை 2,6ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையே அனுபவிக்கும் தன்மைய தந்தது.

4வதாக தற்பொழுது  நடைமுறையில் உள்ள திசை குரு :

 தற்பொழுது நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது நல்ல பலன் என்ற போதிலும் 10ம் வீட்டிற்கு 9ம் பாவகம் 12ம் வீடாக வருவதால் ஜாதகர் தனது தகப்பனார் வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கி விட்டது.

5வதாக வரும் திசை சனி :

இனி வர இருக்கும் சனி திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களையும், 10ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று அவயோக பலன்களையும் வழங்குகிறது எனவே ஜாதகர் சனி திசையில் 5,11ம் பாவக வழியில் இருந்து நன்மையையும், 10ம் பாவக வழியில் இருந்து தீமையையும் பெரும் நிலையை தரும்.

6வதாக வரும் திசை புதன் :

சனிக்கு அடுத்து வரும் புதன் திசை ஜாதகருக்கு 4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையே தருவதால், ஜாதகருக்கு புதன் திசை மிகுந்த நன்மையையே வாரி வழங்கும்.

7வதாக வரும் திசை கேது :

புதன் திசைக்கு அடுத்ததாக வரும் கேது திசை ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோக பலனையே வழங்குவதால் ஜாதகருக்கு கேது திசை 2,6ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையே வாரி வழங்கும்.

8வதாக வரும் திசை சுக்கிரன் :

கேது திசைக்கு அடுத்ததாக வரும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு 5,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலன்களை வாரி வழங்குவதால் ஜாதகருக்கு சுக்கிரன் திசை மிகுந்த யோகத்தையும் நன்மையையும் வாரி வழங்கும் என்பது உறுதி.

9வதாக வரும் திசை சூரியன் :

சுக்கிர திசைக்கு அடுத்ததாக வரும் சூரியன் திசை ஜாதகருக்கு 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலன்களையே தருவதால், ஜாதகருக்கு சூரியன் திசை மிகுந்த துன்பத்தையே தரும் என்பது குறிப்பிட தக்கது.

மேற்கண்ட ஜாதகருக்கு அதிக நன்மையை தரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்களாக  சனி மற்றும் சுக்கிரன் ஜாதகத்தில் அமர்கின்றனர்.

மேற்கண்ட ஜாதகருக்கு அதிக இன்னல்களை தரும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்களாக சூரியன் மற்றும் சந்திரன் ஜாதகத்தில் அமர்கின்றனர்.

மேலும் மேற்கண்ட திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் நடைபெறும் பொழுது இவர்கள் தொடர்பு படுத்தும் பாவகங்களுடன் கோட்சார கிரகங்கள் தொடர்பு பெரும் பொழுது வழங்கும் யோக, அவயோக பலன்களையும் கருத்தில் கொண்டு பலன் காணும் பொழுது குறிப்பிட்ட ஜாதகருக்கு  நிச்சயம் தெளிவான ஜாதக பலனை தர இயலும்.

மேலும் ஜாதகர் யோக பலன்கள் நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளையும், அவயோக பலன்கள் நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமாக காலங்களில் பொறுமையையும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு சம்பந்த  பட்ட பாவக வழியில் இருந்து நன்மை தீமை பலன்களை அனுபவிக்கலாம், ஆக ஒரு ஜாதகருக்கு நடைபெறும் திசை மற்றும் புத்திகள் வழங்கும் பலன்களின் தன்மையை உணர்ந்து அவருக்கு சரியான ஜாதக பலனை சொல்லும் பொழுது, ஜாதகரின் வாழ்க்கையில் சுபிட்சம் ஓங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக