செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது ஜாதக ரீதியாக கவனிக்கப்பட வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!




 
 திருமண வாழ்க்கை ஒருவருக்கு சிறப்பன நன்மைகளையும், யோக வாழ்க்கையையும் வாரி வழங்க வேண்டுமெனில் சம்பந்த பட்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்திலேயே அந்த யோக அமைப்பு இருக்க வேண்டும் அல்லது ஜாதகர் தான் தேர்ந்து எடுத்த வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் நல்ல யோக அமைப்புகள் இருக்க வேண்டும், பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் அதிக முக்கியத்துவம் நட்சத்திர பொறுத்த அமைப்பிற்கே ஜோதிடர்கள் தருகின்றனர், மேலும் சில தோஷ அமைப்புகள் கொண்டும் நிர்ணயம் செய்கின்றனர் ( குறிப்பாக சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் ) போன்றவை ஜோதிடர்கள் முன்னிறுத்தி பேசுகின்றனர், இது சரியான திருமண வாழ்க்கையை அமைத்து தருகின்றதா ? என்றால் பதில் கேள்விக்குறியே, ஏனெனில் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமையே ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்கின்றது, பொதுவாக ஜோதிடதீபம் இதற்க்கு முன் பதிந்த பதிவுகளிலும் சரி, தற்பொழுது கூறும் கருத்திலும் சரி திருமண வாழ்க்கை ஒருவருக்கு சிறப்பாக அமைய நிச்சயம் அவர்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் நல்ல நிலையிலும் வலிமையுடனும் இருப்பது அவசியம்.


2,7ம் பாவகங்கள் வலிமையுடன் இருப்பது என்றால் எப்படி ? மேற்கண்ட பாவகங்களில் சுப கிரகம் இருப்பதா? பார்ப்பதா ? அல்லது அந்த பாவகங்களில் எந்த ஒரு கிரகமும் இல்லாமல் சுத்தமாக இருப்பதா ? பொதுவாக மேற்கண்ட கேள்விகளே பதிலாகவும் அமைந்து விடுகிறது, ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே காணப்படுகிறது, இதற்க்கு முன் திருமண பொருத்தம் கண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்தவர்களின், மணவாழ்க்கை கசந்து விவாகரத்து பெற்றதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? இதற்க்கு காரணமாக ஜோதிடதீபம்  கருதுவது அவர்களது சுய ஜாதகத்தில் பாவக வலிமை உணராமல், 10 பொருத்தம், சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் போன்ற விஷயங்களுக்கு முன்னுரிமை தந்து திருமணம் செய்ததே 100% விகிதம் காரணமாக இருக்க கூடும், மேலும் திருமண வாழ்க்கையில் சிறந்த நன்மைகளை ஒருவர் பெறுவதற்கு மிக முக்கியமான விஷயங்களாக கருதுவதை ஜோதிடதீபம்  கிழ்கண்ட வரிகளில் பதிவு செய்கிறது, அப்படி முக்கிய துவம் தாராமல் செய்த திருமண வாழ்க்கை சிதைந்து போன ஒருவரது உதாரண ஜாதகத்தையும், ஜோதிடதீபம் ஆய்வு செய்து விளக்கம் தர கடமைபட்டு இருக்கின்றது.

திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய வது,வரனின் ஜாதகத்தில் இருக்கவேண்டிய பொறுத்த நிலைகள் :

1) அடிப்படையில் லக்கினம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் அதாவது லக்கினம் பாதக ஸ்தானத்துடனோ 6,8,12ம் பாவகங்களுடனோ தொடர்பு பெறாமல் இருப்பது ஜாதகரின் தன்மையை சிறப்பாக எடுத்து காட்டும்.

2) குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் எந்த காரணத்தை கொண்டும் பாதிக்க படாமல் இருப்பது  நல்லது குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதும், 6,8,12ம் பாவகங்களுடனோ தொடர்பு பெறாமல் இருப்பது அவசியம், குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும், குடும்பம் நடத்த தேவையான வருமானம் சிறப்பாக ஜாதகருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

3) சுக ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பது கணவன் மனைவி நல்லுறவை சிறப்பிக்கும், வாழ்க்கைக்கு தேவையான பொருள் வரவுகளும் சிறந்த வீடும் அமையும்.

4) 5ம் பாவகம் வலிமை பெறுவது சிறந்த ஆண் வாரிசை பெற்றுத்தரும், தம்பதியருக்கு இறை அருளின் கருணை கிடைக்கும், இவர்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள், தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் நினைக்கும் எண்ணங்கள் நிறைவேறும்.

5) களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் எந்த காரணத்தை கொண்டும் பாதிக்க படாமல் இருப்பது  நல்லது குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவதும், 6,8,12ம் பாவகங்களுடனோ தொடர்பு பெறாமல் இருப்பது அவசியம், கணவன் மனைவி உறவின் பூர்ணத்துவத்தை உணரவைக்கும் பாவகமாக அமைவதால் 7ம் பாவகம் மிக வலிமையுடன் இருப்பது அவசியம், மேலும் சமுதாயத்தில் அந்தஸ்து மற்றும்  கௌரவத்தை தருவதால் 7ம் பாவகம் அதிக வலிமையுடன் இருப்பது சகல நலன்களையும்  தரும்.

6) ஆயுள் பாவகமான 8ம் பாவகம் வலிமை பெறுவது பரஸ்பரம் கணவன் மனைவி அமைப்பில்  இருந்தும், மனைவி கணவன் அமைப்பில் இருந்தும் பெரும் யோக வாழ்க்கையையும், சிறப்பான நன்மைகளையும் தருவதாலும், ஆயுள் விருத்தியை தருவதாலும் 8ம் பாவகம் மிகுந்த வலிமையுடன் இருப்பது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

7) ஜீவனத்தை குறிக்கும் 10ம் பாவகம் வலிமையுடன் இருப்பது தம்பதியரின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் பெரும் வெற்றியை குறிக்கும், சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்த்தை வாரி வழங்கும், கௌரவமான யோக வாழ்க்கையை பெற்று தரும்.

8) அயன சயன ஸ்தானமான 12ம் பாவகம் வலிமையுடன் இருப்பதே குடும்பத்தில் தம்பதியரிடம் உள்ள மன நிம்மதியை எடுத்துரைக்கும், பரிபூரண அன்பை பரஸ்பரம் இருவரும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை தருவதே இந்த 12ம் பாவகம்தான் அன்பர்களே, ஆக திருமண வாழ்க்கை வெற்றிகரமான இல்லற வாழ்க்கையாக அமைய மேற்கண்ட விஷயங்கள் தேவை படும்பொழுது, வெறும் 10 பொருத்தங்கள் சம தோஷங்கள் எனப்படும் சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் ஆகியவை திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து தந்துவிடாது, சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையே திருமண வெற்றியை நிர்ணயம் செய்யும் என்பதை "ஜோதிடதீபம்" அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறது .

உதாரண ஜாதகம் :


லக்கினம் : மிதுனம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 3ம் பாதம்

ஜாதகி மிதுன லக்கினம் லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 7ம் வீடு, ஜாதகிக்கு 2,3,4,7,9பாவகங்கள் பாதக ஸ்தானமான  7ம் பாவகத்துடன் சம்பந்தம், 6,12ம் பாவகங்கள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம், தற்பொழுது நடைமுறையில் உள்ள குரு திசை  6,12ம் பாவகங்கள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருகிறது, ஜாதகி அனுபவித்த இன்னல்கள் : 1) ஜாதகி விருப்ப மனம்  செய்தவர், 2) திருமணம் நடந்த 4 வருடங்களுக்கு பிறகு விபத்தில் கணவருக்கு கை கால்கள் செயல் இழப்பு  இதற்குள் 2 குழந்தைகள். 3) 7வது  வருடத்தில் கணவரை இழந்தார்  4) பிறகு வேறு ஒருவருடன் தொடர்பு  ஏற்ப்பட அதில் மான அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலை உறவுகளை உதறி தனிமையில் போராட்ட வாழ்க்கையை வாழும் சூழ்நிலையை தந்து  5) குடும்ப வாழ்க்கை சிறப்பில்லாமல் மன நிம்மதி இழப்பு 6) தற்கொலை முயற்ச்சியால் உடல்நலம் பாதிப்பு 7) தனது பூர்வீகத்தை விட்டு  பரதேச ஜீவனத்தை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்கி உள்ளது. இறை அருளின் கருணையினால் வாழ்க்கை ஜாதகிக்கு போராட்டத்துடன் செல்கிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக