திங்கள், 20 ஜூன், 2016

தொழில் மற்றும் லாப ஸ்தான வலிமையையும், அபரிவிதமான பொருளாதார முன்னேற்றமும் !


"ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்."

"ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்."

மிக பெரிய தொழில் வெற்றிகளையும், ஜீவன முன்னேறங்களையும் பெறுவதற்கு மேற்கண்ட திருக்குறள் படிப்பினையாக அமையும், சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப, தமக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பை தேர்வு செய்துவிட்டால், ஜீவன வழியில் தன்னிறைவான முன்னேற்றம் பெறுவது என்பது இயல்பாகவே நடைபெற ஆரம்பித்துவிடும், பொருளாதார வசதி வாய்ப்புகளும், வண்டிவாகன யோகமும், சொத்து சுக சேர்க்கையும் சம்பந்த பட்ட ஜாதகரை தேடிவரும், ஜாதகரால் இயலாத காரியம் ஒன்று இல்லை என்ற நிலையை தரும், இதற்க்கு சுய ஜாதகத்தில் பாவக வலிமை சிறப்பாக அமைவது அவசியமாகிறது, கிழ்காணும் உதாரண ஜாதகத்தில் ஜீவனம் மற்றும் லாப ஸ்தான வலிமையை பற்றி, இந்த பதிவில் சற்று சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!


லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்சத்திரம் : பூசம் 3ம் பாதம்

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,3,4,5,7,8,9,11,12ம் வீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது.

2,6,10ம் வீடுகள் ஜீவனம் மற்றும் தொழில் ஸ்தானம் எனும் 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது.

மேற்கண்ட ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும், மேலும் நடைபெறும் எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கையில் யோகங்களுக்கு குறைவிருக்காது, ஜாதகரின் முன்னேற்றத்திற்கு தடையிருக்காது.

பொதுவாக ஜீவன ஸ்தான வலிமை  என்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் தனிப்பட்ட தொழில் முன்னேற்றத்தையும், தன்னிறைவான பொருளாதார நன்மைகளையும் வாரி வழங்கும், ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் தொழில் ஞானத்தையும், லாபஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் அதிர்ஷ்டத்தையும், தான் அனுபவிக்க இருக்கும் யோக பலன்களின் தன்மையையும் அறிவுறுத்தும், மேற்கண்ட ஜாதகருக்கு கற்ற கல்வி வழியில் இருந்து வாக்கு வன்மையும், மிகசிறந்த பேச்சு திறனையும், 2ம் பாவக வழியில் இருந்து கிடைக்க பெறுவார், மேலும் வாக்கு வழியில் இருந்து பொதுமக்கள் ஆதரவையும், மக்கள் செல்வாக்கையும், பேச்சை ஆதராமாக கொண்ட வருமான வாய்ப்பையும் பெறுவார், 6ம் பாவக வழியில் இருந்து திடீர் தொழில் வெற்றிகளையும் தொடர் வருமான வாய்ப்புகளையும் தரும், தன்னிறைவான வருமானம் எதிர்பாரமால் கிடைக்க பெறுவார், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தும் சாதகமாக மாறும், தான் செய்யும் தொழிலில் நுண்ணறிவு திறனையும், சிறந்து விளங்கும் தன்மையையும் தரும், 10ம் பாவக வழியில் இருந்து செய்யும் தொழிலில் வெற்றியையும், தன்னிறைவான தொழில் முன்னேற்றத்தையும் தரும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும், கௌரவம் குறைவில்லா வாழ்க்கையயும், அரசு  ஆதரவும் உண்டாகும், அடிப்படையிலேயே வியாபர நுணுக்கமும், அறிவு திறனும் பெற்று இருப்பார், வாழ்க்கையில் ஜீவன வழியில் எவ்வித தடைகளும் வர வாய்ப்பில்லை, வந்த போதிலும் அதை சிறப்பாக கையாண்டு வெற்றி பெரும் வல்லமையை தரும்.

ஜீவன ஸ்தான அதிபதியாக சுக்கிரன் அமைவது ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல சுக போகங்களை வாரி வழங்கும், ஆடை ஆபரணம், வண்டி வாகனம், பொதுமக்கள் மக்கள் விரும்பு உயர் மதிப்பு கொண்ட ஆடம்பர பொருட்கள், கலை துறை போன்ற தொழில்களில் நல்ல வெற்றி வாய்ப்பும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வியாபரத்தில் அபரிவிதமான ஜீவன முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், சொல்வ செழிப்பு தேடிவந்து குவியும், இந்த ஜாதகம் குறைந்த முதலீட்டில் அபரிவிதமான லாபங்களை குறுகிய காலத்தில் குவிக்கும் ஜாதக அமைப்பாகும், மேலும் சொந்த முயற்ச்சியில் சகல முன்னேற்றங்களையும் பெரும் யோக அமைப்பை தரும், பல தொழில் செய்யும் அறிவு திறனையும், பல வழிகளில் இருந்து வருமானங்களையும் வாரி வழங்கும், தனது முடிவில் இருந்து மாறாத மன நிலையையும், உறுதியான செயல்பாடுகள் மூலம் வெற்றியை பெரும் யோகத்தை தரும், ஜாதகரின் சிந்தனை மற்றும் அறிவு திறனே சகல நிலைகளில் இருந்தும் ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும், தனக்கென்று ஒரு வழிமுறையை கையாண்டு வெற்றி பெரும் யோகத்தை தரும், திட்டமிடுதல்களும் செயல்பாடுகளும் ஜாதகருக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும்.

1,3,4,5,7,8,9,11,12ம் வீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், லாபத்தையும் குறிக்கும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் இலக்கின வழியில் இருந்து சிறப்பாக வளரும் சூழ்நிலை, நல்ல உடல் மனம் நலம், முற்போக்கு சிந்தனை, அனைத்திலும் அதிர்ஷ்டத்தை பெரும் யோகத்தை தரும், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றியை பெரும் யோகம் உண்டாகும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சியில் வெற்றி, வியாபரத்தின் மூலம் சகல யோகங்களையும் பெரும் தன்மை, பயணங்களில் லாபம், சமயோசித புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை மற்றும் வீரியமிக்க செயல்பாடுகள், மனதில் நினைத்ததை சாதிக்கும் வல்லமை, அதிகார யோகம், கட்டளையிடும் இடத்தில் நிற்கும்  யோகம், சகல சௌபாக்கியம் என்ற வகையில் யோகங்களை வாரி வழங்கும்.

4ம் பாவக வழியில் சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், சகல வசதிமிக்க வீடு, மற்றும் நிறுவனம், செய்யும் தொழில் வழங்கும் லாபங்களை சொத்துகளாக மாற்றும் யோகம், சுக போகங்களை அனுபவிக்கும் தன்மை, செல்லும் இடங்களில் நல்ல வரவேற்ப்பு, நல்ல குணநலம், பெருந்தன்மையான மனம், சகலருக்கும் உதவும் தன்மை,  தன்னை சார்ந்தவர்களை ஆதரிக்கும் குணம், உதவி செய்வதன் மூலம் நற்ப்பெயர், பெற்றோர் வழி ஆதரவு, மிதமிஞ்சிய சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கையில் வரும் செல்வ சேர்க்கையை கண்டு கர்வம் கொள்ளாத மன நிலை, எப்போதும் எளிமையை கடைபிடிக்கும் மன நிலையை தரும். 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியில் இருந்து பலன்பெறுதல், சமயோசித புத்திசாலித்தனம், எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவு திறன் கொண்டு வெல்லும் யோகம், மனம் தளர்வடையா தன்மை, அனைவரின் ஆதரவையும் பெரும் யோகம், எந்த சூழ்நிலையிலும் உதவி செய்யும் உறவுகள் மற்றும் நண்பர்கள், மாற்று இனம் மாற்றும் மதத்தினரும் ஆதரவு தரும் நன்னடத்தை, தர்மத்தையும் உண்மையையும் போற்றும் குணம், பொதுவாழ்க்கையில் நேர்மை, போதும் என்ற மன நிலை, குல தேவதையின் பரிபூரண நல்லாசிகள் எந்த சூழ்நிலையிலும் ஜாதகரை காக்கும் வல்லமை, புதுமை விரும்பி, ஆராய்ச்சி மன நிலை, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகிற்க்கு சகல நன்மைகளையும் தரும் யோகம் என ஜாதகர்
 பூர்வபுண்ணிய ஸ்தான வழியில் இருந்து சகல யோகங்களையும் தரும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகர் முறியடித்து நன்மையை பெறுவார்.

7ம் பாவக வழியில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், கலைதுறையில் செல்வாக்கு, அதிக லாபம், கூட்டு முயற்ச்சியின் மூலம் லாபம், பொதுமக்கள் ஆதரவு மற்றும் செல்வாக்கு, தன்னிறைவான வியாபர விருத்தி, உலக புகழ், பல தொழில்களை நிர்வகிக்கும் வல்லமை, நல்ல வலிமை மிக்க கூட்டாளி, செல்லும் இடங்களில் நல்ல பெயரும் புகழும் உண்டாகும் யோகம், குறுகிய காலத்தில் சகல செல்வாக்கையும் பெரும் யோகம், வியாபாரத்தின் மூலம் சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் என களத்திர வழியில் இருந்து சிறப்பான நன்மைகள் உண்டாகும், 8ம் பாவக  வழியில் இருந்து புதையல் யோகம், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வருமானம் மற்றும் சொத்துகள், கூட்டாளியின் மூலம் லாபம் பெரும் யோகம், நீண்ட ஆயுள், மிகப்பெரிய லட்சியங்கள் மற்றும் திட்டமிடுதல்களை சுவீகரிக்கும் வல்லமை, திடீர் பொருள் வரவு என ஆயுள் பாவக நன்மைகளை தங்கு தடையின்றி பெரும் யோகத்தை தரும்.

9ம் பாவக வழியில் இருந்து நல்லறிவு, ஆன்மீக ஞானம், பெரியோர் ஆசிர்வாதம், புண்ணியம் மிக்க செயல்பாடுகள், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதம், பல்துறை அறிவு திறன், நல்ல கல்வி அறிவு, ஆராய்ச்சி மூலம் புதுமையான கண்டுபிடிப்புகள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும் யோகம், அனைவரிடமும் நற்ப்பெயர் பெரும் யோகம், சமூகத்தில் நன்மதிப்பு, பெயரும் புகழும் தேடிவரும் தன்மை, பெருதன்மை மிக்க நற்குண நலன்கள் மூலம் அனைவரின் ஆதரவையும் பெறுதல், புகழ் மிக்க பொறுப்புகளை நிர்வகிக்கும் வல்லமை, அனைவரையும் ஆதரிக்கும் யோகம், பித்ருக்கள் ஆசிர்வாதம் என ஜாதகர் பாக்கிய ஸ்தான பலன்களை பரிபூரணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்டசாலி, முற்போக்கு சிந்தனை, நினைத்ததை பெரும் யோகம், நல்ல குணம், எதிர்ப்புகளை வெற்றியாக்கும் தனித்தன்மை, செல்வ நிலையில் திருப்தி, தேடி வரும் வெற்றி வாய்ப்புகள், அபரிவிதமான செல்வசெழிப்பு, அனைத்திலும் லாபம், லாபநோக்க சிந்தனை, வெற்றிக்கான சரியான திட்டமிடுதல்கள், வருமுன் உணரும் மனநிலை என லாப ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை தரும்.

12ம் பாவக வழியில் இருந்து முதலீடுகளில் நல்ல லாபம், நல்ல உறக்கம், ஆன்மீக வெற்றி, நிறைய சொத்துகள், திருப்தியான மன நிலை தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றி, நல்ல மன நிம்மதி, எதிர்காலத்திர்க்கான சேமிப்பு, அசையும் அசையா சொத்துகள், பொது வாழ்க்கையில் நேர்மை, தொழில் முதலீடுகள் நல்ல லாபம் தரும் யோகம் என அயன சயன சுக போகங்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையை விட, லாப ஸ்தான வலிமை மேலோங்கி நிற்பது, சிறப்பான தொழில் வெற்றிகளையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், எனவே சுய தொழில் மூலம் குறுகிய கால வெற்றிகளை வாரி வழங்கும், மேலும் எதிர்வரும் சுக்கிரன் திசையில் நல்ல தொழில் வளர்ச்சியையும், அதற்க்கு பிறகு வரும் சூரியன், சந்திரன், செவ்வாய் திசைகளில் அபரிவிதமான லாபங்களையும் தரும் என்பதால் ஜாதகர் பின்யோக ஜாதகர் என்பது உறுதியாகிறது, 45 வருடங்களுக்கு மேல் ராஜ யோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக