செவ்வாய், 7 ஜூன், 2016

திருமண வாழ்க்கையில் தடைகளும் தாமதமும் ஏற்ப்பட காரணம் என்ன ?

 

சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை பெரும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு, தமது பாவக நிலைகளில் இருந்து தமது வலிமைக்கேற்ப நன்மைகளை வாரி வழங்கும், மாறாக சில பாவகங்கள் பாதிக்கப்படும் பொழுதோ, லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களும் வலிமை இழக்கும் பொழுதோ ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கும் நிலைக்கு ஆளாக்கபடுகிறார், ஜாதகர் பாதிக்க பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களில் இருந்து விடுபட பரிகாரங்களையும், வழிமுறைகளையும் நாடவேண்டி உள்ளது, 40 வருடங்கள் கடந்தும் திருமண வாழ்க்கை அமையாமல், பல போராட்டங்களை சந்தித்து கொண்டு இருக்கும் ஓர் ஜாதகத்தை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே! சம்பந்தப்பட்ட ஜாதகத்தின் பாவக வலிமை, ஜெனனம் முதல் நவகிரக திசா புத்திகள் ஜாதகருக்கு ஏற்று நடத்திய பலாபலன்கள் பற்றியும் சிந்திப்போம்.


லக்கினம் : ரிஷபம் 
ராசி : மேஷம் 
நட்சத்திரம் : அஷ்வினி 4ம் பாதம் 

இது ஒரு பெண்ணின் ஜாதகம், ஜாதகிக்கு தற்பொழுது அகவை 41, இதுவரை  திருமணம் செய்வதற்காக எடுத்த முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியையே சந்தித்தது, இதற்க்கு முன் ஜாதகிக்கு தேடிவந்த நல்ல வரன் வாய்ப்புகளை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் குறைகூறி தவிர்த்தனர், இவ்வளவு நெடுங்காலம் திருமண தாமதத்திற்கு காரணம் என்ன? என்பதை ஜாதக  ரீதியாக ஆய்வு செய்வோம், இந்த ஜாதகத்தில் பாவக வலிமை பற்றி சிந்திப்போம் .

வலிமை மிக்க பாவக தொடர்புகள் :

1ம் வீடு ஜாதகிக்கு தனது பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது மிக சிறப்பான அமைப்பு லக்கினம் மிகவும் வலிமை பெறுகின்றது.

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு ஒரு நல்ல ஸ்திரமான வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது.

வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

2,4,7,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 2ம் பாவக வழியில் இருந்து குடும்ப அமைப்பில் இருந்தும், வருமானம்  மற்றும் வாக்கு அமைப்பில் இருந்தும் இன்னல்களை வழங்கும், 4ம் பாவக வழியில் இருந்து வீடு சொத்து சுகம் மற்றும் தனது தந்தை வழியில் இருந்து யோகம் அற்ற தன்மையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து எதிர்பால் அமைப்பினர், களத்திர வாழ்க்கையில் இன்னல்கள், கூட்டாளிகள் மூலம் துன்பங்கள், வெளிவட்டார பழக்க  வழக்கங்களில் திருப்தியற்ற சூழ்நிலையை உருவாக்கும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் இழப்பு, வீண் மருத்துவ செலவுகள், பொருளாதார நெருக்கடிகள், மற்றவர்களால் இன்னல்களுக்கு ஆளாகும் தன்மை என மிகுந்த சிரமங்களை தந்த போதிலும், பூர்ண ஆயுளை தரும்.

3,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும், வீரியமற்ற தன்மையையும், சகோதர வழியில் இருந்து ஆதரவற்ற தன்மையையும், லட்சியமற்ற பொறுப்பற்ற வாழ்க்கையையும் தரும், 6ம் பாவக வழியில் இருந்து கடுமையான உடல் நல குறைவையும், வீண் செலவினங்களையும் தரும், 9ம் பாவக வழியில் இருந்து சுய அறிவுத்திறன் அற்ற நிலையையும், அறிவார்ந்த செயல்திறன் இல்லாத நிலையையும், முன்னோர்கள் ஆசியும், கடவுள் அனுகிரகம் அற்ற நிலையையும்  தரும், 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை, மனநிம்மதி அற்ற சூழ்நிலைகள், இல்லறவாழ்க்கை சுகமற்ற தன்மை, நல்ல உறக்கம் இன்மை, அதிக மனபோராட்டங்கள், வீண் மன பயம், பிற்போக்குத்தனமான செய்கைகள் மூலம் தமது சுய வாழ்க்கையை தாமே பாதிக்க செய்துகொள்ளும் தன்மை என மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கும்.

5,11ம் வீடுகள் சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ ஆசி அற்ற தன்மையும், சமயோசித புத்திசாலித்தனம் இல்லாத நிலையையும், மற்றவர்களின் உதவியை பெற இயலாத தன்மையையும் தரும், எடுக்கும் செயல்கள் யாவும் ஜாதகிக்கு முழு பலன்களை தாராமல் தடைகளையும், இன்னல்களையும் வாரி வழங்கும், யாருடைய உதவியும் இல்லாமல் ஜாதகி மட்டும் தனிமையில் போராடும் சூழ்நிலையை உருவாக்கும், பூர்வீகத்தில் குடியிருப்பது என்பது ஜாதகிக்கு அனைத்து வித தடைகளையும் வாரி வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமற்ற தன்மையையும், ஒவ்வொரு விஷயத்திற்கும் அதிக போராட்டங்களை சந்திக்கும் தன்மையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்து போகும், மூடநம்பிக்கையும் பிற்போக்கு தனமான எண்ணங்களும் ஜாதகியை வெகுவாக பாதித்து, செயல்பட முடியாமல் முடக்கி வைக்கும், நன்மைகள் இருந்த போதிலும் அதை நாடாமல், தீமையை நோக்கியே ஜாதகியை பயணிக்க வைக்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்கினம் மற்றும் ஜீவன ஸ்தானத்தை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 6,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகி 100% விகித இன்னல்களையும், 8ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகி 50% விகித இன்னல்களையும், சந்திக்கவேண்டியுள்ளது, மேலும் 6,8,12ம் பாவக பலனை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் அனைத்தும், தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை ஜாதகிக்கு தங்கு தடையின்றி தருகின்றது.

திருமண தாமதத்திற்கு காரணம் என்ன ?

சுய ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும், வலிமை பெறுவது ஒரு ஜாதகருக்கு தடையில்லாத, திருமண வாழ்க்கையை அமைத்து தரும், மேற்கண்ட ஜாதகிக்கு, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பாதிக்க பெற்று இருப்பதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் ராசி கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதும், ஜாதகியின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது, மேலும் திருமண பருவ வயதில் சுக்கிரன் திசை ஜாதகிக்கு விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்தியதும், அதன் பிறகு வந்த சூரியன் திசை ஜாதகிக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்தியதும், ஜாதகியின் திருமண வாழ்க்கை எனும் எண்ணத்திற்கு தடைகளை வாரி வழங்கியது, அதற்க்கு பிறகு நடைபெற்ற சந்திரன் திசை ஜாதகிக்கு இலக்கின பாவக தொடர்பை பெற்று ஜாதகிக்கு நல்ல வேலையை மட்டுமே வழங்கியது, திருமண வாழ்க்கைக்கு தடையாக ஜாதகியின் பெற்றோர்கள் காரணமாக அமைந்தனர், குறிப்பாக ஜாதகியின் தாந்தையார் ( தந்தையை  குறிக்கும் 4ம் வீடு ஜாதகிக்கு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் ) தலையீட்டின் காரணமாக ஜாதகிக்கு சந்திரன் திசையில் அமையவிருந்த நல்ல திருமண வாழ்க்கை நடைபெறாமல் பாதியில் நின்றுபோனது.

தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசையும் ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வருத்தத்திற்கு உரியதாகவே கருத வேண்டியுள்ளது, மேலும் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் திசையில் மற்ற புத்திகளும் ஜாதகிக்கு சாதகமாக இல்லை என்பதால், திருமண வாழ்க்கையில் தொடர்ந்து தடைகளை வழங்கும் என்பதுமட்டும் தெளிவாகிறது, எனவே ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் தனது கருத்துகளை சுய பரிசீலனைகள் செய்துகொள்வது, ஜாதகிக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு உள்ள சிரமங்கள் மாற, ஜாதகிக்கு அமையவிருக்கும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,12ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கும் வரன் அமைந்தால் மட்டுமே ஜாதகியின் இல்லற வாழ்க்கை இனிக்கும், இதற்க்கு  வாய்ப்பு மிகவும் குறைவு, ஜாதகியின் சுய ஜாதக வலிமை இதற்க்கு வழிகாட்ட வாய்ப்பில்லை, இறையருள் கருணை செய்யட்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக