சனி, 30 ஜூலை, 2016

ஞானகாரகன் கேது திசை நடைபெற்றால், ஜாதகருக்கு இன்னல்கள் மற்றும் துன்பங்களே பலாபலன்களாக நடைபெறுமா?


ஞானகாரகன் கேது திசை நடைபெற்றால், ஜாதகருக்கு இன்னல்கள் மற்றும் துன்பங்களே பலாபலன்களாக நடைபெறுமா?

சாயாகிரகமான கேது திசை ஒருவரது சுய ஜாதகத்தில் நடைமுறைக்கு வரும் பொழுது, சம்பந்தப்பட்ட ஜாதகர் இன்னல்கள் மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தரும் என்பதும், கேது திசை நடைபெறும் காலம் முழுவதும் ஜாதகர் அதிக அளவில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதும், இல்லறவாழ்க்கையில் அதிக துன்பங்களை தந்து ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடும் சூழ்நிலையை தரும் என்பதும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, கேது திசை ஒருவருக்கு தீமையான பலன்களை மட்டுமே தரும் என்று எந்த ஒரு ஜோதிட மூல நூல்களும் அறுதியிட்டு சொன்னதாக நினைவு இல்லை, மேலும் கேது பகவானின் திசை சுய ஜாதகத்தில் நடைமுறைக்கு வரும் பொழுது, சுய ஜாதகத்தில் பாவக வலிமையை தவிர்த்தது, தனிப்பட்ட பலாபலன்களை வாரி வழங்க வாய்ப்பில்லை.

 இது நவகிரக திசாபுத்திகள் அனைத்திற்கும் பொருந்தும், எந்த ஒரு கிரகத்தின் திசாபுத்தியும் சுய ஜாதகத்தில் உள்ள பாவக பலனை ஏற்று நடத்தும் வல்லமையே பெற்று இருக்கினறன என்பதை கருத்திக்கொள்வது நல்லது, மேலும் பாவ கிரகங்களான, சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியவைகளின் திசாபுத்தி காலங்கள் ஒருவருக்கு அவயோகங்களையும் இன்னல்களையும்  தரும், சுப கிரகங்களான குரு,சுக்கிரன்,சந்திரன்,புதன் ஆகியவைகளின் திசாபுத்தி காலங்கள் ஒருவருக்கு நன்மைகளையும் யோகங்களையும் வழங்கும் என்பதும் பொதுவான கருத்துக்களே, இதற்கும் சுய ஜாதக பாவக வலிமை மற்றும் நவகிரகங்கள் வழங்கும் பலாபலன்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை, கேது திசை ஒருவருக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : மீனம் 
ராசி : கடகம் 
நட்ஷத்திரம் : பூசம் 1ம் பாதம் 

மேற்கண்ட மீன லக்கின ஜாதகருக்கு எதிர்வர இருக்கும் கேது திசை தரும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! ஜாதகருக்கு கேது திசையானது வலிமை பெற்ற 5,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவக சம்பந்தம் பெற்று, அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு யோகம்  மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகருக்கு கேது திசை காலம் முழுவதும் 5ம் பாவக வழியில் இருந்து அறிவு சார்ந்த முயற்ச்சிகளில் வெற்றி, அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தால் ஆதாயம், மகிழ்ச்சி நிறைந்த யோக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையில் சந்தோசம், குழந்தைகள் வழியில் இருந்து யோகம், வண்டி வாகன யோகம், கற்ற கல்வி வழியில் இருந்து சகல யோகங்களையும் பரிபூர்ணமாக அனுபவிக்கும் யோகத்தை தரும், ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றிமேல் வெற்றி தரும், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்ப்பும், நல்ல வாரிசு யோகமும் உண்டாகும், தன்னம்பிக்கையும் அறிவு திறனும் ஜாதகரின் வாழ்க்கையில் வெற்றிகளை வாரி வழங்கும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் ஆசைகள் யாவும் நிறைவேறும், திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பிரபல்ய யோகம் கிட்டும், வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம் மூலம் சொத்து சேர்க்கை உண்டாகும், வாழ்க்கை துணையின் ஆதரவு ஜாதகருக்கு பரிபூர்ணமாக நன்மைகளை வாரி வழங்கும், குறுகிய காலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு சாதகமாக மாறும், நீண்ட ஆயுள் மற்றும் சிறந்த உடல் நலம் என ஜாதகருக்கு திருப்தியான யோக பலன்கள் நடைமுறைக்கு வரும், வெளிநாடுகளில் இருந்து ஜாதகருக்கு சிறப்பான வருமான வாய்ப்புகளும், தொழில் முன்னேற்றமும் உண்டாகும், வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் ஜாதகர் மிக சிறந்த வெற்றியாளனாக பிரகாசிக்கும் யோகத்தை தரும், ஜாதகரின் அறிவு திறன் பெரும் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமையும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகரின் தொழில் வெற்றிகள் நிர்ணயம் செய்யப்படும் கேது திசை முழுவதும் ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல தொழில் முன்னேற்றங்கள் ஏற்ப்படும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், புதிய தொழில்கள் புதிய சிந்தனைகள் ஜாதகரின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும், 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைவது, ஜாதகரின் கௌரவம் மற்றும் அந்தஸ்தை பிரகாசிக்க செய்யும், முயற்ச்சிக்கும் எந்த செயலும் ஜாதகருக்கு வெறியையும், கைமேல் நல்ல பலன்களையும் வாரி வழங்கும், ஜாதகரின் வாழ்க்கை தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிறந்த திருப்புமுனையை அமைத்து தரும், கேது திசை காலத்தில் ஜாதகர் பூர்வபுண்ணிய ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண யோகங்களை 100 சதவிகிதம் தங்குதடையின்றி பெறுவார் என்பது உறுதியாகிறது.

எனவே சுய ஜாதகத்தில் கேது திசை நடைமுறைக்கு வரும் பொழுது, அது ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு, சம்பந்த பட்ட ஜாதகருக்கு பலன்கான முற்படுவதே சாலசிறந்தது, குத்து மதிப்பாக பாவ கிரகத்தின் திசை அனைத்தும் தீமையை செய்யும் என்று கருதுவதும், பலன் காண்பதும் முற்றிலும் ஜாதக கணிதம் அறியாத கற்பனை மட்டுமே, அதில் ஏதும் உண்மை இருக்க வாய்ப்பில்லை, ஜாதகத்தில் ஒருவருக்கு நடக்கும் திசை புத்தி அவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவக வலிமையின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யபடுகிறது, சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பவகங்களின் பலன்களை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் ஜாதகருக்கு யோகத்தையும், வலிமை அற்ற பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்தும் திசாபுத்திகள் ஜாதகருக்கு அவயோகத்தையும் தாம் சம்பந்தம் பெற்ற பாவக வழியில் இருந்து தருகிறது என்பதே முற்றிலும் உண்மை அன்பர்களே, எனவே நடைபெறும் திசாபுத்தி எதுவென்றாலும் அவை ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டு பலன்கானுவதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான பலாபலன்களை சொல்வதற்கு ஏதுவானதாக அமையும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து: