வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

ஜாதக ஆலோசனை : ராகு திசை தரும் பலன்களும், சுய ஜாதக வலிமையும் !

ஜாதக பொது பலன்கள்


லக்கினம் : துலாம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்


ஜாதகத்தில் வலிமையான பாவகங்கள்

1,2,3,4,5ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின பாவக வழியில் இருந்து நண்பர்கள் ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, வெளிநாடுகளில் யோக வாழ்க்கை தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகள், நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் சிறப்பான வாழ்க்கை சூழ்நிலை, அரசியலில் வெற்றி, தர்ம சிந்தனை, சிறந்த மனப்பக்குவம், பொருத்தன்மையான நடவடிக்கைகள், அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம், செய்யும் காரியங்களில் அதிக கவனம், விரோதிகள் அற்ற வாழ்க்கை, கூட்டு முயற்சிகளில் அபரிவிதமான லாபங்கள், திருமணம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் செல்வாக்கு மற்றும் ஆதரவு, அரசியலில் வெற்றி, வெளிநாடுகளில் இருந்து வரும் ஜீவன முன்னேற்றம், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் வரும் லாபம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

2ம் பாவக வழியில் இருந்து கூட்டாளிகள் மற்றும் கூட்டு தொழில் மூலம் அபரிவிதமான லாபம், வெளிநாடு வேலை வாய்ப்பு, வெளிநாடுகளில் நல்ல வருமான வாய்ப்பு, பேச்சின் மூலம் வெற்றி, ஒப்பந்த தொழில்களில் அபரிவிதமான லாபங்கள், பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவின் மூலம் திடீர் முன்னேற்றம் பெரும் யோகம், எதிர்பால் அமைப்பினர் மூலம் வருமான வாய்ப்புகள், அனைவரின் ஆதரவும் கிடைக்கும் தன்மை, எதிரிகளுக்கு தோல்வியை பரிசளிக்கும் வல்லமை, சட்டத்தின் ஆதரவு கிடைத்தல், வழக்குகளில் வெற்றி, செய்யும் தொழில் அல்லது பணியில் முதல் நிலையை பெரும் யோகம், திடீர் பதவி உயர்வு, சிறப்பு மிகுந்த குடும்ப வாழ்க்கை, இனிமை நிறைந்த வார்த்தைகள் மற்றும் பேச்சு திறமை, வேகமிக்க துல்லியமான செயல் மூலம் நிச்சய வெற்றியை பெரும் யோகம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

3ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் எடுக்கும் செயல்கள் வெற்றி பெரும் யோகம், சகோதர வழியில் ஆதரவு, தீர்க்கமான வாத திறமை, திருமணம் மூலம் நிறைவான அதிர்ஷ்டங்களை பெரும் யோகம், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் நல்லுறவு, பொது வாழ்க்கையில் வெற்றி, விவேகத்துடன் கூடிய வீரம், இளமையில் திருமண யோகம், வீரியமிக்க செயல்திறன், பயணம் மூலம் லாபம், விவசாயம் மூலம் நல்ல அதிர்ஷ்டம், உல்லாச விரும்பி, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, வியாபரம் செய்வதின் மூலம் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் பெரும் அமைப்பு, குறுகிய காலத்தில் தனவந்தன் ஆகும் யோகம், எதிர்பால் அமைப்பினரிடம் மிக எளிதாக பழகும் வாய்ப்பு, வருமுன் உணரும் சக்தி, செய்வதை திருந்த செய்யும் யோகம், திட்டமிடும் விஷயங்களை வெற்றிகரமாக முடிக்கும் வல்லமை பெற்றவர்.

4 ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் வாழ்க்கை துணையுடன் இனிமையான வாழ்க்கையை பெரும் யோகம் உண்டாகும், சாதுர்யமாக சொத்து சுகங்களை சேர்க்கும் வல்லமை, சாமதானம் மூலம் மிகப்பெரிய சொத்து சுக சேர்க்கை உண்டாகும், வீடு,வண்டி வாகன யோகம், வீடு கட்டி வாடகைக்கு அல்லது விற்ப்பனை செய்யும் யோகம், சொந்த பந்தங்கள் மூலம் அதிர்ஷ்டம் பெரும் யோகம், வெளிநாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்யும் தன்மை, பெரிய மனிதர்கள் மூலம் நல்ல லாபம், பெற்றோர் வழி ஆதரவை பெரிய அளவில் பெரும் யோகம், தாய் வழியில் இருந்து நல்லாசிகளும், முன்னேற்றத்தையும் பெரும் அமைப்பு, பொது வாழ்க்கையில் முன்னேற்றம், புதிய சொத்துகளை சுயமாக வாங்கும் யோகம், நல்ல குணம், அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்ளும் அமைப்பு, சுக போகங்களுக்கு குறைவில்லா யோக வாழ்க்கை என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தீர்க்கமான அறிவு திறன்,  சமயோசித புத்திசாலித்தனம், வருமுன் உணரும் அதீத சக்தி, கற்ற கல்வி வழியில் இருந்து யோகம் பெரும் அமைப்பு, தன்னம்பிக்கை குறையாத செயல்பாடுகள், மெய் பொருள் காணும் அறிவு திறன், எவரிடமும் ஏமாறாத குணம், கூட்டாளியின் ஆதரவு பொதுமக்கள் ஆதரவு, தமக்கு வரும் இன்னல்களை மிக எளிதாக கையாளும் வல்லமை, பொது காரியங்களில் ஆர்வம் மற்றும் அதன் வழியில் இருந்து ஜாதகர்  பெரும் யோக வாழ்க்கை, எதிர்ப்புகள் மூலமும் நன்மையை பெரும் யோகம், குல தேவதையின் பரிபூர்ண நல்லாசிகள், நல்ல குழந்தை பாக்கியம், செல்லும் இடங்களில் எல்லாம் பெரும் சிறப்பான வரவேற்ப்பு, தனது அறிவு திறன் கொண்டு வாழ்க்கையில் அனைத்தையும் சாதிக்கும் யோகத்தை தரும்.

9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் சகல முன்னேற்றங்களையும் தடையின்றி தரும், மிகசிறந்த அறிவு திறன், ஆன்மீக வெற்றி, ஆன்மீக பெரியோர்கள் ஆசியை பெரும் யோகம், புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம், வேறு இடங்களுக்கு சென்ற ஜீவன வழியில் புகழ் பெரும் யோகம், தன்னிறைவான வசதி வாய்ப்புகளை பெரும் யோகம், எந்த ஒரு சூழ்நிலையிலும் ஜாதகருக்கு உதவ வரும் நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்கள், எடுக்கும் முயற்ச்சிகளில் இறை அருளால் பெரும் வெற்றி வாய்ப்புகள், பந்தையம் மற்றும் போட்டிகளில் நிச்சய வெற்றி, பரோபகரமான செயல்பாடுகள், மற்றவர்களுக்கு உதவும் மனபக்குவம், சிந்தனை மூலம் வாழ்க்கையில் வெற்றிகளை படிபடியாக பெரும் யோகம் என்ற வகையில் நன்மைகளை வாரி வழங்கும்.

10 ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் சுய ஜீவன வெற்றிகளை அதிகரிக்கும், தீர்க்கமான வாத திறமை மூலம் வெற்றிகளை பெரும் யோகத்தை தரும், மேலும் உத்தியோகம், வியாபரம், மற்றும் தொழில்களில் வெற்றி மேல் வெற்றி பெரும் யோகத்தை தரும், ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று கடக ராசியில் அமைவது, உணவு பொருட்கள் சார்ந்த தொழில்களில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், மனிதர்களுக்கு தேவையான உணவு பெருட்கள் சார்ந்த எந்த ஒரு தொழிலையும் தேர்வு செய்து நடத்தினால், ஜாதகருக்கு அபரிவிதமான வருவாயினை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கும், செய்யும் தொழிலில் நல்ல அதிர்ஷ்டத்தையும் லாபத்தையும் ஜாதகர் சிறப்பாக பெறுவார், கௌரவம் குறையாத யோக வாழ்க்கை உண்டாகும், பொறுப்பு மிக்க பதவிகளை அலங்கரிக்கும் யோகம் ஜாதகருக்கு நிச்சயம் உண்டு.

11ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து வீடு வண்டி வாகன யோகம் உண்டாகும், அனைத்தும் ஜாதகருக்கு புதியதாக அமையும், உலகில் உள்ள அனைத்து நாகரிக வஸ்துக்களையும் வாங்கும் யோகம் உண்டாகும், புதிய கருவிகள் ஜாதகரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை வாரி வழங்கும், உலகத்திற்கு ஏற்ற வகையில் தனது முன்னேற்றத்தை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக்கொண்டே இருப்பர் என்பது கவனிக்க தக்கது, நிம்மதியான யோக வாழ்க்கை உண்டாகும், ஜாதகர் மனதில் நினைக்கும் நன்மைகள் யாவும் நிச்சயம் நடைமுறைக்கு வரும், எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கையும், அனைவராலும் நன்மைகளை பெரும் யோகத்தையும் தரும், தாய் செய்த புண்ணியத்தின் பலனை ஜாதகர் சிறப்பாக பெறுவார்.

ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு உடல் சார்ந்த சிறு சிறு தொந்தரவுகளை தரும், மருத்துவம் மூலம் குணமடையும், தேர்வு,போட்டி,பந்தயம் மற்றும் வழக்குகளில் வெற்றி கிட்டும், பிறருக்கு ஜாதகர் சில நேரங்களில் தொல்லை கொடுக்கும் நிலை உருவாகலாம், எதிரிகளுக்கு இன்னல்களை தரும் ஜாதகர், கடன் கொடுப்பது பெறுவது இரண்டு விஷயங்களும் ஜாதகருக்கு மிகுந்த துன்பத்தை தர கூடும், ஜாமீன் கொடுப்பது ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை வரவழைக்கும்.

7 ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பித்தம் சார்ந்த தொந்தரவுகளை வாரி வழங்கும், தனது புத்திசாலித்தனம் சில நேரங்களில் ஜாதகருக்கு பயன் தாராது, வாழ்க்கை துணை மற்றும் நண்பர்கள் ஜாதகருக்கு செய்யும் நன்மையான விஷயங்களை ஜாதகர் தவறாக புரிந்துகொண்டு எடுக்கும் முடிவுகள் யாவும் ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் இன்னல்களை தர கூடும், அதிக அளவில் ஜாதகர் பொறுமையை கடைபிடிப்பது சகல நன்மைகளையும் தரும், ஜாதகர் செய்யும் விஷயங்கள் இலை மறை காய்மறையாக இருப்பதே சகல நன்மைகளையும் தரும், நண்பர்களையும் வாழ்க்கை துணையையும் தேர்வு செய்யும் பொழுது ஜாதகர் மிகுந்த கவனத்துடன் இருப்பது நெடுநாள் நன்மைகளை வாரி வழங்கும், யாரிடமும் மிகுந்த எச்சரிக்கையாக பழகுவது ஜாதகருக்கும், ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் நன்மைகளை வாரி வழங்கும்.

8,12 ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னல்கள் 8ம் பாவக வழியில் இருந்து வழங்கும், விபத்து, மருத்துவ செலவினங்கள், மன குழப்பம், திடீர் முடிவுகளால் வரும் பேரிழப்பு, அறுவை சிகிச்சை மூலம் குணம் பெரும் கட்டாயம், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இன்மை, சுய முடிவுகள் சில நேரங்களில் ஜாதகருக்கு இழப்புகளை தர கூடும், உடல் நலனில் அதிக அக்கறை கொள்வது ஜாதகருக்கு நன்மையை தரும், பாதுகாப்பான பயணம் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும்.

12 ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் நிறைய விறைய செலவுகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பங்கு சந்தை மூலம் திடீர் இழப்புகளை சந்திக்கும் நிலையை தரும், திருப்தி அற்ற மன நிலை, அதிக மன போராட்டம், வீண் மன பயம் ஆகியவை ஜாதகரின் முன்னேற்றத்திற்கு மிகபெரிய தடைகளை தரும், சொத்துகளை நிர்வகிப்பதில் அதிக அக்கறை செலுத்துவது ஜாதகருக்கு வரும் பெரிய இழப்புகளை தவிர்க்க உதவும், மன நிம்மதி பெற தியானம், யோகம் பயில்வது சகல நலன்களையும் தரும், ஜாதகர் எக்காரணத்தை கொண்டு தீய பழக்க வழக்கங்களுக்கு ஆர்படுவது மிகுந்த இன்னல்களை வாரி வழங்கும்.

ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசை தரும் பலன்கள் :
( 04/08/2005  முதல் 04/08/2023 வரை )

ஜாதகருக்கு தற்ப்பொழுது நடைபெறும் ராகு திசை 8,12 ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது உகந்தது அல்ல என்ற போதிலும், மேற்கண்ட பாவக வழியில் இருந்து பாதிப்புகள் ஜாதகருக்கு மிக குறைந்த அளவிலேயே இருக்கும், சுய ஜாதகத்தில் 7ல் அமர்ந்த ராகு மிகவும் வலிமையுடன் இருந்த போதிலும், தனது திசையில் 12ம் பாவக பலனை ஏற்று நடத்திடுவது ஜாதகருக்கு நன்மைகளை வழங்காது, ராகு திசையில் தற்போழுது நடைபெறும் கேது புக்தி ( 03/02/2016 முதல் 21/02/2017 வரை ) எடுக்கும் முயற்சசிகளில் வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும், சிறப்பான நபர்களின் தொடர்பு மூலம் ஜாதகரின் உலகம் விரிவடையும், அந்நிய தேசத்து நபர்கள், வேற்று மதத்தினர் உதவிகள் மூலம் நல்ல முன்னேற்றத்தையும் வியாபர விருத்தியையும் பெரும் யோகம் உண்டாகும், ஜாதகர் புதிய யோக வாழ்க்கையை ஆரம்பிக்க ஏற்ற யோக காலம் இதுவே என்று தெளிவாக கூறலாம்.

மேலும் அடுத்து வரும் சுக்கிரன் புத்தி ( 21/02/2017 முதல் 21/02/2020 வரை ) 10 ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அபரிவிதமான தொழில் வாய்ப்புகளை வாரி வழங்கும் என்பதால் ஜாதகர் தொழில் ரீதியாக சில திட்டமிடுதல்களை மேற்கொள்வது சால சிறந்து, சுக்கிரன் புத்தி காலத்தில் ஜாதகருக்கு தன்னிறைவான ஜீவன முன்னேற்றம் என்பது 100 சதவிகிதம் துல்லியமாக அமையும் என்பதால், விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை பெறுவது அவசியமாகிறது, செய்யும் தொழிலில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெரும் யோக காலமாக ராகு திசை சுக்கிரன் புத்தி அமையும், வாழ்த்துகள்

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து:

  1. குரு பெயர்ச்சி பலன்களை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு