செவ்வாய், 29 மே, 2018

செவ்வாய் தோஷம் என்ன செய்யும் ( 8ல் செவ்வாய் ), செவ்வாய் திசை தரும் பலாபலன்கள் என்ன ?

 

  சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 2,4,7,8,12ல் செவ்வாய் அமர்வது "செவ்வாய் தோஷம்" என்றும், இங்கு அமரும் செவ்வாய் பகவான் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு கடுமையான தோஷத்தை தரும் என்றும், சம்பந்தப்பட்ட ஜாதகர் இதனால் செவ்வாய் அமர்ந்த பாவக வழியில் இருந்து பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என்பது பொது கருத்தாக உள்ளது, இது முற்றிலும் தவறான கருத்தாக ஜோதிடதீபம் கருதுகிறது, சுய ஜாதகத்தில் 2,4,7,8,12ம் பாவகங்களின் செவ்வாய் பகவான் அமர்ந்த போதிலும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே ஜாதகர் இன்னலுற நேரும், மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பின் சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த சுபயோகங்களை ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தரும், மேற்கண்ட பாவகங்களில் செவ்வாய் அமர்ந்து சுபயோகங்களையும், அவயோகங்களையும் தரும் அமைப்பை பற்றி, ஒரு சில உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மகரம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 1ம் பாதம்

மேற்கண்ட ஜாதகருக்கு மேலோட்டமாக பார்க்கும் பொழுது செவ்வாய் பகவான் லக்கினத்தில் இருந்து 8ல் அமர்ந்து இருப்பதை போன்ற தோற்றத்தை  தரும், ஆனால் ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் சிம்ம ராசியில் 143:29:52 பாகையில் ஆரம்பித்து கன்னி ராசியில் 177:38:14 பாகையில் நிறைவு பெறுகிறது, செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் உள்ள 139:22:02 பாகையில்  களத்திர ஸ்தானத்திற்க்கு உற்ப்பட்ட 7ம் பாவகத்தில் அமைந்திருப்பது ஜாதகருக்கு செவ்வாய் 8ல் அமர்ந்தத்திற்க்கான பலனை நல்காது, செவ்வாய் 7ல் அமர்ந்ததிற்க்கான பலாபலன்களையே  வழங்கும், எனவே ஜாதகருக்கு செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதே மிகவும் சரியான ஜோதிடகணிதமாகும்.

சுய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதும், 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித வலிமையுடன் காணப்படுவதும் ஜாதகருக்கு பரிபூர்ண நன்மைகளை களத்திர ஸ்தான வழியில் இருந்து சுவீகரிக்கும் வல்லமையை தரும், ஜாதகருக்கு 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள் சேர்க்கை, சிறந்த கூட்டாளிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை மற்றும் பொருளாதர முன்னேற்றங்கள், கூட்டு முயற்சியில் மூலம் கிடைக்கும் அபரிவித வெற்றி வாய்ப்புகள், பொதுமக்கள் மூலம் கிடைக்க பெரும் ஆதரவு மற்றும் அதீத லாபங்கள், மிகவும் சக்தி வாய்ந்த கூட்டாளிகள் அமையும் யோகம் என்ற வகையில் ஜாதகருக்கு களத்திர ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.

மேலும் ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகான வளர்ச்சி என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும், எதிர்பாலின அமைப்பினரால் ஜாதகர் தொடர்ந்து சுபயோகங்களை பெற்றுக்கொண்டே இருப்பர் என்பது கவனிக்கத்தக்கது, கூட்டு தொழில் மிகப்பெரிய வளர்ச்சியையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றங்களையும் வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகத்தால் ஜாதகர் மிகுந்த சுபயோகங்களை பெறுவார், ஜாதகரின் களத்திர ஸ்தானம் கடகத்தில் 12 பாகைகளையும், சிம்மத்தில் 23 பாகைகளையும் கொண்டு மிகவும் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கான யோக பலன்களை மிகவும் அபரிவிதமாக வாரி வழங்கும், மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து 7ம் பாவகத்தில் " மங்களன் " எனும் செவ்வாய் பகவான் அமர்ந்து இருந்த போதிலும் ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவகம் வலிமை பெற்றுள்ளதால், களத்திர ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களையே பரிபூர்ணமாக அனுபவிப்பார் என்பதை மிக உறுதியாக சொல்லலாம்.

நடைபெறும் செவ்வாய் திசை ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்கள் : ( 11/09/2012 முதல் 12/09/2019 வரை )

 செவ்வாய் பகவான் ஜாதகருக்கு தனது திசையில் 5,11ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவிலான சுபயோகங்களை நல்குவது ஜாதகருக்கு மிகுந்த சிறப்புகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது, குறிப்பாக 5ம் பாவக வழியில் இருந்து கல்வியில் வெற்றியும், சமயோசித புத்திசாலித்தனமா செய்கையின் மூலம் அபரிவித லாபங்களை, குலதெய்வ ஆசியின் மூலம் அபரிவித நன்மைகளையும் பரிபூர்ணமாக பெரும் யோகத்தை தரும், ஜாதகருக்கு 11ம் பாவக வழியிலான அதிர்ஷ்டம் சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், எதிர்பாராத பொருள் வரவும், நல்ல குணம், தெய்வீக அனுக்கிரகம் என்ற வகையில் மிகுந்த சுபயோகங்களை வாரி வழங்கும், எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 7ல் செவ்வாய் அமர்ந்த போதிலும், களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது ஜாதகருக்கு சிறப்புகளையும், நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோகங்களையும் பரிபூரணமாக பெற்று கொண்டு இருக்கின்றார்.

குறிப்பு :

 ஜாதகருக்கு செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பினும், செவ்வாய் தோஷம் இல்லை என்பதும், செவ்வாய் தனது திசையில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தி சுபயோகங்களை வாரி வழங்குகிறது என்பதும் கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஆனால் எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை தரும் என்பதை " ஜோதிடதீபம் " இந்த பதிவின் மூலம் எச்சரிக்கை செய்கிறது, எதிர்வரும் ராகு திசை ஜாதகருக்கு 10ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று கடுமையான இன்னல்களை ஜீவன ஸ்தான வழியில் இருந்து வாரி வழங்க தயார் நிலையில் உள்ளது என்பதால், ஜாதகருக்கு மிகுந்த எச்சரிக்கையை உடன் வாழ்க்கையை எதிர்கொள்வது சகல நலன்களையும் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக