வியாழன், 31 மே, 2018

சுபயோகம் நிறைந்த வாழ்க்கை துணையின் ஜாதகம், இல்லற வாழ்க்கையை மகிழ்விக்குமா ?

 

 சுபயோகம் நிறைந்த வாழ்க்கை துணையின் ஜாதகம், இல்லற வாழ்க்கையை மகிழ்விக்குமா? என்றால் நிச்சயம் மகிழ்விக்கும் இதில் மாற்று கருத்து இல்லை, தமக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிகவும் வலிமையுடன் இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் உள்ள குறைகள் யாவையும் நிவர்த்தி செய்து இனிமையான இல்லற வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை அன்பர்களே, பொதுவாக நமது சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமையற்று இருப்பின், நமக்கு வரும் வாழ்க்கை துணையின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, நமது ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையுடனும், நமது வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் மேற்கண்ட பாவகங்கள் வலிமையுடன் இருப்பின் நமது இல்லற வாழ்க்கை எவ்வித இன்னல்களையும் சந்திக்காமல் சுபயோகங்கள் நிறைந்த பரிபூர்ண தாம்பத்தியத்தை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !



லக்கினம் : மேஷம்
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம்.

ஜாதகத்தில் பாவக தொடர்புகள் :

1,7,9ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 1ம் பாவக வழியில் இருந்து எதிர்ப்புகள், எதிரிகள் மறையும் தன்மையை தரும், வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் அபரிவித வளர்ச்சியை தரும், கணவர் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை ஜாதகிக்கு பரிபூர்ண நிம்மதியையும், மனநிறைவையும் தரும், வெளிநாடுகளில் இருந்து வரும் யோக வாழ்க்கை ஜாதகிக்கு தன்னிறைவான பொருளாதர மேன்மையை வாரி வழங்கும், நீண்ட ஆயுள் உண்டு, வெற்றி புகழ் கீர்த்தி யாவும் ஜாதகிக்கு தேடி வரும், பொதுமக்கள் வழியிலான ஆதரவு ஜாதகிக்கு மிகுந்த சிறப்புகளை தரும், வியாபார விருத்தி என்பது ஜாதகிக்கு மிக சிறப்பாக அமையும், கணவரின் ஆதரவுடன் வாழ்க்கையில் மிகுந்த நன்மைகளை பெரும் யோகத்தை தரும், தெய்வீக அனுக்கிரகம் ஜாதகிக்கு நல்ல மதிப்பு மிக்க பதவிகளை வாரி வழங்கும், கணவருக்கு அதிர்ஷ்டம் உண்டாகும், வாழ்க்கை துணையுடன் இணைபிரியா தாம்பத்திய வாழ்க்கையை வழங்கும், கூட்டு முயற்சிகள் யாவும் வெற்றி தரும்.

7ம் பாவக வழியில் இருந்து ஜாதகி நல்ல ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கை துணை, அவரின் முழு ஆதரவு, சக்தி வாய்ந்த கூட்டாளி, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் அதிர்ஷ்டம், வியாபாரத்தில் பரிபூர்ண வெற்றி, கூட்டு வியாபாரம், கூட்டு தொழில் வழியில் அபரிவித லாபம், கணவருக்கு அதிர்ஷ்டம், சமூக அந்தஸ்து மற்றும் உயர்பதவிகளை பெரும் அமைப்பு, இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி, நண்பர்கள் உதவியை பெறுதல், மதிப்பு மிக்க பொறுப்புகள் தேடிவரும் யோகம் எதிர்பாராத நன்மைகளை ஜாதகி பெறுவதற்கான வாய்ப்புகள், இல்லற வாழ்க்கையில் வெற்றி, எதிர்ப்புகளை கடந்து சுபயோகங்களை தன்னிறைவாக பெரும் யோகம் என்ற வகையில் சிறப்புகளை தரும்.

 9ம் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்களுடன் சுமூக உறவு, பொது விவகாரங்களில் அதீத ஈடுபாடு, நம்பிக்கை மற்றும் கண்ணியம் நிறைந்த வியாபார ஆளுமை, அதிர்ஷ்டம் நிறைந்த கூட்டாளிகள், மிகசிறந்த நிர்வாக திறமை, மதிப்பு மிக்க செயல்கள் மூலம் வெற்றி பெரும் யோகம், தன்னம்பிக்கையும் தைரியமும் ஒருங்கே அமையப்பெற்ற ஜாதகி, தெய்வீக அனுக்கிரகமும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும் ஜாதகிக்கு  யோகம் மிக்க சுப வாழ்க்கையை நல்கும், கல்வியில் தேர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் பட்டைய படிப்புகளில் மேன்மையை பெரும் யோகத்தை தரும்.

3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு தனது சகோதரவழி ஆதரவு உண்டாகும், எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியை தரும், சகல சௌபாக்கியங்களுடன் வாழ்க்கையில் குறுகிய காலத்தில் மேன்மையை பெறவும் யோகம் உண்டாகும், மனதைரியமும், தன்னம்பிக்கையும் ஜாதகியின் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு நல்ல தீர்வுகளை  தரும், நினைக்கும் காரியங்கள் வெற்றி பெரும், பல தொழில் செய்யும் யோகமும், சிறந்த நிர்வாக திறமையையும் தரும், எதையும் தாங்கும் மன வலிமை உண்டாகும், எதிரிகளை வெல்லும் யோகம் உண்டு, நல்ல மன நிலை, சிறந்த சிந்தனை, உண்மை சத்தியத்தை மதித்தல், தைரியம், பயணங்களில் விருப்பம், கல்வியால் மேன்மை, புதிய இடம், புதிய சிந்தனை, புதிய  சூழ்நிலைகளில் ஜாதகியின் வெற்றி அதிகரிக்கும், வியாபாரம், தரகு தொழில், ஏஜென்சி துறையில் அதீத லாபங்களை வாரி வழங்கும், ஜாதகி மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் நல்ல வெற்றியை தரும்.

4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 4ம் பாவக வழியில் இருந்து நல்ல தொழில் முன்னேற்றத்தை வாரி வழங்கும், பெயரும் புகழும் அதிகரிக்கும், நல்ல குணம் ஜாதகியின் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை வாரி வழங்கும், மண் மனை வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, ஆள் வசதி, சிறந்த நிர்வாக திறமை, அனைத்து சுக போகங்களையும் பெரும் அமைப்பு, பெரிய சொத்துக்கள், விளையாட்டில் ஆர்வம், அரசு கவுரவம், சமூக வாழ்க்கையில் வெற்றி, அரசியலில் ஆதாயம், தனது பெயரில் இயங்கும் சொத்துக்கள் வழியில் இருந்து வரும் வருமானம், அசையும் அசையா சொத்துக்கள் வழியிலான லாபங்கள், சுய உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் தன்மை என்ற வகையில் சிறப்புகளை தரும்.

10 ம் பாவக வழியில் இருந்து உத்தியோகம், வியாபாரம், தொழில் முதலியவற்றில் அபரிவித லாபங்கள், கம்பீரம், தீர்க்கமான வாத திறமை, வாக்கு வன்மை மூலம் வெற்றி பெரும் யோகம், கவுரவம் குறையாத யோக வாழ்க்கை, மென்மையான  குணம் மூலம் தொழில் விருத்தியை பெரும் யோகம், சுய தொழில் அல்லது வியாபாரம் செய்வதன் மூலம் அபரிவித நன்மைகளையும் லாபங்களை  பெரும் யோகத்தை தரும், கவுரவ பதவிகள் ஜாதகிக்கு தேடி வரும், அனைவரிடமும் நட்ப்புறவு, சுமுகமான சூழ்நிலையை கையாளும் தன்மையை தரும், கவுரவம் மிக்க பதவிகள் ஜாதகிக்கு தேடிவரும், சிறந்த நிர்வாக திறமையின் மூலம் ஜாதகி அபரிவித வெற்றிகளை பரிபூர்ணமாக பெறுவார்.

2,5,6,8,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும், இருப்பினும் 12ம் பாவகம் உபய ராசி என்பதால் ஜாதகிக்கு வரும் இன்னல்கள் யாவும் மிக குறைந்த ( 30% ) சதவிகிதத்திலேயே இருக்கும் என்பதால், பெரிய பாதிப்புகள் எதுவும் வர வாய்ப்பில்லை, 2ம் பாவக வழியில் இருந்து வார்த்தைகள் மூலம் வீண் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு, குறிப்பாக கணவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது, கையில் வரும் வருமானத்தை  சேமிக்கும் பழக்கத்தை நடைமுறைக்கு  கொண்டுவருவது அவசியமாகிறது, இல்லையெனில் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும், அவசியமற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது, நிதி நிர்வாகம் சிறப்பாக அமைவது ஜாதகிக்கு மிகுந்த நன்மையை தரும், குடும்ப வாழ்க்கையில் வரும் சிறு சிறு இன்னல்களுக்கு தானே நிவர்தியை தேடிக்கொள்வது நல்லது, கலைகளில் நல்ல ஈடுபாட்டையும், தேர்ச்சியையும் தரும்.

5ம் பாவக வழியில் இருந்து ஜாதகி பூர்வீகத்தில் ஜீவிக்கும் வரை யாதொரு  நன்மைகளையும் பெற இயலாது, இதனால் பெரும் நஷ்டமும், வீண் விரையங்களையும் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும், ஜாமீன் கொடுப்பதால் மிகப்பெரிய இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், குழந்தைகள் வழியிலான பிரச்சனைகள், புத்திர பாக்கிய தடைகளை பூர்விகத்தில் ஜாதகி ஜீவிக்கும் வரை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மன நிம்மதி மனப்போராட்டம் அதிகரிக்கும், குல தெய்வத்தின் ஆசீர்வாதம் இன்மையால் ஜாதகிக்கு  வரும் நன்மைகள் யாவும் தவறிவிட வாய்ப்பு அதிகம், ஜாதகியின் சமயோசித அறிவு திறனும், புத்திசாலித்தனமும் முழு அளவில் பயன் தாராது என்பதால் பூர்வீக ஜீவனத்தை தவிர்ப்பது நல்லது, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் ஜாதகிக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.

6ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு கடன் சார்ந்த இன்னல்கள் அதிகரிக்கும், கடன் கொடுப்பது வாங்குவது இரண்டும் மிகப்பெரிய இன்னல்களை தரும், வேலையாட்கள் மூலம்  அதீத தொல்லைகள்  உண்டாகும், தேவையற்ற வீண் செலவுகள், எதிர்பாராத மருத்துவ செலவினங்கள் ஜாதகிக்கு பெரும் இன்னல்களை தரும், நோய் எதிர்ப்பு திறன் குறைவு என்பதால் உடல் நலனில் அதிக அக்கறை கொள்ளவது நல்லது, எவரிடமும் பகைமை பாராட்டாமல் அனுசரித்து செல்வது ஜாதகிக்கு நல்ல மன நிம்மதியை தரும்.

8ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு விபத்து மூலம் மருத்துவ செலவினங்களை அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது , மனக்குழப்பம், நிம்மதி இழப்பு, உடல் நல பாதிப்பு தேவையற்ற செலவினங்கள் போன்றவை ஜாதகிக்கு அதீத இன்னல்களை தரக்கூடும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வது ஜாதகிக்கு தாங்க இயலாத துன்பங்களை தரக்கூடும், தலைவலி மற்றும் கண் சார்ந்த இன்னல்களை தவிர்க்க சரியான தீர்வுகளை தேடுவது ஜாதகிக்கு நன்மைகளை தரும்.

11ம் பாவக வழியில் இருந்து ஜாதகி விரக்தி மனப்பான்மையை விட்டு விட்டு, நல்ல நம்பிக்கைகளை மனதில் மேற்கொள்வது நன்மையை தரும், தேவையற்ற கவலைகள் ஜாதகிக்கு வரும் அதிர்ஷ்டங்களை தடை செய்யும், அனைவராலும் இன்னல்கள் உண்டாகும் என்பதால் ஜாதகி விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்தை அதிகரித்துக்கொள்வது சகல நன்மைகளையும்  தரும், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை எந்த காரணத்தை கொண்டு ஜாதகி தவிர்க்க கூடாது, தெளிவான சிந்தனை, சிறந்த முடிவெடுக்கும் தன்மை ஜாதகியின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகி நிறைய வீண் செலவுகள், பங்கு சந்தை லாட்டரியில் நஷ்டம், பெரும் முதலீடுகளில் ஏற்படும் பேரிழப்புகள், திருப்தி இல்லாத மனநிலை, அதீத கற்பனைகள், வீண் மன பயம் போன்றவை ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பெரும் தடைக்கற்களாக அமையும், நல்ல உறக்கம் அமைவது என்பது ஜாதகிக்கு பிரச்சனையாக அமையும், பொது வாழ்க்கையில் சில எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

சுக்கிரன் திசை தரும் பலன்கள்  ( 21/07/2001 முதல் 21/07/2021 வரை ) 

ஜாதகிக்கு சுக்கிரன் தனது திசையில் 5,6,8ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தருவது நல்லதல்ல, 5ம் பாவக வழியில்  இருந்து பூர்வீக பாதிப்பும், கற்ற கல்வி பலன் தராத நிலையும், எதிர்பார்ப்புகள் யாவும் முழுமையை பெறாத தன்மையையும் உண்டாகும், 6ம் பாவக வழியில் இருந்து உடல் நலம் பாதிப்பது, எதிர்ப்பு மற்றும் எதிரி தொந்தரவு ஆகியவை ஜாதகியை வெகுவாக பாதிக்கும், 8ம் பாவக வழியில் இருந்து மற்றவர்களின் இழப்பு ஜாதகியை வெகுவாக பாதிக்கும், திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, நிதி நிலை பாதிப்பை தரும், விபத்தை தவிர்க்க இயலாது, மருத்துவ செலவினங்கள் வீண் விரயத்தை தரும்.

சுக்கிரன் திசையில் புதன் புத்தி வழங்கு பலன்கள்  ( 21/07/2017 முதல் 21/05/2020 வரை )

புதன் புத்தி ஜாதகிக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சுபயோக வாழ்க்கையை தருவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும், ஜாதகிக்கு நினைக்கும் காரியங்கள் யாவும் பலிதம் பெரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும், நம்பிக்கையும், அதிர்ஷ்டமும் நல்ல சுபயோக சுக வாழ்க்கையை வாரி வழங்கும், தெய்வீக ஆசிர்வாதம் ஜாதகிக்கு நல்ல வெற்றிகளை தரும், முயற்சிக்கும் காரியங்கள் யாவும் பரிபூர்ண நன்மைகளை தரும், வாழ்க்கை புதிய மாற்றங்களை கொண்டுவரும், புதன் புத்தி ஜாதகிக்கு பரிபூர்ண சுபயோகங்களை தன்னிறைவாக தருவது வரவேற்கத்தக்கது.

எதிர்வரும் சூரியன் திசை தரும் பலன்கள் ( 21/07/2021 முதல் 21/07/2027 வரை )

சூரியன் தனது திசையில் 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை வாரி  வழங்குவது ஜாதகிக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து சுபயோக சுப வாழ்க்கையை தரும், நல்ல நண்பர்கள், கூட்டாளிகள் மூலம் மிகுந்த நன்மைகள் நடைபெறும், வெளிநாடு வெளியூர் அமைப்பில் இருந்து லாபங்களும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வியாபாரம் மற்றும் தொழில் முதலியவற்றில் இருந்து வரும் அபரிவித வளர்ச்சி ஜாதகியின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவிகரமாக அமையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்பது ஜாதகிக்கு எதிர்வரும் சூரியன் திசை வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, சூரியன் திசையில் கணவர், நண்பர்கள், கூட்டாளி, கூட்டு முயற்சி, வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து ஜாதகி 100% விகித சுபயோக பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமையை தரும்.

பரிகாரம் :

1) தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது ஜாதகிக்கு பரிபூர்ண நன்மைகளை வாரி வழங்கும்.

2) திருவெண்காடு சென்று முக்குண நீராடி நலம் பெறுவது அவசியமாகிறது.

3) குல தெய்வ வழிபாடு எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்து வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும்.

4) ஜாதகி பழனி முருகனை வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று தரிசனம் செய்து சகல நலன்களை பெறலாம்.

5) திருப்பதி வருடம் ஒரு முறை வளர்பிறை திங்கள் அன்று சென்று ஸ்ரீ வாரி பெருமானை தரிசனம் செய்து வருவது பொருளாதார ரீதியான பிரச்சனைகளுக்கும், சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான வழியிலான இன்னல்களையும் வெகுவாக தவிர்க்க உதவும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகிக்கு 1,7ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் காணப்படுவதும், எதிர் வரும் சூரியன் திசை வலிமை பெற்ற களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும் மிகுந்த சுபயோகங்களை நல்கும், இதனால் ஜாதகியின் கணவருக்கும், ஜாதகிக்கு பரஸ்பரம் யோக வாழ்க்கை அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், வாழ்க்கை துணையின் ஜாதகம் மிக மிக வலிமையுடன் இருப்பது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355969

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக