புதன், 6 டிசம்பர், 2023

ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு !

 "ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரம்" கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு இரண்டாம் ராசியாகவும், ஸ்திர நில தத்துவ ராசியாகவும் விளங்கும் ரிஷப ராசியில் "சூரியனின்" கார்த்திகை நட்சத்திரத்தை, தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்களுக்கு, வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.

 சூரியனார் கோயில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை அருகே அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு வளர்பிறை ஞாயிறு அன்று சென்று, அதிகாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் சூரிய ஹோரையில் சூரிய பகவானை தாமரை மலர் அல்லது வெள்ளெருக்கு மலர் மாலை மற்றும் ஆரஞ்சு மஞ்சள் கலந்த வர்ண வஸ்திரம் சாற்றி, இறைவனை தரிசனம் செய்து வழிபடும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களுக்கு வாழ்வில் மேற்கண்ட சுபயோகங்கள் யாவும் 3 மாத காலத்தில் நடைமுறைக்கு வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட விஷயமாகும்.

  ரிஷபராசி கார்த்திகை நட்சத்திர அன்பர்கள் பொதுவாகவே மருத்துவத்திலும், தற்காப்பு கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக திகழ்வார்கள், புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள், மருத்துவ ரீதியான உபகரணங்கள் போன்றவற்றை மிக சிறப்பாக கையாளும் அறிவுத்திறன் கொண்டவர்கள், மனிதர்களின் உடல் ரீதியான பிணிகளை நிவர்த்தி செய்யவும் அவர்களுக்கு உடல் மனம் ஆகிய நிலைகளில் சுகமளிக்கும் கைராசி பெற்றவர்கள், இவர்களது கரங்கள் தொட்டவுடன் மற்றவர்கள் உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் சுகம் பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது, வீர தீர செயல்களில் அதீத ஆர்வம் கொண்டவர்கள், ரகசிய கலைகளை சரியாக பிரயோகம் செய்யும் வல்லமை பெற்றவர்கள், சாதார நிலையில் இருந்து உலக புகழ் பெரும் யோகமும் பொருளாதர ரீதியான தன்னிறைவை மிக குறுகிய காலத்தில் சுவீகரிக்கும் யோகம் பெற்றவர்கள், தனக்கு கீழ் மிக பெரிய சாம்ராஜ்ஜியத்தையே நிறுவும் திறன் பெற்றவர்கள் என்பது பிறவியிலே ( சிறு வயதுமுதல் அனைத்திலும் முன்னிலை ) மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் தன்மை பெற்றவர்கள், சமூகத்திற்கு சரியான வழிகாட்டியாகவும், சீர்திருத்த வாழ்வியலை மிக எளிதாக மக்களிடம் நடைமுறைப்படுத்தும் வல்லமையும், எதிர்கால வாழ்வை சிறப்பாக எதிர்கொள்ளும் தன்மையை பொருளாதார அறிவுடன் மற்றவர்களுக்கு வழங்கும் யோகம் பெற்றவர்கள், இவர்களது பெற்றோரும், உற்றார் உறவினர்களும், இவரை சார்ந்து வாழ்வோரும் சகலவிதமான சௌபாக்கியங்களையும் தன்னிறைவாக பெற்று சுகமடைவர்.

குறிப்பு :

 கார்த்திகை நட்சத்திரத்தை தமது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள் இயற்கையாவே ( ஹீலிங் பவர் ) சுகமளிக்கும் வல்லமை கொண்டவர்கள், மருத்துவம் சம்பந்தப்பட்ட துறைகளில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும் வல்லமை பெற்றவர்கள், அறிய கலைகளை கற்றுணர்ந்து பிரயோகம் செய்யும் தன்மை சிறுவயது முதலே இவர்களுக்கு இறையருள் வழங்கி இருக்கும், செய்யும் காரியங்களில் ஒரு நேர்த்தியான விஷயங்களை கடைபிடிப்பார்கள், இவர்களது ரகசியங்களை எவரும் அறிய இயலாது என்பது கவனிக்கத்தக்கது, மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 


ஜோதிடன் வர்ஷன் 

9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக