வெள்ளி, 8 டிசம்பர், 2023

ரிஷபராசி ரோஹிணி நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு!

"ரோஹிணி நட்சத்திரம்" அதிர்ஷ்டமும் அறிவாற்றலும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புதமான நட்சத்திரம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இரண்டாவது ஸ்திர நிலதத்துவ ராசியான ரிஷப ராசியில் வியாபித்து இருக்கும் "சந்திரனின்" ரோஹிணி நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகள் என்றால் அது மிகையாகாது, ஏனெனில் இவர்கள் நினைக்கும் விஷயங்கள் யாவும் நிச்சயம் நடைமுறைக்கு வரும், அது நன்மை தரும் காரியங்கள் என்றாலும் சரி, தீமை தரும் காரியங்கள் என்றாலும் சரி, எனவே ரோஹிணி நட்சத்திர அன்பர்கள் அனைவரும் தனது மனதில் நேர் மறை எண்ணங்களை மட்டுமே சிந்திப்பது அவசியமானது, இவர்களது  வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும். 

"திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்" இக்கோயில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள திருப்பட்டூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. ரோஹிணி நட்சத்திர அதிதேவதை "பிரம்மா" என்பதனாலும், பிரம்மாவிற்கு சாப நிவர்த்தி செய்த திருத்தலம் என்பதாலும், பிரம்மாவிற்கு தனிச்சன்னதி வழங்கிய இறைவன் இத்திருத்தலம் நாடி வரும் அன்பர்களுக்கு மறுபிறவி நல்க பணித்ததாலும், இங்கு வரும் அனைத்து அன்பர்களின் வாழ்விலும் நல்மாற்றங்கள் 48நாட்களுக்குள் நிகழும் என்பது கவனிக்கத்தக்கது, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி "இறைவன் பிரம்மபுரீசுரவரர் இறைவி பிரம்மநாயகி" வழிபாடு செய்த பிறகு, பிரம்மாவை வளர்பிறை திங்கள் அன்று வெண் நிற மலர்கள் வெண்பட்டு சாற்றி வழிபடும் ரோஹிணி நட்சத்திர அன்பர்களுக்கு, வாழ்வில் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழும் என்பது கண்கூடான உண்மையாகும்.

பிறப்பின் அருமை, பிறவிப்பயன், உடல் ரீதியான மாற்றங்கள், அறிவுபூர்வமான செயல்பாடுகள், கல்வியில் அபரிவிதமான முன்னேற்றம், கலைகளில் தேர்ச்சி, பிரபல்ய யோகம், அரசு பதவிகளை அலங்கரிக்கும் யோகம், தெய்வீக அனுகூலம், தீர்க்கமான வாதத்திறமை, வாக்குபலிதம், மற்றவர்களை தமது வார்த்தைக்கு கட்டுப்படுத்தும் தன்மை, மதிப்பு மரியாதை, மற்றவர்களை சார்ந்து வாழாமல் தனித்து புகழ் பெறுதல், ஆயகலைகளில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு, இயல் இசை நாடகம் போன்ற துறைகளில் சிறப்பான வெற்றிகள், வருமானத்திற்க்கு குறைவில்லா நிலை, பற்றாக்குறை என்பது இல்லாமல் தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி, முற்போக்கு சிந்தனை, கலைத்துறையில் அதீத ஆர்வம் அதன்வழியிலான அதிர்ஷ்டவாய்ப்புகள், தனது படைப்பு திறன் கொண்டு அனைவரையும் தனது பக்கம் ஈர்க்கும் வல்லமை, அரசியலில் புகழ் பெரும் யோகம், சரித்திரம் படைக்கும் பேராற்றல் என்ற வகையில் சிறப்புகளை வாரி வழங்கும்.

குறிப்பு :

 ரோஹிணி நட்சத்திரத்தை தமது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள் இயற்கையாவே மற்றவர்களை கவரும் தன்மை பெற்றவர்கள், எதிலும் தனித்து தெரியும் தன்மையும், தனது சுய முயற்சி வழியிலான சாதனைகளை மிக சிறப்பாக முன்னெடுக்கும் பேராற்றல் பெற்றவர்கள் என்றால் அது மிகையாகாது, அரசியல், கலைத்துறை, விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள், சாஸ்திர ஞானம், தெய்வீக தன்மை, முற்போக்கு சிந்தனை, எதிர்பாலின கவர்ச்சி, தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி என்ற வகையில் சிறப்பை பெறுவார்கள், இவர்களுக்கு மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக