வெள்ளி, 1 டிசம்பர், 2023

மேஷராசி அஸ்வினி நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் இறைவழிபாடு !

 


 கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு முதல் ராசியான மேஷ ராசி "அஸ்வினி" நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்கு தமது வாழ்வில் தன்னிறைவான சுகபோகங்களை சுவீகரிக்கவும், உடல்நலம் மனோவலிமை, செய்யும் காரியங்களில் வெற்றி, கல்வியில் மேன்மை, தொழில் யோகம், திருமணம் மற்றும் இனிமையான இல்லற வாழ்க்கை, புத்திர பாக்கியம், பொருளாதார வளர்ச்சி என ராஜயோக வாழ்வை பெற மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.

 வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று குரு ஹோரையில் ( மதியம் 12மணி முதல் 1மணி வரை ) திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள கலை தெய்வமாம் "மகா சரஸ்வதி தேவி கோவிலுக்கு" வருடத்தில் ஒரு முறை சென்று வெண்ணிற புஷ்பம் ( மல்லிகை மலர் ) வெண் பட்டு வஸ்த்திரம் சாற்றி மனமுருக தங்களின் கோரிக்கைகளை வேண்டுதல் செய்ய, அஸ்வினி நட்ச்சத்திர அதிதேவதையான சரஸ்வதி தேவி தங்களின் கோரிக்கைகளை 48 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து அருளாசி வழங்குவார்.

கல்வி ஞானம், சாஸ்த்திர ஞானம், அறிய கலைகளில் தேர்ச்சி, கலைதுறையில் வெற்றி, இயல் இசை நாடகம் போன்றவற்றில் புகழ் பெற  "மகா சரஸ்வதி தேவி கோவிலுக்கு" அவரவர் சுய ஜாதக வலிமை பெற்ற நாட்களில் சென்று வழிபட சகல சௌபாக்கியமும் வந்து சேரும் என்பது ஓர் வியக்கத்தக்க அதிசயம் ஆகும், குறிப்பாக மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தை தமது ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு 100% வெற்றியை தரும் மிக சிறப்பான வழிபாடு இதுவே ஆகும்.

குறிப்பு :

  அஸ்வினி நட்சத்திரத்தை தமது ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்கள் இயற்கையாவே வீரியமிக்க செயல்பாடுகளை முன்னெடுக்கும் வல்லமை பெற்றவர்கள், மேலும் தொழில் நுட்ப அறிவியலில் சிறந்து விளங்கும் தன்மை பெற்றவர்கள், சிறந்த நிர்வாக திறமை, சரியான திட்டமிடுதல்கள், பொருளாதார முன்னேற்றத்தில் அதீத ஆர்வம் கொண்டவர்கள் என்பதனால், இந்த இறை வழிபாடு அவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக