சனி, 2 டிசம்பர், 2023

மேஷராசி பரணி நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு !


 "பரணி தரணி ஆளும்" என்பதற்கு இணங்க 
கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு முதல் நெருப்பு தத்துவ ராசியான மேஷ ராசியில் பிறந்து, சுக்கிரனின் பரணி நட்ஷத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்களுக்கு, இறையருள் கலைஞானமும், சாஸ்திர ஞானமும் ஒருங்கே அமையப்பெற்ற   திறமையாளர்களாக திகழும் தன்மையை நல்கும், இவர்கள் தமது வாழ்வில் உடல் நலம் மனோ வலிமை, தெய்வீக வெற்றி, கல்வி கேள்விகளில் தேர்ச்சி, தொழில்வழியிலான அபரிவிதமான முன்னேற்றம், கவுரவமான பதவி, இனிமையான வாழ்க்கை துணை, நல்லதோர் இல்லற வாழ்க்கை, அறவழியிலான தனசேர்க்கை, புகழ் மிக்க பொறுப்புகள், வேற்று நாடுகளில் இருந்து வரும் பொருளாதார முன்னேற்றம் போன்ற சுபயோகங்களை தன்னிறைவாக பெற, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.

 நாகபட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் உள்ள அக்னீஸ்வரர் திருக்கோவில் "பரணி" நட்ஷத்திரத்தை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் 100% விகிதம் வாரி வழங்கும் திருக்கோவில் ஆகும், அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன, வருடம் ஒரு முறை வளர்பிறை ஞாயிறு அன்று சூரியன் அல்லது செவ்வாய் ஹோரையில் செவ்வரளி மலர்கள் கொண்டும், சிகப்பு வர்ண பட்டு வஸ்த்திரம் சாற்றியும் மனமுருக தங்களின் கோரிக்கைகளை வேண்டுதல் செய்ய, பரணி நட்ச்சத்திர அதிதேவதையான அக்னி பகவான் தங்களின் கோரிக்கைகளை 16 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து அருளாசி வழங்குவார்.

 "பரணி தரணி ஆளும்" என்பதற்கு இணங்க முழுமையான ராஜயோக வாழ்வை வழங்கும் ரகசிய இறைவழிபாடு இதுவே ஆகும், எனவே பரணி நட்சத்திர அன்பர்கள் தங்களது சுய ஜாதக வலிமைக்கு ஏற்ற நன்னாளில் மேற்கண்ட வழிபாட்டினை வெகு சிறப்பாக முன்னெடுக்கும் பொழுது தங்களின் வாழ்க்கையில் பல வியக்கத்தக்க மாற்றத்தையும், தரணி ஆளும் யோகத்தையும் பரிபூர்ணமாக பெற இயலும்.

குறிப்பு :

  பரணி நட்ச்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது ஜென்ம லக்கினம் இந்த நட்ஷத்திரத்தில் அமைந்த அன்பர்கள் மிகுந்த கலாரசனை பெற்றவர்களாக திகழ்வார்கள், கலைத்துறையில் கதா நாயகன் கதா நாயகியாக குறுகிய காலத்தில் புகழ் மிக்க வாழ்க்கையை சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள், மேலும் பொது மக்கள் நன்மதிப்பை பெற்று அரசாளும் யோகமும் இவர்களுக்கு உண்டு என்பதனால், இந்த இறை வழிபாடு அவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக