திங்கள், 4 டிசம்பர், 2023

மேஷராசி கார்த்திகை நட்சத்திரம் - ராஜயோக வாழ்வை தரும் ரகசிய இறைவழிபாடு !

 "கார்த்திகை அகஇருளை அகற்றும் அகல்விளக்கு" அறியாமை எனும் அகஇருளை  அகற்றி "அறிவு" எனும் சுடரொளி  பிரகாசிக்க வைக்கும் அற்புதமான நட்சத்திரம், கால புருஷ தத்துவ அமைப்பிற்க்கு முதல் நெருப்பு தத்துவ ராசியான மேஷ ராசியில் பிறந்து, சூரியனின் கார்த்திகை 1 ம் பாதத்தை ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்களுக்கு, அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை என்பதற்கு இணங்க

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.

என்ற திரு குறளுக்கு ஏற்ப தமது வாழ்வில் அறிவுத்திறன் கொண்டு எதிலும் முன்னிலை பெரும் அற்புதமான நட்சத்திரம், தமது வாழ்க்கையில் சிறந்த நிர்வாக திறனை சிறு வயது முதலே சிறப்பாக பெற்று இருப்பார்கள், எந்த ஒரு கடுமையான சூழல்களையும் மிக எளிதாக சமாளிக்கும் வல்லமை பெற்று இருப்பார்கள், அரசு முதன்மை பணிகளை ( இந்திய ஆட்சி பணி ) மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்கள், செல்லும் இடமெல்லாம் புகழ் பெரும் யோகம் பெற்றவர்கள், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நேர்மை, உண்மை, சத்தியம் போன்றவற்றை கடைபிடிக்கும் ஒழுக்கசீலர்கள், தம்மை சார்ந்தவர்களுக்கு சரியான பாதையை வழிகாட்டும் வல்லவர்கள், சுய கட்டுப்பாடு, நேர்த்தியான செயல்பாடுகள், வருமுன் காக்கும் பேராற்றல், பிறப்பின் அருமை உணர்ந்து செய்யப்படும் தன்மை, சரியான நேரத்தில் சரியான காரியங்களை செய்யும் வல்லமை, எதிர்ப்புகளை மிக எளிதாக சமாளிக்கும் பேச்சு திறன், அதிகாரம் செய்யும் யோகம், அனைவரையும் தமது பேச்சுக்கு கட்டுப்பட செய்யும் வலிமை, புதிய சிந்தனை, புதிய அணுகுமுறை, தனக்கான பாதையை தானே கட்டமைத்துக்கொள்ளும் யோகம் என்ற வகையில் சிறந்த நற்பலன்களை பெரும் அன்பர்கள் இவர்களே என்றால் அது மிகையாகாது, மிகுந்த வலிமை பெற்ற கார்த்திகை நட்சத்திர அன்பர்கள் தமது வாழ்வில் சகல சௌபாக்கியம் மற்றும் சுபயோகங்களை தன்னிறைவாக பெற, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.

"நினைத்தாலே முக்தி நல்கும் திருவண்ணாமலை" திருக்கோவிலே கார்த்திகை நட்ஷத்திரம் முதல் பாதத்தில் பிறந்த "மேஷ ராசி" அன்பர்களுக்கு வெற்றியை பரிபூரணமாக வழங்கும் திருத்தலமாகும், தமது ஜென்ம நட்சத்திரம் அன்றோ அல்லது வளர்பிறை ஞாயிற்று கிழமை அன்றோ அண்ணாமலையாரை அபிஷேக திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, மஞ்சள் அல்லது வெண் பட்டாடை சாற்றி வழிபாடு செய்வோருக்கு, அரசியல் ஆதாயம், அரசு பதவி, அரசு வேலைவாய்ப்பு, அமைதியான இல்லற வாழ்க்கை, உடல் மற்றும் மனதில் சிறப்பான முன்னேற்றம், பிறவி பயனை முழுமையாக சுவீகரிக்கும் ஆற்றல், கல்வியில்  தேர்ச்சி, நிர்வாக திறன் அதிகம் தேவைப்படும் துறைகளில் வெற்றி வாய்ப்புகள், சுய முன்னேற்றத்தில் அதீத ஆர்வம், தொழில் வழியிலான அபரிவிதமான வளர்ச்சி, ஆன்மீக ரீதியான வெற்றி, மணிபூரகம் சிறப்பாக  செயல்படும் தன்மை, நேர்மையான வழியில் சொத்து சுக சேர்க்கை, புகழுடன் தோன்றும் புத்திரபாக்கியம், பெற்ற பிள்ளைகள் வழியிலான சௌபாக்கியம், தடைகள் யாவும் தகர்த்தெறிந்து முன்னிலை பெரும் அமைப்பு என வாழ்வில் பல வியக்கத்தக்க நல்மாற்றங்களை முழுமையாக வாரி வழங்கும்.

 குறிப்பு :

 கார்த்திகை முதல் பாதத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்றோ அல்லது ஜென்ம லக்கினம் இந்த நட்ஷத்திரத்தில் முதல் பாதத்தில் அமைய பெற்ற அன்பர்கள் அரசு பதவிகளையும் அதிகார பதவிகளையும் மிக எளிதாக சுவீகரிக்கும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வார்கள், மேலும் பொது மக்கள் நன்மதிப்பை பெற்று அரசாளும் யோகமும் இவர்களுக்கு உண்டு, ஆய கலைகளில் "ஜோதிட துறையில் " தேர்ச்சி பெற சுய ஜாதகத்தில் இந்த நட்சத்திரம் வலிமை பெற்று இருப்பது அவசியமானது, முக்காலங்களை கண்டுணரும் வல்லமையை தரும், திரு அண்ணாமலையார்  வழிபாடு கார்த்திகை நட்ஷத்திர அன்பர்கள் வாழ்வில் புகழ் மிக்க பொறுப்புகளையும் "ராஜயோகத்தையும்" தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே ! 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக