திங்கள், 2 ஜனவரி, 2012

கால சர்ப்ப தோஷம்



கால சர்ப்ப தோஷம் / யோகம்



ஒருவரது ஜாதகத்தில் இருந்தால், அவருக்கு ஏற்ப்படும் இன்னல்கள் எப்படி இருக்கும் :

 1 சரியான சூழலில் வாழும் வாய்ப்பு இருக்காது,
 2 நல்ல உடல் ஆரோக்கியம் பெற முடியாது,
 3 சிறப்பான கல்வியறிவு கிடைக்காது, கல்வியில் தடை ஏற்ப்படும்,
 4 நல்ல ஜீவனம் அமையாது, தொழில் முன்னேற்றம் கிடைக்காது, பரதேச  ஜீவனம் அமைந்து விடும்.
 5 வாழ்வில் நல்ல வாழ்க்கை துணையினை பெற முடியாது .
 6 இல்வாழ்க்கையில் தவறான தொடர்பால் நிம்மதி இன்மை, குடும்ப வாழ்வில் சிக்கல்கள் கணவன் மனைவி பிரிவு, குடும்பம் ஓரிடம் ஜாதகர் ஓரிடம் வசிக்கும் அமைப்பு.
 7 பொருளாதரத்தில் முன்னேற்றம் இன்மை, வறுமை, முதியவர்களிடம் சாபம் பெறுதல், விபத்து, குலதெய்வ சாபம், கடவுள் நிந்தனை, ஆன்மிக வாதிகளை நிந்தனை செய்தல் போன்ற குணங்கள் .
 8 மறைமுக வாழ்க்கை, பெண்களால் அவமானம், வெளிநாடுகளில் வாழும்பொழுது ஏற்ப்படும் பிரச்சனைகள்.
 9 சட்ட திட்டங்களை மீறுதல், அரச கோபத்துக்கு ஆளாகுதல், தாழ்வு மனப்பான்மை, மற்றவரை சார்ந்து வாழ்தல்.

இது மாதிரியான கெடுபலன்கள் ஜாதகர் அனுபவிப்பார் தமது 32 வது வயது வரை.



கால சர்ப்ப யோக நிலை :


தமது 32 வது வயதுக்குப் பிறகு ஜாதகருக்கு சுய ஜாதகத்துக்கு உட்ப்பட்டு அணைத்து ராஜ யோக பலன்களையும் கால சர்ப்ப யோகம்  வாரி வழங்கி விடும்.


இதுவரை இருந்த நிலை மாறி ஜாதகர் அனைத்து வசதி வாய்ப்புகளையும், குறுகிய காலங்களில் அடைந்து விடுவார்.


அரசியலில் வெற்றி, தொழில் வெற்றி, பொருளாதரத்தில் தன்னிறைவு ஆடை ஆபரண சேர்க்கை நல்ல வசதி மிக்க வீடு வண்டி வாகன அமைப்பு.

நல்ல வேலையாட்கள், தொழில் விருத்தி போன்ற நல்ல பலன்களை வெகு விரைவில் ஜாதகருக்கு வாரி வழங்கிவிடும் இந்த அமைப்பு.   

கால சர்ப்ப தோஷ நிலை, ஜாதகருக்கு பாதிக்காமல் இருக்க சரியான வழி என்ன என்பதை அடுத்த பதிவில் காண்போம் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக