ஜாதக பாவங்களில் இருந்து ஒருவீடு நன்றாக இருந்தால் தரும் பலன்கள் :
லக்கினம் நன்றாக இருந்தால் :
ஜாதகர் வளரும் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும் , மேலும் ஜாதகரின் உடல் நிலை மிகவும் நன்றாக இருக்கும், மன ஆற்றல் ,தன்னம்பிக்கை , மன நலம் , வாழ்க்கையில் சகல வளங்களும் நிறைந்து இருக்கும் , கற்பதில் ஆர்வம் அதிகமிருக்கும் , எண்ணம் செயல்பாடு நேர்மையான அமைப்பில் இருக்கும் .
இரண்டாம் வீடு நன்றாக இருந்தால் :
நல்ல அறிவு திறன் , சிறப்பான வருவாய் , குடும்பம் சிறப்பாக அமையும் , ஜாதகரின் பேச்சு திறன் சிறப்பாக அமைந்து இருக்கும் , மேலும் தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் சிறப்பாகவும் நடத்தி செல்லும் ஆற்றல் ஜாதகருக்கு அதிகம் உண்டு.
மூன்றாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகரின் மன நிலை , ஜாதகரின் நண்பர்கள் , மேலும் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்டவை , எழுத்தாற்றலின் மூலம் ஜாதகர் பெரும் நன்மை , ஜாதகர் மேற்கொள்ளும் சிறு பயணங்கள் , ஜாதகரின் மன வலிமை , தைரியம் , சிறு அதிர்ஷ்டம் போன்ற நிலைகளை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் .
நான்காம் வீடு நன்றாக இருந்தால் :
தனது தாயின் நிலை , அவரால் ஏற்ப்படும் யோக வாழ்க்கை , ஜாதருக்கு அமையும் சொத்து , சுகம் , வீடு , வண்டி வாகனம் , ஜாதகருக்கு அமையும் சொகுசு வாகனம் மற்றும் வீடு , விவசாய நிலம் மூலம் ஜாதகர் அடையும் லாபம் போன்றவை சிறப்பாக அமையும் .
ஐந்தாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகர் தனது பூர்விக இடத்தில் வசிப்பதால் நன்மைகள் அதிகம் , குழந்தை பாக்கியம் மற்றும் வாரிசு மூலம் அதிர்ஷ்ட வாழ்க்கை ஜாதகருக்கு ஏற்ப்படும் , அவர்கள் வழியே ஜாதகருக்கு ஏற்ப்படும் நல்ல பெயரும் புகழும் . ஜாதகர் அனுபவிக்கும் பொழுது போக்கு விசயங்கள் , கலை வாழ்வில் ஈடுபாடு போன்ற விசயங்கள் சிறப்பாக அமையும் .
ஆறாம் வீடு நன்றாக இருந்தால் :
உடல் நலம் முயற்ச்சியால் ஜாதகருக்கு கிடைக்கும் வெற்றி , கடன் பெறுவதால் ஏற்ப்படும் முன்னேற்றம், வழக்குகளில் கிடைக்கும் வெற்றி , தனது தாய் மாமன் மூலம் ஜாதகர் அனுபவிக்கும் நல்ல வாழ்க்கை போன்ற விஷயங்கள் சிறப்பாக அமையும் .
ஏழாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகரின் மனைவி மற்றும் ஆண் / பெண் நண்பர்கள், அவர்களால் ஏற்ப்படும் நன்மைகள் , ஜாதகரின் கூட்டாளி , தொழில் முறை கூட்டாளி , கூட்டு தொழிலால் அடையும் நன்மைகள் , தொழில் நிலையில் ஏற்ப்பாடு நிலையான வளர்ச்சி போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .
எட்டாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகருக்கு திடீர் என வரும் அதிர்ஷ்ட வாழ்க்கை , புதையல் , பூரண ஆயுள் , விபத்திலிருந்து வெகு விரைவில் உடல் நிலை முன்னேற்றம் , சொந்த தொழில் செய்யும் பொழுது ஜாதகருக்கு ஏற்ப்படும் திடீர் வளர்ச்சி , வாகன மாற்றம் .போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .
ஒன்பதாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகருக்கு ஏற்ப்படும் நல்ல பெயர் , நீதி நேர்மையான மன பக்குவம் , பாக்கியம் செய்ததால் ஜாதகருக்கு அமையும் நல வாழ்க்கை , இறை நிலையுடன் ஜாதகருக்கு ஏற்ப்படும் தொடர்பு , கடவுள் பக்தி , அறிவியல் ரீதியான ஆராய்ச்சி , அதனால் ஜாதகர் அடையும் நன்மைகள் , போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .
பத்தாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகரின் கௌரவம் , ஜீவனம் , தொழில் , சுய தொழில் செய்வதால் பெரும் அபரிவிதமான முன்னேற்றம் , தனது தகப்பனார் அவர் மூலம் ஜாதகர் அடையும் முன்னேற்றம் , வாகன சுகம் நாற்கால் ஜீவன்கள் வளர்ப்பதால் ஜாதகர் அடையும் நன்மைகள் .போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .
லாப ஸ்தானம் நன்றாக இருந்தால் :
ஜாதகரின் துணைவியார் , ஜாதகரின் நீடித்த அதிர்ஷ்ட வாழ்க்கை , எதிர் பாலினரிடம் ஏற்ப்படும் மயக்கம் , ஜாதகரின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் , ஜாதகரின் எண்ணம் பலிதம் , அனைத்து சுக போகங்களையும் அனுபவிக்கும் யோகம், போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .
பன்னிரெண்டாம் வீடு நன்றாக இருந்தால் :
ஜாதகர் அதிகமான பணம் முதலீடு செய்வதால் அடையும் லாபம், மற்றும் வாழ்க்கையில் திடீர் என நிகழும் யோகம் , நல்ல நிம்மதியான தூக்கம் , அறிவின் செயல் பாடுகள் , மன ஆற்றல் மற்றவர்களால் ஏற்ப்படும் மன நிம்மதி , ஆன்மிக வாழ்வில் ஏற்ப்படும் முன்னேற்றம் போன்ற நிலைகள் சிறப்பாக அமையும் .
ஜோதிடன் வர்ஷன்
9842421435
9443355696
நல்ல விளக்கம் ....
பதிலளிநீக்குஒவ்வொரு வீட்டின் தனித்துவத்தை அருமையாக விளக்கி உள்ளது அருமை
நம்முடைய விட்டின் ஸ்தானம் நன்றாக இருந்தால் என்ன ... கெடுதலாக இருந்தால் என்ன என்பதை இதைக்கொண்டு தெரிந்து கொள்ளலாம்
நல்லதொரு பதிவு
sir i want to know the rebirth in jathagam how to find out in 12 th house
பதிலளிநீக்கு