செவ்வாய், 31 ஜனவரி, 2012

10ம் வீடான தொழில் ஸ்தானத்தை பற்றி ஒரு பதிவு

வணக்கம்,
10ம் வீடான தொழில் ஸ்தானத்தை பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.
ஒரு ஜாதகர் என்ன தொழில்/வேலை செய்து வருமானம் ஈட்டுவார் என எப்படி கண்டுபிடிப்பது?



உதாரணமாக
1.பத்தாம் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் காரகமான தொழிலா?

2.சாரம் பெற்ற கிரகத்தின் தொழிலா?

3.பத்தாம் வீட்டுக்கு உரியவனின் காரக தொழிலா?

4.பத்தாம் வீட்டுக்கு உரியவன் சாரம் பெற்ற கிரகத்தின் காரகமான தொழிலா?

5.பத்தாம் வீட்டை பார்ப்பவனின் காரகமான தொழிலா?

6.அல்லது வேறு எப்படி முடிவு செய்வது? 


பதில் : 
       
உங்களின் கேள்வியில் உள்ளபடி ஒரு ஜாதகருக்கு தொழில் அமைய வாய்ப்பு இல்லை, 

கால புருஷ தத்துவப்படி  ஒரு ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் எந்த வீடாக வருகிறதோ, அந்த அமைப்பின் படி தொழில் அமையும்,

சர, ஸ்திர, உபய , தத்துவப்படி இயற்கையாகவே ஜீவனம் ஜாதகருக்கு அமைந்து விடும் ,

நெருப்பு ,நிலம், காற்று, நீர்  ராசிகளில் ஜாதகருக்கு ஜீவன வீடாக எது அமைகிறதோ அவ்வகை தொழில் அமைப்புகளில் வெற்றிபெறுவார் ,
மேலும் ஜீவன ஸ்தான அமைப்பு நல்ல நிலையில் இருந்தால், தொழில் அமைப்பு, ஜாதகரை தேடி வரும்,   ஜீவன ஸ்தான அமைப்பு பாதிக்கப்பட்டால் , ஜிவனத்தை தேடி இவர் செல்ல வேண்டி வரும்.

எடுத்துகாட்டாக :

               ஒரு ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் ரிஷபமாக வந்து, அந்த வீடு நல்ல நிலையில் இருந்தால், ஸ்திரமாக ஒரு இடத்தில் ஜீவனம் அமையும், மேலும் வக்கீல் , நிதி நிறுவனம் , வட்டி தொழில் , கமிஷன் தொழில் , அதிக முதலீடு செய்யப்படும் தொழில்கள் , உணவு சம்பந்தப்பட்ட தொழில்கள், பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள், வாக்கு சம்பந்தப்பட்ட தொழில்கள் என அமையும் .

தொழில் என்பது ஜாதகரின் ஜீவன ஸ்தானத்தை மட்டுமே வைத்து நிர்ணயம் செய்து விட முடியும், இத்தனை குழப்பங்கள் தேவையில்லை, இதை நிர்ணயம் செய்ய கண்டிப்பாக சுய ஜாதகம் தேவை.


தமிழக முக்கிய நபர்கள் சிலரை செயல் இழக்க வைத்த கதைகள் நிறைய உண்டு.


 கேள்வி :

 அதனால் அவர்களுக்கு என்ன லாபம் ?
(எதிரிகள் தொந்தரவு ஏற்படும் என்று பயமா ?)
விளக்கவும்
அய்யா பழைய பாடல்களில் ஜோதிட குறிப்பு இல்லையா?
பரிஹர்ரம் இல்லையா ?
சித்தர்களின் பாடல்கள் மற்றும் புலிபானி அவர்களின் பாடல்கள் நிறைய ஜோதிட குறிப்புகள் கொடுத்துள்ளனர் ?? விளக்கவும்.

 பதில் : 
முக்கிய நபர்களின் ஜாதகங்கள், தீய எண்ணம் கொண்ட மற்றவர்களுக்கு கிடைக்கும் பொழுது, அவர்கள் ஜாதகரை பல வழிகளில் செயல் இழக்க வைக்க முடியும், அஷ்டம சித்து எனும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களால் இக்காரியங்களை சரியாக செய்யும் ஆற்றல் படைத்தவர்கள். 

எனவே அவர்களது ஜாதகங்கள் மறைக்கப்படுகின்றது,
இக்கலையினை பயன்படுத்தி தமிழக முக்கிய நபர்கள் சிலரை செயல் இழக்க வைத்த கதைகள் நிறைய உண்டு.

இதில் அதிகம் பாதிக்க பட்டவர்கள் தமிழகத்தில் சிறந்த அரசியல் வாதிகள், கலை துறையை சேர்ந்தவர்கள், தொழில் அதிபர்கள் என பட்டியல் நீளுகிறது, 

ஒருவருடை உண்மையான ஜாதகம் இருந்தால் அவரை உலகின் சிறந்த மனிதராகவும் மாற்ற முடியும் அல்லது உலகின் கடை கோடியிலும் நிறுத்த முடியும்( இது அவருக்கு தெரியாமலே ), இந்த அஷ்டம சித்துவின் மூலம். இதை துரியம் நன்றாக செயல் படுபவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்

பழைய பாடல்களில் பரிகாரங்கள் மறை முகமாகவே உணர்த்தப்படுகிறது , ஒரு பாடலுக்கு ஒன்பது விளக்கங்கள் உண்டு, என்பதினை தமிழ் பழைய பாடல்கள் ஆராய்ச்சி செய்பவர்கள் தமிழ் ஆர்வலர்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம், 

மேலும் பரிகாரம் என்பது ஜாதகரே செய்யும் அமைப்பில் மட்டுமே உள்ளது எடுத்துக்காட்டாக ஒருவருக்கு பத்தாம் வீடு என்பது ஜீவனம் மற்றும் தகப்பனார் வகை காரக பலன்களை வழங்கும்,
( பாரம்பரிய முறையில் ஒன்பதாம் வீடு தகப்பனார் ஸ்தானம் என்பார்கள் )

இந்த பத்தாம் வீடு ஒருவருக்கு பாதிப்படைந்தால், அந்த ஜாதகருக்கு தக்கப்பனார் வழியில் பதிப்பு இருந்து கொண்டே இருக்கும் அதற்க்கு ஜாதகர் அவரது தகப்பனார் மூலம் எவ்வித துன்பம் ஏற்ப்பட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு, அந்த காரக கர்ம வினை பத்தி வினை கழித்துக்கொள்ள வேண்டும், இதுவே சரியான பரிகாரம், ஏனெனில் அவர் கடந்த பிறவியில் இந்த காரக சம்பந்தபட்ட பாவ வினையினை செய்திருப்பார்.

சித்தர்கள் எப்பொழுதுமே தீர்க்க  தரிசிகள், அவர்களது பாடல்களில் ஜோதிட குறிப்புகளை நாம் அறிந்து கொள்ள சுழி முனையில் நின்று மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும், இதற்க்கு கடுமையான பயிற்ச்சிகள் தேவை, மேலும் அவர்களது அருளாசி கண்டிப்பாக தேவை.
   
மேலும் வரும் ...
ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 

திங்கள், 30 ஜனவரி, 2012

ரஜினி போன்றோர்களின் ஜாதகம் காலசர்ப்ப தோஷமே.அவர் சிறப்பாக இல்லையா?

venkatesa gurukkalJan 30, 2012 06:40 AM

கேள்வி 
வணக்கம்,

1.காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தை அதே போல் தோஷம் உள்ளவர்களோடுதான் திருமணம் செய்விக்கவேண்டுமா?


2.அப்படித்தான் எனில் ரஜினி போன்றோர்களின் ஜாதகம் காலசர்ப்ப தோஷமே.அவர் சிறப்பாக இல்லையா?மேலும் அவர் அதே தோஷம் உள்ள மனைவியைத்தான் திருமணம் செய்தாரா?(கேள்வியை விளக்கவே அவர் பெயரை பயன்படுத்தினேன்) .

இதுபற்றிய ஒரு பதிவை வழங்கினால் ஜோதிட ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.நன்றி

பதில் : 


உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓஞ்சு போயிடுவேன் போல இருக்குதே , அப்பா இப்பவே கண்ணக்கட்டுதே ?

சரி பரவாயில்ல சந்தேகத்தை தீர்ப்பதே எனது தலையாய கடமை, உங்களின் ஆர்வத்துக்கு எனது பாராட்டுக்கள், அன்பு நண்பரே நீங்கள்  சொல்லுவது போல், 
சில பத்திரிகைகளில் அல்லது நெட்டில் அவரது ஜாதகத்தை போட்டு இருப்பதை  பார்த்து நீங்கள் குழம்பி விடவேண்டாம், ஏனெனில் அவை அவரது உண்மையான ஜாதகங்கள் இல்லை.

மேலும் நெட்டில் பத்திரிகைகளில் உலாவரும் , முதல்வர் ஜெயலலிதா , முன்னால் முதல்வர் கருணாநீதி ,   நடிகர்கள் , நடிகைகள் , இசை அமைப்பாளர்கள் , ஆன்மிக வாதிகள் , அனைவரது ஜாதகங்களும் பொய்யானவை என்பது பலருக்கு தெரிவதில்லை , அவர்களது உண்மை ஜாதகங்கள் ரகசியமாக மறைக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து கொள்ளுமாறு தயவுடன் தங்களை வேண்டுகிறேன்.

அவர்களது உண்மை ஜாதகங்களை ஆராய்ந்தவன் என்ற முறையில் எமது பணிவான வேண்டுகோள் இது .

உங்கள் முயற்ச்சி மற்றும் தேடுதல் அவர்களின் உண்மையான ஜாதகத்தை உங்களுக்கு நிச்சியம் தெரிவிக்கும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
  9443355696 
   

உங்களின் கேள்விக்கான பதில் :



1.காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தை அதே போல் தோஷம் உள்ளவர்களோடுதான் திருமணம் செய்விக்க வேண்டும் என்பது முற்றிலும் தவறான கருத்து ஜோதிடர்கள் எதை வைத்து காலசர்ப்ப தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் , ராகு கேது  தோஷம் என்று நிர்ணயம் செய்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை, இதற்க்கு நீங்களே ஒரு விளக்கம் தரவும் அல்லது காலசர்ப்ப தோஷம் உள்ள உதாரண ஜாதகம்  இரண்டினை எமக்கு அனுப்புங்கள். அதைப்பற்றி நாங்கள் விளக்கம் தருகிறோம் ,


2 . மேலும் பழைய பாடல்களை பாடி ஜோதிடம் சொல்லுவதை விட்டு ஜோதிட அறிவியலை அடுத்த கட்டத்துக்கு நாம் எடுத்து செல்வோம் , ஜோதிடத்தின் உண்மை நிலையை அனைவருக்கும் புரிய வைப்போம்.



3 . ஜோதிட சாஸ்திரம் மிகவும் புனிதமான கலை இக்கலையினை துணைகொண்டு,மூட நம்பிக்கைகளை களைந்து  நமது வாழ்வினை செம்மை படுத்தி  வளமான  வாழ்க்கையினை அனைவரும் பெறுவோம்.



நல்ல நிரோட்டம் உள்ள

veluJan 30, 2012 03:54 AM

கேள்வி :
மிகவும் பயனுள்ள்ள தகவல். நான் இந்த ரத்தினம் அணியலாம??? பொருளாதார முன்னேற்றம் கிட்டுமா ?
அணியலாம் என்றால் -உங்களிடம் அந்த ரத்தினம் உண்டா? அதன் விலை என்ன???
வேலு
கோயம்புத்தூர்


பதில் :

          வசியம் நீங்கள் இதை  முறைப்படி சுத்தி செய்து பஞ்ச முக  அமைப்பில் தங்கத்தில் வைத்து அணிந்து கொள்வது நன்மை தரும் , அனைத்து அதிர்ஷ்டங்களையும் பெற வாய்ப்பளிக்கும் , பொருளாதார முன்னேற்றம் நிச்சியம் உண்டு , மற்றும் அபரிவிதமான செல்வாக்கினை பெற இயலும், தொழில் முன்னேற்றம் என்பது இயற்கையாக அமைந்துவிடும்.

எங்களிடம் இந்த ரத்தினம் உண்டு பதிவு செய்தநாளில் இருந்து 22 நாட்களில் பெற்று கொள்ள  முடியும் , மேலும் சான்றிதழுடன் கிடைக்கும், எங்களிடம் மட்டும் இந்த ரத்தினம் பலனிக்கவில்லை என்றால் பணத்தை திரும்ப பெற்றுகொள்ளலாம் , 

நல்ல நிரோட்டம்  உள்ள alex விலை 22,000  முதல் 2,50 ,000  வரை  உள்ளன விருப்பம் உள்ளவர்கள் அணுகலாம்.

அல்லது உங்களுக்கு தெரிந்த இடங்களில் இரத்தின பரி சோதனை செய்து வாங்கி பயன்படுத்தலாம் .

மேலும் தொடர்புக்கு 
ஜோதிடன் வர்ஷன்
9842421435 , 9443355696 

 

ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள்

veluJan 30, 2012 04:06  கேள்வி 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல்
வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர
ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு.
ஆனால் 80% சதவிகிதப் பலன்கள் மட்டுமே இருக்கும். அதாவது
ஏற்படும் துன்பங்களில் 20% கன்செஷன் உண்டு:-))))

சிலர் கால சர்ப்ப தோஷம் இல்லாவிட்டாலும், இருப்பதைப் போன்ற
அளவிற்குத் துன்பப்படுவார்கள். அதற்குக் காரணம், அந்த ஏழுகட்ட
அமைப்பு இல்லாவிடினும், அவர்களுடைய ஜாதகத்தில் முக்கியமான
கிரகங்கள் எல்லாம், ராகு அல்லது கேதுவின் நட்சத்திர சாரத்தில்
(திருவாதிரை, சுவாதி, சதயம் - அஸ்வினி, மகம், மூலம் )இருக்கும்.
அதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும். subbiah
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அய்யா இது நான் படித்து ..இதன்படி தான் எனக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளதா என்று கேட்டேன் ..விளக்கவும் ?



 பதில் :


இது முற்றிலும் தவறான கருத்து ஆகும் ,  உங்களின் ஜாதக அமைப்பில் ராகு கேது நல்ல நிலையில் உள்ளனரா அல்லது, கெடுதல் செய்கின்றனர என்பதையே, தெரிந்து கொள்ளாமல் குத்து மதிப்பாக ஒரு கருத்தை சொல்லுவது, மிகவும் நகைப்ப்புகுரியது, 

பொதுவாக எந்த ஒரு கிரகமும் தள்ளுபடி போனஸ் எல்லாம், எந்தகாலத்திலும் தர வாய்ப்பில்லை,  அப்படி செய்யதால் அது கிரகமே அல்ல என்பதே உண்மை.

ஒரு ஜாதக அமைப்பில் எந்த ஒரு கிரகமும் தான் செய்ய வேண்டிய பணிகளை சரியாக செய்து விடும், அது நன்மையானாலும் தீமையானாலும் இதுவே கிரக தத்துவம்.   

உங்களது ஜாதக அமைப்பில் ராகு கேது எனும் இரு கிரகங்களும் மிகவும் நல்ல நிலையிலேயே உள்ளன ,

இதன் அமைப்பில் உங்களது 5  ம், 11 ம் , வீடுகள்  முறையே நன்மையான பலனையே ஜாதகர் அனுபவிப்பார்.

5  ம்  பாவத்தால் நடக்கும்  நன்மைகள் :

ஜாதகர் தமது பூர்விகத்தில் இருந்தால் படிப்படியான முன்னேற்றம் பெறலாம் ,
( இதில் பூர்வீகம் என்பது ஜாதகரின் தகப்பனார் பாட்டனார் வாழ்ந்த ஊர் அதை சுற்றி 50 கிலோ மீட்டர் ) பூர்விகத்தை விட்டு வெளியே வந்து விட்டால், ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியாது, மேலும் குல தெய்வத்தின் பரிபூர்ண அருளாசி எப்பொழும் உண்டு , தமது குழந்தைகளால் ஜாதகர் நன்மையான பலன்களை மட்டுமே அனுபவிப்பார்,
தமது குல தெய்வ வழிபாட்டினை முறையாக செய்து வர அனைத்து நலன் களும் அடையப்பெருவார் , உதவி செய்ய பலர் முன்வருவார்கள் , சாஷ்திரத்தில் நல்ல ஞானம் ஏற்றப்படும், வருமுன் அறியும் உணர்வு இயற்கையிலேயே அமைந்து விடும்,  நல்ல குணம் , நல்லறிவு இதன் துணையால் எவ்வித பிரச்சனைகளுக்கும்  தீர்வு காணும் அமைப்பு ,  ஐந்தாம் வீட்டில் அமர்ந்த ராகுவால் ஏற்ப்படும் , ஆனால் ஜாதகர் தினமும் சூரியன் வருவதிற்கு முன்பே சூர்யா நமஸ்காரம் செய்து வருவது அவசியம் , அப்பொழுதுதான் இந்த யோகங்கள் முழுமையாக கிடைக்க பெறுவார்.

11  ம்  பாவத்தால் ஏற்ப்படும் நன்மைகள் :

இரண்டாவது திருமண வாழ்க்கையினால் நன்மை , 34 வயதுக்கு மேல் சிறப்பான முன்னேற்றம், சுய தொழில் செய்வதால் முன்னேற்றம், புதையல் லாபம், ( புதையல் என்றவுடன் சற்றே சிந்திக்கவும் தமது அறிவாற்றலால் புதையலுக்கு இடாக வருவாயினை  பெறுவது ) தம்மை விட வயது அதிகம் உள்ளவர்களால் இலாபம் , வெளிநாடுகளில் இருந்து வரும் அதிக வருவாய் , சக்தி வழிபடு செய்வதால் நல்ல முன்னேற்றம், வருடம் ஒருமுறை திருப்பதி வளர்பிறை திங்கள் அன்று சென்று வழிபாடு செய்வதால் சகல அதிர்ஷ்டங்களையும் அடையும் வாய்ப்பு போன்ற நல்ல பலன்களை கிடைக்கபெறலாம்,
மேலும் விரிவான பலன் தெரிந்து கொள்ள நேரில் வருவது சிறப்பு :

சனி, 28 ஜனவரி, 2012

செல்வ செழிப்பை தரக்கூடியது , செல்வந்தர்கள் அவசியம் அணிந்து கொள்ள வேண்டிய ரத்தினம் இது.

venkatesa gurukkal Jan 25, 2012 06:14 AM
சார்,
மிக்க நன்றி.
என் அவசரக்கோளாரால் ஒருவருக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும்.எனக்கு தெளிவூட்டியமைக்கு மிக்க நன்றி.


அந்த கல்  (Alexandrite)  பற்றி விளக்கம் தெரியலையே.
அது பற்றி ஒரு பதிவு போட்டால் என்போன்ற பல ஜோதிட மாணவர்களுக்கு வழிகாட்டி தீபமாக விளங்கும்.
உங்களின் அடுத்த பதிவை எதிர்நோக்கி...
உங்கள் மாணவன்

(கண்டிப்பா இது ஐஸ் வைக்க இல்லீங்க)
 Alexandrite



இது மிகவும் விலையுர்ந்த ரத்தினம் ஆகும் . இந்த ரத்தினம் பகலில் ஆலிவ் பச்சை நிறத்திலும், இரவில் செயற்கை வெளிச்சத்தில் வைலெட் அல்லது சிகப்பு நிறத்தில்  காட்சி தரும் , இந்த கற்கள் மரகதம் , மாணிக்கம், வைரத்தை விட விளையுர்ந்ததாகும்,  

இது ரஷ்யா, மற்றும் பிரேசில் , ஸ்ரீ லங்கா , ஜிம்பாவே , தான்சானியாவிலும் அதிக அளவில் கிடைகின்றது , ரஷ்யாவிலும்  &  இங்கிலாந்து நாடுகளில் கிடைக்கும் கற்கள் மட்டும் மிகவும் சிறந்ததாக இருக்கின்றது.


சூரியன் , புதன் , சுக்கிரனின் கிரக சக்தி குறைந்தவர்கள் , எமது ஆலோசனை படி இந்த கல்லினை அணிந்தவர்களுக்கு, சூரியன் , புதன் , சுக்கிரனின் கிரக சக்தியை  அதிக அளவில் கிரகிக்க வைத்து, வாழ்வில் சகல யோகங்களையும் பெற்று வளமுடன் வாழ்கின்றனர் .

குறிப்பு : இந்த ரத்தினத்தை முறைப்படி சுத்தி செய்து அணிந்தால் மட்டுமே நல்ல பலன்கள் கொடுக்கும் .
இந்த ரத்தினத்தை அணிவதால் கிடைக்கும் பலன்கள் :

நிங்கள் நினைக்கும் எந்த காரியங்களையும் வெற்றிகரமாக முடித்து தரக்கூடியது .

செல்வ செழிப்பை தரக்கூடியது , செல்வந்தர்கள் அவசியம் அணிந்து கொள்ள வேண்டிய ரத்தினம் இது.
மக்கள் செல்வாக்கினையும் நன் மதிப்பினையும் தரக்கூடியது, பேச்சு திறமை அபரிவிதமாக வெளிப்படும் திறன் படைத்தது ,

நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு நிர்வாக திறனை தரக்கூடியது, நிங்கள் பணிபுரியும் இடத்தில் வெகு விரைவில் பதவி உயர்வினை தரக்கூடியது ,
வாழ்வில் ஸ்ரீ யின் பரிபூரண அருளை நிலைத்து நிற்க செய்வது இந்த ரத்தினத்தின் தன்மையாகும், 

மேலும் அபரிவிதமான புத்திசாலி தனம் இந்த ரத்தினத்தை அணிவதால் உண்டாகும் .
ஒரு மனிதனுக்கு எவ்வளவு செல்வம் கொடுத்தாலும் அது அழிந்து விடும் , ஆனால் ஞானம் எனும் கல்வி அறிவு எக்காலத்திலும் அழியாது , அந்த ஞானம் எனும் கல்வி அறிவு பரிபூரணமாக அமைய இந்த ரத்தினம் நிச்சயம் உதவி புரியும்.

தரகு மற்றும் ஒப்பந்த தொழில் செய்வோருக்கு,  இந்த ரத்தினம் மூன்று மாதத்தில் அபரிவிதமான செல்வ வளத்தையும், முனேற்றத்தையும் தந்துவிடும், என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மை, 




எந்த அமைப்பை பெற்றவர்கள் இந்த ரத்தினத்தை அணிந்தால் சிறப்பான வாழ்வினை பெறலாம்


பிறந்த தேதியில் மற்றும் கூட்டு எண்ணில் 2 ,11 ,20 ,29    7 , 16 , 25     8 , 17 , 26  இந்த எண்ணை பெற்றவர்களும் , 


ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் / யோகம்  உள்ளவர்களும் ,  சுய ஜாதகத்தில் சூரியன், புதன் , சுக்கிரன் ஆகிய கிரக சக்தி குறைவு  & பாதிப்பு உள்ளவர்களும்.


மருத்துவர் , வழக்கறிஞர் , அரசியல் வாழ்வில் உள்ளவர்கள் , பொதுஜன மார்க்கத்தில் உள்ளவர்கள் .

பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இல்லாமல் போராட்ட வாழ்வினை அனுபவித்துக்கொண்டு உள்ளவர்கள் .

திறமையிருந்தும் வெற்றி பெற இயலாமல் இருப்பவர்களும் .

முக்கியமாக சுய தொழில் செய்வோர், அனைவரும் வாழ்வில் வெற்றி பெற இந்த ரத்தினம் மிகவும்  உறுதுணையாகவும் வெற்றியை வாரி வழங்கும் ஸ்ரீ யாகவும் இருந்து உங்கள் வாழ்வில் சகல ஐஸ்வர்யத்தையும் பெற்று தரும் என்பதில் ஸ்ரீ நிவேதா ஜோதிடத்திற்கு  இம்மியளவும் சந்தேகம் இல்லை .

இந்த ரத்தினத்தின் இரசாயன குணங்கள் மற்றும் விலை  பற்றிய விவரங்களுக்கு  ஸ்ரீ நிவேதா ஜோதிடத்திற்கு அலை பேசியில் அழையுங்கள் .

வாழ்க வளமுடன்  

ஜோதிடன் வர்ஷன் 
98424  21435 ,  94433 55696

"சிறந்த ஜோதிடருக்கான விருது"! 26 /01 /2012

 சிறந்த ஜோதிடருக்கான விருது

கடந்த 26 /01 /2012 அன்று சென்னையில் தமிழ்நாடு சினிமா கலை மன்றத்தின் செயலாளர்   "விருது செம்மல்" திரு எம் . விஜயன் அவர்களால் ,


சிறந்த ஜோதிடருக்கான "ஜோதிட சுடர் ஒளி" எனும் விருதினை எங்களது, "ஸ்ரீ நிவேதா ஜோதிடத்திற்கு" வழங்கி கௌரவித்தனர்.

 தமிழ்நாடு சினிமா கலை மன்றத்தின் செயலாளர்   "விருது செம்மல்" திரு எம் . விஜயன் அவர்களுக்கும் மற்றும் மன்றதார்க்கும் எங்களது, 
"ஸ்ரீ நிவேதா ஜோதிடத்தின்  மனமார்ந்த நன்றிகள்,


மற்றும் இந்த விருதினை வழங்கி வாழ்த்திய நடிகர் திரு பாண்டியராஜன் அவர்கள்.
  
மற்றும் "பாவி" பட வில்லி நடிகை திருமதி  மெனுகுரியன்

மற்றும் டிவி செய்தி வாசிப்பாளர் "குரல் ஒலி" மிஸ் சௌதமணி அவர்களுக்கும் , 

எங்களது "ஸ்ரீ நிவேதா ஜோதிடத்தின்"  மனமார்ந்த நன்றிகள்,



புதன், 25 ஜனவரி, 2012

6 ம் வீடு, 8 ம் வீடு, 12 ம் வீடு என்றவுடன் ?

venkatesa gurukkalJan 25, 2012 03:31 AM
எனது கேள்விக்கு பதிலை பதிவாகவே இட்டமைக்கு நன்றி.


1.நான் இவரை கனக புஷ்பராகம்(நீச லக்னாதிபதிக்காக) போட சொன்னேன்.அது சரிதானே?

2.என் கணிப்பின் படி
6ம் அதிபதியான சுக்கிரனின் தசாபுக்திகள்,
8ம் அதிபதியான சந்திரனின் தசா புக்திகள்,
12ம் அதிபதியான செவ்வாயின் தசா புக்திகள் இவருக்கு நன்மை செய்யாது.இது சரியா?

3.என் கணிப்பின் படி 7ம் அதிபதியான நடப்பு புதன் தசையில் நடப்பு குரு புக்தியில் இவருக்கு திருமணம் நடக்கும்.அல்லது வரும் கேது தசையில் குரு(அ)புதன்,சுக்கிர புக்தியில் நடக்கலாம்.இது சரியா?

4.ஒன்பதிற்குறிய சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்றும்,11க்கு உரிய சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்றும் ஜாதகர் நிலையில்லா வருவாயில் உள்ளார்.இதற்கு காரணம்
சூரியனோடு சேர்ந்த ராகு.
லாபஸ்தானத்தில் அமர்ந்த கேது
10ம் அதிபதி புதன் நீசம்.
இது சரியா?


ஐயா மேற்கண்ட கேள்விகள் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.எனது ஜோதிட பயிற்சிக்கு இதையே உதாரண ஜாதகமாக எடுத்துள்ளேன்.எனவே ப்ரச்சனைகளை புரிந்து அதற்கான ரெமிடியை பரிந்துரைத்து அதை நேரிலேயே பரிசோதிக்கவிருப்பம்.
 பதில் 1 :
                  கனக புஷ்பராகம் அணிவது தீமையான பலனை தரும், லக்கினம் ஆறாம் வீட்டுடன் தொடர்பு , எனவே இவர் செய்யும் காரியங்கள் அனைத்தும் இவருக்கு எதிராக திரும்பும் .

 பதில் 2  :
                    முதலில் 6 ம் வீடு, 8 ம் வீடு, 12 ம் வீடு என்றவுடன் அது அதன் அதிபதி ஜாதகருக்கு கெடுதல் செய்யும் என்று கணிப்பது தவறு, சுய ஜாதகத்தில் இந்த வீடுகள் பாதிப்படைந்து இருந்தால் மட்டுமே, கெடுதல் செய்யும் அதன் திசை புத்திகளில், மாறாக அந்த வீடுகள் நல்ல நிலையில் இருந்தால், அந்த வீடுகளின் காரக முறைப்படி பல நன்மையான பலன்களையே வாரி வழங்கிவிடும் , 
உதாரனத்திற்க்கு :

8 ம் வீடு கெட்டால் திடீர் இழப்பு , நன்றாக இருந்தால் திடீர் வரவு 
 பொதுவாக அனைத்து வீடுகளும் நன்றாக இருந்தால் மட்டுமே அதன் திசை புத்திகளில் நன்மைதரும், கெட்டு விட்டால் எந்த வீடும் நன்மைதராது .

இந்த ஜோதிட கலையில் சிறந்து விளங்க , குருவின் வழிகாட்டுதல் ஜோதிடத்தில் நல்ல ஈடுபாடு , தேடுதல் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு இறை நிலை சரியான வழிகாட்டும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.    

பதில் 3  :

 இவர் 23 வயதிலேயே காதல் வயப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது , திருமண தாமத்திற்கு ஜாதகரே காரணம் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவும் .
மேலும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய இனி வரும் காலங்கள் வழி வகுக்கும்.

பதில் 4 : 

ஜாதகரின் அமைப்பில் தொழில் ஸ்தானம் மட்டும் பாதிப்படைந்துள்ளது , லாப ஸ்தானம் நல்ல நிலையில் உள்ளது . கேது நன்மையை மட்டுமே செய்துகொண்டு இருக்கிறார், ஜாதகரின் தகப்பனார் உடன் இருக்கும் பட்சத்தில் தொழில் அமைய வாய்ப்பில்லை , சூரியன் இருப்பது 4 ம் வீட்டில் , ராகு இருப்பது 5 ம் வீட்டில் எனவே இந்த இரு கிரகங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை தனது பாட்டனார்  தகப்பனார் வாழ்ந்த ஊரைவிட்டு 100 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தால் ஜாதகருக்கு ஜீவனம் நன்றாக அமையும் . 

குறிப்பு : alexandrite எனும் கல் மட்டும் ஜாதகருக்கு நன்மைதரும்.

செவ்வாய், 24 ஜனவரி, 2012

ஜோதிட கேள்வி பதில்

கேள்வி 
 
venkatesa gurukkalJan 23, 2012 07:47 AM
எனது நண்பரின் ஜாதகம் இது
17.4.1985,
23:30
NEYVELI
உத்திரட்டாதி 2,மீனம்
தனுசு லக்னாதிபதியான குரு 2ல்மகரத்தில் நீசம்.5ல் சூரிய ராகு சேர்க்கை,5க்கு உடைய செவ் 6ல்.
12ல் சனி.
இவ்வளவு மைனஸ் உள்ளது.இவர் எதை தொட்டாலும் அரைகுறையாகவே முடிகிறது.விரக்தியாகவே உள்ளார்.இதற்கான தீர்வு என்னால் கூற முடியவில்லை.லக்னாதிபதியே அதுவும் குருவே நீசனானதால்

 மேற்கண்ட ஜாதகருக்கு நடக்கும் திசை புதன் , இந்த  புதன் திசை  நான்காம் வீட, 11 ஆம் வீட்டுடன் தொடர்பு பெற்று பலனை நடத்திக்கொண்டுள்ளது ,

இது ஜாதகருக்கு நான்மையான பலனை முழுமையான அளவில் தரவில்லை, மேலும் ஜாதகரின் லக்கினம் ஆறாம் வீட்டுடன் தொடர்பு எனவே அவர் செய்யும் காரியங்கள் அவருக்கே எதிர்பதமாக அமைந்து விடும். ஜீவன விடும் ஆறாம் வீட்டுடன் தொடர்பு  எனவே தொழில் முறையிலும் பெரிய வெற்றியை பெற முடியாது , மேலும் வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளினால் அவதியுற நேரும்.
திடீர் இழப்புகளை தவிர்க்க முடியாது ,  இந்த ஜாதக அமைப்பை பெற்றவர் தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து, சூரிய உதயத்திற்கு முன்பே சூரிய நமஷ்க்காரம், செய்துவரவேண்டும்.

மேலும் சனி சுக்கிர பகவானுக்கு முறைப்படி ஜாதகரே சென்று  வக்கராக நிவர்த்தி செய்து நலம் பெறலாம் .
ஜாதகருக்கு ( சூரியன் புதன் சுக்கிரன் சக்தி ) நிறைந்த,  alexandrite ராசி ரத்தினத்தை முறை படி சுத்தி செய்து மோதிரமாக வலது கை மோதிர விரலில் பயன் படுத்தினால் ஜாதகத்திற்கு உட்பட்டு  அனைத்து யோக பலன்களையும் அனுபவிக்க இயலும் .

மேலும் தொடர்புக்கு 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 
9842421435 
 




திங்கள், 23 ஜனவரி, 2012

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே !

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே !


ஆம் இதுவே உண்மை ஜாதகர் ஒருவருக்கு நான்காம் வீடு எந்த திசையுடன் சம்பந்தம் பெறுகிறதோ அத்திசையில் அமைந்த விடுகளில் குடியிருப்பின் ஜாதகத்தில் உள்ள  யோக பலன் அனைத்தும் விருத்தி பெரும் .

மேலும் ஜாதகருக்கு அடிப்படையில் இருந்து கிடைக்கவேண்டிய நல்ல பலன்கள் அனைத்தும் நிறைவாக பெற இயலும், அதாவது கல்வி, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், பலமுனை வருவாய், சொத்து சுகம் , அனைத்தும் நிறைவாக பெற இயலும். ஜாதகருக்கு நான்காம் வீடு நல்ல வீட்டுடன் தொடர்பு பெற்றால் இந்த பலன்களை எல்லாம் அனுபவிக்க முடியும்.
இதுவே நான்காம் வீடு    2 , 6 , 8 , 12 ஆம் வீடுகளுடனோ அல்லது பாதக வீட்டுடனோ தொடர்பு பெற்று சம்பந்த பெற்ற வீடுகளின் திசையில், ஜாதகர் குடியிருப்பின் ஜாதகர் பாடு திண்ட்டடம்தான், 

சில ஜாதகங்களில், பல ராஜ யோகங்கள் இருந்தாலும், அதை முழுமையாக அனுபவிக்க முடியாததிற்கு  காரணம் அவர், தனக்கு நன்மை தரும் திசையில் தலை வாசல் அமைந்த, விடுகளில் ஜீவனம் செய்யாதது மட்டுமே காரணம் ஆகும் . 

 இந்த ராகசியம் எமது  ஆஸ்தான குரு ஜோதிட சாம்ராட் அருள்வேல் அய்யா எமக்கு போதித்தது .

அருள்வேல் அய்யா அடிபணிந்து 
ஜோதிடன் வர்ஷன்
9443355696 , 9842421435  

ஐந்தாம் வீடு கேள்வி பதில்

venkatesa gurukkalJan 21, 2012 07:48 PM
இது புரியவில்லையே,
இன்னும் சற்று விளக்கமுடியுமா?லக்னம் முதல் என்ன 5ம் வீடு அப்படித்தானே.ஆனால் லக்ன ஆரம்ப பாகை என்கிறீரே,சற்று விளக்கவும்?
 உதாரண ஜாதகம் :
 மேற்கண்ட ஜாதகத்தில் இலக்கணம் சிம்மமாகவும், ஐந்தாம் வீடு தனுசாகவும் வந்து ஐந்தில் ராகு அமர்ந்து இருப்பது  போல் காணப்படுகிறது , உண்மை நிலை என்னவென்று பார்ப்போம்.


ஜாதகர் பிறந்த நேர அமைப்பின் படி அவருக்கு சிம்ம லக்கினம், சிம்ம லக்கினம் பொதுவாக கால புருஷ தத்துவ முறைப்படி 120 பாகை முதல் 150 வரை உள்ளது. இதில் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடு சிம்மத்தில்  148 . 57 பாகை ஆரம்பித்து கன்னியில் 179 . 29 பாகையில் முடிவடைகிறது . இதுவே சரியான கணிதம்.


இதில் ஒரு கேள்வி அனைவர் மனதிலும் எழும் அது லக்கினம் , சிம்மமா கன்னியா , இதில் சந்தேகமே தேவையில்லை  லக்கினம்  சிம்மதான், லக்கினம் எந்த பாகையில் ஆரம்பிக்கிறதோ அந்த ராசியே லக்கினமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


பெரும்பாலும் ஜோதிடர்கள் ஒரு லக்கினத்தை கணக்கில் கொள்ளும் பொழுது முதல் பாகையிளிருந்தே கணித்துவிடுகின்றனர் இது முற்றிலும் தவறான கணிப்பாகும் இதனால் ஜோதிடமே பொய்யாகும் வாய்ப்பு உள்ளது .
இதனால் ஒரு கிரகம் எந்த வீட்டில் உள்ளது என்று தெளிவாக தெரிந்துகொள்ள முடிவதில்லை, மேலும் பலன் சொல்லும் பொழுது பலன் தவறாக போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இனி பதிலுக்கு வருவோம் இந்த ஜாதகத்தில் மேலோட்டமாக பார்த்தால் ராகு ஐந்தில் இருப்பது போன்ற தோற்றம் தரும் உண்மையில், ஐந்தாம் வீடு ஆரம்பிக்கும் பாகை 268 . 42 , ஆனால் ராகு இருப்பதுவோ 262 . 34 எனவே ராகு பகவான் இருப்பது தனுசில் உள்ள நான்காம் வீட்டில். இதுவே உண்மை நிலை,
இதுவே ஜாதகருக்கு செயல் படும். 



விளக்கம் போதும் என்று நினைக்கிறேன் .
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
94433 -55696 98424 -21435

 

வெள்ளி, 13 ஜனவரி, 2012

சர்ப்ப தோஷம் கேள்வி பதில்!

Jan 12, 2012 02:33 AM
அய்யா , ராகு கேதுவிற்கு இடையில் மற்ற ராசி அமைய அது கால சர்ப்ப தோஷம்,சந்திரன் வெளியில் இருந்தால் அதுவும் கால சர்ப்ப தோஷம் என்று ஒரு நூலில் எழுதிஉள்ளனர். அது உண்மைய? என்னுடைய பிறந்த தேதி 2-10-1976 . 11.30pm coimbatore. 32வயதிற்குமேல் தோஷம் யோகமாக மாறுமா? இல்லை ஒன்னாம் வீட்டின் பரல் எண்ணிக்கைக்கு பிறகு மாறுமா? தெளிவு படுத்தவும்
velu Coimbatore

திரு வேலு அவர்களுக்கு!

தங்களது ஜாதக அமைப்பில் சர்ப்பதோஷம் இல்லை மேலும் குரு திசை நன்மையான பலனை தரவில்லை 3 ,12  - விடுகளுடன் 12 ம் வீடு தொடர்பு எனவே நல்ல ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது நலம் தரும்.

மேலும் தொடர்புக்கு 
ஜோதிடன் வர்ஷன்  94433 - 55696 

செவ்வாய், 10 ஜனவரி, 2012

கால சர்ப்ப தோஷ நிவர்த்தி





பெருமை மிகு கொங்கு மண்டலம்  ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு-கோபி செல்லும் வழியில்  உள்ள, தங்க மேடு என்னும் இடத்தில், கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமான தம்பிக்கலை அய்யன் கோவில், பல ஆண்டுகளாக சகல சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாக அருள் பாலித்து வருகிறது.

இங்கு வரும் அனைவருக்கும்  தம்பிக்கலை அய்யன், சகல சர்ப்ப தோஷங்களையும் நிவர்த்தி செய்து, சகல ஐஸ்வர்யங்களையும் பாகுபாடு இல்லாமல் வாரி வழங்கி வருகிறார்,

சுய ஜாதகத்தில் எவ்வித ராகு கேது , சர்ப்ப தோஷ நிலையால் பதிக்கப்பட்ட அனைவருக்கும் நல்ல பலன் தரும் ஒரே ஸ்தலம் இதுவே ஆகும்.

மேலும் திருமண தடை உள்ளவர்கள் ராகு கால நேரத்தில் இங்கு வந்து முறை படி சர்ப்பதோஷ நிவர்த்தி செய்து கொள்பவர்களுக்கு வெகு விரைவில் திருமண வாழ்க்கை அமைந்து விடுவது நிச்சயம் .  

இங்கு வரும் தோல் சம்பந்த பட்ட அனைத்து வியாதிகள் உள்ளவர்கள் அனைவரும்,  நிவர்த்தி பெறுவது மிகவும் அதிசியமான ஒரு விஷயம் .

மனநிலை பதிக்கப்பட்ட அனைவரும் இங்கு வந்து நல்லய்யனை (கோவிலுக்குள் உலா வரும் நாகசர்ப்பம்) தரிசனம் செய்பவர்களுக்கு விரைவில் குணம் அடைவது உறுதி .

தம்பிக்கலை அய்யன்கோவிலுக்கு வந்து அணைத்து நலன்களும் சகல வளங்களும் பெற்று இறை அருளின் கருணையினால் வாழ்க வளமுடன்.

ஜோதிடன் வர்ஷன்
94433 55696




திங்கள், 2 ஜனவரி, 2012

கால சர்ப்ப தோஷம்



கால சர்ப்ப தோஷம் / யோகம்



ஒருவரது ஜாதகத்தில் இருந்தால், அவருக்கு ஏற்ப்படும் இன்னல்கள் எப்படி இருக்கும் :

 1 சரியான சூழலில் வாழும் வாய்ப்பு இருக்காது,
 2 நல்ல உடல் ஆரோக்கியம் பெற முடியாது,
 3 சிறப்பான கல்வியறிவு கிடைக்காது, கல்வியில் தடை ஏற்ப்படும்,
 4 நல்ல ஜீவனம் அமையாது, தொழில் முன்னேற்றம் கிடைக்காது, பரதேச  ஜீவனம் அமைந்து விடும்.
 5 வாழ்வில் நல்ல வாழ்க்கை துணையினை பெற முடியாது .
 6 இல்வாழ்க்கையில் தவறான தொடர்பால் நிம்மதி இன்மை, குடும்ப வாழ்வில் சிக்கல்கள் கணவன் மனைவி பிரிவு, குடும்பம் ஓரிடம் ஜாதகர் ஓரிடம் வசிக்கும் அமைப்பு.
 7 பொருளாதரத்தில் முன்னேற்றம் இன்மை, வறுமை, முதியவர்களிடம் சாபம் பெறுதல், விபத்து, குலதெய்வ சாபம், கடவுள் நிந்தனை, ஆன்மிக வாதிகளை நிந்தனை செய்தல் போன்ற குணங்கள் .
 8 மறைமுக வாழ்க்கை, பெண்களால் அவமானம், வெளிநாடுகளில் வாழும்பொழுது ஏற்ப்படும் பிரச்சனைகள்.
 9 சட்ட திட்டங்களை மீறுதல், அரச கோபத்துக்கு ஆளாகுதல், தாழ்வு மனப்பான்மை, மற்றவரை சார்ந்து வாழ்தல்.

இது மாதிரியான கெடுபலன்கள் ஜாதகர் அனுபவிப்பார் தமது 32 வது வயது வரை.



கால சர்ப்ப யோக நிலை :


தமது 32 வது வயதுக்குப் பிறகு ஜாதகருக்கு சுய ஜாதகத்துக்கு உட்ப்பட்டு அணைத்து ராஜ யோக பலன்களையும் கால சர்ப்ப யோகம்  வாரி வழங்கி விடும்.


இதுவரை இருந்த நிலை மாறி ஜாதகர் அனைத்து வசதி வாய்ப்புகளையும், குறுகிய காலங்களில் அடைந்து விடுவார்.


அரசியலில் வெற்றி, தொழில் வெற்றி, பொருளாதரத்தில் தன்னிறைவு ஆடை ஆபரண சேர்க்கை நல்ல வசதி மிக்க வீடு வண்டி வாகன அமைப்பு.

நல்ல வேலையாட்கள், தொழில் விருத்தி போன்ற நல்ல பலன்களை வெகு விரைவில் ஜாதகருக்கு வாரி வழங்கிவிடும் இந்த அமைப்பு.   

கால சர்ப்ப தோஷ நிலை, ஜாதகருக்கு பாதிக்காமல் இருக்க சரியான வழி என்ன என்பதை அடுத்த பதிவில் காண்போம் 

ஜோதிடன் வர்ஷன் 
9443355696

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கர்மவினை பதிவில் இருந்து விடுபட !



அனைவருக்கும் இனிய 2012  ஆங்கில  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
புது வருடத்தில் அனைவரும் அனைத்து நலனும், வளமும் பெற இறை அருள், நல்லாசி வழங்கட்டும் .

கர்மவினை பதிவில் இருந்து விடுபட ! 

திருவெண்காடு தலத்தில் உள்ள வடவால் ஆல விருட்சத்தின் அடியில் ருத்ர பாதம் உள்ளது.21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும். இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.

பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.

இங்கு கல்வி, தொழிலுக்கு அதிபதியான புதனுக்கு தனி ஆலயம் உள்ளது. கல்வி மேன்மையடைய, தொழில் சிறக்க, பிணி நீங்க, பிள்ளைப்பேறு பெற புதனை வழிபட்டால் மேன்மையடைவது உறுதி.
மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.



இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு. இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று. நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.


இங்கு நடராஜ சபையும் ரகசியமும் உண்டு. சிதம்பரத்தை போல நடராஜருக்கு அருகில் பெருமாளுக்கு தனி சன்னதி உண்டு. இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.


சுவேதாரண்யர் (திருவெண்காடர்) : 

திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களும் இவருக்கு உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.


நடராஜர் :  

இங்குள்ள நடராஜரை ஆடவல்லான் என்று கல்வெட்டு கூறுகிறது. இத்தலம் ஆதிசிதம்பரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கும் தில்லை சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்து உள்ளது.ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.


அகோர மூர்த்தி : 

ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக் கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது.


சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்து வருகிறார்.இது 43 வது உருவம் ஆகும்.இறைவனின் வீரச் செறிவை காட்டும் கோலம்.பெயரில் சற்று கடுமை இருந்தாலும் அருள் நிலையில் இந்த மூர்த்தி உள்ளார். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் பெருமான் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.


அட்ட வீரட்டதலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவபெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலம் இது.இந்த அகோர மூர்த்தியை திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது.


பிரம்ம வித்யாம்பாள் :  

இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி இவள்.திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள். மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார். பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகை யானாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.


நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ(செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை(யோகம்) அணி செய்வதைக் காணலாம்.கீழ்க்கரம் அபய கரம்.இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும்.பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.


காளிதேவி :

 சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் சுவேதன காளி என்று அழைக்கப் படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக் கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கு ஏற்ப வலக்காலைப் பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக் கொண்டு இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.


துர்க்கை தேவி : 

 துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும். இவள் தன் எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு உடையவளாக காட்சி தருகிறாள்.


புதன் பகவான் : 

 வித்தயாகரகன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும் அனையர் கோயிலுக்கு இடது பாகத்தில் தன் கோயிலை அமைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் அலி தோசம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு.இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதி ஆனார்.திருவெண்காடு நவகிரக தலங்களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.


பிள்ளையிடுக்கி அம்மன்:

 திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்த போது அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க பயந்து "அம்மா' என்றழைத்தார்.


இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரை தன் இடுப்பில் தூக்கி கொண்டு கோயிலுக்குள் வந்தார். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோயிலின் பிரகாரத்தில் உள்ளது.


புதனுக்கு தனி சன்னதி: 

நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.


ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக்கலைஞர்களும், திரைப்படக்கலைஞர்களும் வழிபட்டு பயன் பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மையானது.காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.


இத்தலத்தில் மூர்த்திகள்(திருவெண்காடர், அகோரமூர்த்தி, நடராஜர்), சக்தி(துர்க்கை, காளி, பிரம்மவித்யாம்பாள்),தீர்த்தம் (அக்னி தீர்த்தம்,சூர்ய தீர்த்தம்,சந்திர தீர்த்தம்) தலவிருட்சம்(வடவால், வில்வம், கொன்றை ) என்று மும்மூன்றாக அமையப்பெற்ற சிறப்பு உள்ளது.


காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. அட்டவீரட்டத்தலம் போன்றே இங்கும் சிவபெருமான் மருத்துவாசுரனை சம்காரம் செய்து வீரச்செயல் புரிந்துள்ளார். ஆதி சிதம்பரம் என்ற பெயரும் பெருமையும் பெற்ற தலம் இது.


சப்த விடத்தலங்களில் இத்தலமும் ஒன்று. வால்மீகி ராமாயணத்தில் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.எனவே யுகம் பல கண்ட கோயில் இது. சிலப்பதிகாரத்திலும் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே சமண வைணவ காவியங்களில் கூறப்பட்டுள்ள சைவ சமயக் கோயில் இது என்ற பெருமை பெற்றது.


பட்டினத்தார் இத்தலத்தில் வந்து திருவெண்காட்டு நாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர் பெற காரணமாக இருந்து கோயில் இது.



முக்குண நீராடல் : 

இத்தலத்தில் உள்ள அக்கினி,  சூரிய, சந்திர தீர்த்தங்களில் வளர்பிறை  புதன் கிழமைகளில், புதன் ஹோரையில் தலைக்கு, பச்சை பயிறு வைத்து முழுகி, புதனை தரிசனம் செய்வோருக்கு ஏழு ஜென்ம கர்ம வினை பதிவிலிருந்தும் விடுபட்டு சகல செல்வங்களையும் பெறுவார்கள் இது நடை முறையில் கண்ட உண்மை .

ஜோதிடன் வர்ஷன்