செவ்வாய், 3 ஜூன், 2014

சுய ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்களில் இருந்து, நன்மை பெற ஜாதகர் என்ன செய்ய வேண்டும் ! பாகம் 2




சுய ஜாதகத்தில் பிறந்த நேரத்திற்கேற்ப பாவகங்களில் அமர்ந்த நவகிரகங்கள், தான் அமர்ந்த இடத்தில் இருந்தும் பார்க்கும் பார்வை அமைப்பில் இருந்தும், 12 பாவகங்களின் தன்மையை நிர்ணயம் செய்கின்றது, நடைபெறும் திசை 12 பாவகங்களின் தன்மையை  ஏற்று ஜாதகருக்கு நன்மை தீமை பலன்களை நடைமுறைக்கு கொண்டு வருகிறது, அப்படி நடைபெறும் நவகிரங்களின் திசை நல்ல நிலையில் இருக்கும் பாவகங்களின் தன்மையை ஏற்று நடத்தும் பொழுது ஜாதகர் யோக பலன்களையும், பாதிக்கபட்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தும் பொழுது அவயோக பலன்களையும் அனுபவிக்க நேருகிறது, மேற்கண்ட பாதிக்கபட்ட பாவகங்களின் பலன் நடைபெறும் பொழுது, ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் தீமையான பலன்களை தவிர்க்க ஜாதகர் என்ன பரிகாரம் செய்வது ? பாதிக்கபட்ட பாவகங்களில் இருந்து வரும் தீமையை தவிர்த்து நன்மை பெறுவது எப்படி? என்பதை பற்றி இந்த 2ம் பதிவில் காண்போம்.

களத்திற ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதிக்கபட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

 ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்து அளவு கடந்த இன்னல்கள் வரும், மேலும் தொழில் முறை கூட்டாளிகள் ஜாதகரை மிக எளிதில் ஏமாற்ற கூடும், நண்பர்களும் ஜாதகருக்கு அதிக இன்னல்களை தருவார்கள், குறிப்பாக ஜாதகர் சமுதாயத்தில் அவ பெயர் ஏற்ப்படுவதர்க்கு உண்டான அனைத்து சூழ்நிலைகளும் ஒரே நேரத்தில் வந்து மிக எளிதில் ஜாதகரை தாக்கும், எதிர்பால் இனத்தினரால் ஜாதகர் அதிக துன்பமும், மனக்கவலையும் அடையும் சூழ்நிலை உண்டாகும், இந்த காலகட்டத்தில் ஜாதகர் வெளி ஊர் அல்லது வெளி நாடு செல்வது ஜாதகரின் வாழ்க்கையை சின்னபின்னமாக்கி விரக்தியின் விளிம்பிற்கே எடுத்து செல்லும், எனவே ஜாதகர் இந்த காலகட்டத்தில் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் அறிவுக்கு மதிப்பளிப்பது, ஜாதகரை துன்பத்தில் இருந்து மீட்டு எடுக்கும்.

 நல்ல ஆன்மீக குருவின் ஆசியை பெறுவதும், வயதான தம்பதியரின் ஆசியை பெறுவதும் சரியான தீர்வாக இருக்கும், அல்லது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து வரும் அனைத்து இன்னல்களையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டு அவருக்கு சகல நன்மைகளையும் செய்து தருவது விரைவான நன்மைகளை தரும், தனது நண்பர்கள், கூட்டாளிகள் வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுகொள்வது சமுதாயத்தில் நர்ப்பெயரையும், தொழில் விருத்தியையும் தரும், வெளிநாடு வெளி ஊர் பயணங்களை தவிர்த்து தனது சொந்த ஊரிலேயே இருப்பது சகல நலன்களையும் வாரி வழங்கும்.

ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் பாதிக்கபட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :


ஜாதகருக்கு திடீர் இழப்புகளை தவிர்க்க இயலாது, வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது விபத்து, உடல் நிலை பாதிப்பு, தனது பெயரில் இருக்கும் சொத்துகள் திடீர் என இழக்கும் சூழ்நிலை, முதலீடுகள் திடீரென குறையும் தன்மை, வரும் லாபம் அனைத்தும் விரையம் ஆகும் தன்மை, திடீர் நஷ்டம், ஜாதகரும் ஜாதகரை சார்ந்தவர்களும் உடல் ரீதியாக பாதிக்கப்படும் தன்மை என்ற வகையில் துன்பத்தை தரக்கூடும், குறிப்பாக இந்த காலகட்டங்களில் ஜாதகர் பாதுகாப்பற்ற பயன்களை மேற்கொள்வதும், அதிவேகமாக வாகனங்களை இயக்குவது மிகப்பெரிய துன்பத்தையே செய்யும்.

எனவே ஜாதகர் இந்த காலகட்டங்களில் பயணங்களில் அருள் காப்பும், இறை நினைவும் ஜாதகரை விபத்தில் இருந்து காக்கும், உடல் நிலையில் ஜாதகர் எடுத்துகொள்ளும் அக்கறை உடல் ரீதியாக வரும் துன்பங்களில் இருந்து பாதுகாக்கும், உடல் ரீதியாக வரும் சிறு பிரச்சனைகளை ஜாதாகர் சிறிதாக இருக்கும் பொழுதே கவனிப்பது பெரிய துன்பங்களில் இருந்து காப்பற்றும், மற்றவரை நம்பி கொடுக்கும் பணம் மற்றும் பொருள் யாவும் இந்த காலகட்டத்தில்  திரும்பி வர வாய்ப்பில்லாமல் போகும் என்பதால், எவரிடமும் எந்த பொருளும் பணமும் தராமல் இருப்பது நலம், மற்றவரிடம் இருந்து எந்த பொருளையும் வாங்காமல் இருப்பது அதிக நன்மையை தரும் இல்லையெனில் ஜாதகருக்கு இரட்டை செலவினத்தை தரும்.

பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகம் பாதிக்கபட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் தனியாக போராடும் சூழ்நிலையை தரும், தேவை இல்லாமல் பெரியவர்களின் சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலை தரும், இறை நிந்தனை, நாத்திகம் போன்றவற்றில் ஜாதகரின் சிந்தனை சிந்திக்க ஆரம்பிக்கும், பெரியோரின் ஆலோசனையை மதிக்காமல் மிகப்பெரிய சிக்கலுக்கு ஜாதகர் ஆளாகி, தானே தனது வாழ்க்கையை கெடுத்து கொண்டு தன்னை சார்ந்தவரையும் கெடுக்கும் குணத்தை தரும், தான் செய்த பாக்கியத்தின் பலன்களை விரையம் செய்யும் சந்தர்ப்ப சூழ்நிலையை ஜாதகரே உருவாக்கி கொண்டு சிரம படும் நிலைக்கு எடுத்து செல்லும், சமுதாயத்தில் அவ பெயர் ஏற்ப்படுவதர்க்கு உண்டான அனைத்து சூழ்நிலைக்கும் ஜாதகரை ஆர்ப்படுத்தும்.

மேற்கண்ட பாவக பலன் நடைபெறும் பொழுது ஜாதகர் பெரியோரின் பேச்சை மதித்து நடந்துகொள்வதும் , அவர்கள் இட்ட கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பதும் சகல நன்மைகளையும் வாரி வழங்கும், குழந்தைகள் முதல் வயதான பெரியவர் வரை அவர்களின் மனம் நோகாமல் நடந்துகொள்வது, மிகுந்த  நற்ப்பெயரை ஜாதகருக்கு பெற்று தரும், ஆன்மீகம் தியானம் போன்றவற்றில் கவனம் செலுத்தி ஜாதகர் தனது மனதை கட்டுக்குள் வைப்பதும், மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் தனது வேலையை மட்டும் பார்ப்பது ஜாதகரை சிறப்பான வாழ்க்கைக்கும் முன்னேற்றத்திற்கும் அழைத்து செல்லும் குறிப்பாக குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் ஜாதகரின் 9ம் பாவக வழி துன்பங்களை போக்கும்.

ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் பாதிக்கபட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

ஜாதகரின் ஜீவன வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், அல்லது மற்றவருக்கு அடிமை ஜீவனம் செய்யும் தன்மைக்கு ஆர்ப்படுத்தும், குறிப்பாக ஜாதகரின்  கௌரவம் கடுமையாக பாதிக்க படும், சுயமாக ஜாதகர் செயல்பட இயலாத சூழ்நிலையை தரும், எவ்வளவு கடினமான உழைப்பை செய்தாலும் அதற்க்குண்டான பலன் ஜாதகருக்கு கிடைக்காது, மற்றவர்கள் தட்டி பறிக்கும்  சூழ்நிலை தரும், இந்த காலகட்டத்தில் ஜாதகருக்கும் ஜாதகரின் தகப்பனாருக்கும் 7ம் பொருத்தமாகவே இருக்கும், இருவருக்கும் அதிக கருத்து வேறுபாடுகள், கருத்து மோதல்கள் ஏற்ப்பட 100% சந்தர்ப்பங்கள் உண்டாகும்.

ஜாதகர் இந்த காலகட்டங்களில் சுய தொழில் செய்யாமல் இருப்பது நலம், சுய தொழில் செய்தால் நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்துவது பல பிரச்சனைகளில் இருந்து ஜாதகரையும், ஜாதகர் செய்யும் தொழிலையும் மீட்டு எடுக்கும், தொழில் ரீதியாக ஜாதகர் எடுக்கும் ஒவ்வொரு அடியும் மிக கவனமாக வைப்பது நலம் தரும், பணிபுரியும் இடத்தில் எவரிடமும் பகைத்துகொல்லாமல் தனது வேலையை மட்டும் கவனிப்பது சகல நலன்களையும் தரும், கௌரவ குறைவான வேளைகளில் ஈடுபடாமல் இருப்பது மிகுந்த நன்மையை தரும், இந்த கால கட்டத்தில் ஜாதகர் தனது தகப்பனாரின் வார்த்தைக்கும், அவரின் செயலுக்கும் மதிப்பளித்து நடந்துகொள்வது ஜீவன வழியில் இருந்து அதிக நன்மையை செய்யும்.

லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் பாதிக்கபட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

 ஜாதகர் அதிர்ஷ்டத்தை நம்பி செய்யும் காரியங்கள் யாவும் தோல்வி மேல் தோல்வியே தரும், மற்றவர் பேச்சை  கேட்டு செய்யும் காரியங்கள் யாவும் ஜாதகரை படுகுழியில் தள்ளிவிடும், ஜாதகரின் மூத்த சகோதர அமைப்பில் இருந்து அதிக  இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும், பங்கு சந்தை சூதாட்டம் போன்றவற்றில் ஜாதகர் ஈடுபட்டால் கையில் உள்ள அனைத்தையும் இழந்து நிற்கும் தன்மையை ஏற்ப்படுத்தும், ரகசிய தொழில்கள் சட்டத்துக்கு புறம்பான தொழில்களில் ஈடுபட்டால் ஜாதகர் விரைவில் அதற்க்கு உண்டான தண்டனையை பெறுவார், ஜாதகரின் பிற்போக்கு சிந்தனை ஜாதகரையும் கெடுத்து ஜாதகரை சார்ந்தவர்களையும் பாதிப்புக்கு  உள்ளாக்கும்.

ஜாதகர் இந்த காலகட்டத்தில் உண்மைக்கும் உண்மைக்கு மாறான விஷயத்தையும் பிரித்து பார்க்கும் திறமையை வளர்த்துகொள்வது நலம் தரும், எந்த ஒரு விஷயத்தையும் அப்படியே நம்பாமல் உண்மை என்னவென்பதை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது சகல நலன்களையும் தரும், இந்த காலகட்டத்தில் ஜாதகர் எக் காரணத்தை கொண்டும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பது, ஜாதகரை சிறப்பான முன்னேற்ற பாதைக்கு  அழைத்து செல்லும், மூட நம்பிக்கையில் அறிவை செலுத்தாமல் உண்மையான விஷயங்களில் அறிவை செலுத்துவது மிகப்பெரிய வெற்றியை ஜாதகருக்கு பெற்று தரும், கடின உழைப்பே ஜாதகரை வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்திற்கு எடுத்து செல்லும்.

விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகம் பாதிக்கபட்டு நடப்பு திசை பலனை தருமாயின் :

 ஜாதகரின் மன நிம்மதி என்பது கேள்வி குறியாக மாறிவிடும், ஜாதகருக்கு மனோ ரீதியாக அடிமேல் அடி விழும், ஒன்று போனால் ஒன்று வந்துகொண்டே இருக்கும் , ஜாதகரை சார்ந்த அனைவராலும் ஜாதகர் துன்பத்திற்கு  ஆளாகும் சூழ்நிலை தரும், நிம்மதியான உறக்கம் ஜாதகருக்கு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்பே இல்லாமல் போய்விடும், இதனால் ஜாதகரின் செயல் திறன் கடுமையாக பாதிக்கப்படும், குறிப்பாக ஜாதகர் போதை  லகிரி வஸ்துகளுக்கு அடிமையாகும் சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை குறைவதற்கு உண்டான சூழ்நிலையை தரும், பெரிய அளவில்  முதலீடு செய்யும் பணம் ஒரு நாளில் விரையம் ஆகும் சூழ்நிலையை தரும், தனது குடும்ப அமைப்பில் இருந்து கடுமையான மன நிம்மதி இழப்பை ஏற்ப்படுத்தும்.

ஜாதகர் இந்த காலகட்டங்களில் சுய கட்டுபாட்டை கடைபிடிப்பது அதிக நன்மைகளை தரும், குறிப்பாக மனதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகுந்த நன்மையை தரும், எக்காரணத்தை கொண்டும் ஜாதகர் தீய பழக்க  வழக்கங்களுக்கு அடிமை ஆகாமல் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது, உடலுக்கும் மனதிற்கும் மிகுந்த நன்மையை தரும், தனது ஆன்மீக பலத்தை அதிகரித்துக்கொள்ள  வேண்டிய நேரமிது, தனது ஆன்மீக குருவாக ஒருவரை எடுத்துகொண்டு அவரிடம் முறையாக தீட்சை பெற்று, தியான வழிபாட்டில் கவனம் செலுத்துவது நலம் தரும், தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி தராமல் இருந்தால் அமாவசை தவறாமல் தொடர்ந்து தன்னால் இயன்ற அளவு முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வது நலம் தரும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

1 கருத்து:

  1. உங்களிடம் என் ஜாதகம் பார்க்க வேண்டும் ......................bba472@gmail.com எமது முகவரி ...........இனையம் வாயீலக தொடர்ப்பு கொளுங்கள் ..........இனைய தளம் வாயீலாகவே எமக்கு அனுப்புங்கள் KINDLY TELL ME THE NECESSARY PROCEDURES

    பதிலளிநீக்கு