வியாழன், 19 ஜூன், 2014

குரு பெயர்ச்சியும் யோக வாழ்க்கையும் !




வணக்கம் அன்பர்களே !

 பிரகஸ்பதி என்று தேவர்களால் அழைக்க பெரும் குருபகவான் இன்று கால புருஷ தத்துவத்திற்கு 3ம் ராசியான, மிதுன ராசியில் இருந்து  கால புருஷ தத்துவத்திற்கு 4ம் ராசியான கடகத்திற்கு பெயர்ச்சி ஆகிறார், இனிவரும் ஒரு  வருட காலம் சர நீர் ராசியில் அமர்ந்து தனது 5ம் பார்வையாக விருச்சிகத்தையும், 7ம் பார்வையாக மகரத்தையும், 9ம் பார்வையாக மீனத்தையும் வசீகரித்து, தான் அமர்ந்த இடத்தில் இருந்து எவ்வித யோக பலன்களை வழங்குகிறார் என்பதை இன்று ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !




கடகத்தில் அமர்ந்த குரு தரும் பலன்கள் :

 கால புருஷ தத்துவத்திற்கு 4ம் ராசியான கடகத்தில் குருபகவான் பயணம் செய்யும் காலம் முழுவதும் மிகுந்த சிறப்பான நன்மைகளையே தருவார் என்பது உறுதியாகிறது, மேலும் சந்திரன் என்பவர் குருவின் வர்க்கத்தை சார்ந்தவர் என்பதாலும், இருவரும் ஒரே வர்க்கத்தின் அடிப்படையில் வருபவர்கள் என்பதாலும் ராஜயோக பலன்கள் மக்களுக்கு மிகுதியாக கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை, மேலும் கடகம் சர நீர் ராசியாக இருப்பதால் மக்களுக்கு மனதில் நல்ல எண்ணங்களும், சிறந்த சிந்தனைகளும் அதிகரிக்கும், ஆன்மீக வாழ்க்கையில் அதிக அளவில் மக்களின் சிந்தனை செல்லும், இறை அருளின் கருணை அனைவருக்கும் பரிபூர்ணமாக கிடைக்கும்.

 கால புருஷ தத்துவத்திற்கு நான்காம் வீடு என்பதால், அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகமான வாழ்க்கையும், நல்ல இருப்பிடமும் வசதி மிக்க வீடு, வண்டி வாகனமும்  மிக எளிதில் அமையும், மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும், நாட்டில் மழையின் அளவு அதிகரித்து நாடு செழித்து ஓங்கும், விவசாயம் நன்கு செழித்து வளரும், உணவு பொருட்கள் விலை குறைந்து மக்கள் நலம் பெறுவார்கள், குறிப்பாக கட்டிடம் மற்றும் கட்டிடம் சார்ந்த தொழில்கள் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்கும், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அதிகரிக்கும், வண்டிவாகன தொழில், ஆடை ஆபரண தொழில்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை சந்திக்கும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் வளர்ச்சி பெரும் கடகத்தில் அமர்ந்த குரு அனைவருக்கும் வளமான வாழ்க்கையை தருவார், குறிப்பாக கல்வி துறை சிறந்து விளங்கும்.

5ம் பார்வையாக விருச்சிகத்தை வசீகரிக்கும் குரு தரும் பலன்கள் :

 கால புருஷ தத்துவத்திற்கு 8ம் ராசியான விருச்சிகத்தை 5ம் பார்வையாக வசீகரிக்கும் குரு பகவன், மக்களுக்கு திடீர் தான பிரப்தியை தரக்கூடும், விருச்சிகம் ஸ்திர நீர் ராசியாக அமைவது மக்களுக்கு குழப்பமற்ற ஸ்திரமான மன நிலையை தரும், ஸ்திரமான நம்பிக்கையும், எண்ணங்களும் மக்களுக்கு சகல நன்மைகளையும் வாரி வழங்கும் எதிர்பாராத வகையில் என்றால் அது மிகையில்லை, குறிப்பாக வாழ்க்கை துணை வழியில் இருந்து அனைவரும் மிகுந்த நன்மைகளை பெறுவார்கள், மழை அளவு மிகுதியாகி நாட்டில் விவசாயம் செழித்து வளரும், இன்சூரன்ஸ் துறை எதிர்பாராத வளர்ச்சியை பெரும், வங்கி மற்றும் பைனான்ஸ் துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உண்டு.

  கால புருஷ தத்துவத்திற்கு எட்டம் வீடு என்பதால், மன வாழ்க்கையில் பிரிவை நோக்கி சென்று கொண்டு இருந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட வாழ்க்கையில் ஒன்று இணைந்து தமது வாழ்க்கையை சிறப்பாக வாழும் தன்மையை பெறுவார்கள், சமுதாயத்தில் காவல் துறை மற்றும் நீதி துறை மிகவும் சிறப்பு பெரும், மக்கள் வெகு விரைவில் சகல நலன்களையும் பெறுவார்கள், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கும், வெளிநாடுகளில் இருந்து மிகப்பெரிய நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும், உடல் நல குறைவால் இதுவரை பாதிக்க பட்டு இருந்த அனைவரும் வெகு விரைவில் உடல் நலம் பெறுவார்கள், குருவும் செவ்வாயும் ஒரே வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பதால் யோக பலன்கள் மிகுதியாகவே இந்த குரு பெயர்ச்சி வாரி வழங்கும்.

7ம் பார்வையாக மகரத்தை வசீகரிக்கும் குரு தரும் பலன்கள் :

 கால புருஷ தத்துவத்திற்கு 10ம் வீடாகவும் சர மண் தத்துவ ராசியான மகரத்தை, 7ம் பார்வையாக வசீகரிக்கும் குருபகவான் சிலருக்கு ஜீவன ரீதியான தொந்தரவுகளை தர கூடும், சிறுதொழில்கள் செழித்து ஓங்கும் ஆனால் பெரிய அளவில் தொழில் செய்பவர்கள் சற்றே பாதிக்கும் சூழ்நிலை தர கூடும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில்களை செய்பவர்கள் மிகுந்த லாபம் அடைவார்கள், அடிமை தொழில் செய்யும் அனைவருக்கும் இது ஒரு பொற்காலமாக கருதலாம், விவசாயம் சார்ந்த தொழில்களும் சிறு விவசாயிகளும் மிகப்பெரிய வளர்ச்சியை பெறுவார்கள், இரும்பு சார்ந்த தொழில்கள் சற்றே பின்னடைவை சந்திக்க கூடும், தங்கம் வெள்ளி போன்ற உலோகங்கள் விலை குறைய அதிக வாய்ப்பு உண்டு.

 கால புருஷ தத்துவத்திற்கு பத்தாம் வீடு என்பதால், நீதி நேர்மை மேலோங்கும், அரசியலில் மிகப்பெரிய மாற்றம் மற்றும் நிர்வாக திறன் வலிமை பெரும், உலக அரங்கில் பாரதத்தின் புகழ் பெருமைபடுத்த படும், அடிப்படையில் சிறு தொழில் செய்யும் அன்பர்களின் வாழ்கை தரம் வெகுவாக உயரும், பெண்களுக்கு கௌரவமும், அந்தஸ்தும் உண்டாகும், நினைத்த காரியங்கள் யாவும் பலிதம் பெரும், குழந்தைகளின் வாழ்க்கை மிகவும் செழிக்கும் கல்வியில் புதுமைகள் பல ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, மண்ணிற்கு கிழ் கிடைக்கும் பொருட்கள் யாவும் சற்று விலை குறைய வாய்ப்பு அதிகம், இதுவரை திருமணம் கைகூடாத அனைவருக்கும் திருமண வாழ்க்கை இந்த குரு பெயச்சி காலத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெறும், குருபகவானும் சனிபகவானும் வேறு வேறு வர்க்கம் என்பதால் நன்மையான பலன்கள் சற்றே குறைய வாய்ப்பு உண்டு.

9ம் பார்வையாக மீனத்தை வசீகரிக்கும் குரு தரும் பலன்கள் :

 கால புருஷ தத்துவத்திற்கு 12ம் வீடாகவும் உபய நீர் ராசியான  மீனத்தை 9ம் பார்வையாக ( தனது வீட்டை தானே ) வசீகரிக்கும் குருபகவான் மக்கள் அனைவருக்கும் நல்ல மன நிம்மதியையும், குழப்பமற்ற மனநிலையையும், குடும்ப வாழ்க்கையில் மன மகிழ்வினையும், ஆன்மீக வாழ்க்கையில் உள்ளோருக்கு சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்ப்படுத்துவார், குற்ற செயல்கள் குறைந்து மக்கள் மன நிம்மதி பெறுவார்கள், தீய பழக்க வழக்கத்திற்கு ஆளான பலர் மனம் திருந்த நல்ல வாய்ப்புகளை வாரி வழங்குவார், மனதில் உள்ள குறைகள் யாவும் தீர்ந்து மக்கள் சந்தோஷமான வாழ்க்கை சிறப்பாக வாழ்வார்கள், ஆன்மீகம் செழித்து வளரும், அறியாமை எனும் இருள் விலகி இறை அருள் என்ற வெளிச்சம் பெருகும், அயன சயன சுகம் மக்களுக்கு சிறப்பாக கிடைக்கும், ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடுவோர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் அதிகரிக்கும், கோவில் வழிபாடுகள்  சிறப்பு பெரும், பழைய புராதன கோவில்கள் எழுச்சி காணும்.

 கால புருஷ தத்துவத்திற்கு 12ம் வீடு என்பதால், மக்கள் மனதில் அச்சம் குறைந்து , தைரியம் மேலோங்கும், திடீர் தான வரவு, புதையல்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம், மக்களுக்கு ஆன்மீக நாட்டமும், இறை நிலை உணர்வும் அதிகரிக்கும், போலிகள் மறைந்து உண்மை உயிர் பெரும், வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையில் சிறந்த நன்மைகளை பெரும் காலம் இது, குறிப்பாக ஆன்மீக பெரியோர்கள் மக்களை நல்வழி படுத்துவார்கள், யோகம் மற்றும் கலைகள் செழித்து ஓங்கும், இயல், இசை, நாடக துறைகள் அபரிவிதமான வளர்ச்சியை பெரும், மக்களின் மனதில் சந்தோசம் அதிகரிக்கும், தேவையற்ற மன கவலைகள் குழப்பங்கள் நீங்கி மக்கள் அனைவரும் அறிவில் விழிப்பு நிலை பெறுவார்கள்.

குறிப்பு :

கடகத்தில் பெயர்ச்சி பெற்று தனது பயணத்தை தொடர்ந்து இருக்கும் குரு பகவான் பொதுவாக அனைவருக்கும் 90% நன்மையையே தருவார், இருப்பினும் குரு பெயர்ச்சி பலன்களை ராசியை அடிப்படையாக  வைத்து காண்பதை விட, பிறந்த லக்கினத்தின் அடிப்படையில் , தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி வழங்கும் பாவகத்தின் பலன்கள் வழியில் குரு எவ்வித தொடர்பை பெறுகிறார்,  என்பதை கொண்டு சுய  ஜாதக பலன்களை துல்லியமாக கணிதம் செய்து காண்பதே சரியானது. இதுவே ஜாதக பலனையும், குரு பெயர்ச்சி பலனையும், துல்லியமாக சொல்வதற்கு ஏதுவாக அமையும் .


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக