புதன், 18 ஜூன், 2014

சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகர் அடையும் இன்னல்கள் !





 சுய ஜாதகத்தில் 12 பாவகங்களில் எந்த ஒரு பாவகமும், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் சம்பந்தம் பெரும் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களை அனுபவிக்க வைத்துவிடும், சர லக்கினத்திற்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், உபய லக்கினத்திற்கு 7ம் பாவகம் பாதக ஸ்தானமாகவும், இறை அருளின் கருணையினால் காலபுருஷ தத்துவத்தின் படி வகுக்கபட்டு இருக்கின்றது.

உதாரணமாக : 

 துலாம் ராசியை ( சரம் ) லக்கினமாக கொண்ட ஜாதகருக்கு, பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !




 மேற்கண்ட துலாம் இலக்கின ஜாதகருக்கு 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து 200% இன்னல்களை அனுபவிக்க வைக்கும், இதில் வருந்த தக்க விஷயம் என்னவென்றால் தற்பொழுது நடைபெறும் சூரியன் திசை ( 06/07/2011 முதல் 05/07/2017 வரை ) 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது, ஜாதகரை 1,5,7,11ம் பாவக வழியில் அதிக துன்பத்திற்கும் இன்னல்களுக்கும் ஆட்படுத்தும்.

 1ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது : 

  ஜாதகர் சிறு வயதில் இருந்து  நல்ல வளரும் சூழ்நிலையை அமையாது, உடல் நிலை மன நிலை இரண்டும் வெகுவாக பாதிக்கபடும், குறிப்பாக ஜாதகர் பித்தம் சம்பந்த பட்ட பிணிகளால் அடிக்கடி பாதிப்பிற்கு உள்ளாகும் தன்மையை தரும், ஜாதகரின் எண்ணங்கள் யாவும் எதிர்மறையாக அமையும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும் மனோ ரீதியான பிரச்சனைகளுக்கு  தீர்வு காண முடியாமல் தனது மனம் சொன்ன படி செயல்பட்டு, தனது உடலையும் அறிவையும் தானே கெடுத்து கொண்டு, தன்னை சார்ந்தவர்களுக்கும் துன்பத்தை தருவார், மேலும் ஜாதகர் சுயமாக முடிவு எடுக்க இயலாமல் மற்றவரின் கட்டு பாட்டிலேயே இயங்கும் சூழ்நிலையை தரும், எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேற வாய்ப்பு மிக மிக குறைவு.

5ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது : 

 முதலில் ஜாதகரை தனது பூர்வீகத்தில் இருந்து வெளியேற்றிவிடும், பரதேச ஜீவன வாழ்க்கையை மேற்கொள்ளும் நிலையை தரும், தனது பரம்பரை வழி அறிவாற்றலையும் சிந்தனை திறனையும்  இழந்து சிரமமான வாழ்க்கையை மேற்கொள்ளும் தன்மையை தரும், முரண்பட்ட கருத்துக்களால் குடும்பத்தில் குழப்பமும் சச்சரவும் அதிகரிக்கும், குல தேவதையின் சாபத்திற்கு ஆளாகி பல  இன்னல்களை ஜாதகர் அனுபவிக்கும் நிலையை தரும், ஜாதகருக்கு உதவி செய்ய எவரும் அற்ற சூழ்நிலையை தரும், அடிப்படையில் தனது அறிவாற்றலை எவ்விதத்திலும் பயன்படுத்த இயலாத சூழ்நிலையை தரும், உறவுகள் மற்றும் நண்பர்களிடம் பகைத்துகொள்ளும் சூழ்நிலையை ஏற்ப்படுத்தும்.

7ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது : 

 ஜாதகரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், ஆண்களாக இருப்பின் தாமத திருமணம் அல்லது இருதார யோகம் என்ற நிலைக்கு தள்ளிவிடும், பெண்களாக இருப்பின் கணவனை இழந்து தவிக்கும் சூழ்நிலையை தரும் அல்லது கணவனுடன் சேர்ந்து வாழும் வாய்ப்பை தட்டி பறிக்கும், ஜாதகரின் நண்பர்கள் அனைவரும் ஜாதகரை ஏதாவது ஒரு வகையில் ஏமாற்றி கொண்டே இருப்பார்கள்.

 ஜாதகருக்கு கூட்டு தொழில் மற்றும் கூட்டு முயற்ச்சி என்பது எந்த ஒரு சூழ்நிலையிலும் நன்மையை தராது, ஜாதகரின் வெளி வட்டார பழக்க வழக்கங்கள் யாவும் ஜாதகருக்கு துன்பத்தையே தரும், அரசியலில் ஈடுபட்டால் ஜாதகர் அனைத்தையும் இழந்து  நடுத்தெருவில் நிற்கும் சூழ்நிலையை தரும், வெளிநாடு சென்று ஜாதகர் ஜீவனம் செய்வது மிகப்பெரிய இழப்பினையே தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும்.

 11ம் வீடு  பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது : 

 ஜாதகர்  தனக்கு வரும் வாய்ப்புகளையும், அதிர்ஷ்டங்களையும் உதறி தள்ளும் சூழ்நிலையை தரும், எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வி மேல் தோல்வியே தரும், ஜாதகர் பிற்போக்கு சிந்தனை மற்றும் முயற்ச்சி இன்மையால் வாழ்க்கையை சிறப்பாக வாழும் வாய்ப்பை தவரவிடுவார், லாட்டரி, சூது, பங்கு சந்தை, யூக வணிகம் போன்றவற்றில் இறங்கினால் ஜாதகர் அனைத்தையும் இழந்து வாடும் சூழ்நிலையை தரும், ஜாதகர் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புவது சால சிறந்தது, தன்னை விட வயதில் மூத்தவர்களின் அறிவுரையை ஏற்று வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியம்.

நடை பெரும் திசை பாதக ஸ்தான பலனை தரும் பொழுது ஜாதகர் செய்ய வேண்டியவைகள் :

தற்பொழுது நடை பெரும் சூரியன் திசை ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை தரும் என்பதால், 1) ஜாதகர் இலக்கின பாவக வழியில் சுய கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் கடைபிடிப்பதும், உடல்நலனில் அக்கறை எடுத்து கொள்வதும் அதிக நன்மையை தரும், 2) 5ம் பாவக வழியில் இருந்து குல தெய்வ வழிபாட்டினை முறையாக செய்வது சகல  நலன்களையும் தரும், ஆன்மீக குருவிடம் முறையாக தீட்சை பெறுவது சிறந்த நன்மைகளை வாரி வழங்கும்.

 3) 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் கூட்டு முயற்ச்சியில் ஈடுபடாமல் தனித்து இயங்குவதும், பொது காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதும், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்மையை செய்து 7ம் பாவக வழியில் இருந்து ஜாதகரை மீட்டு எடுக்கும், 4) 11ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வதும், சூது, பங்கு வர்த்தகம், யூக வணிகத்தில் ஈடுபடாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை வாரி வழங்கும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக