திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இரட்டையர்கள் ஜாதகத்தில் மாறுபடும் பாவக பலன்கள் !




 சுய ஜாதக ரீதியாக பாவக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது ஜாதகத்தில் பாவகங்களின் வலிமையின் அடிப்படையில், தற்பொழுது நடைபெறும் திசை புத்தி ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மைக்கு ஏற்ப நன்மை தீமை பலன்களை நிர்ணயம் செய்யலாம், ஒட்டி பிறக்கும் இரட்டையர்களின் ஜாதகத்தில் ஜாதகமும் கிரக அமைப்புகளும் பொதுவாக அமைந்த போதிலும், இருவரின் குண நலன்கள், செயல்பாடுகள் நடைபெறும் பலாபலன்கள் வேறுபடுவதில் நிறைய வித்தியாசங்கள் உண்டு, இதை தெளிவாக தெரிந்து கொள்ள பாரம்பரிய ஜோதிட முறையில் வாய்ப்பு குறைவு, ஜாதக கணித முறையில் பெரிய வித்தியாசத்தை நாம் காணுவதற்கு சிரமமே உண்டாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

 கிழ்கண்ட இரட்டையர்களின் ஜாதக அமைப்பை பாரம்பரிய ஜோதிட கணிதத்தில் காணும்பொழுது பெரிய வித்தியாசங்களை காண இயலாத பொழுதும், நமது ஜோதிட கணித முறையில் பாவக வலிமைகள், பலன்கள் துல்லியமான வித்தியாசங்களை தெளிவாக தெரிந்துகொள்ள இயலும், இருவரின் ஜாதக அமைப்பில் பாவகங்களின் தொடர்புகளையும் வழங்கும் பலன்களையும் இனி காண்போம்!

உதாரண ஜாதகம் 1


பிறந்த தேதி : 14/12/1992
பிறந்த நேரம் : மாலை 04:16

பாவக தொடர்பு 

1) 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2) 2,6ம் வீடுகள் களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3) 3,8,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4) 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5) 5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6) 9ம் வீடு எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.

 தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை (15/10/2002 முதல் 15/10/2022 வரை) ஜாதகருக்கு 2,6ம் வீடுகள் களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 2மற்றும் 6ம் பாவக வழியில் இருந்து நன்மையான பலன்களையும்,1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1மற்றும் 7ம் பாவக வழியில் இருந்து 200% தீமையான பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது.

 மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர்  2,4,5,6,10ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 1,3,7,8,9,11,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிக்கும் தன்மை உண்டாகிறது, இதில் ஜாதகர்  2,4,5,6,10ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் வெற்றியையும், 1,3,7,8,9,11,12ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் தடையும் தொந்தரவுகளையும் எதிர்பாராத தோல்விகளையும் வாரி வழங்கும்.

 எனவே நன்மை தரும் பாவக பலன் நடைபெறும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொண்டும், தீமை தரும் பாவக பலன்கள் நடைபெறும் பொழுது எச்சரிக்கையாகவும் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த யோகத்தை பெறுவதற்கு அடித்தளமான அமையும்.

உதாரண ஜாதகம் 2


பிறந்த தேதி : 14/12/1992
பிறந்த நேரம் : மாலை 04:17

பாவக தொடர்பு 

1) 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம்.
2) 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம்.
3) 3,8,11,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
4) 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
5) 5,9ம் வீடுகள் பூர்வ எதிரி ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம்.
6) 6ம் வீடு களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம்.

 தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை (10/10/2002 முதல் 10/10/2022 வரை) ஜாதகருக்கு 6ம் வீடு களத்திற பாவகமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 6ம் பாவக வழியில் இருந்து தீமையான பலன்களையும், 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1மற்றும் 7ம் பாவக வழியில் இருந்து 200% தீமையான பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது.

 மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகர்  2,4,10ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், 1,3,5,6,7,8,9,11,12ம் பாவக வழியில் இருந்து இன்னல்களையும் அனுபவிக்கும் தன்மை உண்டாகிறது, இதில் ஜாதகர்  2,4,10ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் வெற்றியையும், 1,3,5,6,7,8,9,11,12ம் பாவக பலன்களை தரும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சாம நேரங்களில் செய்யும் காரியங்கள் செயல்கள் யாவும் தடையும் தொந்தரவுகளையும் எதிர்பாராத தோல்விகளையும் வாரி வழங்கும்.

 எனவே நன்மை தரும் பாவக பலன் நடைபெறும் பொழுது ஜாதகர் தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொண்டும், தீமை தரும் பாவக பலன்கள் நடைபெறும் பொழுது எச்சரிக்கையாகவும் இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் மிகுந்த யோகத்தை பெறுவதற்கு அடித்தளமான அமையும்.

 ஆக ஒரு நிமிட வித்தியாசத்தில் பிறந்த இந்த இரட்டையர்களுக்கு ஜாதக பாவக பலன்கள் தொடர்பு பெரும் அமைப்பில் வித்தியாசப்படுகின்றது, மேலும் தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ஒருவருக்கு குறிப்பிட்ட பாவக வழியில் நன்மை தீமை பலன்களை கலந்தும், ஒருவருக்கு தீமையான பலன்களை மட்டுமே நடத்துகிறது, எனவே ஜாதகத்தில் பிறந்த நேரம் என்பது நிமிடம் மட்டுமல்ல சில நொடிகள் வித்தியாசம் பெரும் பொழுது ஜாதக பலன்கள் பாவக பலன்கள் மாறுபடும் என்பது ஜோதிடதீபத்தின் கருத்து.

 இதனால் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் ஆனாலும் அவர்களின் குணம், செயல்பாடுகள், அறிவாற்றல், சுய விருப்பங்கள், ஆர்வம், உடலின் தன்மைகள், நடைபெறும் நன்னமை தீமைகள், கல்வி, வேலை, தொழில் போன்றவற்றில் வித்தியாசம் நிச்சயம் ஏற்ப்படும், ஒருவரின் ஜாதகத்தை போன்றே மற்ற ஒருவரது ஜாதகம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக