வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்த போதிலும் ஜாதகர், நன்மையான பலன்களை அனுபவிப்பது எப்படி ?



 இது ஒரு சிறந்த கேள்வியாக ஜோதிடதீபம் கருதுகிறது, பொதுவாக எந்த ஒரு விஷயமும் சரி, யோக அவயோக பலன்களும் சரி சுய ஜாதக விதிகளுக்கு உட்பட்டே நடைபெறும், சுய ஜாதகத்தில் இல்லாத ஒன்றை நாம் எந்த விதத்திலும் அனுபவிக்க இயலாது, உதாரணமாக ஒரு அவயோக ஜாதகம் எக்காரணத்தை கொண்டும் ராஜ யோக பலன்களை அனுபவிக்க இயலாது, அதேபோல் ராஜயோக ஜாதகம் பெற்ற ஒருவரை, அவயோக பலன்களை அனுபவிக்க வைக்க இயலாது, தாங்கள் கூறியது போல் சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கபட்டு இருக்கும் ஒருவர் எந்த காலத்திலும் யோக பலன்களை அனுபவிக்க இயலாது.

 சம்பந்தபட்ட ஜாதகத்தில் ஏதாவது ஒரு பாவகம் மிக வலிமையுடன் இருக்கும், அந்த வலிமை பெற்ற பாவகத்தின் பலனை தற்பொழுது நடைபெறும் திசை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது முக்கியம் அல்ல, நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் மிகுந்த யோக பலன்களை, நடைமுறையில் அனுபவிக்க இயலும், இதை கிழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு விளக்கமாக காணலாம் அன்பர்களே !

உதாரண ஜாதகம் 1



 மேற்கண்ட மீன இலக்கின ஜாதகருக்கு

1) 1,3,5,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருக்கின்றது, எனவே மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகர் 200 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்,.

2) 4,8,12ம் விடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து 60 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

3) 2,6ம் வீடுகள் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் வீடு பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து முறையே ஜாதகர் 30 சதவிகிதம் மற்றும் 60 சதவிகித யோக பலன்களை அனுபவிக்க இயலும், 

4) 11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 100 சதவிகித யோக பலன்களை அனுபவிக்க வைக்கும்.

இது மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் நிலை, தற்பொழுது நடைபெறும் திசை ஜாதகருக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே, நடைபெறும் திசை ஜாதகருக்கு யோக பலன்களை வழங்குமா ? அவயோக பலன்களை வழங்குமா ? என்பது தெளிவாக தெரியும், தற்பொழுது ஜாதகருக்கு சுக்கிர திசை ( 28/05/2012 முதல் 28/05/2032 வரை ) நடைபெறுகிறது.

 இந்த சுக்கிர திசை ஜாதகருக்கு எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதை கவனிக்கும் பொழுது சுக்கிரன், தசா என்ற அமைப்பில் இருந்து 1,5,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருகிறார், எனவே ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை பாதக ஸ்தான பலனை தருகிறது என்பது உறுதியாகிறது, மேலும் பாதக ஸ்தான பலனை எந்த எந்த வீடுகள் வழியில் இருந்து அனுபவிக்கிறார் என்பதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது.

1ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரின், வளரும் சூழ்நிலை அமைப்பிலும், உடல் ரீதியான அமைப்பிலும் பல எதிர்ப்புகளையும், தொந்தரவுகளை எதிர்கொள்ள வைக்கும், ஜாதகரின் பழக்க வழக்கங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வாய்ப்பில்லை, நல்ல நண்பர்கள் சேர்க்கையும் ஜாதகருக்கு அமையாது, ஜாதகரே தனது வாழ்க்கையை கெடுத்து கொண்டு தன்னை சார்ந்தவருக்கும் துன்பத்தை தருவார்.7ம் பாவகம் உபய மண் தத்துவம் என்பதால் உடல் நிலை பாதிப்பும், பொருள் இழப்பும் தவிர்க்க இயலாது.

5ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரின் பூர்வீகம் எதுவோ? அங்கு ஜீவனம் செய்ய இயலாத சூழ்நிலையை தரும், குறிப்பாக எல்லை கடந்து பரதேச ஜீவனத்தை மேற்கொள்ள வைக்கும், மேலும் ஜாதகருக்கு சுய அறிவும் வேலை செய்யாது, நல்லவர்  சொல் பேச்சும் கேட்க மாட்டார், 5ம் பாவகம் பாதிக்க படுவது ஜாதகருக்கு சிந்தனை ஆற்றல் மற்றும் அறிவு திறன் போன்ற விஷயங்களை வெகுவாக பாதிக்க வைக்கும், இறை அருளின் கருணையை பெற இயலாது, ஜாதகருக்கு உதவ எவரும் முன்வரமாட்டார்கள்.

9ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரின் செயல்கள் அனைத்தும், மற்றவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகும், தேவையில்லாமல் மற்றவரிடம் அவ பெயரை சம்பாதித்து கொடுக்கும், மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்து தனது பெயரை கெடுத்து கொள்ளும் சம்பவங்களும் உருவாகலாம், தனிப்பட்ட  வாழ்க்கையிலும், நண்பர்கள் அமைப்பில் இருந்தும், பொது வாழ்க்கை சமுக அமைப்பில் இருந்தும், ஜாதகருக்கு கடுமையான எதிர்ப்புகளும், விமர்சனங்களுமே தொடர்ந்து வரும்.

ஆக ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை நிறைய எதிர்ப்புகளை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போடும் வாய்ப்பை தருகிறார், சுய ஜாதகத்தில் 11ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் சமாளித்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்பது உறுதியாகிறது.

உதாரண ஜாதகம் 2


மேற்கண்ட துலா இலக்கின ஜாதகிக்கு 

1) 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து, ஜாதகிக்கு 200 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

2) 2ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து, ஜாதகிக்கு 60 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

3) 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 30 சதவிகித இன்னல்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

4) 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 30 சதவிகித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

5) 4,8ம் வீடுகள் குடும்ப  ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 60 சதவிகித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

6) 10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, மேற்கண்ட பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு 30 சதவிகித யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும்.

 இது மேற்கண்ட ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையின் நிலை, தற்பொழுது நடைபெறும் திசை ஜாதகிக்கு எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே, நடைபெறும் திசை ஜாதகிக்கு யோக பலன்களை வழங்குமா ? அவயோக பலன்களை வழங்குமா ? என்பது தெளிவாக தெரியும், தற்பொழுதுஜாதகிக்கு ராகு திசை ( 29/01/2010 முதல் 29/01/2028 வரை ) நடைபெறுகிறது, இந்த ராகு திசை ஜாதகிக்கு எந்த பாவக  பலனை ஏற்று நடத்துகிறது என்று கவனிக்கும் பொழுது ராகு, புத்தி என்ற அமைப்பில் நின்று 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசையை ராகு சிறப்பான நன்மைகளை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது எனவே ஜாதகி 3,9ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை பெறுகிறார்.

3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சிகளில் இருந்து வெற்றி, போட்டி பந்தயங்களில் வெற்றி, தேர்வில் வெற்றி, மக்கள் செல்வாக்கு, நினைத்ததை அடையும் யோகம், நல்ல ஆரோக்கியமான உடல் நிலை அமைப்பு, தன்னம்பிக்கையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் மனபக்குவம், பலமுறை சிந்தித்து செயல்படும் யோகம் என்றவகையில் மிகுந்த யோக பலன்களை 3ம் பாவக வழியில் இருந்து தருகிறது.

9ம் பாவக வழியில் இருந்து சமுதாயத்தில் நல்ல பெயர், அந்தஸ்து, சுய கெளரவம், சுய மரியாதையுடன் வாழும் யோகத்தை தருகிறது, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியில் மிகப்பெரிய வெற்றி, தான் கற்ற கல்வியினால் யோக வாழ்க்கை, பெயரரும் புகழும் கிடைக்கும் யோகம், தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி என்றவகையில் நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு  இருக்கிறது, மேலும் ராகு திசைக்கு அடுத்து வரும் குரு திசையும் 3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது குரு திசையிலும் மேற்கண்ட யோக பலன்களையே ஜாதகிக்கு தரும் என்பது உறுதியாகிறது.

இந்த இரண்டு ஜாதகத்திலும் 1ம் உற்பட சில பாவகங்கள் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று சுய ஜாதகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்த போதிலும், தற்பொழுது நடைபெறும் திசை வழங்கும் பலன்கள் மாறுபட்டு ஒருவருக்கு தீமையான பலன்களையும், ஒருவருக்கு நன்மையான பலன்களையும் தருகிறது, இதில் முதல் உதாரண ஜாதகத்தில் நடைபெறும் திசை தீமையான பலன்களையும், இரண்டாம் உதாரண ஜாதகத்தில் நடைபெறும் திசை மிகுந்த நன்மையான பலன்களையும் தருகிறது, எனவே சுய ஜாதகத்தில் பாவகங்கள் பாதிக்கபட்டு இருந்த போதிலும், நடைபெறும் திசை நல்ல நிலையில் இருக்கும் பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் ஜாதகருக்கு நன்மையான பலன்களே நடைபெறும்.

ஒருவேளை சுய ஜாதகத்தில் சில பாவகங்கள் வலிமை பெற்று இருந்த போதிலும், நடைபெறும் திசை பாதிக்கபட்ட பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் ஜாதகர் எவ்வித நன்மையையும் பெற இயலாது, சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து அதிக இன்னல்களையே அனுபவிக்க வேண்டிவரும், மேற்கண்ட உதாரண ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசை சுக்கிரன் திசை என்றாலும், அவர் ஏற்று நடத்துவது பாதக ஸ்தான பலனை  என்பதால் ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து படும் இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஒரு அளவு இருக்காது என்பதே உண்மை.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக