சனி, 19 டிசம்பர், 2015

திருமணத்திற்கு பிறகு அவயோக பலன்களையும், அளவில்லா இன்னல்களை சந்திக்கும் ஜாதக நிலை !


கேள்வி :

தசவித பொருத்தங்கள் கண்டு, உறவுகள் பேசி  முடிவு செய்து, நல்ல நேரம் பார்த்து  திருமணம் செய்தும், இல்லறவாழ்க்கையில் இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலை வர காரணம் என்ன? ஆணோ பெண்ணோ தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அளவில்லா இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கும் நிலை ஏன் வருகிறது?  "திருமணம் ஆயிரம் காலத்து பயிர்" என்று சொல்லும் வார்த்தையை பொய்யாக்கும் தாம்பத்திய நிலை வர காரணம் யாது? திருமணத்திற்கு பிறகு பிரிவு வரும் என்பதை  ஜோதிட கணிதம் ஜோதிடர்களுக்கு உணர்த்தவில்லை, உணர்த்தியதை ஜோதிடர்கள் சொல்லவில்லையா ? எமது ஜாதகம் மற்றும் எமது இல்லத்தரசி ஜாதகத்தில் உள்ள உண்மையான நிலை, இல்லற இன்னல்களுக்கு காரணம் அறிய விளைகிறேன் ?

பதில் :

 அன்பரே தம்பதியரான தங்களது இருவரின் ஜாதகங்களை கொண்டு, தங்களின் கேள்விக்கு விளக்கம் தர ஜோதிடதீபம் கடமை பெற்றுள்ளது, பொதுவாக திருமண பொருத்தங்களில் சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமைக்கு முக்கியதுவம் தாராமல், 1) நட்சத்திர பொருத்தம் பத்து  2) ராகு  கேது 3) செவ்வாய் தோஷம் 4) 7ல் பாவக கிரகம் 5) 2ல் பாவக கிரகம் 6) 5ல் ராகு 7) கால சர்ப்ப தோஷம் 8) களத்திர தோஷம் 9) ஏக திசை பொருத்தம் 10) திசாசந்திப்பு 11) புத்திர தோஷம் என வகைக்கு 10 தோஷங்களை வாயில்  வந்ததை  சொல்லி, பொருத்தம் உள்ள ஜாதகங்களை பொருத்தமில்லை  எனவும், பொருத்தமற்ற ஜாதகங்களை சிறப்பான பொருத்தம் உண்டு என்று அறிவித்தும், திருமண வாழ்க்கையில் ஆண்மகனையும் பெண்  மகளையும் இணைப்பதாலே, இல்லற வாழ்க்கையில் இன்னல்களும்  துன்பங்களும் ஏற்ப்படுகிறது .

திருமண பொருத்தம் காணும் பொழுது சுய ஜாதகத்தில் உள்ள பாவகங்களின்  வலிமையை நன்கு உணர்ந்து வதுவையும், வரனையும் இணைத்தால்  அவர்களின்  வாழ்க்கை வாழையடி வாழையாக செழித்து ஓங்கும், மாறாக  மேற்கூறிய காரணங்களை முன்வைத்து இல்லற வாழ்க்கையில் வதுவையும்  வரனையும் இணைத்தால், தங்களின் கேள்வியில் உள்ள சூழ்நிலையே "தம்பதியரை"  வெகுவாக பாதித்து, திருமண வாழ்க்கையில் துன்பம் எனும்  சூழ்நிலைக்கும், பிரிவு எனும் மிகப்பெரிய இன்னலுக்கு ஆட்படுத்தும்,
தங்களின் ஜாதகங்களை இனி  ஆய்வு செய்வோம் அன்பரே!

தங்களின் ஜாதக நிலை 


லக்கினம் : துலாம் 
ராசி : ரிஷபம் 
நட்சத்திரம் : மிருகசீரீடம் 1ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை :

1,7,11ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நன்மையையும் யோகத்தையும் களத்திர வழியில் இருந்து தரும்  அமைப்பாக கருதலாம்.

2,4,8,10ம் வீடுகள் உடல் உயிராகிய லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது இலக்கின வழியில் இருந்து தாங்கள் அனுபவிக்கும் யோக பலன்களை உறுதி செய்யும்.

3,6,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பாக்கியங்கள் மூலம் பெரும் யோக வாழ்க்கையை உறுதி செய்யும்.

5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பூர்வபுண்ணிய வழியில் இருந்தும் தங்களின் வாரிசுகள் வழியில் இருந்தும், சுய அறிவு மற்றும் சமயோசித புத்திசாலிதனத்தாலும் தாங்கள் பெரும் யோக வாழ்க்கையை உறுதி செய்யும்.

எனவே தங்களது ஜாதகத்தில் 11பாவகங்கள் மிகவும் வலிமை உடையதாக அமைகிறது.

12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் தங்களுக்கு வீண் விரையங்களையும், அதிக மனக்கவலை மற்றும் மனபோராட்டத்திர்க்கு ஆளாக்கும்.


தங்களின் வாழ்க்கை துணையின் ( மனைவியின் ) ஜாதக நிலை 


லக்கினம் : கடகம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம் 

தங்களது மனைவியின் ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை :

1,3,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெருவது மேற்கண்ட பாவகங்கள் வழியில் இருந்து ஜாதகிக்கு வீண் மன கவலைகளையும், அதிக அளவு துன்பங்களையும் தரும், மேற்கண்ட பாவகத்தை சார்ந்த உறவுகளும் ஜாதகியால் சொல்ல இயலாத துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்.

2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது,   ஜாதகியை குடும்ப வாழ்க்கையிலும், வாழ்க்கை துணை வழியில் இருந்து தாமும், தமது கணவரும் இன்னலுறும் அமைப்பை காட்டுகிறது, தனது வாழ்க்கை துணைக்கு நித்தியகண்டம் பூரண ஆயுசு என்ற சூழ்நிலை உருவாக்க கூடும்.

5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 5ம் பாவக வழியில் இருந்து குழந்தை  பாக்கியத்தில் குறைகளையும் , போதிய அறிவு  நுணுக்கமும் புத்திசாலித்தனமும் அற்றவர் என்பதை உறுதி செய்கிறது. 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டமற்றவர் என்பதும் தமக்கு வரும் நன்மைகளை உதறி எறிபவர் என்பதும், மூட நம்பிக்கைக்கு முக்கிய துவமும்,  பிற்போக்குத்தனமான செய்கையினால் அனைவராலும் வெறுக்கப்படும் நபராக இருப்பார் என்பதும் உறுதியாகிறது. ( பெண்களின் ஜாதகத்தில் எந்த ஒரு  பாவகமும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது நல்லதல்ல) தன்னைபற்றிய வீண் கற்பனைகளுடன், மிதமிஞ்சிய அசட்டு தைரியத்துடன் மற்றவர்கள் அனைவரையும் பகைத்துகொள்ளும் சூழ்நிலையை ஜாதகியே உருவாக்கிகொள்வார் என்பது கவனிக்க தக்கது.


4,9,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது,  கல்வியில் ஓரளவு தேர்ச்சியும், சிறிதளவு நல்ல குணத்தையும் தரும், ஜாதகி செய்யும் செயல்களால் ஜாதகியின் நற்பெயருக்கு களங்கம் விளையலாம், நல்ல மனிதர்களையும் தன்னைவிட வயதில் அதிகமுள்ள பெரியோர்களிடம் மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்வது நல்லது, பெரியோர்களின் அறிவுரைப்படி நடப்பதால் வாழ்க்கையில் நலம் உண்டாகும்.

6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, தமக்கு அமையும் வாழ்க்கையை தக்கவைத்துகொள்வது நல்லது, வாழ்க்கை  துணையுடன் அனுசரித்து செல்வதே சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும், வீண் பிடிவாதம் முரண்பட்ட செயல்கள், அறிமுகம் அற்ற நபர்களின் சகவாசம் படுகுழியில் ஜாதகியை தள்ளிவிடும், ஜீவானத்தை அதிகரித்துக்கொள்ள நல்ல வேலை அமையும் என்றபோதிலும் ஜாதகியின்  செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களால் விமர்சிக்கப்படும்.

தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை தரும் பலன்கள் :

தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 22/11/2007 முதல் 22/11/2023 வரை )  12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  பலனை  தருகிறது, தங்களின் 12ம்  பாவகம் கால புருஷ தத்துவ  அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக அமைவது, வாழ்க்கை துணை வழியில் இருந்து 100% விகித இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையை தருகிறது,  மேலும் 12ம் வீடு சர காற்று தத்துவத்தில் அமைவதால், வாழ்க்கை துணையின் செயல்களால் தங்களின் அறிவு திறனும் வெகுவாக பாதிக்க படும், தற்பொழுது  நடைபெறும்  திசையும், சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட 12ம் பாவகமும் தங்களுக்கு சிறப்பான வாழ்க்கை துணையை அமைத்து தர இயலாத சூழ்நிலைக்கு காரணமாக  அமைந்துவிட்டது.

தங்களின் வாழ்க்கை துணைக்கு நடைபெறும் திசை தரும் பலன்கள் :

தங்களின் வாழ்க்கை துணைக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை ( 08/11/2013 முதல் 08/11/2033 வரை ) 1,3,7ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 2,ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 1,2,3,7 பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும், 4,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் நடத்துகிறது, மேலும் தங்களின் ஜாதக வலிமையின் காரணமாகவே தங்களது இல்லத்துஅரசி ஜீவிக்கும் சூழ்நிலையில் இருப்பது கண்கூடான உண்மை, இதை தங்களின் இல்லத்துஅரசி  உணர்ந்துகொண்டு, வாழ்வதற்கு உண்டான வாய்ப்பு  சிறிதும் இல்லை  என்பதே வருத்தத்திற்கு உரியது.

சிலரது யோக ஜாதகங்கள் கூட இதுபோன்ற பொருத்தமில்லா சேர்க்கையின் காரணமாக "குடத்தில் இட்ட விளக்குபோல" எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்க இயலாமல் தவிப்பது கண்கூடான உண்மை, இந்த உண்மையை தங்களின் மனைவிக்கு யார் சொல்லி புரிய வைப்பது, 
"இறை அருளுக்கே வெளிச்சம்"

ஓவொரு ஆணும்  பெண்ணும் திருமணத்திற்கு பிறகு , தனது ஜாதக வலிமை உணர்ந்து தனது வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை தேர்ந்தேடுக்கவிட்டால், கால நேரம் காத்திருக்காமல் தனது கடமைகளை சரியாக செய்துவிட்டு சென்று விடும் என்பதை, தம்பதியர் அனைவரும் உணர்வது அவசியமாகிறது. 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக