சனி, 2 ஜனவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - சிம்ம லக்கினம்




சாய கிரகங்கள் என்று ஜோதிடத்தில் போற்றப்படுவதும், தாம் அமர்ந்த ராசியை ( பாவகம் ) தனது முழு கட்டுபாட்டில் எடுத்துகொண்டு யோக அவயோக பலன்களை வாரி வழங்கும் வல்லமை பெற்றதுமான ராகு கேது கிரகங்கள், 29.1.2016 தேதி நள்ளிரவு 2 மணி 3 நிமிடத்திற்கு, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்மராசியில் ராகு பகவானும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான கும்பராசியில் கேது பகவானும் சஞ்சாரம் செய்து பலாபலன்களை வாரி வழங்க தாயராக உள்ளனர், ஒருவரின் சுய ஜாதகத்தில் பலன்கள் காண "லக்கினமே" அடிப்படையாக அமைவதால், ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களும், இனிவரும் 18 மாதங்களில் சாய கிரகங்களான ராகு கேது வின் சஞ்சார நிலையில் இருந்து பெரும் யோக அவையோக பலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்திப்போம் அன்பர்களே!

29.1.2016 தேதி நள்ளிரவு 2 மணி 3 நிமிடத்திற்கு நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்திலும், 11ம் ராசியான கும்பத்திலும் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ராகு சஞ்சாரம் செய்யும் சிம்ம ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு முன்னுரிமை தந்து, சிம்ம லக்கினத்திற்கு சாய கிரகங்கள் வழங்கும் பலாபலன்கள் எப்படி?இருக்கும் என்பதில் இருந்து இலக்கின வாரியாக தொடர்ச்சியாக காண்போம் அன்பர்களே !

சிம்ம லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5 ம் ராசியான, சிம்ம ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே ! தங்களது லக்கினத்தில் ராகு பகவானும், களத்திர ஸ்தானமான கும்பத்தில் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி ஆய்வு செய்வோம் , 

சிம்ம இலக்கின சிறப்பு இயல்புகள் 

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணிய ஸ்தானம், ஸ்திர நெருப்பு தத்துவ சிம்ம ராசியை ஜென்ம லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு லக்கினம் வலிமை  பெற்று அமைய பெற்றால், ஜாதகர் பெருதன்மை மிக்க குணங்களுடன், சிறப்பு மிக்க நிர்வாக திறமை கொண்டவராக காணப்படுவார், ஜாதகரின் திட்டமிடுதல்கள் யாவும் செவ்வனே நிறைவேறும், உடல் உறுதியும் மன உறுதியும் ஜாதகருக்கு இயற்க்கையாவே அமைய பெரும், தான் செய்யும் காரியங்கள் யாவிலும் தமது அறிவுத்திறனை மிக சிறப்பாக பயன்படுத்தும் வல்லமை கொண்டவர்கள், அதிக அளவில் நகைசுவை உணர்வு கொண்டவர்கள், சாஸ்திர ஞாணமும், தியானம் ஆன்மீக மற்றும் யோக பயிற்ச்சியில் தேர்ச்சி பெரும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள், சிறந்த ஆன்மீக பெரியோர்கள் அவதரித்த லக்கினம் சிம்மமே என்றால் அது மிகையில்லை, மேலும் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு இயற்க்கையாவே மனதிற்கு எட்டாத புலன் அறிவை பிறவியிலேயே பெற்றிருப்பார்கள்.

இதுவரை தங்களுக்கு 2ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்த ராகு பகவான், குடும்பம், வாக்கு தனம் என்ற வகையில் அதிக அளவில் இன்னல்களையும் போராட்டங்களையும் சந்திக்க வைத்திருக்க கூடும், மேலும் உடல் நிலையில் பாதிப்பும் வீண் விரையங்களும் ஏற்ப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

 ஆனால் இனி தங்களது லக்கினத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் தங்களுக்கு ஸ்திர தன்மையான வெற்றிகளை வாரி வழங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை, கலைகளில் தேர்ச்சி, கல்வியில் மேன்மை, எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் யோகம், தன்னம்பிக்கை புத்திசாலித்தனம் மூலம் சிறந்த நன்மைகளை அனுபவிக்கும் யோகம், குல தெய்வத்தின் ஆசியினால் சகல காரியங்களிலும் வெற்றி, உயர் கல்வி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் என இனிவரும் 18 மாதங்களும் தங்களுக்கு ஏறுமுகமாகவே அமையும், பித்தம் சார்ந்த தொந்தரவுகள் வந்த போதிலும் பெரிய பாதிப்புகளை தாரது, வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டும் அதிக கவனம் எடுத்துகொள்வது நல்லது, பொதுவாக சிம்மத்தில் ராகு சஞ்சாரம் சிம்ம ராசிக்கு உண்டான பலாபலன்களை முழுவதும் தாமே சுவீகரிக்கும் என்பதால், லக்கினம் சார்ந்த யோக பலன்களை தங்களுக்கு தங்கு தடையின்றி தரும்.

 வெற்றி புகழ் கீர்த்தி என ராகு பகவான் தரும் நன்மைகளின் தரம் மிகவும் சிறப்பானதாகவும், நீடித்து நன்மைகளை தரும் அமைப்பிலும் இருக்கும் என்பதில் ஐயமில்லை, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு மிகுந்த நன்மைகளையும், திடீர் பதவிகளையும் அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், உடலும் மனமும் தங்களுக்கு முழுவதும் ஒத்துழைக்கும், எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் தங்களுக்கு தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும், வாழ்க்கையில் புதிய மாற்றங்களையும் வாரி வழங்கும், புதிய மனிதர்கள் மற்றும் புதிய சூழ்நிலைகள் தங்களுக்கு மிகுந்த யோகத்தையும் நன்மையையும் வாரி வழங்கும்.

தங்களது களத்திர ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், இது வரை திருமணம் ஆகாத அன்பர்களின் வாழ்க்கையில் திடீரென திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தருவார், தங்களின் மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணையை கைபிடிக்கும் யோகம் உண்டாகும், காதல் திருமணம் கைகூடும், திருமண வாழ்க்கையில் இணைந்த தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும், பொது வாழ்க்கையில் இருக்கும் அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் "ராஜயோக" பலன்களை வாரி வழங்கும், தங்களது கற்பனையிலும் நினைத்திறாத யோக வாழ்க்கையை எதிர்கொள்ள முனைப்புடன் தயாராக சிம்ம இலக்கின அன்பர்கள் இருக்கலாம்.

பொது மக்களின் ஆதரவும், அரசியலில் செல்வாக்கும் அதிகரிக்கும் தங்களின் களத்திர  பாவகம் ஸ்திர காற்று தத்துவ ராசியான கும்பத்தில் அமைவதால், தங்களின் அறிவு  திறனும் அதிர்ஷ்டமும் ஒன்று சேர்ந்து செயல்படும், மனதில்  தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும், பெண்கள் வழியில் இருந்து ஆண்களும், ஆண்கள் வழியில் இருந்து பெண்களும் மிகுந்த நன்மைகளையும், யோகங்களையும் தங்கு தடையின்றி பெறுவார்கள், நுண்ணறிவு சார்ந்த துறைகளில் உள்ள அன்பர்களுக்கு உலக புகழ் பெரும் யோகம் உண்டாகும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் உண்டாகும், ஆசைகள் அனைத்தும் நிறைவேறும், வெளிநாடுகளில் இருந்து தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் தங்களை தேடிவரும், ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு இனிவரும் 18 மாதங்கள் அபரிவிதமான லாபங்களை வாரி வழங்கும், வெளிநாடுகளில் வசித்து வரும் அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகள், குடியுரிமை, அரசு ஆதரவு, அரசு சலுகைகள் அனைத்தையும்  அனுபவிக்கும் யோக உண்டாகும்.

 மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி சிம்ம இலக்கின அன்பர்களுக்கு 100% விகித "ராஜயோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, சிம்ம இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை பெறுவதில் முதலிடம் வகிக்கின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே சிம்ம இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 1,7ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக