திங்கள், 11 ஜனவரி, 2016

கால சர்ப்ப தோஷம் முடிவடைந்த பின்பும் துன்பம் ஏன் ?


மதிப்பிற்குரிய  ஐயா ,

பிறந்த திகதி 13/06/1977 , 
பிறந்த இடம் - யாழ்ப்பாணம் , ஸ்ரீலங்கா ,
பிறந்த நேரம் இரவு 8.02 (8.02pm)

எனது ஜாதகத்தை வாக்கிய பஞ்சாங்க முறையில் கணிக்கும் ஜோதிடர்களிடம் காட்டிய போது எனக்கு கால சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அது எனது 32 வயது வரை கெடுதலை தரும் என்று கூறினார்கள், அதே போல் திருக்கணித ஜோதிடர்களிடம் காட்டிய போதும் அதே பலனை கூறினார்கள், அவர்கள் கூறியது சரியானதுதான் . 2009 ஆம் ஆண்டு வரை நான் மிக மோசமான காலகட்டத்தில் இருந்தேன் (உயிர் அபாயம் ), எனது 32 வயது முடியும் கால பகுதியில் எனது மிக மோசமான கால கட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டது, எனினும் நான் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்து காளகஸ்தியில் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி செய்தேன் .
ஆனாலும் உயிருக்கு அச்சுறுத்தலான மோசமான கால கட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்தாலும் நான் இன்றுவரை நல்ல நிலையில் இல்லை . இன்றுவரை என் எதிர்காலம் குறித்து 0.1% கூட முடிவு செய்து முடியாத மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றேன்.

கால சர்ப்ப தோஷம் முடிவடைந்த பின்பும் இந்த கேடுகாலம் தொடர காரணம் என்ன ?  இந்த கேடுகால நிலைமைகள் என்று முடிவுக்கு வரும் ?
கால சர்ப்ப தோஷ காலப்பகுதியில் பல தடவை மயிரிழையில் உயிர் தப்பி இருக்கின்றேன், எந்த பலனால் (கிரக ) எனக்கு உயிர் பாதுகாப்பு கிடைத்தது என்று அறிய முடியுமா ? உங்கள் மேலான பதிலை அறிய காத்திருக்கின்றேன் 

தங்கள் உண்மையுள்ள 
-----------------------------------



அன்பு நண்பரே !

தங்களது கேள்விக்கு உண்டான பதில்களை பார்ப்போம்.

கேள்வி 1: 
கால சர்ப்ப தோஷம் முடிவடைந்த பின்பும் இந்த கேடுகாலம் தொடர காரணம் என்ன ?

பதில் 1 : 
தங்களது சுய ஜாதகத்தில் 3ம் பாவகத்தில் அமர்ந்த கேது 3ம் பாவகத்தை வலிமை பெற செய்யவதும், 9ம் பாவகத்தில் அமர்ந்த ராகு பாதிப்புகளை வழங்குவதும் எதார்த்தமான உண்மை நிலை, இதில் சாய கிரகங்களின் பாதிப்பு என்பது தங்களுக்கு பிராண ஆபத்தை தரும் என்பது முற்றிலும் ஜாதக உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

 தங்களது பிராண ஆபத்திற்கு காரணாம் தங்களது சுய ஜாதகத்தில் லக்கினம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 6,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு, ஆயுள் ஸ்தானமாக அமைவதும் தங்களுக்கு மரணத்திற்கு ஒப்பான கண்டத்தை தந்தது.

 தங்களது சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் பாதக ஸ்தான வழியில் இருந்து பாதிப்பையும், 6,12ம் வீடுகள் விறைய ஸ்தான வழியில் இருந்தும், 8ம் வீடு ஆயுள் ஸ்தான வழியில் இருந்தும் கடுமையாக பாதிக்கபட்டு இருப்பதாலேயே, தங்களுக்கு மரண ஆபத்தை தந்தது, மேலும் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, தங்களுக்கு மரண பயத்தை தந்த போதிலும், நீண்ட ஆயுளை வழங்கி இருப்பது கவனிக்க தக்கது, எனவே ஆயுள் பற்றி தாங்கள் கவலைப்பட  தேவையில்லை.

கேள்வி 2:  
இந்த கேடுகால நிலைமைகள் என்று முடிவுக்கு வரும் ?

பதில் 2:
தங்களுக்கு இதற்க்கு முன் நடந்த சந்திரன் திசை பூர்வபுண்ணிய ஸ்தான அமைப்பில் இருந்து 100% விகித நன்மையான பலனையும், பாதக ஸ்தான அமைப்பில் இருந்து 200% விகித அதிதீமையான பலனையும் கலந்து வழங்கி இருக்கிறது.

அதற்க்கு அடுத்து நடந்த, செவ்வாய் திசை ஆயுள்,மற்றும் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து 100% விகித அதிதீமையான பலனையும் கலந்து வழங்கி இருக்கிறது.

தற்பொழுது நடைபெறும் ராகு திசை ( 03/09/2003 முதல் 02/09/2021 வரை) விரைய ஸ்தான அமைப்பில் இருந்து 100% விகித அதிதீமையான பலனையும் வழங்கி கொண்டு இருக்கிறது, இதில் 12ம் பாவகம் ஸ்திர நீர் ராசி என்பதால் தங்களின் மனநிலை சார்ந்த இன்னல்களே அதிக அளவில் இருக்கும், உடல் மற்றும் ஆயுள் சார்ந்த இன்னல்கள் தங்களுக்கு வர வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொண்டு நலம் பெறலாம்.

கேள்வி 3: 
கால சர்ப்ப தோஷ காலப்பகுதியில் பல தடவை மயிரிழையில் உயிர் தப்பி இருக்கின்றேன், எந்த பலனால் (கிரக ) எனக்கு உயிர் பாதுகாப்பு கிடைத்தது என்று அறிய முடியுமா ?

பதில் 3: 
தாங்கள் மயிரிழையில் உயிர் தப்பியதிற்க்கும், கால சர்ப்ப தோஷத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, தங்களுக்கு ஆபத்து வந்ததிற்கு காரணம் பாதக ஸ்தானம், ஆயுள் ஸ்தானம், விரைய ஸ்தானத்தின் கூட்டுகலவையான கெடுபலன்களே.

 தாங்கள் உயிர் தப்பியதிற்க்கு காரணம், பூர்வ புண்ணிய எனும் 5ம் வீடு லாப ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று வலிமை அடைந்து அதிர்ஷ்டத்தை வழங்கியதும், பாக்கியம் எனும் 9ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பித்ருக்கள் ஆசியையும், குல தேவதையின் ஆசியையும் ஒருங்கே இணைந்து "இறைஅருளின்" கருணையை தங்களுக்கு முழு அளவில் வழங்கியதுமே உண்மையான காரணமாக இருக்கின்றது.

ஒருவரின் சுய ஜாதகத்தில் 11ம் பாவக வலிமையை வைத்து இப்பிறவியின் பலாபலன்களை  அறிய இயலும் தங்களது சுய ஜாதகத்தில் 11ம் பாவகம் மிகவும் வலிமை பெற்று இருப்பதால் தங்களுக்கு அதிர்ஷ்ட வாழ்க்கையும், மிகவும் யோகமான காலமும், காத்துகொண்டு இருக்கிறது என்பது மட்டும் உறுதி, அப்படிபட்ட சிறப்பான யோக வாழ்க்கையை தாங்கள் தேடி பெறுவதிலேயே இறை அருளின் சூட்சமம் அடங்கி உள்ளது, சிறப்பான தேடுதல்களும், தன்னம்பிக்கையான மன நிலையும், உறுதியான நல்எண்ணங்களும் தங்களுக்கு மிக உயர்வான யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

2 கருத்துகள்: