புதன், 28 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - மகர லக்கினம் !




திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "மகர" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                    

மகர லக்கினம் :

9ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மகர லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மகர இலக்கின அன்பர்களுக்கு இனி வரும் ஒரு வருட காலம் பாக்கிய ஸ்தான வழியில் மிகுந்த யோகங்களை வாரி வழங்குவது உறுதியாகிறது, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு சார்ந்த விஷயங்களை மேற்கொள்ளும் அன்பர்களுக்கு தட்டாமல் வெற்றிகளை வாரி வழங்கும், பெரிய மனிதர்கள் மற்றும் ஆன்மீக பெரியோர்களின் ஆசியும், உதவியும் சரளமாக கிடைக்க பெரும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும், பயணங்கள் மூலம் அதிக லாபம் உண்டாகும், இதுவரை தடைபெற்ற நற்காரியங்கள் யாவும் சிறப்பாக நடைபெறும், திருமணம், புதிய வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும், அறிவு சார்ந்த முயற்ச்சிகள் யாவும் தங்கு தடையின்றி நிறைவேறும், சகல யோகங்களையும் பெறுவதற்கு உண்டான வாய்ப்புகள் தங்களுக்கு விரைவாக வந்து சேரும், பல புண்ணிய திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகமும், அதனால் ஐஸ்வர்யமும் நிறைவாக கிடைக்க பெரும் வாய்ப்பு உண்டாகும், தங்களது வார்த்தைகளுக்கு இனிவரும் காலங்களில் அனைவரும் செவி சாய்ப்பார், மற்றவர்களை தங்களது கட்டுபாட்டில் வைத்திருக்கும் வல்லமை உண்டாகும், சிறந்த நிர்வாக திறமையின் காரணமாக இனிவரும் காலங்களில் தங்களின் தொழில் அபரிவிதமான வெற்றிகளை குவிக்கும், தாங்கள் பணியாற்றும் இடத்தில் பதவி உயர்வுகள் தேடி வரும், சுய ஜாதகத்தில் புதன் கோண அதிபதியாக இருப்பின் மேற்கண்ட பலாபலன்கள் 100 சதவிகிதம் நடைமுறைக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை, மேலும் இதுவரை வாழ்க்கையில் போராட்டங்களை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு, இனிவரும் காலம் மிகுந்த யோகபலன்களை வாரி வழங்கும் என்பது உறுதி.

 குரு பகவான் தனது 5ம் பார்வையை லக்கினம் எனும் 1ம் பாவகத்தை வசீகரிப்பது, மகர லக்கின அன்பர்களுக்கு, புகழ் மிக்க யோக வாழ்க்கையை நல்கும், இருப்பினும் உடல் சார்ந்த தொந்தரவுகள் வர வாய்ப்பு உள்ளது, பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான நன்மைகள் உண்டாகும், சுய தொழில் செய்யும் அன்பர்களுக்கு நல்ல விருத்தியும், அதிக லாபங்களும் வந்து சேரும், ஜீவன ரீதியான முன்னேற்றம் என்பது எதிர்பாராத வகையில் இருக்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும், கல்வி துறை மற்றும் மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை வாரி வழங்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், புதிய ஆராய்ச்சி மற்றும் முயற்ச்சிகள் தங்களுக்கு மிகுந்த நன்மைகளையும் லாபங்களையும் வாரி வழங்கும், அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு பதவி உயர்வு, அதிகார பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டாகும், வெளிநாடு செல்லும் யோகம் அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் லாபம் தங்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், வீட்டில் தடைபெற்ற சுப காரியங்கள் தங்களின் எண்ணப்படி இனிதே நடைபெறும், குறிப்பாக தங்களின் வாழ்க்கையில் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது, மகர லக்கின அன்பர்களுக்கு அளவில்லா செல்வ வளங்களை வாரி வழங்கும், எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி பெரும், போட்டி, பந்தையம், வழக்குகளில் வெற்றி கிட்டும், நிம்மதியான மன நிலை, போதும் என்ற மனம், திருப்தியான வாழ்க்கை என தங்களின் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், சகோதர வழி ஆதரவு தங்களுக்கு நல்ல மன தைரியத்தை வழங்கும், இல்லற வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சி கிட்டும், குடும்பத்தில் உள்ளோர் ஆதரவும், அரவணைப்பும் தங்களுக்கு புதிய உலகத்தில் பிரகாசிக்க செய்யும், வியாபர விருத்தி என்பது தாங்கள் எதிர்பாராத வண்ணம் மிக பெரிய அளவில் அமையும், அதிர்ஷ்டம் மற்றும் திறமைகளின் தாக்கத்தை இனிவரும் காலங்களில் தாங்கள் சிறப்பாக உணரலாம், சுய மரியாதை கௌரவம், அந்தஸ்து ஆகியவை தங்களை தேடிவரும், எதிர்பாராத உதவிகள் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்தையும் வாரி வழங்கும், குறிப்பாக ஏஜென்சி துறை, கமிஷன் வியாபரம், தரகு தொழில், வட்டி தொழில் ஆகியவற்றில் உள்ள அன்பர்கள் இனிவரும் காலங்களில் நல்ல முன்னேற்றத்தையும், கை நிறைவான வருமான வாய்ப்புகளையும் தங்கு தடையின்றி சரளமாக பெறுவார்கள் என்பது கவனிக்க தக்க விஷயமாகும், இந்த குரு பெயர்ச்சி தங்களுக்கு வெற்றி மேல் வெற்றியை வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது, மகர லக்கின அன்பர்களுக்கு, பூர்வ புண்ணிய ஸ்தான அமைப்பில் இருந்து சிறப்பான நன்மைகள் நடைமுறைக்கு வரும் வாய்ப்பினை தரும், புத்திர பாக்கியமற்ற தம்பதியருக்கு நல்ல வாரிசு அமையும், குல தெய்வத்தின் ஆசியின் மூலம் வாழ்க்கையில் பல வியக்க தக்க அதிசயங்கள் நடைபெறும், சுய அறிவு திறனும், புத்திசாலி தனமும் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும், கல்வி கேள்விகளிலும், கலைத்துறையிலும் பிரகாசிக்கும் வல்லமையை தரும், கலைத்துறையில் உள்ள அன்பர்களுக்கு யோகம் மிகுந்த வாழ்க்கையையும், லாபங்களையும் வாரி வழங்கும், புதிய முயற்ச்சிகள் மூலம் வெளி உலக பிரபல்யம் கிட்டும், எதிர்பாராத அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையில் வெற்றி படிக்கட்டுகளில் ஸ்திரமாக நின்று அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் அனுபவிக்கும் யோகத்தை தரும், குறிப்பாக தங்களை ஏளனமாக பார்த்த அனைவருக்கும் சரியான விளக்கத்தை தங்களின் வளர்ச்சி வழங்கும், வருமானம் என்பது தன்னிறைவாக அமையும், எதிர்பாராத சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன வசதி, புதிய வீடு என்ற வகையில் தங்களுக்கு தங்கு தடையின்றி வந்து சேரும், தங்களின் பல வருட உழைப்பிற்கு உண்டான பலாபலன்களை இனிவரும் ஒருவருட காலத்தில் முழு வீச்சில் அனுபவிக்கலாம், நினைத்ததை சாதிக்கும் வல்லமையும், சகல முயற்ச்சிகளில் முழு வெற்றியையும் தங்களின் குல தெய்வத்தின் அருளால் தங்கு தடையின்றி பெரும் யோகத்தை தரும், மேலும் திருமண தடை, புத்திர பாக்கிய தடை, தொழில் முன்னேற்றம் இன்மை, வருமான பற்றாகுறை அனைத்தும் நீங்கி தங்களின் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

குறிப்பு :

மகர லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 9,1,3,5ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக