சனி, 10 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - துலாம் லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "துலாம்" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

துலாம் லக்கினம் 

துலாம் லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான், துலாம் லக்கின அன்பர்களுக்கு இனி வரும் ஒருவருட காலம், விரைய ஸ்தான வழியில் இருந்து சில இன்னல்களை தரக்கூடும், குறிப்பாக உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள், வயிறு சார்ந்த தொந்தரவுகள், வீண் விரையம் என்ற வகையில் இன்னல்களை தர கூடும், வீடு நிலம், வண்டி வாகன யோகம் என்ற வகையில் சுப விரைய செலவுகளையும், திருமணம் மற்றும் சுப விசேஷங்கள் என்ற வகையில் செலவுகளையும் தர வாய்ப்புண்டு, விவசாயம் மற்றும் பண்ணை தொழில் செய்ப்பவர்க்ளுக்கு நல்ல வருமானம் வர வாய்ப்பு அதிகம் உண்டு, பயணங்களில் நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும், எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு, தமது உடமைகளை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்வதும், பயணங்களில் அதிக பாதுகாப்பை கையாள்வதும், தங்களக்கு திடீர் இழப்புகளில் இருந்து காப்பாற்றும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, தங்களின் தொழில் மற்றும் சொத்து சார்ந்த தொந்தரவுகளை அதிகரிக்க கூடும், மேலும் விரைந்து முடிவெடுக்கும் விஷயங்கள் யாவும் தங்களுக்கு அதிக இன்னல்களையும் துன்பங்களையும் தர கூடும், ஏமாற்றங்கள் அதிக அளவில் வர வாய்ப்பு உண்டு, குறிப்பாக தொழில் தொழிலாளர் மாற்று வேலை ஆட்களுடன் அதிக விழிப்புணர்வுடன் நடந்துகொள்வது நலம் தரும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு நல்ல விருத்தியை தந்த போதிலும், மிகப்பெரிய சட்ட சிக்கல்களை அதிகரிக்கும், வாகன தொழில் விருத்தி அடையும் இருப்பினும் நிலையற்ற தொழில் அமைப்பினை வழங்கும், புதிய சொத்துக்கள் வீடு நிலம் போன்றவற்றை வாங்கும் முன் அதிக கவனம் தேவை, மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது மிகப்பெரிய அவ பெயரையும், பின்னடைவையும் தரக்கூடும், வாழ்க்கை துணையுடன் சுமுக போக்கை கையாள்வது நல்லது இல்லையெனில்  தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்க கூடும்,

 குரு பகவான் தனது 7ம் பார்வையை சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது, துலாம்  லக்கின அன்பர்களுக்கு, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ செய்யும் யோகத்தை தரும், வம்பு வழக்கு, போட்டி பந்தயம் மற்றும் எதிர்ப்புகள் யாவும் அகன்று நன்மைகளும் அதிர்ஷ்டமும் உண்டாகும், இருப்பினும் தீராத மன கவலையையும், குறையையும் தரும், மருத்துவ செலவை தவிர்க்க இயலாது, முதலீடுகளில் இருந்து திடீர் வருமானம் உண்டாக வாய்ப்பு உண்டு, நிம்மதியான உறக்கம் கெடும், வீண் அலைச்சல் தங்கள் உடல் நிலையை வெகுவாக பாதிக்கும், எதிர்பால் இன அமைப்பினரிடம் அதிக கவனமாக இருப்பது நலம் தரும், இல்லை எனில் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அவ பெயரை சந்திக்கும் சூழ்நிலையை தரும், மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்குவது, ஆதரவு தருவது இரண்டும் தங்களின் வாழ்க்கையை வெகுவாக பதம்பார்க்கும், உறவுகளின் ஆதரவின்மை தங்களுக்கு நல்ல வாழ்க்கை பாடத்தை கற்று தரும், தாம் உண்டு தமது வேலை உண்டு என்று இருப்பது தங்களின் மனதுக்கும், உடலுக்கும்  சகல நலன்களையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை வசீகரிப்பது, துலா லக்கின அன்பர்களுக்கு, புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வழங்க கூடும், வெளிநாடுகளில் இருந்து அல்லது வாழ்க்கை துணை நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிகப்படியான வருமானம் திடீரென வந்து சேரும், இருப்பினும் விபத்து மற்றும் வீண் செலவுகள் தங்களை வெகுவாக சிரமப்படுத்தும், பெரிய சொத்துக்கள் வாங்க இனிவரும் காலம் வழிவகுக்கும், பொது வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலம் உண்டு, அரசியலில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டாகும், இன்சூரன்ஸ் மற்றும் வாகன காப்பீடு துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றம் மிகுந்த யோக காலம் இதுவாக அமைய  வாய்ப்பு உண்டு, பொதுமக்கள் வழியில் இருந்து அதிகப்படியான வருமான வாய்ப்புகள் வந்து சேரும், வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும், வெளிநாட்டில் உள்ள சில அன்பர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாக வாய்ப்பு உண்டு, மன வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது சோதனை மிகுந்த காலமாக அமையும், வீண் பேச்சு, வீண் வாதம் தங்களின் இல்லற வாழ்க்கையை  வெகுவாக பாதிக்கும் என்பதால்  மௌனம் காப்பது சகல நலன்களையும் தரும் இல்லற வாசிகளுக்கு, மேலேயும் மனபயம் துலாம் லக்கின அன்பர்களை வாட்டி வதைக்கும்.

 குறிப்பு :

துலா லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 12,4,6,8ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக