வியாழன், 29 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - கும்ப லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "கும்ப" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                     

கும்ப லக்கினம் :

8ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் கும்ப லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, ஆயுள் பாவகமான 8ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் கும்ப இலக்கின அன்பர்களுக்கு உடல் ரீதியான சிறு சிறு தொந்தரவுகளை தரகூடும், பொருளாதார சிக்கல்களை வழங்கவும் வாய்ப்பு உள்ளது, அவசரகதியில் செய்யும் காரியங்கள் யாவும் மிகுந்த இன்னல்களை தங்களுக்கு வழங்கும் நிலை இருப்பதால், பொறுமையை கடைபிடிப்பது சகல நலன்களையும் தரும், மேலும் மருத்துவ செலவினங்களை தவிர்க்க வாய்ப்பு இல்லை எனலாம், வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் வீண் செலவினங்களை தவிர்க்க இயலாது, எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றத்தை தரும், தன்னம்பிக்கை வெகுவாக குறையும், போராட்டம் அதிகரிக்கும், முரட்டு சுபாவும், பிடிவாத குணமும் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத இன்னல்களை வாரி வழங்கும், சுய கௌரவம் வெகுவாக பாதிக்கப்படும், குடும்பம் சார்ந்த பிரச்சனைகளை கவனமாக எதிர்கொண்டு நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லை எனில் தங்களின் வாழ்க்கை பாதையே மாறிவிட வாய்ப்பு அதிகம் மேலும் தேவையில்லாத எதிர்பாலின தொடர்புகள் தங்களின் அந்தஸ்து மற்றும்  கௌரவத்தை வெகுவாக பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்வது தங்களுக்கு நல்லது, எதிர்பாராத விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதும், பாதுகாப்பை உறுதி செய்தபின் வாகனத்தை இயக்குவதும் தங்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்கும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை விறைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பது, கும்ப லக்கின அன்பர்களுக்கு, ஜீவன வழியிலான மன நிம்மதி இழப்பை தரும், இதனால் வெகுவாக உடல் மற்றும் மன நலம் பாதிக்க வாய்ப்பு உண்டு, செய்யும் தொழிலில் மிகுந்த கவனமாக இருப்பது தங்களுக்கு வரும் வீண் விரையத்தை தவிர்க்க உதவும், பணிபுரியும் அன்பர்கள் தங்களின் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது சகல நன்மைகளையும் தரும், உயர் அதிகாரிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது சகல நன்மைகளையும் தரும், எதிர்பார்ப்புகள் நிறைவேற காலதாமதம் ஆக வாய்ப்பு உண்டு, பொறுமையை கடைபிடித்து நலம் பெருக, தங்களுக்கு வரும் உடல் உபாதைகளை உடனடியாக சிகிச்சை பெற்று நலம் பெறுவது அவசியமாகிறது, இல்லை எனில் மிகப்பெரிய பாதிப்பிற்கு தங்களை அழைத்து சென்று விடும், தாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பெரியோர் ஆலோசனையை பெற்று செய்வது சகல நலன்களையும் தரும், இல்லற வாழ்க்கையில் எதிர்ப்புகள் வர அதிக வாய்ப்பு உண்டு என்பதால், வாழ்க்கை துணையுடன் சுமுக போக்கையும், அன்பார்ந்த செயல்பாடுகளையும் தாங்கள் மேற்கொள்வது இல்லற வாழ்க்கையில் இனிமை சேர்க்கும், வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தங்களது பணியில் மிக கவனமுடன் இருப்பதும், வெளிநாடு சார்ந்த ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்கள், பெரிய முதலீடுகளை செய்யாமல் இருப்பதும் தங்களுக்கு சகல நன்மைகளையும் மன நிம்மதியையும் வாரி வழங்கும், வீண் கற்பனை தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய இன்னல்களை வாரி வழங்கிவிடும் என்பதால், மிகுந்த விழிப்புணர்வுடன் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள " ஜோதிடதீபம் " அறிவுறுத்துகிறது.

குரு பகவான் தனது 7ம் பார்வையை குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது, கும்ப லக்கின அன்பர்களுக்கு, வருமான வாய்ப்புகளை பாதிக்கும், இதனால் மன பயமும், மன அழுத்தமும் உருவாக வாய்ப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்க, மற்றவர்களிடம் பேசும் பொழுது வாக்குவாதம் செய்வது தங்களின் மன நிம்மதியை வெகுவாக பாதிக்கும், தங்களுடன் பழகும் அன்பர்களிடம் பகைமை பாராட்டாமல் இருப்பதே தங்களுக்கு நலம் தரும், குடும்ப வாழ்க்கையில் வரும் இன்னல்களையும், பணம் சார்ந்த பிரச்சனைகளை தாங்களே தீர்வு காண்பது சிறப்பான நன்மைகளை தரும், மேலும் ஜாமீன் கையெழுத்து, பொருளாதார உதவி மற்றவர்களுக்கு செய்வது தங்களின் எதிர்கால வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், எந்த ஒரு காரியத்திலும் வாக்கு சாதூர்யத்தை கடைபிடிப்பது தங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும், சுப விரயம் செய்ய வாய்ப்பு உண்டு என்பதால், வண்டி வாகனம், வீடு நிலம் வாங்க தங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வழிவகுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, மேலும் புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும், வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்க்கும் யோகம் உண்டாகும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, கும்ப லக்கின அன்பர்களுக்கு, சொகுசு வண்டி வாகன சேர்க்கையையும், புதிய சொத்து சுக சேர்க்கையையும் வாரி வழங்கும், இருப்பினும் அது சார்ந்த இன்னல்களும் வர வாய்ப்பு உண்டு, பெற்றோருடன் தாங்கள் அதிக அன்பு பாராட்டுவது தங்களின் ஜீவன மேன்மையையும், சுக போக யோகங்களையும் நல்கும், பயணங்கள் மூலம் எதிர்பாராத வருமானம் வர வாய்ப்பு உண்டாகும், வெளிநாடு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் யோகம் உண்டாகும், வியாபாரிகளுக்கு சிறப்பான வருமானங்கள் வந்து சேரும், வாக்கை தொழிலாக கொண்ட அன்பர்களுக்கு எதிர்பாராத லாபங்களும் முன்னேற்றமும் நிச்சயம் உண்டு என்பதால், தன சேர்க்கை மிகவும் அபரிவிதமாக அமையும், வண்டி வாகன தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிகுந்த முன்னேற்றத்தை வாரி வழங்கும், சரளமான பண வசதி வாய்ப்புகள் உண்டாகும், செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்ப்பையும், சிறப்பான அறிமுகத்தையும் வாரி வழங்கும், உறவுகள் சார்ந்த உதவிகள் தங்களை தேடி வரும், பொருளாதாரம் சார்ந்த முன்னேற்றத்திற்கு தங்களின் சரியான திட்டமிடுதல்கள் சிறப்பான வளர்ச்சியினை தரும், சேமிக்கும் வல்லமையை தாங்கள் இனிவரும் காலங்களில் மேற்கொள்வது நல்லது, இல்லை எனில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் வீண் கனவாக மாறிவிட வாய்ப்பு உள்ளது.

குறிப்பு :

கும்ப லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக