செவ்வாய், 20 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - விருச்சிக லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "விருச்சிக" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                      

விருச்சிக லக்கினம்

11ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் ராஜயோக பலன்களை வாரி வழங்குவார் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை 11ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையையும், தெளிவான சிந்தனைகளையும் வாரி வழங்குவார், மனதில் உள்ள எண்ணங்களும் ஆசைகளும் பரிபூர்ணமாக நிறைவேறும், உடல் நலம் மற்றும் மன நலம் விருச்சிக லக்கின அன்பர்களுக்க சிறப்பான நன்மை பெறுவதற்கு உண்டான உகந்த பாதையை அமைத்து தரும், மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும், பொது வாழ்க்கையில் தேர்தலில் வெற்றி கிட்டும், மருத்துவ துறையில்  பணியாற்றும் அன்பர்களின் வாழ்க்கையில் சகல நலன்களுக்கும் மிக பெரிய முன்னேற்றமும் உண்டாகும், வியாபாரிகளுக்கு உகந்த யோக காலமாக  இனிவரும் ஒரு வருடம் அமையும், மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் நோக்கி அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு விருச்சிக லக்கின அன்பர்களுக்கு மிக சிறந்த யோக பலன்களை  வழங்க "தேவகுரு"  தயாராக உள்ளார் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் வாழ்க்கையில் சகல யோகங்களையும் இனிவரும் ஒரு வருட காலத்திற்கு விருச்சிக லக்கின அன்பர்களுக்கு குரு பகவான் வாரி வழங்குவார் என்பது விருச்சிக அன்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்தை வசீகரிப்பது, விருச்சிக லக்கின அன்பர்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் நல்கும் அமைப்பாகும், தேர்வுகளில் வெற்றி, பதவி உயர்வு, ஆபரணம் மற்றும் வஸ்திர சேர்க்கை உண்டாகும், புதிய சொத்துக்கள் வண்டி வாகனம், வீடு ஆகியவை எதிர்பாராமல் வந்து சேரும், எடுக்கும் முயற்ச்சிகள் யாவிலும் வெற்றிமேல் வெற்றி உண்டாகும், சுய தொழில் அல்லது வியாபாரம் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் ஒரு வருடம் யோக காலமாக அமையும், புதிய முயற்ச்சிகள் கைகூடி வரும், வீண் மன பயம் அகலும், தெய்வ சிந்தனை மேலோங்கும், திடீர் பயணங்கள் மூலம் அபரிவிதமான லாபங்கள் வந்து சேரும், பல தொழில் செய்யும் யோகமும், செய்யும் தொழில் மூலம் அதிக லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், வெளிநாடுகள் அல்லது வெளியூரில் இருந்து நல்ல செய்தியும், திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும், சிந்தனை செய்யும் காரியங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், இன்சூரன்ஸ் துறையில் உள்ள அன்பர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும், இயற்கையாகவே தொழில் துறையும், தொழில் துறையில் பணியாற்றும் அன்பர்களுக்கும்  மிகுந்த லாபமும் அதிர்ஷ்டமும் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது, விருச்சிக லக்கின அன்பர்களுக்கு அறிவு சார்ந்த முயற்ச்சிகள் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், கல்வி துறையில் உள்ள அன்பர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு உண்டாகும், புதிய கண்டுபிடிப்புகள் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு ராஜ யோக வாழ்க்கையை நல்கும், நல்ல புத்திர பாக்கியமும் ஆண் வாரிசும் அமையும், குல தெய்வத்தின் ஆசியினால் வாழ்க்கையில் சகல யோகங்களையும் தங்கு தடையின்றி பெரும் யோகத்தை நல்கும், தடைபட்ட காரியங்கள் யாவும் சிறப்பாக நடைபெறும், எதிர்கால வாழ்க்கைக்கு உண்டான திட்டமிடுதல்கள் மற்றும் வழிமுறைகள் நடைமுறைக்கு வரும், ஆன்மீக வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு யோகங்களை வாரி வழங்கும், திருத்தல பயணம் மற்றும் ஆன்மீக பெரியோர் ஆசிர்வாதம் எதிர்பாராமல் அமையும், மன நிம்மதியும் மன நிறைவும் பரிபூர்ணமாக கிடைக்க பெறுவீர்கள், நல்ல அயன சயன சுகத்தையும், இறை அருளின் கருணையும் விருச்சிக லக்கின அன்பர்களுக்கு தடையின்றி இனிவரும் காலங்களில் கிடைக்கும், வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவின் மூலம் அறிய பல நிகழ்வுகளை நிகழ்த்த குருபகவான் சஞ்சார நிலை தங்களுக்கு வல்லமையை வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது, விருச்சிக லக்கின அன்பர்களுக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்தும், நண்பர்கள் வழியில் இருந்து நிறைய செலவினங்களை வாரி வழங்கும், வருமானம் நிறைவாக வந்த போதிலும் செலவுகளை கட்டுக்குள் வைப்பது குதிரை கொம்பாக இருக்கும், வாக்குவாதம் எதிர்பாராத சில பிரச்சனைகளை தரும், குறிப்பாக வாழ்க்கை துணையுடனான வாக்குவாதம் மிக பெரிய இன்னல்களை தரும், மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அவமானத்தையும், கௌரவ குறைவையும் தரும், செல்லும் இடங்களில் மிகுந்த கவனமுடன் சூழ்நிலைகளை கையாள்வது  தங்களுக்கு சிறந்த நன்மைகளை தரும், அதிகமாக சிந்தனை செய்து செயல்படுவது தங்களின் மன நிம்மதியை  காப்பாற்றும், திருமண தடைகள் நீங்கும் இருப்பினும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் அதிக கவனம் தேவை என்பதை கருத்தில் கொள்க, பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்வது தங்களின் வாழ்க்கையில் மிகுந்த  இன்னல்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

விருச்சிக லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 11,3,5,7ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக