செவ்வாய், 27 செப்டம்பர், 2016

குரு பெயர்ச்சி வழங்கும் யோக வாழ்க்கை - தனுசு லக்கினம் !


திருக்கணித பஞ்சாங்க முறைபடி வரும் 11.08.2016 வியாழன் அன்று இரவு 9.35 மணிக்கு சிம்ம இராசியில் இருக்கும் குரு பகவான், கன்னி இராசிக்கு செல்கிறார், இனிவரும் ஒரு வருடம் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி இனிவரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! லக்கினம் என்பதே ஒருவரின் ஜாதகத்தை இயக்குவதில் 100% விகித பங்கை வகிக்கிறது என்பதால் ஒருவரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், தற்போழுது நடைபெறும் திசாபுத்தி ஏற்று நடத்ததும் பாவகங்களுக்கு, குரு பகவான் தரும் கோள் சாரா பலன்களை அடிப்படையாக கொண்டும், ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு நடைபெறும் யோக அவயோக பலன்களை பற்றி தெளிவாக உணர இயலும், அதன் அடிப்படையில் தற்போழுது பெயர்ச்சி பெற்றுள்ள குரு பகவான் "தனுசு" லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!                      

தனுசு லக்கினம் :

10ல் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தனுசு லக்கின அன்பர்களுக்கு இனிவரும் ஒருவருட காலம் வழங்கு பலாபலன்கள் பற்றி சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே, தனசு லக்கினத்திற்கு அதிபதியான குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது தனுசு இலக்கின அன்பர்களுக்கு உகந்தது அல்ல என்றே சொல்லலாம், ஜீவன ரீதியான இன்னல்களை அதிக அளவில் தரக்கூடும், மேலும் கௌரவம் சுய மரியாதை, பதவி ஆகியவற்றிற்கு இன்னல்கள் வர அதிக வாய்ப்புள்ளது, அடிமை தொழில் செய்யும் தனுசு இலக்கின அன்பர்கள் இனிவரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது, பணிபுரியும் இடத்தில் இருந்து அதிக தொல்லைகள் வர வாய்ப்பு உண்டு, எதிர்பால் அமைப்பினரிடம் அதிக கவனமாக இருப்பது சகல நலன்களையும் தரும், இல்லை எனில் வீண் அவபெயரும் துன்பமும் உண்டாகும், மேல் அதிகாரிகளிடம் சுமுக போக்கை கடைபிடிப்பது தங்களின் ஜீவன வாழ்க்கையில் மேன்மையை தரும், வாக்குவாதத்தை தவிர்ப்பது தங்களின் முன்னேற்றத்தை உறுதி படுத்தும், மேலும் உடல் நலம் சார்ந்த தொந்தரவுகள் இருப்பின் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது தங்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும், வீண் விரையத்தை தவிர்க்க உதவும், தொழில் செய்யும் அன்பர்கள் புதிய முயற்ச்சிகளை மேற்கொள்வது மிகுந்த இன்னல்களை தர கூடும், செய்யும் தொழிலில் எவ்வித தடைகளும் ஏற்ப்படாமல் சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்வது தங்களின் தொழில் ரீதியான வெற்றிகளை உறுதிபடுத்தும், பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது சகல நலன்களையும் தரும், கடன் பெற்று செய்யும் தொழில்கள் அல்லது காரியங்கள் தங்களுக்கு மிகப்பெரிய இன்னல்களை தரக்கூடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் தொழில் அல்லது ஜீவனத்தை மேற்கொள்வது தனுசு இலக்கின அன்பர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை தரும்.

குரு பகவான் தனது 5ம் பார்வையை குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது, தனுசு லக்கின அன்பர்களுக்கு, வருமான ரீதியான பிரச்சனைகளையும், குடும்ப வாழ்க்கையில் இன்னல்களையும் தரக்கூடும், தங்களின் கட்டுப்பாடு அற்ற வார்த்தைகள் தங்களின் மன நிம்மதியை கேள்விக்குறியாக்கும், வரவுக்கு மீறிய செலவினங்கள் தங்களின் கடன் சுமையை அதிகரிக்கும், தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதே தங்களுக்கு தனசு இலக்கின அன்பர்களுக்கு  நன்மைகளை தரும், வாழ்க்கை துணையுடன் உண்டான பிரச்சனைகளை சுமுகமாக பேசி தீர்வு காண்பதும், முடிந்த அளவு எதிர்வாதம் புரியாமல் இருப்பதும் தங்களின் இல்லறவழ்க்கையை இனிமையாக நடத்த வழிவகுக்கும், மேலும் இதுவரை இருந்த வருமானத்தை விட அதிகபடியான வருமான வாய்ப்புகளை தாங்கள் தேடிகொள்வது மிகுந்த நன்மையை தரும், பெரும்பாலும் தங்களின் வாக்கின் வழியில் இருந்தே இன்னல்கள் வர கூடும் என்பதால், எவரிடம் பேசினாலும் வார்த்தைகளில் கவனம் கொள்வது தங்களுக்கு மிகுந்த நன்மையை தரும்.

குரு பகவான் தனது 7ம் பார்வையை சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது, தனுசு லக்கின அன்பர்களுக்கு இடம் வீடு வண்டி வாகனம் சார்ந்த சிறு விரையங்களை அல்லது சுப  விரையங்களை ஏற்படுத்த கூடும், மேலும் புதிய சொத்துகளை வாங்கும் பொழுதும் வண்டி வாகனங்களை வாங்கும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள்வது நலம் தரும் ஏமாற்றங்களை தவிர்க்க உதவும், தாயார் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்வது நலம் தரும், தேவைகளை வெகுவாக குறைத்துகொல்வதும், ஆடம்பர விஷயங்களை தவிர்த்து விடுவதும் தங்களுக்கு மிகுந்த யோகத்தை தரும், முடிந்த அளவு கோவில் வழிபடு ஆன்மீக ஈடுபாடு தங்களின் இன்னல்களை களைய வழிவகுக்கும், கையில் உள்ள சொத்துகளை விற்று பணம் சேர்க்க உகந்த காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையக்கூடும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய காலம் இது இல்லை எனில் வீண் அவபெயரும், பதவியில் சிக்கல்களும் ஏற்பட கூடும், அதிக அளவில் மன உறுதியுடன் செயல்படுவது எதிர்கால வாழ்க்கையில் தங்களின் முன்னேற்றத்தை அதிகரிக்கும், பொது காரியங்களில் அல்லது மற்றவர் விஷயங்களில் ஆர்வம் செலுத்துவதை தவிர்ப்பது நலம் தரும் மேலும், சுய முன்னேற்றத்திலும் உடல் ஆரோக்கியத்திலும்  மிகுந்த அக்கறையுடன் இருப்பதும், குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வதும் தங்களின் வாழ்க்கையில் சகல நலன்களையும் வாரி வழங்கும்.

குரு பகவான் தனது 9ம் பார்வையை சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது, தனசு லக்கின அன்பர்களுக்கு, சிரசு சார்ந்த இன்னல்களை தர கூடும், மேலும் உடல் ரீதியான தொந்தரவுகளும் இன்னல்களும் அதிகரிக்கும், அக உறுப்புகள் சார்ந்த கோளாறுகள் தங்களுக்கு சிறு சிறு இன்னல்களை தரக்கூடும், கடன் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை உடன் இருப்பது நலம் தரும், எதிர்பார்ப்புகள் சில நேரங்களில் நடைபெறாமல் போக வாய்ப்பு உண்டு, மன பயமும் மன கிலேசமும் தங்களின் முன்னேற்றத்தை பாதிக்க கூடும், இருப்பினும் தன வரவு சரளமாக இருக்கும், மற்றவர்கள் செல்வம் தங்களின் கட்டுப்பாட்டில் வரும் என்பதால் கவனமாக கையாள்வது தங்களின் பெயருக்கு புகழ் சேர்க்கும், மறை பொருள் வழியில் இருந்து வருமானம் உண்டாகும், வட்டி தொழில் அல்லது கமிஷன் வியாபாரத்தில் உள்ள அன்பர்களுக்கு அளவில்லா செல்வ சேர்க்கை உண்டாகும், பொது மக்களிடம் அதிக நம்பிக்கையும் ஆதரவும் எதிர்பாராமல் கிடைக்கக் பெறுவீர்கள், போட்டி பந்தையம், தேர்தலில் பிரகாசமான வெற்றி வாய்ப்பும், சிறப்பான எதிர்காலமும் உண்டாகும்.

குறிப்பு :

தனுசு லக்கின அன்பர்களுக்கு  தற்போழுது நடைபெறும் திசாபுத்திகள் 10,2,4,6ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், தற்போழுது நடைபெறும் திசா புத்திகள் மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில், குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மையையும் தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க, மேலும் குரு பெயர்ச்சி பலனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ள, சுய ஜாதகத்துடன் நேரில் ஆலோசனை பெற்று கொள்வதே சாலச்சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக