வெள்ளி, 9 டிசம்பர், 2016

காலம் நேரம் ஜாதகருக்கு சாதகமாக ( திசா,புத்தி ) இல்லை எனில், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் பலன் ஏதுமில்லை !


 சுய ஜாதகத்தில் பல வித சுப யோகங்கள் இருந்த போதிலும் நடைபெறும் திசை அல்லது புத்தி யோகங்களை தரும் பாவக பலனை ஏற்று நடத்தாமல், வலிமை இழந்த அவயோக பலன்களை தரும் பாவகங்களின் பலன்களை ஏற்று நடத்தினால் ஜாதகரின் வாழ்க்கை மிகுந்த இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆளாகும் ( நடைபெறும் திசை புத்தி முழு சுப கிரகங்களான குரு,சுக்கிரன்,சந்திரன்,புதன் என்றாலும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல) , குறிப்பாக திசை மற்றும் புத்தி ஏற்று நடத்தும் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் இன்னல்களை எதிகொள்ளும் நிலைக்கு தள்ளபடுவார், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருப்பினும் அதனால் ஜாதகருக்கு யாதொரு நன்மையையும் நடைபெறாது, குறிப்பிட்ட பாவக பலனை ( பாதிக்கப்பட்ட ) ஏற்று நடத்தும் திசா புத்திகள் காலம் முடிந்து, வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தும் திசா புத்தி காலம் நடைமுறைக்கு வரும் பொழுதே ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்க இயலும், வலிமை பெற்ற பாவக ஏற்று நடத்தும் திசா புத்திகள் எவை எவை என்று உணர்ந்து காற்று உள்ளபொழுதே துற்றி கொள்ளவேண்டும், இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம்.


லக்கினம் : கன்னி
ராசி : கடகம்
நட்ஷத்திரம் : ஆயில்யம் 1ம் பாதம்

ஜாதகருக்கு தற்போழுது நடைபெறுவது சுக்கிரன் திசை ( 28/12/2000 முதல் 28/12/2020 வரை ) சுக்கிரன் தனது திசையில் 6,10ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது வரவேற்க தக்க அம்சமாகும், குறிப்பாக வலிமை பெற்ற லாப ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சுக்கிரன் திசை ஜாதகருக்கு அளவில்லா யோகங்களை நல்கியது, பொருளாதார ரீதியான நன்மைகள் ஜாதகருக்கு பன்மடங்கு கிடைத்தது, முன்னோர்கள் சொத்தை விற்று ரொக்கமாக பெரும் தொகை கைக்கு வந்து சேர்ந்தது, சுக்கிரன் திசை சூரியன் புத்தியில் ஒரு பெரும் தொகையும், சுக்கிரன் திசை செவ்வாய் புத்தியில் ஒரு பெரும் தொகையும் ஜாதகருக்கு கையில் கிடைக்கப்பெற்றார், சூரியன் புத்திக்கு அடுத்து வந்த சந்திரன் புத்தியில் ஜாதகருக்கு நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் எதிர்ப்பால் இன சேர்க்கைகள் அதிகரித்தது ( 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சந்திரன் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தியது இதற்க்கு காரணமாக அமைந்தது ) அவர்களின் ஆலோசனைப்படி செவ்வாய் புத்திக்கு பிறகு வந்த ராகு புத்தியில் ஜாதகர் நடைபோட ஆரம்பித்தார், இது ஜாதகரின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

சுக்கிரன் திசையில் நடைபெற்ற ராகு புத்தி ஜாதகருக்கு 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, வந்த வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக வீண் விரையமாக துவங்கியது, சுக்கிரன் திசையில் ராகு புத்திக்கு அடுத்து வந்த குருபுத்தியும், சனி புத்தியும் ( 27/02/2011 முதல் 28/12/2016 வரை) முழு வீச்சில் 4,8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருப்பது ஜாதகரின் வாழ்க்கையில் 4ம் பாவக வழியில் இருந்து இருந்த சொத்து,இடம், வண்டி வாகனம், பொருள் அனைத்தையும் இழக்கும் சூழ்நிலையை தந்தது, 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு வந்த  திடீர் இழப்புகள் அளவில்லா வண்ணம் அமைந்தது, நண்பர்கள் எதிர்ப்பால் இன அமைப்பினர் மூலம் ஜாதகரின் வாழ்க்கையில் திடீர் இழப்புகள் அதிகரித்தது, 12ம் பாவாக வழியில் இருந்து ஜாதகருக்கு பெரும் தொகை, முதலீடு செய்த இடத்தில் இருந்து வீண் விரையமானது, தொடர் பேரிழப்புகளால் ஜாதகரின் வாழ்க்கை முற்றிலும் முடங்கியது, ஜாதகர் செய்ய நினைத்த தொழில்களில் எல்லாம் தோல்வி மேல் தோல்வி அடைந்தது, வழிகாட்டும் நல்ல அன்பர்கள் இல்லாத சூழ்நிலையில் ஜாதகரின் வாழ்க்கை முழுவதும் நசிந்தது.

ஜாதகருக்கு நடைபெற்று கொண்டு இருக்கும் திசை மிதமிஞ்சிய நன்மைகளை தந்த போதிலும், நடைபெறும் புத்திகள் ஜாதகருக்கு சாதகமற்று இருப்பது, திசை தரும் யோக பலன்களை முழுமையாக அனுபவிக்கும் வல்லமையை இழந்து, வீண் விரையம் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரியது, சுய ஜாதகத்தில் நடைபெறும் திசா புத்திகள் யோக பலன்களை தரும் நேரம் பார்த்து, தொழில் துவங்குவது, புதிய முயற்சிகளில் இறங்குவதே ஜாதகருக்கு உகந்த நன்மைகளை தரும், தனது எண்ணங்கள் மற்றும் லட்ச்சியங்களை முழுவதுமாக அடைவதற்கு உண்டான வாய்ப்புகளை வழங்கும் என்பதை கவனத்தில் கொண்டு, ஜாதகர் நடந்து இருந்தால் வாழ்க்கையில் யாதொரு துன்பமும் நடைபெற்று இருக்க வாய்ப்பில்லை, குறிப்பாக சுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் எது என்று தெளிவாக தெரிந்து, சம்பந்தப்பட்ட பாவக வழியிலான உபதேசங்களை தவிர்த்து, வலிமை பெற்ற பாவக வழியிலான அறிவுரைகளை ஏற்று ஓர் ஜாதகர் செயல்பட்டால், நிச்சயம் வெற்றி மேல் வெற்றிதான், மேற்கண்ட ஜாதகருக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதே 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், எனவே ஜாதகர் தனது நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்ப்பால் இன அமைப்பினரிடம் மற்றும் சற்று எச்சரிக்கையாக நடந்துகொண்டு இருந்தால், இவ்வளவு பேரிழப்புகளை ஜாதகர் சந்தித்து இருக்க வேண்டிய சூழ்நிலை நிச்சயம் வந்திருக்க வாய்ப்பு இல்லை, மேலும் ஜாதகரின் சொத்தும் அழிந்து இருக்க வாய்ப்பில்லை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்படுவது, தனக்கு வரும் வாழ்க்கை துணையை ஜாதகர் தேர்வு செய்யும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது, இல்லையெனில் ஜாதகரின் வாழ்க்கை நரகம் ஆவதை எவராலும் தடுக்க இயலாது.

இனி வர இருக்கும் சுக்கிரன் திசையில், புதன் புத்தி ( 28/12/2016 முதல் 28/10/2019 வரை ) ஜாதகருக்கு நல்லதொரு யோக வாழ்க்கையை தர இருக்கின்றது இதை ஜாதகர் புரிந்துகொண்டு, வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெற ஆயத்தமாக்கலாம், மீண்டும் ஜாதகர் சகவாச தோஷத்தை கையில் எடுப்பராயின், வாழ்க்கையே சூனியம் ஆக வாய்ப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்வது நலம், மேலும் தன்னிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களில்  இருந்து மீண்டு வருவது அவசியமாகிறது, ஏனெனில் ஜாதகரின் யோக நிலை அப்பொழுதுதான் முழு அளவில் பலன்தர ஆரம்பிக்கும், புதன் புத்தி ஜாதகருக்கு 6,10ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று சிறப்பான நன்மைகளை தர தயார் நிலையில் உள்ளது கவனிக்க தக்க சிறப்பு அம்சமாகும்.

ஜாதகரின் குல தேவதையும், முன்னோர்கள் செய்த பாக்கியமும் ஜாதகரை காத்து  அருள் புரியட்டும், " வாழ்த்துக்கள் அன்பரே "

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக