திங்கள், 11 செப்டம்பர், 2017

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - ( சிம்ம லக்கினம் )



 சுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும், இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக  பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சாயா கிரகங்களான ராகுகேது  தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்  அன்பர்களே!


சிம்ம லக்கினம் :

காலபுருஷ தத்துவத்திற்க்கு 5ம் ராசியான சிம்மத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, அயனசயன  ஸ்தானமான 12ம் பாவகத்தில் ராகு பகவானும்,  சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தில் கேது பகவானும் தனது சஞ்சார காலம் வரை தரும் பலன்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே! இயற்கையாக சாய கிரகங்களான ராகு கேது தான் அமரும் பாவகத்தை வலிமை பெற செய்தால் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் 100% விகித யோக பலன்களை தங்கு தடையின்றி பெறுவார், ஒருவேளை பாதிப்படைய செய்தால் விதிவிலக்கு இல்லாமல் 100% விகித அவயோக பலன்களை ஜாதகர் அனுபவித்தே ஆகவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திடும், அயன சயன ஸ்தானமான கடக ராசியில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு தேய்பிறை காலங்களில் அபரிவிதமான சுபயோக பலாபலன்களை வாரி வழங்க தயக்கம் காட்ட மாட்டார், அதே நேரம் தேய்பிறை காலங்களில் சிம்ம லக்கின அன்பர்களின் பாடு பெரும்பாடாக மாறிவிட வாய்ப்பு உண்டு, வளர்பிறை காலங்களில் மன மகிழ்விக்கும் நிகழ்வுகள் எதிர்பாராமல் நடைமுறைக்கு வரும், மனதில் உள்ள எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும், சுக போகங்களுக்கு குறைவு இருக்காது, வண்டி வாகன வழியில் லாபமும், இடம் வீடு நிலம் சார்ந்த வழியில் இருந்து நன்மைகளும் உண்டாகும், நெடுநாள் ஆசைகள் யாவும் நிறைவேறும், மனதில் புத்துணர்வும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், தெய்வீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும், திடீர் செல்வாக்கின் மூலம் பெரும் செல்வ சேர்க்கை   ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு, ராகுவின் வளர்பிறை சஞ்சாரம் அயன சயன ஸ்தான வழியில் இருந்து சுபயோகங்களை வாரி வழங்கும், ராகுவின் தேய்பிறை சஞ்சாரம் மனநிம்மதியை கேள்விக்குறியாக்கும், தெளிவில்லாமல் குழப்ப மனநிலையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், தோல்விகள் தங்களின் மனதை வெகுவாக பாதிக்கும், முயற்சிக்கும் காரியங்கள் தோல்வியை தந்து, மனபயத்தையும், கிலேசத்தையும்  ஏற்படுத்தும் என்பதனால் தேய்பிறை காலங்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

சத்ரு ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேது சிம்மலக்கின அன்பர்களுக்கு வெற்றி மேல் வெற்றியை பெற்று தரும், போட்டி பந்தயம், தேர்வு ஆகியவற்றில் வெற்றி வாய்ப்பை வாரி வழங்கும், தொழில் ரீதியான கடன் தொந்த்தரவுகளில் சிக்குண்ட சிம்ம லக்கின அன்பர்களுக்கு விரைவில் தீர்வு ஏற்பட்டு, கடன்கள் அடைபடும்,உடல்  உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிம்ம லக்கின அன்பர்களுக்கு நிரந்தர தீர்வு உண்டாகும், உடல் ஆரயோக்கியம் மேம்படும், எதிரிகள் மூலம் வளர்ச்சியை பெரும் யோகம் உண்டாகும், எதிர்ப்புகள் அனைத்தையும் களைந்து, வெற்றிநடை போடும் நேரமிது, கேதுவின் சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அனுபவத்தையும், அதிரடியான சுப மாற்றங்களையும் வாரி வழங்கும், புதிய சிந்தனைகள், புதிய செயல்பாடுகள் யாவும் பலன்தரும் காலமிது, ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி, ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம், அதிரடியான தொழில் வளர்ச்சி மூலம் சகல சௌபாக்கியங்களையும் பரிபூர்ணமாக பெரும் யோகம் உண்டாகும், எதிர்பாராமல் வாழ்க்கையில் குறுகிய காலத்தில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டு என்பதனால் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வெற்றிகளை பெறுங்கள் சிம்ம லக்கின அன்பர்களே! முழு முதற்கடவுள் தங்களின் வாழ்க்கையில் சுபயோகங்களை சத்ரு ஸ்தான வழியில் வழியில் இருந்து வாரி வழங்க உள்ளார், அவரின் அருள் பெற்று நலம் பெறுங்கள் " வாழ்த்துக்கள் "

குறிப்பு :

 சிம்ம லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள்  12,6ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் சிம்ம லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்

9443355696


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக