செவ்வாய், 19 செப்டம்பர், 2017

மஹா காவேரி புஷ்கர விழா சிறப்புகள்

 

 எது " பாவத்தை " போக்குகிறதோ அது தீர்த்தமாகும்,  " நீரின்றி அமையாது உலகு " என்ற வாக்கிற்கு இணங்க  நமது இந்து தர்மத்தில் பஞ்ச பூதங்களை அடிப்படையாக கொண்டே இறை வழிபாடு யாவும் ஆன்மீக பெரியோர்கள், வேத விர்ப்பனர்கள் மற்றும் முன்னோர்களின் வழிகாட்டுதல்களின் படி மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கின்றது, பஞ்ச பூதங்களில் " அப்பு " என்று அழைக்கப்படும் நீர் புனித நீராக பிரகஸ்பதி எனும் குரு பகவானின் அருளாசியால் தற்பொழுது காவிரி நதியில் ஜீவகலப்பு பெற்று, மண்ணில் வாழும் மாந்தர்கள் அனைவரது கர்ம வினை பதிவினை கழித்துகொள்ள நல்லதோர் வாய்ப்பினை நம் அனைவருக்கும் காவிரி தாய்  உருவில் இறைஅருள் வழங்கி உள்ளது, இதை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு சாஸ்திர விதிகளுக்கு உற்ப்பட்டு ஸ்நானம் செய்து சகல சௌபாக்கியங்களையும், பெற இறை அருள் கருணை புரிய " ஜோதிடதீபம் " பிராத்தனை செய்கிறது.

 புஷ்கரம் என்பவர் ஈரேழு புவனங்களிலும் உள்ள மூனரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியாவர், இவர் பிரம் தேவரிடம் ஜீவித்து இருந்தார், இவரை பிரகஸ்பதி என்று தேவர் முனிவர்களால் போற்றபடும் முழு முதற் சுப கிரகமான குரு பகவான் தனக்கு உரிதாக்கிகொள்ள பிரம்ம தேவரிடம் யாசிக்க, அதன்படி குரு எந்த ராசியில் சஞ்சாரம் செய்கின்றாரோ, அந்த ராசிக்கு உரிய புனித ஜீவநதியில் புஷ்கரம் வாசம் செய்ய சுவீகரிக்கபட்டார், இந்த வகையில் " பிரகஸ்பதி " துலாம் ராசியில் பிரவேசிக்கும் பொது " ஸ்ரீ காவேரி புஷ்கரமாகும் " தற்பொழுது நிகழ்வில் உள்ள புஷ்கரமானது 144 வருடத்திற்கு ஒரு முறை நிகழும் " ஸ்ரீ மஹா காவேரி புஷ்கரமாகும் " இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தீர்த்தமாடுதல் நமது சகல பாவங்களையும், தீவினைகளை போக்கும் வல்லமை பெற்றது.

 மேலும் நமது பூர்வ ஜென்ம பாவங்கள் யாவும் நீங்கும், அனைத்து தோஷங்களும் விலகி யோகபலன்கள் நடைமுறைக்கு வரும், பலவித சாப, கோப, பாதக தோஷங்கள் விலகும், மன குழப்பங்கள் அகன்று தெளிவான சிந்தனை உண்டாகும், திருமண வாழ்க்கை எண்ணியபடி நடைபெறும், சந்தான பாக்கியம் உண்டாகும், தொழில் வியாபரம் மற்றும் விவசாயம் செழிக்கும், ஞானம், தெளிவு, கல்வி கேள்விகளில் தேர்ச்சி உண்டாகும், குருபகவானின் அருட்கடாட்சம் உண்டாகும், சுய ஜாதகத்தில் உள்ள பஞ்சமாக தோஷங்கள் நீங்கி சுபத்துவம் உண்டாகும், நீர் வளம் பெருகி பஞ்சம் நீங்கும், மழை உண்டாகி பூவுலகம் செழிக்கும், அஷ்ட ஐஸ்வர்யம் உண்டாகும், லட்சுமி குபேர திருவருள் கிட்டும், நமது விருப்பங்கள் யாவும் பூர்த்தியாகும்.

மஹா காவேரி புஷ்கர விழா சிறப்புகள் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர பாவகமாக இறை அருள் நிர்ணயம் செய்த துலாம் ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யும் புண்ய காலத்தில் ஏற்ப்படும் " மஹா காவேரி புஷ்கரம் " என்பது துலாம் ராசி மற்றும் துலாம் லக்கினம் கொண்ட அன்பர்கள் ஸ்நானம் செய்யும் பொழுது, வியக்கத்தக்க நல்ல மாற்றங்களை வாரி வழங்கும் மேலும் கும்பம்,மேஷம், மிதுன ராசி மற்றும்  இலக்கின அன்பர்கள் ஸ்நானம் செய்யும் பொழுது வாழ்க்கையில் சுபயோக நிகழ்வுகள் எதிர்பாரா வண்ணம் நிகழும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும், சுய ஜாதகத்தில் குரு பகவானால் பாதிக்கப்பட்ட பாவகங்கள் ஏதாவது இருப்பின் அது சார்ந்த இன்னல்கள் யாவும் முழுமையாக தீரும், என்பது சிறப்பு விஷயம் ஆகும்.

மஹா காவேரி புஷ்கர விழா நடைபெறும் தேதி,நேரம் மற்றும் இடம் விபரம் :

பிராப்தம் உள்ளோர் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் பெறுங்கள்


குறிப்பு :

மேலே உள்ள அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெற்றுகொள்ளவும்,.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக